அதிக ஓட்டுப்பதிவுக்கு மக்களின் விழிப்புணர்வே காரணம் : பிரவீன்குமார் பேட்டி

Posted by Haja Mohideen (Hajas) on 4/13/2011

அதிக ஓட்டுப்பதிவுக்கு மக்களின் விழிப்புணர்வே காரணம் : பிரவீன்குமார் பேட்டி

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2011,23:28 IST

 

சென்னை : ""தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது. 81 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிற்கு ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு, மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு தான் காரணம்,'' என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். மூன்று ஓட்டுச்சாவடிகளில் மட்டும், 15ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அவர் தெரிவித்தார்.

 

இரவு அவர், நிருபர்களிடம் கூறியதாவது:ஓட்டுப்பதிவு குறித்த சதவீதம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. பல ஓட்டுச்சாவடிகளில் கூட்டம் அதிகம் இருந்ததால், ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, முழுமையான விவரம் நள்ளிரவுக்குள் அல்லது நாளை (இன்று) காலை தான் முழுமையான விவரம் தெரியவரும். எனினும், ஓட்டுப்பதிவு சதவீதம் 75 முதல் 81க்குள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மாநில அளவில் 65 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததாக, புகார்கள் வந்தன. அதில், 11 இயந்திரங்கள் சரி செய்யப்பட்டன. 54 இயந்திரங்களுக்கு பதில், புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.திருவிடைமருதூரில் இரண்டு ஓட்டுச்சாவடிகளில் அடங்கிய வாக்காளர்கள், தேர்தலை புறக்கணித்துள்ளனர். ஓட்டுச்சாவடி இடம் மாற்றம் தொடர்பான பிரச்னையில், இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் கூறினர். இந்த ஓட்டுச்சாவடிகளில் தலா 1,300 ஓட்டுகள் இருந்தன. மாநில அளவில், பெரிய அளவில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

 

நெய்வேலியில், 7.10க்கு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு ஓட்டுச்சாவடியில் இருந்த ஓட்டுப்பதிவு இயந்திரம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. எனவே, அந்த ஓட்டுச்சாவடியில் மீண்டும் ஓட்டுப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், கன்னியாகுமரியில் ஒரு ஓட்டுச்சாவடியிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு ஓட்டுச்சாவடியிலும் அமைக்கப்பட்டிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுகள் பதிவாகவில்லை. எனவே, இந்த இரு ஓட்டுச் சாவடிகளிலும் மறு ஓட்டுப்பதிவு நடைபெறும்.இது குறித்து, தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளோம். உத்தரவு வந்ததும், மறு ஓட்டுப்பதிவு 15ம் தேதி நடைபெறும். அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 86 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக, தூத்துக்குடியில் 74 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலை விட (70%), இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு அதிகரித்ததற்கு, மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே அதிகளவில் ஏற்பட்ட விழிப்புணர்வு தான் காரணம்.

 

சென்னையில், நடுத்தர மக்களும், உயர்தட்டு மக்களும் அதிகளவில் குடும்பம், குடும்பமாக வந்து ஓட்டளித்தனர். தேர்தல் கமிஷன் மற்றும் அரசியல் கட்சியினர் ஏற்படுத்திய விழிப்புணர்வும், ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம். மத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு, படியை குறைத்துவிட்டதாக கூறப்பட்டது தவறு. முன்னாள் ராணுவ வீரர்களுக்கான படி, முந்தைய தேர்தலை விட 60 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த தொகையை தருவதாக தெரிவித்துள்ளோம்.வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, 11ம் தேதி இரவு 53 பேர் கைது செய்யப்பட்டனர். இது போன்று, 1,565 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சம்பந்தபட்டவர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். மாநிலத்தில், எந்த ஓட்டுச்சாவடிகளிலும் கள்ள ஓட்டு சம்பவம் நடைபெறவில்லை.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

 

ஓட்டு எண்ணிக்கை எங்கு நடக்கும்? சென்னை மாவட்டத்திற்கான ஓட்டு எண்ணிக்கை, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் என, பிரவீன்குமார் தெரிவித்தார். தொகுதி வாரியாக பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இந்த மூன்று இடங்களிலும் பிரித்து பாதுகாப்புடன் வைக்கப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=224360






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..