Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
குர்ஆனில் கருவளர்ச்சி
Posted By:jasmin On 6/15/2008

குர்ஆனில் கருவளர்ச்சி

கருவளர்ச்சியில் காணப்படும் படிநிலைகளில் கரு எவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்து மனித உருவைப் பெறுகிறது என்பதற்கு குர்ஆனில் ஆதாரமில்லை என முன்வைக்கப்படும் வாதத்தையும். விலங்கிலிருந்து மனிதன் தொன்றினான் என்ற கருவியல் சான்றிதழையும் குர்அன் முற்றாக
மறுத்து நாத்திக வாதத்திற்கு சாவு மணி அடிக்கிறது அல்குர்ஆன்.

நாத்திகச் சிந்தனையில் வெளிப்படும் ஐயத்தைப் போக்கி விலங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை எனும் தன்னுடைய கூற்றை நிறுவிக் காட்ட கருவியல் குறித்த தன்னுடைய ஆழ்ந்த ஞானத்தை கீழ்க்காணும் வசனங்களில் ஓங்கி ஒலிக்கிறது திருமறைக் குர்ஆன்!.

அருள்மறை குர்ஆன் கூறுகிறது:

'பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம், பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டம் ஆக்கினோம், பின்னர் அத்தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம், பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம், பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன:; (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
'(அத்தியாயம் 23 ஸுரத்துல் முஃமினூன் - 12 முதல் 14 வரையிலான வசனங்கள்.)

கருவியலில் காணப்படும் படிநிலைகள் என்னவென்றும், அந்தப் படிநிலைகளில் கரு எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்றும் திருமறைக்குத் தெரியவில்லை என்பதால் அதன் கூற்றைப் பொருட்படுத்த வேண்டிய தில்லை என இதற்கு மேலும் யாரேனும் எண்ணம் கொள்ளலாமா? அப்படி யாரேனும் எண்ணிக் கொண்டால் அவர்களைப் பகுத்தறிவாளர்கள் என்று நம்மால்தான் ஏற்க இயலுமா? என்ன கூறுகிறது இந்த வசனங்கள்?.

நூற்றுக் கணக்காண வருடங்கள் பற்பல விஞ்ஞானிகளின் இடைவிடாத உழைப்பால் ஆய்வுக் கூடங்களில் கருவுற்று நுண்ணோக்கியால் பிரசவம் பார்த்து நவீனஅறிவியல் உலகால் மட்டுமே ஈன்றெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிநவீன கருவியல் கண்டுபிடிப்பையல்லவா இம்மாமறைக் குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே கூறி நிற்கிறது! இதற்கீடாகவா மற்றொரு அற்புதம் இப்பேரண்டத்தில் காணப்போகிறது?.

எதை, ஏற்பதாக இருந்தாலும் அதற்கு அறிவியல் ஆதாரம் உண்டா எனத் தேடும் அறிவியல் அன்பர்களே! இந்த அறிவியல் சான்று ஒன்று போதாதா? இம்மாமறை மெய்யாகவே மனித சக்திக்கு அப்பாற்பட்ட உண்மையான இறைவேதம் என உங்கள் பகுத்தறிவ ஏற்பதற்கு!. '

நவீன' அறிவியல் உலகம் கருவியலின் படிநிலையை விந்திலிருந்து துவங்கும்போது திருக்குர்ஆன் அதற்கும் ஒருபடி மேல் சென்று

விந்திற்கும் முந்திய படிநிலை ஒன்று இருப்பதாகவும், அந்தப் படிநிலையில் களிமண் சத்திலிருந்து விந்து உருவாக்கப்படுகிறது எனவும் கூறுகிறது.

