வள்ளியூர் சூட்டுப்பொதையில் சமூகநலக்காடு திட்டம் : முத்துக்கிருஷ்ணசுவாமி மிஷன் விளக்கம்

Posted by Haja Mohideen (Hajas) on 2/17/2012

வள்ளியூர் சூட்டுப்பொதையில் சமூகநலக்காடு திட்டம் : முத்துக்கிருஷ்ணசுவாமி மிஷன் விளக்கம்

பிப்ரவரி 17,2012,02:31 IST

 

வள்ளியூர் : முத்துகிருஷ்ணசுவாமி மிஷன் வள்ளியூர் சூட்டுப்பொத்தையில் மேற்கொள்ளும் சமூகநலக்காடு அமைக்கும் திட்டம் பற்றி மிஷன் நிர்வாகத்தினர் விளக்கமளித்துள்ளனர்.

 

இதுகுறித்து மிஷன் நிர்வாக அதிகாரி ரமேஷ் நாகரத்தினம் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் முத்துகிருஷ்ணசுவாமி மிஷன் அரசாங்கத்துடன் இணைந்து சூட்டுப்பொத்தை மலையை சுற்றி வீதி அமைத்தது. காலம் காலமாக பல ஞானிகள் வாழும் இடமாக வடக்கு வள்ளியூரில் அமைந்துள்ள இந்த சூட்டுப்பொத்தை மலை விளங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் மலையை சுற்றி சமூக நலக்காடு அமைக்கும் திட்டத்தை மிஷன் ஆரம்பித்தது.

 

இதன் மூலம் இச்சூழலின் நீரை தேக்கும் திறன் அதிகரிக்கும். பறவைகளும், வனவிலங்குகளும் மீண்டும் வந்து குடியேறும். இச்சூழல் மிகச் சிறந்த சமநிலையை அடையும். இம்மலையை சுற்றியுள்ள கிராமங்கள் மிகுந்த பயனடையும். விவசாயத்திற்கு வேண்டிய நீர்வளம் அதிகரிக்கும். கால்நடைகளுக்கு தேவையான பசுமை பெருகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னாள் காணப்பட்ட அருவிகள் மீண்டும் தோன்ற வாய்ப்புகள் ஏற்படும். அப்பகுதியே மிக வளமுள்ளதாக மாறும் என்ற எதிர்பார்ப்போடு இக்காரியங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

பொத்தை மலையை சுற்றி வனம் அமைப்பதற்கென மிஷனுக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட 188 ஏக்கரில் ஏறக்குறைய 80 ஆயிரம் மரக்கன்றுகள் மிஷனால் நடப்பட்டுள்ளன. இவற்றிற்கு கிரமமாக நீர் ஊற்றுவதற்கு அதிகளவில் பணம் செலவிடப்பட்டுள்ளது. 70 சதவீதம் மரக்கன்றுகள் தழைத்து வளருகின்றன. கால்நடைகளிலிருந்து இக்கன்றுகளை பாதுகாப்பதற்காக அதிகாரிகளின் அனுமதியுடன் தற்காலிக வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலி மூன்று ஆண்டுகளில் அகற்றப்பட்டு விடும். இக்காலகட்டத்திற்குள் இம்மரக்கன்றுகள் கால்நடைகளால் அழிக்கப்படாத உயரத்திற்கு வளர்ந்து விடும்.

 

பொத்தை மலையை சுற்றி வாழும் கிராம மக்களின் நீண்ட கால நலன்களை கருத்தில் கொண்டு இத்தற்காலிக சிரமத்தை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சமீபத்தில் தவறாக வழி நடத்தப்பட்ட சில நபர்களால் இந்த வேலி அகற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பபட்டது. சில இடங்களில் வேலி உடைக்கப்பட்டு கால்நடைகளால் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகள் அழிக்கப்பட்டுள்ளன. மிஷனை பற்றி தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாக இருந்தபோதிலும் வள்ளியூர், ராதாபுரம் தாசில்தார்கள் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் அரசு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க வேலி மறுசீரமைக்கப்பட்டது. இதன் மூலம் காடமைப்பு பிரதேசத்தின் கணிசமான பகுதிகள் மேய்ச்சலுக்காக விட்டுக் கொடுக்கப்பட்டன. இருப்பினும் பொய்யான குற்றச்சாட்டுகள் தொடருகின்றன. கூட்டங்களில் பொய் பிரசாரம் செய்கின்றனர்.

 

பொதுமக்களின் நன்மையை மட்டுமே பிரதானமாக கருத்திற் கொண்டு மிக தெளிவான முறையில் முத்துகிருஷ்ணசுவாமி மிஷனின் மனிதநேய செயற்பாடுகள் அமைந்துள்ளன. மிஷன் பொதுமக்களுடன் மிக நெருக்கமான அன்பான உறவை கொண்டுள்ளது. அவர்களின் அன்பையும், ஆதரவையும் போற்றி பாதுகாக்கிறது. பசுக்கள் என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் கொண்டுள்ளதால் அப்பகுதி என்றும் பசுமையாக இருக்க வேண்டுமென்ற நோக்கில் செயல்படுகின்றது. இதனால் பொத்தை மலையை சுற்றியுள்ள பல சமூகங்களும் பெரும் பயனடையும்.

 

10 ஆண்டுகளுக்கு மேலாக முத்துகிருஷ்ணசுவாமி மிஷன் வள்ளியூரின் பல சமூகங்களுக்கும், சூட்டுப்பொத்தை மலையைச் சுற்றி வாழும் பல சமூகங்களுக்கும் ஜாதி, மத, இன, பேதமின்றி எந்தவித வர்த்தக வியாபார நோக்கமின்றி தொண்டு புரிந்து வருகின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் பயனடைகின்றனர்.

 

நித்ய அன்னதானம், இலவச மழலையர் பள்ளி, ஆரம்ப பள்ளி, மருந்துகள், பரிசோதனைகளுடன் கூடிய இலவச மருத்துவ சேவை, இலவச நடன, சங்கீத வகுப்புகள், இலவச நடன, நாடக இசை நிகழ்ச்சிகள், கோசாலை நடத்தல், அனைத்து சமூகங்களையும் இணைக்கும் வருடாந்திர தேர் திருவிழா என்பன போன்ற சேவைகளை செய்து வருகின்றது.

 

கடந்த 5 ஆண்டுகளாக தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. 179 வயது வரை வாழ்ந்து, அருள்புரிந்த முத்துகிருஷ்ண சுவாமியை போற்றும் வகையில் மிகுந்த ஆர்வத்துடன் அனைத்து சமூகத்தினரும் இணைந்து தேர் திருவிழாவில் பங்கு பெறுவது அனைவரும் அறிந்ததே. சுவாமியின் வழிகாட்டுதலுடன் மிஷன் அங்கத்தவர்களும், பக்தர்களும் இலவச தொண்டுகளையும், பல சமூக நலத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துகின்றனர்.

 

அரசு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வேலி மறுசீரமைக்கப்பட்டு சமரச நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் பொய்யான பிரசாரங்களும், தவறான பத்திரிக்கை அறிக்கைகளும் தொடருகின்றன. அரசு அதிகாரிகளால் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையை தகுந்த முறையில் கவுரவிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=408032

 






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..