வயல்வெளிகளை வீட்டுமனைகளாக மாற்றிய ஊழல் அதிகாரிகள்!

Posted by Haja Mohideen (Hajas) on 5/3/2011

வயல்வெளிகளை வீட்டுமனைகளாக மாற்றிய ஊழல் அதிகாரிகள்!

பதிவு செய்த நாள் 5/3/2011 5:38:45 PMTamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

 

 

 

 

 

 


நாகர்கோவில் : குமரியில் வயல் வெளிகளை வீட்டுமனைகளாக மாற்றி அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். குமரியில் ஆண்டிற்கு இருமுறை பருவமழை பெய்வதாலும், நீர்நிலைகள் அதிகம் இருந்ததாலும் நெல்விவசாயம் சிறந்து விளங்கியது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு 70 ஆயிரம் ஹெக்டேரில் நடந்த நெல் விவசாயம் படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் விளைநிலங்களை காப்பாற்ற அதிரடி திட்டமாக 3 ஆண்டுகள் தரிசாக கிடந்து அதில் விவசாயமே செய்ய முடியாது என வேளாண்மை மற்றும் மண்ஆய்வுக்கூட சான்றிதழ் பெற்ற பின்னரே அதை வீட்டுமனையாக மாற்ற முடியும் என அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து குமரியை சேர்ந்த ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு அரசு தரப்பில் சரியான நடவடிக்கை இன்மையால் ஐகோர்ட் இந்த உத்தரவிற்கு தடை விதித்தது. இதனையடுத்து விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறத் தொடங்கின. இதில் கடந்த 3 ஆண்டுகளில் மிகவும் வேகமாக வயல் வெளிகள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டது.

இதன்விளைவாக அரசின் கணக்குப்படி குமரியில் 8ஆயிரத்து 500 ஹெக்டேர் ஆக நெல் விவசாய நிலப்பரப்பு குறைந்துள்ளது. இதற்கிடையே நெல் விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வயல் வெளிகளை வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஏற்கனவே முன்பணம் வழங்கிய மற்றும் பிளாட்டுகளாக அறிவிக்கப்பட்ட இடங்களை பத்திர பதிவு செய்ய அனுமதிக்கும் படியும், மீண்டும் புதிதாக விவசாய விளைநிலங்கள் அழிக்கப்படாது என உறுதி அளித்தனர். இதுதொடர்பாக தமிழக முதல்வர், அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோரிடமும் மனுக்கள் அளித்தனர். இதன்படி ஏற்கனவே பிளாட்டாக மாற்றப்பட்ட இடங்களை மட்டும் பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு காரணமாக பத்திரப்பதிவு பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது வாக்கு எண்ணிகை முடிந்து வரும் 15ம் தேதியோடு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் வாபஸ் ஆவதால் பத்திரப்பதிவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைய தொடங்கியுள்ளன.
இதனையடுத்து நாகர்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் வயல்வெளிகளுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளன. பதிவில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக தற்போது நிலங்கள் உள்ளவர்கள் பெயரிலேயே நிலம் தரிசாக உள்ளதாக அதிகாரிகள் துணையுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு ரிஜிஸ்தர் இணையதளத்தில் வீட்டுமனைகளாக காட்டப்பட்டுள்ளவை வயல்வெளியாக உள்ளது. தற்போது இதுபற்றி கலெக்டர் நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்தினால் ஊழல் அதிகாரிகள் சிக்குவார்கள். விளைநிலங்களும் பாதுகாக்க வழி ஏற்படும்.
பத்திரப்பதிவு முடிந்ததும் இந்த வயல்வெளிகள் மண்ணால் நிரப்பட்டு வீட்டுமனைகளாக மாற உள்ளன. இதே வேகத்தில் போனால் இன்னும் ஒரு ஆண்டில் குமரியில் வயலே இல்லாத நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/specialdetail.aspx?id=35407&id1=22






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..