இருட்டு எதிர்காலம்
அஹமத் சுபைர்
நான் மஸ்கட் வந்து 4 வருஷமாயிடுச்சு. இன்னும் ஊருக்குப் போக முடியல. காசு முக்கியமாச்சே..இதை விட்டுட்டு போனா அடுத்த நாள் ஊரில ஒன்னும் பண்ணமுடியாது..
இந்த பாழாப்போன பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. ஒரு நல்ல நாளுக்கு நல்ல துணி மணி எடுக்கணும்னாலும் இதே காசுக்கு ஊர்ல இருக்குற எல்லாருக்கும் துணி எடுத்துப்புடலாம். நமக்கே 200 திர்ஹாம் ஆயிடுது. ஊருக்குப்போகையில ஏதாவது வாங்கிட்டுப் போனாத்தானே நல்லாயிருக்கும்.
அம்மாகிட்ட நேத்து பேசினப்போ, “ரொம்ப ஆசையா இருக்குடா புதுசா தோடு போட்டுக்கணும்னு. இலை இலையா டிசைன்ல பச்சைக் கலர் இலையும் சேந்தா மாதிரி தோடு வாங்கியாடா”ன்றாங்க.
தங்கச்சிக்கிட்ட பேசினா,”இத்தனி வருசமா ஃபாரின்ல இருக்க..என் குழந்தைக்கு மாமன்கிற முறையில என்ன செஞ்சிப்புட்ட”ன்னு கேக்குறா.
அப்பா “புதுசா ஒரு மொபைல் வாங்கிக்கொடு, இப்ப இருக்குறது வெயிட் அதிகமா இருக்கு”ன்னு சொல்றார்.
இவங்களை எப்படி சமாதானப் படுத்துறதுன்னே தெரியல..இங்க குடிக்க தண்ணி இல்லாம, நல்லதா சாப்பிடாம வயித்தக் கட்டி வாயக் கட்டி சம்பாதிக்கிறோம்னு தெரியக்கூடாதுன்னு தானே வீட்டுக்கு நாம போறப்போ இதெல்லாம் வாங்கியாறோம்..
அவங்களுக்கு எங்க புரியப் போகுது..
தொடர்ந்து படிக்க தொடர்பை சுட்டவும்