நீரும் மண்ணும் இணைந்து உருவாகும் களிமண்ணின் சத்துக்களை (மண்ணின் சத்து என்னும் மறைமொழி அறிவியல் மொழியில் 'இரசாயனப் பொருட்கள்' எனப் பொருள்படும்) மண்ணிலிருந்து நேரடியாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களின் வாயிலாகவோ அல்லது அவைகளை உண்டு வாழும் விலங்கினங்களின் மாமிசம் வாயிலாகவோ மனிதன் பெற்று தனக்கேற்ற சத்துப் பொருட்களைத் (இரசாயனச் சேர்மங்களை) தயாரிக்கிறான் என்பதை நாம் அறிவோம். இவ்வாறு மனித உடலில் ஈடுபடும் இரசாயனக் கிரியைகளில், விந்தினை தயாரிக்கும் உயிரியல் இரசாயன வினைகளும் இருக்கின்றன என்பதும், இந்த வினைகளின் போது விந்தணுக்களின் மூலச் செல்கள் மைட்டாசிஸ் முறையிலும், அதன் பிறகு மியோசிஸ் முறையிலும் பிளவுற்று பெருகி அதன் பிறகு ஸ்பெர்மோ ஜெனிசிஸ் முறையில் விந்தணுவாக மாற்றப்படுகின்றன என்பதை நவீன கருவியல் கண்டுபிடிப்புகள் நிரூபித்துள்ளன.

எனவே

களிமண் சத்திலிருந்து விந்தணுவை உருவாக்கும் படிநிலை ஒன்று உடலுக்குள் நடைபெறுவதாக திருமறை கூறியதை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் மெய்ப்பிக்கின்றன.

இவ்வாறு மானிடப் படைப்பின் கருவியலை திருக்குர்ஆன் உயிரியல் இரசாயனத்திலிருந்து (டீழை-ஊhநஅளைவசல) துவங்கியிருப்பதும், அவனுடைய உடலின் மூலப் பொருட்கள் மண்ணிலிருந்து பெறப்பட்டதாகக் கூறி அவனை விலங்கொத்தவனாக மட்டுமின்றி தாவரங்கள் உட்பட அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கிய உயிரினம் எனும் ஒருமித்தப் பார்வையில் அணுகியிருப்பதும் பொதுவாக உயிரியலிலும், சிறப்பாகக் கருவியலிலும் திருமறை கொண்டுள்ள ஞானத்தின் ஆழ, அகலங்களைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

தாவரங்கள் மண்ணிலிருந்து முளைத்து வருவதால் அவை மண்ணிலிருந்தே உற்பத்தியாகின்றன என்பதில் யாருக்கும் ஐயம் எழ வாய்ப்பில்லை. ஆயினும் விலங்கினங்களும், மனிதர்களும் கருப்பைகளில் உருவாக்கப் படுவதால் அந்த உயிரினங்களின் உடல்களும் மண்ணின் சத்துப் பொருட்களால் (இரசாயனப் பொருட்களால்) உருவாக்கப்படுபவை தானா ? என்பதில் சிலருக்கு ஐயமிருக்கலாம். ஆயினும் நவீன அறிவியல் உலகின் இரசாயனப் பகுப்பாய்வுகள் இந்த ஐயத்தைப் போக்கி விடுகிறது.

மனிதன் மற்றும் பாலூட்டும் விலங்குகளின் உடலை வேதியல் பகுப்பாய்வு செய்த விஞ்ஞானிகள் அவ்வுயிரினிங்களின் உடல்களை உருவாக்கியிருக்கும் பொருட்களை கீழ்க்கண்டவாறு பட்டியலிடுகிறார்கள்:

01 பிராணவாயு (ழுஒலபநn) 65 சதவீதம்
02 கரி (ஊழசடிழn) 18 சதவீதம்
03 நீரகம் (ர்லனசழபநn) 10 சதவீதம்
04 நைட்ரஜன் (லேவசழபநn) 03 சதவீதம்
05 சுண்ணாம்பு (ஊயடஉரைஅ) 02 சதவீதம்
06 பாஸ்பரஸ் (Phழளிhசழரள) 01 சதவீதம்

