பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!

Posted by Haja Mohideen (Hajas) on 3/7/2017 9:23:21 AM

 

ஏர்வாடிகாரர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய எச்சரிக்கைப் பதிவு.

பெண் குழந்தைகளைப் 
பாதுகாப்போம்!

பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே!
உங்கள் விழிப்புணர்வுக் கண்கள் திறந்தே இருக்கட்டும்!

குழந்தைகள்.
அல்லாஹ் நமக்கு வழங்கிய அழகிய அன்பளிப்புகள்.

زينة الحياة الدنيا
உலக வாழ்வின் அலங்காரங்கள் என்று குர்ஆன் குறிப்பிடும் படைப்பாளனின் அலங்காரப் பரிசுகள் நம் அன்புக் குழந்தைகள். 
 மிக முக்கியமாக அவர்கள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்கள்.

அவர்களை அழகிய முறையில் வளர்த்து, பாதுகாத்துப் பராமரித்து உலகிலும் மறுமையிலும் நற்பேறு பெற்ற சீதேவிகளாக உருவாக்கும் பெரும் பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் உண்டு.

குறிப்பாக பெண் குழந்தைகள் விஷயத்தில் தனிக் கவனமெடுத்து அவர்களைப் பாதுகாப்பது, பராமரிப்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த கடமையாகும்.

குற்றங்கள் மலிந்துவிட்ட இந்த காலத்தில் 
சின்னஞ்சிறு பிஞ்சுகள் என்று கூட பார்க்காமல்,
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுக் கொடுமைகள் ஆங்காங்கே நடைபெறுகிறது.
அது பற்றிய செய்திகள் சமீபத்தில் மிக அதிகமாக வந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மனிதத் தன்மையற்றவை.
இந்த படுபாதகச் செயல்கள் பிஞ்சுகள் படிக்கும் பள்ளிகள் மற்றும் டியூஷன் சென்டர்கள் போன்ற இடங்களில் நடைபெறுவது மிகப் பெரும் அவலமாகும்.

சில பள்ளி நிர்வாகங்களின் கவனிப்பற்ற, பொறுப்பற்ற தன்மைகளால் 5 வயதே பூர்த்தியாகாத குழந்தைகளும் பாதிக்கப்பட்டு பெரும் கொடுமைக்கும், சித்தரவதைக்கும் ஆளாகி நிற்கும் நிகழ்வுகள் நம்மை மிரளவே வைக்கிறது.

#நமது_ஊரில்_கூட நமக்கு மிகப் பரிச்சயமான பள்ளிகளில்,
ஒரு பள்ளியில் சமீபத்தில் இத்தகைய பாலியல் வன்புணர்வுக் கொடுமைகள் நடந்துள்ளது என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

பள்ளி நிர்வாகங்களின் பாதுகாப்பை நம்பியே தங்கள் அன்புக் குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்பி வைக்கிறார்கள்.
பாதிக்கப்படும் ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தைகளின் பாதிப்புக்கான பாவத்திலும்,
சரியாக கண்காணிக்கத் தவறிய பொறுப்பற்ற நிர்வாகங்களுக்கும் பங்குண்டு என்பதை உணர்ந்து தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்த முன்வர வேண்டும்.

குழந்தைகள் தொடர்பாக குறிப்பாக பெண் குழந்தைகள் விஷயத்தில் பள்ளி நிர்வாகங்களும், பெற்றோர்களும் சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

பள்ளி நிர்வாகங்கள் கவனிக்க வேண்டியவை:

1) ஆசிரியர்கள் & பணியாளர்கள் நியமன விஷயத்தில் ஓர் ஒழுக்க அளவுகோளை பள்ளிகள் நிர்ணயித்துக் கொள்வது.

2) அவர்கள் ஏற்கனவே பணியற்றிய பள்ளியிலிருந்து ஏன் வெளியே வந்தார்கள்?
அங்கு அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது போன்ற விஷயங்களை விசாரிது அறிந்து கொள்வது.

3) வகுப்பறைகள், ஆசிரியர் மற்றும் பணியாளர் தனியறைகள், பள்ளி வாகனங்கள் போன்றவற்றில் CCTV (கண்காணிப்பு) கேமராக்களை நிறுவுவது.

4) பெண் குழந்தைகளின் சீருடைகள் (Uniform) குட்டையாக அமைந்திருப்பதை முற்றிலும் தடுப்பது.

5) முறையான பாதுகாப்பு & கண்காணிப்பு இன்றி பள்ளியை விட்டு குழந்தைகளை வெளியே அனுப்புவதைத் தவிர்ப்பது.

