வேலை வாய்ப்பு பதிவு: மாணவர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறல்

Posted by Haja Mohideen (Hajas) on 5/26/2011

வேலை வாய்ப்பு பதிவு: மாணவர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறல்

 
 

பதிவு செய்த நாள் : மே 25,2011,22:45 IST
 

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து, பள்ளிகளிலேயே இணையதளம் மூலம் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தனர். 15 நாட்கள் வரை தமிழக அரசு கால அவகாசம் கொடுத்துள்ள போதும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவுக்காக நேற்றே அனைத்து மாணவர்களும் திரண்டு வந்ததால், மாணவர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறினர்.

பள்ளி பொதுத் தேர்வு முடிக்கும் மாணவர்கள், உடனடியாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வர். இதனால், பொதுத் தேர்வு முடிவுக்குப் பின், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் மாணவர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு இருக்கும். ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான மாணவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகங்களை முற்றுகையிடுவதால், பதிவு செய்வதில் கால தாமதம் ஏற்படும். இந்நிலை, கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. பள்ளிகளிலேயே, இணையதளம் மூலம் பதிவு செய்ய, அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. இத்திட்டம், இந்த ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. நேற்று முதல் 15 நாட்கள் வரை, பள்ளிகளிலேயே பதிவு செய்யலாம் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு நாள் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று காலை பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதும், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய மாணவர்கள், பள்ளிகளுக்கு திரண்டு வந்தனர். சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கிய கையுடன், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய மாணவர்கள் போட்டி போட்டனர்.

திருவல்லிக்கேணி, இந்து மேல்நிலைப்பள்ளியில் 225 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுதினர். மதிப்பெண் சான்றிதழ் வாங்க வந்த மாணவர்களில், இணையதளம் மூலம் பதிவு செய்ய விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு மட்டும், படிவம் ஒன்றை ஆசிரியர்கள் வழங்கினர். அதில், மாணவர் பெயர், வகுப்பு, பாடம், மதிப்பெண், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன. அதை மாணவர்கள் பூர்த்தி செய்து கொடுத்ததும், ஆசிரியர்களே இணையதளம் மூலம் பதிவு செய்தனர்.

பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மோகனதாஸ் கூறும் போது, "இணையதளம் மூலம் நடக்கும் பதிவுக்கு மாணவர்களை கட்டாயப்படுத்துவதில்லை. அதே நேரத்தில், விரும்பும் மாணவர்களுக்கு மட்டும் பதிவு செய்து கொடுக்குமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இணையதளம் மூலம் பதிவு செய்கிறோம். அதிகமான மாணவர்கள், இந்த வகையிலான பதிவிற்கு தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். பதிவு செய்ததும், மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவெண் ஒதுக்கப்படும். அதை மாணவர்கள், "பிரின்ட்-அவுட்' எடுத்துக் கொள்ளலாம்' என்றார்.

எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், 500க்கும் மேற்பட்ட மாணவியர் கூட்டமாக வந்திருந்தனர். தலைமை ஆசிரியை சூசன் எட்வர்ட் கூறும் போது, "15 நாட்களில் என்றைக்கு பதிவு செய்தாலும், இன்றைய தேதி தான் பதிவு தேதியாக கடைபிடிக்கப்படும். இதனால், மாணவியர் தினமும் வந்து பதிவு செய்து கொள்ளலாம். ஆனாலும், முதல் நாளே அவ்வளவு மாணவியரும் வந்திருப்பதால், உடனுக்குடன் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என்றார். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில், இணையதளம் மூலம் பதிவு செய்யும் பணிகளை பார்வையிட்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=246553






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..