Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஒன்றியம் என்று இந்தியாவை_அழைத்தவர் -
Posted By:peer On 6/6/2021 4:32:22 PM

#ஒன்றியம் என்று #இந்தியாவை_அழைத்தவர்.  அதற்காக கட்சியின் பெயரையே  இந்தியயூனியன்முஸ்லிம்_லீக் என்று வைத்தவர்.

தமிழகத்திலும் கேரளத்திலும் உள்ள முஸ்லிம்கள் பிற மாநில முஸ்லிம் மக்களை விட கல்வியிலும், வாழ்க்கைத்தரத்திலும் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.

அதற்குக் காரணம் , திருநெல்வேலி பேட்டையில் பிறந்த பெரு மகன், கண்ணியமிக்க தலைவர் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப் அவர்களின் உழைப்பு தான் .

கல்வியே அறியாமல்....அங்கிலக்கல்வி கற்றால் பாவம் என்று கருதப்பட்ட காலத்தில் மக்களே பிள்ளைகளைப் படிக்க அனுப்புங்கள் என்றார்.

அதற்காக, தமிழகம் மற்றும் கேரளத்தில் 800 க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களை, 14 க்கும் மேற்பட்ட கல்லூரிகளைத் திறக்க வைத்தார்.இன்று முஸ்லிம் சமூகத்தில் கற்றறிவாளர்கள் உருவாகிட அவரே காரணம் ஆகி நின்றார்.

இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்தமொழி வரவேண்டுமென்று டெல்லி மைய மண்டப அரசியல் நிர்ணய சபையில் கேள்விகள் எழுந்தபோது ...சிலர் ஆங்கிலம் என்றார்கள்....பலர் இந்தி என்றார்கள். இல்லையென்றால் சமஸ்கிருதம் வேண்டும் என்றார்கள்.

ஆனால் திருநெல்வேலி பேட்டை ஊரில் பிறந்த தலைவர் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் எழுந்து ....உலகத்திலே இலக்கண, இலக்கிய பழம் பெருமை வாய்ந்த செம்மொழி என் தாய் மொழி தமிழ் மொழி தான் இந்தியாவின்ஆட்சி மொழியாக வேண்டும்  என்று 1949 ஆண்டே குரல் கொடுத்தவர் தலைவர் காயிதே மில்லத் ஆவார்.

வேட்புமனு தாக்கல் செய்து விட்டு தொகுதிக்குச் சென்று வாக்குகள் கேட்காமல் தொடர்ந்து கேரளா மஞ்சேரி தொகுதியில் வென்றவர். ஒரு தமிழருக்கு கேரள மண் கொடுத்த மதிப்பும்...மரியாதையும் அதுவாகும்.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..