மேற்கண்ட பொருட்கள் மனிதன் மற்றும் பாலூட்டிகளின் உடலை உருவாக்குவதில் மிகுதியாகப் பயன்படும் 'மாக்ரோ தனிமங்கள்' என்றும் எஞ்சிய ஒரு சதவீதம் அவைகளின் உடலில் சிறிய அளவில் பயன்படும் 'மைக்ரோ தனிமங்கள்' என்றும் பகுப்பாய்வுகள் கூறுகின்றன. மைக்ரோ தனிமங்களில் காணப்படும் அலுமினியம், டைட்டோனியம், போன்றவைகளின் அளவை விஞ்ஞானிகள் கணித்தபோது அவை வெறும் 0.001 சதவீதம் மட்டுமே காணப்பட்டன. எனவே மனித உடலில் காணப்படும் மைக்ரோ தனிமங்களின் பட்டியில் மிக நீண்டதாகவும், அவற்றுள் சிலவற்றின் அளவுகள் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி மிகக் குறைவே எனவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மனித உடலில் இதுவரை மொத்தம் எழுபது தனிமங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் அவைகளில் முன்னர் குறிப்பிட்ட ஆறுவகை மாக்ரோ தனிமங்கள் தவிர ஏனைய யாவும் எஞ்சிய ஒரு சதவீதத்தைச் சார்ந்த மைக்ரோ தனிமங்களே எனவும் பகுப்பாய்வுகள் கூறுகின்றன. இவைகளில் தாமிரம், கோபால்டு, மாங்கனீஸ், வினேடியம், அயோடின், மாலிப்டினம், துத்தநாகம் போன்றவை மட்டுமின்றி சர்வ பட்சினி எனப் பெயர்பெற்று கந்தக அமிலத்தைவிட வினைவீரியம் மிக்க ஃபுளூரின் (குடரழசin) போன்றவைகளும் ரேடியம், யுரேனியம் போன்ற கதிரியக்கப் பொருட்களும் உள்ளடங்கி இருக்கின்றன எனவும் அறிவியல் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

மேலே சுட்டிக்காட்டப்பட்ட பொருட்கள் யாவும் பூமியில் காணப்படும் இரசாயனத் தனிமங்களே என்பதை நாம் அறிவோமல்லவா!.ஆகவே இரசாயனத் தனிமங்களாக விளங்கும்

மண்ணின் சத்துப் பொருட்களிலிருந்தே மனிதன் தோற்றுவிக் கப்பட்டான்

எனக்கூறும் திருமறை வசனத்தை நவீன அறிவியல் உலகின் வேதியியல் பகுப்பாய்வுகள் நிரூபிக்கின்றன.

இப்போது மனித உடல் உருவாக்கப்பட்டிருப்பது மண்ணின் சத்துப் பொருட்களால்தாம் என்பதை விளங்கிக் கொண்டோம். அதோடு தன்னைப் போன்றே உடலமைப்பைக் கொண்ட தன் குழந்தையை உருவாக்குவதற்கு அவன் விந்துச் செல்களையே வெளிப்படுத்துகிறான் என்பதும் நமக்குத் தெரியும். எனவே விந்திலிருந்து உருவாக்கப்படும் மனித உடல்கள் மண்ணின் சத்துப் பொருட்களாக இருப்பதால் இந்த மண்ணின் சத்துப் பொருட்களே ஒரு காலகட்டத்தில் விந்தாக இருந்தது என்பதில் இதற்கு மேல் யாருக்கும் ஐயம் எழ வாய்ப்பில்லை அல்லவா?

ஆகவே நாம் ஆய்விற்கெடுத்துக் கொண்ட திருமறை வசனம்

'மனிதனை நாம் களிமண் சத்திலிருந்து படைத்தோம் பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் விந்தாக ஆக்கினோம்'

எனக் கூறியதை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் நிரூபித்து நிற்கின்றன. விந்தினை உருவாக்குவதை கருவியலின் ஒரு படிநிலையாக திருமறை கூறியதைப் போன்றே நவீன கருவியல் கண்டுபிடிப்புகளும் விந்து உருவாக்கப்படுவதை கருவியலின் முதல் படிநிலையாக ஏற்றுக் கொண்டதை முந்திய தொடரில் கண்டோம்.

