Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
திருநெல்வேலி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நிலம் யார் கொடுத்தது!?
Posted By:peer On 4/23/2021 11:26:18 AM

 

பர்கிட் மாநகர் கப்பல் வீடு குடும்பத்தால் நன்கொடையாக கொடுக்கப்பெற்ற 8000 ஏக்கர் நிலத்தினைக் கொண்டு செங்கோட்டை வடகரையை சார்ந்த மு ந அப்துல் ரகுமான் சாகிப்பால் உருவாக்கப் பெற்ற தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபைக்கு சொந்தமானவை

திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மட்டும் அல்ல, முஸ்லிம் அனாதை நிலையம், S.A.College, சாந்தி நகர், ரஹ்மத் நகர் எல்லாமே அவர்களுக்கு
உரியது தான்.

இஷாஅத்துல் இஸ்லாம் சபையால் தானமாக கொடுத்த இடத்தில் தான் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது.

யார் இந்த மு ந அப்துல் ரகுமான் சாகிப்?

பாளையங்கோட்டை இலந்தை குளம் கரையில் உள்ள சேக் சிந்தா மதார் அவுலியா தற்காவிற்கு தற்செயலாக வந்த மு ந அப்துல் ரகுமான் சாகிப் ஒரு மகான் மூலமாக இஸ்லாமை தழுவுகிறார்.

தனது குடும்பத்தினருக்கு இஸ்லாமை எத்திவைக்கிறார்.

அவரது மார்க்க பணிக்காக பர்கிட் மாநகர் கப்பல் குடும்பத்தினர் நன்கொடை கொடுத்த நிலங்களை கொண்டே தென் இந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை உருவாக்கப் பெற்றது.

அதன் அலுவலகம் ஹைகிரவுண்ட் முஸ்லீம் அனாதை நிலைய வளாகத்தை ஒட்டி செல்லும் சாலையில் பாத்திமா ஒரியன்டல் பள்ளிக்கூடத்திற்கு எதிரில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு பின்பு உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் , பாளையங்கோட்டை வட்டம் , விஜய ராகவா முதலியார் சத்திரம் (VM சத்திரம்) கிராமத்தில் 100 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பெற்ற தென் இந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபைக்கு 1.5 லட்சம் ஏக்கர் நிலம் 1979 வரை இருந்தது . இன்று 100 ஏக்கர் கூட இல்லை ,

திருநெல்வேலி மாவட்ட மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு 312ஏக்கர் ,
திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் 35 ஏக்கர் ,
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் 1.8ஏக்கர் ,
திருநெல்வேலி மாவட்ட தொழில் மையம் 1.5ஏக்கர் ,
திருநெல்வேலி ஆயுதப்படை மைதானம் மற்றும் அலுவலகங்கள் 42 ஏக்கர் ,
பொதுப்பணித்துறை ,விவசாயத்துறை , நீதிமன்றம் , சட்டக்கல்லூரி என சொல்லிக் கொண்டே செல்லலாம்.
ஆனால் , எதற்குமே உபயோகம் இல்லாமல் 186 ஏக்கர் நிலத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்திற்கு என்று சீவலப்பேரி - பாளை மார்க்கெட் சாலையில் வீணாய் முடக்கிவைத்துள்ளனர்

சுந்தரனார் பல்கலை கழகத்திற்கு என்று சீவலப்பேரி - பாளை மார்க்கெட் சாலையில் வீணாய் முடக்கிவைத்துள்ளனர் கடந்த 40 வருடங்களாக , அபிஷேகப்பட்டியில் இடம் தேர்வாகி பல்கலை கழகம் அமைந்த பின்பு இந்த இடத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டுமா ? வேண்டாமா ?

மீதமுள்ள சொத்தையும் காக்க முடியாதுன்னுதான் சாந்தி நகர், ரஹ்மத் நகர், காயிதே மில்லத் நகர், முதலாளி நகர், அபுல் கலாம் ஆசாத் நகருன்னு பிளாட் போட்டு வித்துட்டாங்க.

இளைய தலைமுறையினருக்கு
வரலாற்றை கொண்டு சேர்ப்பதும், சங்கிகளின் முகத்தில் உண்மையை சொல்லுவது காலத்தின்
கட்டாயமாகும்!

#நன்றி_saravana_kumar👆👆
- WA : Haja Alavudeen. Nidur.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..