Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன?
Posted By:peer On 7/27/2008

prednisolon og alkohol

prednisolon carp-fishing.nl

1. கையால் எழுதியோ அல்லது மின்னச்சு மூலமாக ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தி அல்லது அந்தப் பகுதியின் அதிகாரபூர்வ மொழியில், எந்த மாதிரியாகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டு, மக்கள் தகவல் தொடர்பு அதிகாரிக்கு எழுதலாம்.

2. என்ன காரணத்திற்காகத் தகவல் கோரப்படுகிறது என்பதைப் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை.

3. அவர்கள் வரையறுத்துள்ளபடி கட்டணம் செலுத்த வேண்டும் (வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களுக்கு இது உரியதல்ல)

2). தகவல் பெறுவதற்கான கால வரையறை என்ன?

1. விண்ணப்பத்திலிருந்து 30 நாட்கள்

2. ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் சம்மந்தமான தகவலாக இருந்தால் விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் தரப்பட வேண்டும்.

3. ஒரு வேளை, தகவலுக்கான விண்ணப்பம், உதவி மக்கள் தகவல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டிருந்தால், முன்குறிப்பிட்ட தேதியிலிருந்து 5 நாட்கள் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

4. மூன்றாவது நபரின் தலையீடு இருக்குமானால் கால வரையறை 40 நாட்கள்.

5. குறிப்பிட்ட கால வரையறைக்குள் தகவல் தரத் தவறினால் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகக் கருதிக்கொள்ளலாம்.

3). கட்டணம் என்ன?

1. வரையறுக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும்.

2. மேலும் கட்டணம் தேவைப்பட்டால், சம்மந்தப்பட்டவருக்கு, கட்டணம் குறித்த கணக்கிடப்பட்ட விவரங்களை எழுத்தின் மூலம் தெரிவிக்க வேண்டும்.

3. மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி விதித்த கட்டணத்தை, மேல்முறையீடுகளைக் கவனிக்கும் அதிகாரிக்கு விண்ணப்பிப்பதின் மூலம் மறு ஆய்வுசெய்யலாம்.

4. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் மக்களிடம் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது.

5. ஒரு வேளை மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி குறிப்பிட்ட கால வரையறைக்குள் தகவலை தெரிவிக்கத் தவறினால், விண்ணப்பதாரருக்குத் தகவலை இலவசமாகத் தர வேண்டும்.

4). எந்த அடிப்படையில் நிராகரிக்கலாம்.

1. ஒருவேளை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியதிலிருந்து விதிவிலக்குப் பெற்றிருந்தால்.

2. ஒருவேளை மாநிலத்தைத் தவிர வேறு நபருடைய உரிமையைச் சட்டபப்டி பெறுவதாக இருந்தால்.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..