இதற்கடுத்த படிநிலையில் கருமுட்டை கருவுறுதலை ஒரு படிநிலையாக நவீன கருவியல் கூறுகிறது. இப்படிநிலையில் ஆணிலிருந்து வெளிப்படும் விந்தணுவும், (இதனை உயிரணு என்றும் கூறுவார்கள்) பெண் விந்திலிருந்து வெளிப்படும் கருமுட்டையும் ஒன்றை ஒன்று சந்தித்து இணைந்து கொள்கின்றன. இந்த இணைப்பின் வாயிலாக விந்தணு கருமுட்டைக்குள் நுழைந்து கருமுட்டையைக் கருவுறச் செய்வதால், அதன் பிறகு கருமுட்டைக்கு 'கருவுற்ற கருமுட்டை' (ணுலபழவ) என அழைக்கப்படும்.

இவ்வாறு விந்தணு கரு முட்டைக்குள் நுழைந்து, அதனைக் கருவுறச் செய்வதை ஒரு படிநிலையாக நவீன கருவியல் கூறுகிறது. திருமறையின் வார்த்தைகளில் இந்த நிலை 'அலக்' எனக் கூறப்படுகிறது. 'அலக்' என்ற அரபிச் சொல்லுக்கு இரத்தக்கட்டி அல்லது ஒட்டிப் பிடித்துத் தொங்கும் ஒரு பொருள் என ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருள்கள் இருப்பதாக அரபு மொழியில் வல்லுனர்கள் கூறுகிறார்கள். எனவே இச்சொல்லை எந்தப் பொருளில் அதன் ஆசிரியனாகிய இறைவன் பயன்படுத்தியுள்ளான் எனத் தீர்மானிக்கும்போது தவறு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக சில மொழி பெயர்ப்பாளர்கள் அச்சொல்லை மொழி பெயர்க்காமல் அப்படியே பயன்படுத்தியுள்ளார்கள். இருப்பினும், இச்சொல்லுக்கு 'தொங்குபொருள்' எனப் பொருள் கொள்வதே பொருத்தமாக இருக்கும் என நாம் கருதுவதால் (இதைக் குறித்து கூடுதல் விபரங்களுக்கு டாக்டர் மாரிஸ் புகைல் அவர்கள் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகிய 'விஞ்ஞான ஒளியில் குர்ஆனும், பைபிளும்' என்ற நூலைப் பார்க்கவும்) நமது கட்டுரையில் இவ்வாறே பொருள் கொள்வோம்.

எனவே ஆணிலிருந்தும், பெண்ணிலிருந்தும் வெளிப்படும் விந்து தொங்கு பொருளாக மாறும் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதாகவும், அதையே தன்னுடைய படிநிலையாகவும் திருமறை கூறுகிறது. திருமறை கூறும் இப் படிநிலையை மெய்ப்பிக்கும் பொருட்டு நவீன கருவியல் அழகாக விளக்கம் தருகிறது. நவீன கருவியலின் கண்டுபிடிப்புகளின் துணையோடு பார்க்கும்போது விந்தணு கரு முட்டைக்குள் நுழைந்து அதனை கருவுறச் செய்த பிறகு கருவுற்ற கருமுட்டை நேராக கருவறைக்குள் வந்து அதன் சுவர்களுக்குள் ஒட்டித் தொங்கியவாறே வளரத் துவங்குகிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

எனவே ஆண், பெண் விந்துக்கள் ஒன்றோடொன்று இணைந்து கருப்பையில் தங்குவதையே திருமறை தன்னுடைய படிநிலைகளில் ஒன்றாகக் கூறுகிறது என்பதையும், இப்படி ஒரு நிகழ்ச்சி கருவறையில் நடைபெறும் என்பதையும் நாம் ஐயமறத் தெரிந்து கொண்டோம்.

