Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
தமிழ்நாட்டில் வெகு அமைதியாக நடந்திருக்கும் மிகப் பெரிய புரட்சி
Posted By:peer On 7/14/2021 12:00:36 PM

தமிழ்நாட்டில் வெகு அமைதியாக நடந்திருக்கும் மிகப் பெரிய புரட்சியைப் பற்றி நாம் எதுவுமே பேசாமல் வெற்றுக் கதைகள் பேசிக் கொண்டிருக்கின்றோமோ என்று தோன்றுகிறது.

இணைய ஆளும் கட்சியினர் கூட அதிகமாக இதைக் கண்டு கொள்ளாமல் மேம்போக்காகக் கடந்து செல்கின்றார்களோ என்ற ஐயமும் ஏற்படுகின்றது.

பெண்ணியம் பேசுபவர்கள், பெரியாரியவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் கூட இதைக் கண்டுகொள்ளவில்லையோ என்ற கவலையும் உண்டாகிறது..!

கடந்த ஒரு வாரமாக எங்கள் நிறுவனத்தில் வேலை கேட்டு தினமும் ஒன்றிரண்டு பெண்கள் வந்து கொண்டிருந்தனர். இன்று காலை ஒரே ஊரிலிருந்து ஐந்து பெண்கள் வந்திருந்தார்கள்.

ஏன் இப்படி என்று அவர்களிடம் விவரம் கேட்ட பொழுது... மயிலாடுதுறை ஒன்றியத்தின் கடைக்கோடியான மணல் மேட்டையும் தாண்டி ஒரு குக்கிராமம். இரண்டு பேருந்து மாறி வர வேண்டும்.

முன்னெல்லாம் பஸ்ல போக, வர 56 ரூவா ஆயிடும் சார். நெதமும் வாங்குற சம்பளத்துல 60ரூவா பஸ்ஸுக்கே போச்சுன்னா.... மீதி கிடைக்குறதுக்கு இவ்ளோ சிரமப்படனுமான்னு, வீட்லயே இருந்து விவசாய வேலை வந்தா மட்டும் செஞ்சோம் சார்.

இப்பத்தான் ஸ்டாலின் ஐயா பஸ்ஸுக்கு எங்களுக்கு எல்லாம் ஃப்ரீன்னு சொல்லிட்டாங்களே... அதான் சார் நிரந்தர வேலையா இருக்குமேன்னு கேட்டு வந்தோம்...!

அவ்ளோ தான் மேட்டர்...

மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு மக்கள் தலைவன்.... ஆட்சியாளனாகவும் அமர்ந்து விட்டால்...

ஒரே ஒரு சொடுக்குல... ஒரே ஒரு கையெழுத்துல.... நாட்டின் கடை கோடியில் இருக்கும் ஆங்கோர் ஏழை கிராமத்து பெண்ணுக்கும் ஒரு நிறுவனத்தில் தடையில்லாத வேலையைக் கிடைக்கச் செய்ய முடியும்..!

அந்தப் பெண் தினம் தினம் தன் வீட்டுக்குக் கொண்டு செல்லும் 250 அல்லது 300 ரூபாய், அந்த குடும்பத்தின் வறுமைக்கு நிச்சயம் சவால் விடும். அந்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கான படிப்பு தடையில்லாமல் தொடரும்..!

இதை ஏன் நாம் பேசவில்லை..?! இதை ஏன் நாம் சிலாகிக்கவில்லை...?! இதை ஏன் நாம் கொண்டாடவில்லை..?!

எதிர்க்கட்சிகள் எதை வேண்டுமானாலும் வெட்டியாகப் பேசிக் கொண்டிருக்கட்டும்.... மக்கள்... குறிப்பாகப் பெண்கள், இச் செயலை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்..!

வாழ்த்துக்களும்.... நன்றிகளும் எங்கள் முதல்வரே..!🙏🙏🙏

எழுதியவர் Sowmian Vaidyanathan




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..