Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
அரபு நாடுகளின் வரலாறு (1) U A E
Posted By:sisulthan On 1/28/2009

ஐக்கிய அரபு குடியரசானது துபாய், ஷார்ஜா, அபுதாபி, ராசல் கய்மா, புஜைரா, உம்முல்-குவைன், அஜ்மன் ஆகிய ஏழு அமீரகங்களை கொண்டதாகும். ஒவ்வொன்றும் தன்னாட்சி அமைப்பை பெற்றுள்ளது. இவை அனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் உடன்படிக்கை மாகாணங்கள் என்றழைக்கப்பட்டன. இஸ்லாம் இங்கு ஏழாம் நூற்றாண்டில் அறிமுகமாகிறது. அதற்கு முன்பு சுமேரிய, பாபிலோனிய கலாசாரத்துடன் தொடர்பு கொண்டதாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் எமிரேட்டின் கடற்கரைகள் கொள்ளைக்கும், கடத்தலுக்கும் பெயர்பெற்றிருந்தன. அதன் காரணமாக இவை கொள்ளை கடற்கரை என அழைக்கப்பட்டன. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இதன் கடற்கரை கட்டுப்பாடு முழுவதும் பிரிட்டன் வசம் வந்தது. பிரிட்டானிய ரோந்து கப்பல்கள் இங்கு வலம் வந்தன. இதன் எல்லா பகுதிகளையும் உயர்குடும்பத்தினர் ஆண்டு வந்தனர். இவர்களோடு பிரிட்டன் 1835ல் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. இதன்படி இதன் கடற்பகுதி முழுவதும் பிரிட்டனுக்கு சொந்தம். மேலும் நிலப்பகுதிக்கான உள்கட்டமைப்பு வசதிகளை பிரிட்டன் மேற்கொள்ளும். இதன் பிறகு எமிரேட்டின் முழுப்பகுதியுமே பிரிட்டன் வசம் வந்தது. 1968 ல் பிரிட்டன் எமிரேட்டை ஒன்றிணைப்பது குறித்து ஷேக்குகளிடம் கலந்தாலோசித்தது. அவர்கள் தங்களுக்குள் கூடி ஒருங்கிணைவது குறித்து சிந்தித்தனர். பின்னர் ராசல் கய்மா தவிர மற்ற ஆறுமாகாணங்களும் ஐக்கிய அரபு குடியரசாக இணைந்தன.அதே ஆண்டில் பிரிட்டன் விலகி கொண்டது.முதலில் கத்தர், பஹ்ரைன் ஆகியவையும் ஐக்கிய அரபின் கீழ் தான் இருந்தன.பின்னர் 1971 ல் தனித்தனியாக விலகி கொண்டன. 1973ல் ராசல் கய்மா தன்னை எமிரேட்டோடு இணைத்து கொண்டது. அபுதாபியை தலைநகராக கொண்ட எமிரேட் உலகை நோக்கி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
மத்திய கிழக்கின் வர்த்தக தலைநகராக விளங்கும் ஐக்கியஅரபானது மேற்கு நாடுகளை ஒத்த வளர்ச்சியை அடைந்திருக்கிறது. நீல வானிற்கு மிக அருகில் சமீபித்திருக்கும் கட்டிடங்கள் நிலத்தை பிரதிபலிப்பு செய்கின்றன. பன்னாட்டு கம்பெனிகள் அனைத்தும் இங்கு தங்கள் ஸ்தாபனங்களை நிறுவியுள்ளன. ஜெபல் அலியை தலைமை இடமாக கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ளன.எமிரேட் மத்திய கிழக்கிலேயே அதிகஅளவில்வெளிநாட்டினரை கொண்டுள்ளது. இது உள்நாட்டு மக்கள் தொகையை விட அதிகம். அறுபதுகளில் ஈரானியர்கள் அதிக அளவில் வந்து குடியேற தொடங்கினர்.பாதுகாப்பற்ற எமிரேட்டின் எல்லைபகுதியே அதற்கு காரணம். பிறநாட்டு மக்கள் தொகையில் இந்தியர்கள் குறிப்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் தான் அதிகம். எமிரேட்டை மற்ற நாட்டினர் united kerala என்றழைக்கிறார்கள். 1957 ல் அங்கு நடந்த மகத்தான அக்டோபர் புரட்சியின் விளைவு இது. கட்டுமான துறையில் அதிகம் வெளிநாட்டினர் பணிபுரியும் நாடு இது தான். புஜைராவின் மலைமுகடுகளில் உடைக்கப்படும் பாறைத்துகள்களானது சிவப்பு வரிகளால் தன்னை எழுதிச்செல்கிறது. எமிரேட்டியர்களின் கலாசார நடைமுறை வித்தியாசமானதாக தெரிகிறது. இவர்கள் பதூயீன் நாட்டார் இசையை பின் தொடர்கிறார்கள். கையில் குச்சியை வைத்துக்கொண்டு ஆடும் நடனமானது எமிரேட்டின் கடைத்திருவிழாக்களின் சிறப்பம்சம். வளைகுடாவின் முதல் பெண்பாப் பாடகரான அஹ்லம் எமிரேட்டியர் தான். மத்திய கிழக்கின் வர்த்தக தலைநகரமாக எமிரேட் வளர்ச்சியடைந்தபோதும் சவூதி மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுடனான எல்லை பிரச்சினை அதற்கு இடையூறாக உள்ளது. ஈரான் - ஈராக் போரின் போது எமிரேட் ஈராக்கிற்கு ஆதரவு அளித்தது. அதே நேரத்தில் ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பிற்கெதிராக எதிர் நிலைபாட்டை மேற்கொண்டது. சில நேரங்களில் மிகை பெட்ரோல் உற்பத்தியால் ஈராக்கின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறது. உலகில் அதிக அளவு தனி நபர் வருமான வீதத்தை கொண்டிருக்கும் எமிரேட் ஒரு மரத்தின் உதிர்ந்த இலையாக நகர்ந்து வருகிறது.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..