இதற்கு அடுத்த படிநிலையில் அந்தத் தொங்கு பொருள் ஒரு சதைத் திரட்சியாக மாற்றப்படுகிறது என்பதைத் திருமறைக் கூறும்போது நவீன கருவியல் கண்டுபிடிப்புகளும் கருவுற்ற கருமுட்டை தன் செல்களைப் பிளந்து பெருகச் செய்து (ஊடநயஎயபந - பிளவிப்பெருக்க முறைப்படி)

ஒரு சதைக் கோளமாக மாறுகிறது

எனக் கூறி திருமறை கூறும் படிநிலையைத் தன்னுடைய படிநிலையாக ஏற்றுக் கொள்கிறது. இதற்கடுத்த படிநிலையில் அந்தத் சதைக்கோளம் மூன்று வகை அடுக்குகளாக வடிவம் பெறுகிறது. குழந்தையின் உடற்கூறுகள் யாவும் இந்த மூன்று அடுக்குகளிலிருந்தே உற்பத்தியாகின்றன.

முதலாவது அடுக்காகிய 'எண்டோ டெர்ம்: (நுவெழனநசஅ) என்பதிலிருந்து குழந்தையின் நரம்புகளும், சருமமும் உருவாகிறது.

இரண்டாவது அடுக்காகிய 'மீசோ டெர்ம் (ஆநளழனநசஅ) என்பதிலிருந்து எலும்பு, சதை மற்றும் இரத்த நாளங்கள் உற்பத்தியாகின்றன.

மூன்றாவது அடுக்காகிய 'எக்டோ டெர்ம்' (நுஉவழனநசஅ) என்பதிலிருந்து குடல்களும், சுரப்பிகளும் உருவாகின்றன.

இவ்வாறு படிநிலைகளில் குழந்தையின் உடற்கூறுகளை உருவாக்கும் பொருட்டு அச்சதைக்கோளம் ஒரு வகையில் மூன்று அடுக்குகளாக வடிவம் பெற்றும் மற்றொரு வகையில் உடற்கூறுகளில் எதுவும் வடிவம் பெறாமலும் இருக்கும் நிலையே காணப்படுகிறது. இப்படிநிலையில் கருவின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை நாம் சுருங்கக் கூறினால் ஒருவகையில் வடிவம் பெற்றதும், மற்றொரு வகையில் வடிவம் பெறாததுமான கரு எனக் கூறலாம். இப் படிநிலையை நவீன கருவியல் விஞ்ஞானம் மூவடுக்குயிரி (புயளவசரடய) என அழைக்கிறது.இப்படிநிலையின்போது, கருவறைகளில் மனிதன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதை நுண்ணோக்கியின் துணை கொண்டு நவீன விஞ்ஞானிகள் எதைக் கண்டுபிடித்தார்களோ அதை இம்மியும் பிறழாமல் திருமறைக் குர்ஆன் தன்னுடைய கருவியல் சார்ந்த மற்றொரு வசனத்தில் எவ்வளவு அற்புதமாகக் கூறி நிற்கிறது!

திருமறை கூறுகிறது:

'(அலக் எனும் படிவநிலைக்குப் பிறகு) வடிவமைக்கப்பட்டதும், வடிவமைக்கப்படாததுமாகிய சதைத் திரட்சியிலிருந்தும், (உங்கைளைப் படைத்தோம். நீங்கள் நம்மால் எவ்வாறு படைக்கப்பட்டீர்கள் எனும்) உண்மை நிலையை நாம் உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதை எடுத்துரைக் கிறோம்)' அல்-குர்ஆன் அத்தியாயம் 22 ஸுரத்துல் ஹஜ் - ன் 5வது வசனம்.