6) குழந்தைகள் விஷயத்தில் பாலியல் ரீதியான வரம்பு மீறல்கள் நடைபெறுவது தெரிந்தால்,
இனி வாழ்வில் எப்போதும் அது போன்ற எண்ணமே ஏற்படாத அளவுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

7) பள்ளியின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் வெளியேற்றுவது,
குழந்தைகளுக்குச் செய்யும் துரோகம் என்பதயும், 
நாளை இதே போன்று வேறு இடத்தில், வேறு குழைந்தைகளிடம் அவர் வரம்பு மீற வழி வகுக்கும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

காலத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் மழலைகள் விஷயத்தில் எப்போதும் தனிக் கவனமெடுத்துச் செயல்படுவதே அவர்களின் முதல் பாதுகாப்பாகும்.

பெற்றோர்கள் கவனத்திற்கு.....

1) ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளியைத் தேர்வு செய்வது.

2) அவ்வப்போது பள்ளிக்குச் சென்று குழந்தைகளின் நிலமைகளைக் கண்காணித்து வருவது.
அவர்களின் நட்பு வட்டத்தில் அவர்கள் நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பது.

3) பள்ளி முடிந்து வந்ததும் ஆடைகள் மாற்றும் போது அவர்களின் மேனியைக் கவனிப்பது.

4) வீட்டுப் பாடம் (Home work) சொல்லித் கொடுக்கும் நேரத்தில் அன்றைய தினம் முழுவதும் பள்ளியில் என்ன நடந்தது என்பதை பேச்சு வாக்கில் விசாரித்து அறிந்து கொள்வது.

5) அவர்களிடம் நட்பு ரீதியில் சகஜமாகப் பேசிப் பழகுவது.

6) அவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பிறரின் சீண்டல்கள் குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்துவது.

7) பள்ளியில் யாரையும் மேலே கைவைக்க விடக்கூடாது. கன்னத்தை கிள்ளவிடக்கூடாது.
அப்படி யாராவது செய்தால் உம்மாவிடம் சொல்லிவிட வேண்டும் என்ற ரீதியில் ஓர் எச்சரிக்கை உணர்வை அவர்களிடம் பிஞ்சிலிருந்தே விதைக்க வேண்டும்.

8) படிப்பே முக்கியம் என்ற வெற்றுக் கண்ணோட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல்,
எது சரி? எது தவறு? என்பது போன்ற ஒழுக்க ரீதியான உளவியல் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளின் நல்வாழ்விற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்யும் பெற்றோர்களே!

நாம் அவர்களுக்குத் தர விரும்பும் நல்வாழ்வு வெறும் செல்வத்தால், கல்வியால் மட்டுமே கிடைத்துவிடாது.
அதற்காக நாம் மேற்கொள்ள வேண்டிய காரியங்கள், பொறுப்புகள் ஏராளம் உண்டு.

குழந்தைகள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பெரும் அமானிதங்கள்.
அவர்களை ஆளாக்குவதை அல்லாஹ் நம்மீது கட்டாயக் கடமையாக்கியுள்ளான்.

குழந்தைகளைப் பேணிப் பராமரிப்போம்!
பெண் குழந்தைகளைப் பொக்கிஷம் போல் பாதுகாப்போம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று பாதுகாத்து, கருத்தாக வளர்க்கிறாரோ, 
அவரும் நானும் மறுமை நாளில் இப்படி இருப்போம்.
என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள். (நூல்: முஸ்லிம்)

பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாத்து வளர்ப்பவர் நாளை மறுமையில் என்னோடு இருப்பார் என நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துள்ளார்கள்.

ஆண் குழந்தைகளின் விஷயத்தில் இப்படி ஒரு வாக்குறுதியைத் தராத இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பெண் குழந்தைகளின் விஷயத்தில் மட்டும் தந்திருப்பது,
அவர்களின் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பில் நாம் காட்ட வேண்டிய அக்கறையின் தனித்துவமிக்க முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருகில் சுவனத்தில் நமக்கொரு இடம் கிடைக்க வேண்டாமா?
நம் பெண் குழந்தைகள் அந்த இடத்தை நமக்கு பெற்றுத் தருகிறார்கள்.

அல்லாஹ் நம் குழந்தைகளைப் பாதுகாப்பானாக!
ஆமீன்.

✍ அபூ அஹ்மத்.

https://www.facebook.com/photo.php?fbid=483976728657147&set=gm.1392684184135607&type=3&permPage=1






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..