மேற்கண்ட வசனத்தின் வாயிலாக மூவடுக்குயிரி எனும் படிநிலையில் கரு எந்த நிலையில் இருக்கும் என்பதை நவீன கருவியல் கண்டுபிடிப்பு என்ன கூறுகிறதோ அதை எவ்வளவு இரத்தினச் சுருக்கமாகவும், கருவியலை அறிந்து கொண்ட எந்த நபராலும் சட்டெனப் புரிந்து கொள்ளும் விதத்திலும், 'வடிவமைக்கப்பட்டதும், வடிவமைக்கப்படாததுமான' என இரண்டே, இரண்டு வார்த்தைகளில் திருமறை எடுத்துரைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்பதை பார்த்தீர்களா?.

மனிதனின் உடற்கூறுகள் அனைத்தையும் செல்களே உற்பத்தி செய்கின்றன என்பதை நாமறிவோம். எனவே நமது தோல், சதை, எலும்பு, குடல், நரம்பு போன்ற எதுவாயினும் அவைகளையும் செல்களே உற்பத்தி செய்தாக வேண்டும். எனவே கோடிக்கணக்கான செல்களால் உற்பத்தியாக வேண்டிய நமது உடற்கூறுகள் ஒவ்வொன்றையும் உற்பத்தி செய்யும் பொருட்டு, அது அதற்கேற்ற சிறப்பியல்புகளைக் கொண்ட சில மூலச் செல்கள் நமது கருவில் முதலாவதாகத் தோன்ற வேண்டும். எனவே கருவுற்ற கரு முட்டை சதைத் திரட்சியாக மாறும்போது இந்த மூலச் செல்கள் தோன்றி விடுகின்றன.

ஆயினும் இந்த மூலச் செல்களில் எந்தெந்த செல்கள் எந்தெந்த இடத்தில் அமைய வேண்டுமோ அந்தந்த இடத்தில் அவை அமையப் பெற்றிராது. நாம் ஒரு வாதத்திற்காக சதைத் திரட்சியாக இருக்கும் கரு மூவடுக்கு உயிரியாகாமல் அப்படியே வளர்வதாக வைத்துக் கொள்வோம். அப்படியே அக்கரு வளருமானால் நாம் இதுவரை பார்த்திராத ஓர் அகோர உருவமாகவே இது இருக்கும். அதன் கண்கள் முகத்தில்தான் இருக்க வேண்டுமென்பதில்லையே. அவை குடலுக்கள் கூடத் தோன்றலாம். அதன் இதயம் மார்புக்கு வெளியில் தோன்றலாம். 'தொடையிடுக்கில் தலை இருக்கலாம். ஆகவே இப்படிப்பட்ட ஓர் பிறவி இருக்குமானால் அது வடிவமைப்பு இல்லாத பிறவியேயன்றி வேறில்லை. ஆயினும் சதைத் திரட்சி மூவடுக்குயிரியாக மாறும்போது, இந்த விபத்து தவிர்க்கப்படுகிறது.

உடலின் எத்தகைய செல்கள் எந்தெந்த உறுப்புகளைத் தோற்றுவிக்க வேண்டுமோ அந்தந்த உறுப்புக்கள் இருக்க வேண்டிய இடத்தை நோக்கி அத்தகைய செல்கள் நகர்ந்து சென்று உரிய இடத்தில் அமர்வதால் அதற்கேற்ற வகையில் சதைத் திரட்சியும் மூன்று வகை மூலாதார அடுக்குகளாக (புநசஅடயலநசள) வடிவம் பெறுகிறது. இதன் காரணமாகவே மூவடுக்குயிரி வளரத் துவங்கியதும், அதிலிருந்து உருவாகும் உயிரினங்கள் அவைகளுக்குரிய உருவ அமைப்பைப் பெறுகின்றன.

எனவே, உயிரினங்களின் குறிப்பிட்ட உருவ அமைப்பை அவை பெறும்பொருட்டே சதைத் திரட்சியை மூன்று மூலாதார அடுக்குகளாக மூலச் செல்கள் நகர்ந்து சென்று வடிவமைப்புச் செய்கிறது என்று கூறுகிறது நவீன கருவியல். நவீன கருவியல் கூறும் இந்த அறிவியல் கண்டு பிடிப்பை

திருக்குர்ஆன் 'வடிவமைக்கப்பட்ட சதைத் திரட்சியிலிருந்து'

எனும் வார்த்தைகளால் எவ்வளவு ஆழமாகவும், அற்புதமாகவும் எடுத்துரைக்கிறது.

மூன்றடுக்கு என்னும் இப்படிநிலையில் உயிரினங்களின் உருவத்தை அமைக்கக் கூடிய மூலச் செல்கள் யாவும் அதில் வடிவம் பெற்ற போதிலும் அவைகளின் உறுப்புக்கள் தோன்றாத காரணத்தால் இந்தப் படிநிலையில் உயிரினங்களின் உருவத் தோற்றம் பெற்றிராது எனக் கூறும் நவீன கருவியல் கண்டுபிடிப்புகளையும் திருமறைக் குர்ஆன் 'வடிவம் பெறாததுமான சதைத் திரட்சியிலிருந்தும்..' எனக் கூறிய வசனத்தால் எவ்வளவு அற்புதமாக எடுத்தியம்பி கருவியல் உலகை வியப்பிவ் ஆழ்த்தி நிற்கிறது!

இது மட்டுமா? இந்த வசனங்கள் நம்மைச் சிந்திக்கத் தூண்டும் பகுத்தறிவின்பாற்பட்ட மற்றொரு கோணத்தை நீங்கள் பார்க்கவில்லையா?

நாம் எவ்வாறு படைக்கப்பட்டோம் என்பதன் உண்மை நிலையை நமக்கு அறிவிப்பதற்காகவே இக்கருவியல் விஞ்ஞானத்தை இறைவன் கூறுவதாகவும் அவ்வசனங்கள் கூறுகின்றன.

என்னே அற்புதம்!. நாம் முன் தொடர்களில் கூறியது போன்று நாம் எவ்வாறு உருவாகி வந்தோம் என்பதை கருவறைகளில் பத்து மாதம் தங்கியிருந்து உருவாகி வந்த நமக்கும் தெரியவில்லை. அல்லது குழந்தைகளின் படைப்பாளர்கள் அவர்களது பெற்றோர்களே எனக் கூறிய அந்த பெற்றோர்களுக்கும் தாங்கள் எவ்வாறு தங்களது குழந்தைகளைப் படைத்தார்கள் என்பது தெரியவில்லை.

இந்த அளவிற்கு இமாலயப் புதிராக விளங்கிய ஒரு நிகழ்ச்சியையன்றோ திருமறைக் குர்ஆன் வெட்ட வெளிச்சமாகப் பிட்டு பிட்டு வைக்கிறது. படைப்பு நிகழ்ச்சி மெய்யாகவே திருமறையின் ஆசிரியனால் நிகழ்த்தப்பெறவில்லையெனில் இம்மாபெரும் புதிரை அவனால் எப்படி அவ்வளவு எளிதாக கூறியிருக்க இயலும்?. அறிவியல் உலகில் வாழும் நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

நமது சிந்தனைக்கு விருந்தாகும் பொருட்டு சிந்திப்பதற்குரிய மற்றொரு கோணத்தையும் நாம் கவனத்தில் கொள்வோம்.

குருடன் பார்க்கிறான்: முடவன் நடக்கிறான்: ஆகவே இவர்தான் கடவுள் எனச் சிலரும், அவர் ஆகாயத்தில் பறந்தார். அவர்தான் கடவுள். இவர் கடலைக் கடந்தார். ஆகவே இவரும் கடவுள், அவர் முற்றும் துறந்தார் ஆகவே அவரும் கடவுள் எனப் பற்பல கடவுளர்கள் அறிமுகப்படுத்-தப்படுகிறார்கள் என்பதை நாம் அனுதினமும் கண்டு வருகிறோம்.

ஆனால் நானே இறைவன்! நான் உங்களது படைப்பாளன்! எனக்கூறி விஞ்ஞான யுகம்வரை யாராலும் கண்டுபிடிக்க இயலாமிலிருந்த படைப்பு நிகழ்ச்சியையே, அப்படைப்பு நிகழ்ச்சியில் காணப்படும் பிழையற்ற மெய்யான செயற்பாடுகளையே (Pசழஉநளள) ஆதாரம் காட்டி, வாதிட்டு அறிவியல் உலகையே வியப்பில் ஆழ்த்தும் ஒருவன் திருக்குர்ஆனின் ஆசிரியனைத் தவிர வேறு யார்?

தாமே இறைவன் என்பதற்கு அவன் தனது மறையில் வழங்கிக் கொண்டிருக்கும் எண்ணிறைந்த அறிவியல் ஆதாரங்களைக் காட்டிலும் வலுவான வாதப் பொருட்கள் வேறு ஏதும் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

அறிவியலைக் காட்டிலும் சிறந்த ஆதாரம் வேறு எதுவும் இல்லை என்பதே உங்கள் கூற்றாக இருந்தும் அந்த அறிவியல் ஆதாரங்களைக் கொண்டே நிரூபிக்கப்படும் திருக்குர்ஆனின் இறையாண்மையை மறுத்துரைப்பது நீங்கள் பெற்றிருப்பதாகக் கூறப்படும் பகுத்தறிவிற்கேற்ற செயலாகுமா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

வடிவமைக்கப்பட்டதும், வடிவமைக்கப்படாததுமாகிய சதைத் திரட்சியிலிருந்தே மனிதன் படைக்கப்பட்டான் என ஒருவர் கூற வேண்டுமாயின் கருவியலில் எந்த அளவிற்கு ஆழமான ஞானத்தை அவர் பெற்றிருக்க வேண்டும் என்பதை அதைப்பற்றிய அறிவுடைய எந்த நபரால்தான் புறக்கணிக்க இயலும்?.

செல்கள் என்பவை நுண்ணோக்கியால் மட்டுமே புலப்படும். அதிலும் உடலுறுப்புகளைத் தோற்றுவிக்கும் பொருட்டுச் மூலச் செல்கள் கருவில் தோன்றுகின்றன என்பது நவீன வசதிகளைக் கொண்ட பற்றபல ஆய்வுக் கூடச் சோதனைகளால் மட்டுமே கண்டுபிடிக்க இயலும். மேலும் அந்த மூலச் செல்கள் ஒரு கட்டத்தில் நகரத் துவங்கி மூவடுக்குயிரியில் சரியான விதத்தில் வடிவமைகின்றன என்பதும் பொறுமையுடன் பல நூறு கருத்துக்களை பல வருடங்கள் ஆய்வு செய்வதால் நிலை நாட்டப்படும் உண்மையாகும்.

ஆயினும் இப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சியோ, ஆய்வக வசதியோ, அறிவியல் கருவிகளோ அல்லது இத்தகு அறிவியல் உண்மைகளை விளங்கிக் கொள்ளும் அளவிற்கு அறிவியல் திறம் படைத்த அறிவியலாளர்களோ இல்லாத ஏழாம் நூற்றாண்டில் வந்த குர்ஆனால் இந்த உண்மைகளை எவ்வாறு தெரிந்து கொள்ள இயன்றது என்பதை மட்டுமாவது ஒரு கணம் சிந்தியுங்களேன்! உங்கள் அறிவுப் பசிக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கும் பல்வேறு அறிவியல் வசனங்களை தொடர்ந்து நாம் ஆராய்ந்து பார்த்தால்; உலகே வியக்கும் குர்ஆனின் பேருண்மைகள் நமக்குப்புலப்படும்.

 




Religious
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..