Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பேராசிரியர் சித்திக் ஹசன் சாஹிப் குறித்து ஒரு நினைவேந்தல்
Posted By:peer On 4/13/2021 7:20:33 PM

பேராசிரியர் சித்திக் ஹசன் சாஹிப் குறித்து ஒரு நினைவேந்தல். காயம் குளத்தில் பிஎட் படித்துக்கொண்டிருந்த நேரம்.
M.S.Mகல்லூரிக்கு முன்பாக இருந்த ரஹ்மான் பள்ளிவாசலின் முதல் தளத்தில் தான் தங்கி இருந்தேன்.பாங்கு சொல்லும் மோதினார் ஜலால் உட்பட நாங்கள் 6 நபர்கள்அந்த விசாலமான ஹாலில் தங்கி இருந்தோம். வழக்கம்போல ஒரு நாள் ஜலால் ஃபஜ்ரு தொழுகைக்காக பாங்கு சொல்வதற்கு கீழே இறங்கிச் சென்றார். அப்போது படிக்கட்டுகளுக்கு கீழே ஒரு மெலிந்த மனிதர் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். யாரது அங்கே?ஜலால் சத்தமாக கேட்கிறார்.

என்ன ஆயிற்று ஜலால்.... யாரங்கே? என்று கேட்டபோது, இதோ இந்தப் படிக்கட்டுகள் கீழே ஒரு ஓரமாக ஒரு மனிதர் உறங்கிக் கொண்டிருக்கிறார்..

ஜலால் இதைச் சத்தமாகசொன்னவுடன் உறங்கிக்கொண்டிருந்த மெலிந்த மனிதர் எழுந்து அமர்ந்தார் .நீங்கள் யார்?எனகேட்டவுடன், "அஸ்ஸலாமு அலைக்கும். நான் ஒரு பயணியாக இருக்கிறேன். திருவனந்தபுரம் செல்லும் வழியில் டிரான்ஸ்போர்ட் பஸ்ஸிலிருந்து இறங்கி இங்கே வந்தேன் .சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு செல்லலாம் என்று கருதினேன் நல்ல காற்று கிடைத்ததினால் இந்த படிக்கட்டுக்கு கீழேயே நான் தூங்கி விட்டேன். அதற்காகஎன்னை மன்னிக்க வேண்டும்".

அவர் இதைக் கூறி முடித்த நேரம்தான் நாங்கள் அனைவரும் கீழே இறங்கவும் சரியாக இருந்தது.

நிறுத்தி நிதானமாக யார் இவ்வளவு மென்மையாக பேசுகிறார்என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. அதற்குள் கொப்பம் பகுதியை சேர்ந்த சரஃபு என்கிற சகோதரர் , "யா அல்லாஹ் ...இவர் சித்திக் ஹசன் சாஹிப் ஆயிற்றே..

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்அமைப்பின் கீழ் செயல்படும்பள்ளிவாசலாக இருந்தாலும்பாங்கு சொல்லும் ஜலாலுக்கு அவரைப் பற்றி ஒன்றுமே தெரியாது.
உடனே ஜலால் உங்களுக்குத் தெரிந்த நபரா இவர்?என சரஃபுவிடம் கேட்டவுடன்

ஜலாலை பின்புறமாக அழைத்து அவர் காதில் மெதுவாக இவர்தான் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கேரளத் தலைவர் சித்திக் ஹஸன் என்று கூறினேன்.

ஜலாலுக்கு மிக தர்மசங்கடமாக போய்விட்டது. அதனைக் கண்ட சித்தீக் ஹஸன் சாஹிப் அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டு ஆறுதலாக.... மகனே,நீ உன்னுடைய வேலையை செய்திருக்கிறாய். அதை இனியும் அழகாகத்தான் செய்யவேண்டும் உனக்கு அல்லாஹ்அருள் புரிவானாக...என்றவுடன்

ஜலாலின் கண்களிலிருந்து கண்ணீர் ஒழுகிக்கொண்டே இருந்தது.

பூக்கோய தங்ஙள் ஃபஜர் தொழுகைக்கு பிறகு எங்களிடம் , இவருக்கு ஏதாவது ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கலாமே என்று கேட்க

இதுதான் அவருடைய சிறந்த தனித்தன்மைஎன்று நாங்கள் ஒரே நேரத்தில் பதில் கூறியதை நினைவுகூர்கிறோம்.

ஃபஜர் தொழுகை முடிந்து பள்ளிவாசலின் ஒரு பகுதியில் இருக்கும் தண்ணீர் குழாயில் இருந்து பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளித்துமுடித்து, 11 மணிக்கு செல்ல வேண்டிய மீட்டிங்கிற்காக புறப்பட்டார்.டீ குடித்து விட்டு செல்லலாம் என்று அழைத்த இயக்கத்தொண்டரிடம்,பிறகு பார்க்கலாம் என்று கூறி பள்ளிவாசலில் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் நடந்து அடுத்த ட்ரான்ஸ்போர்ட் பஸ்ஸில் திருவனந்தபுரம் சென்ற சித்தீக் ஹஸன் சாஹிபைஒருபோதும் மறக்க இயலாது. இன்று அவர் அல்லாஹ்வின் பக்கம் மீண்டுவிட்டார்.கோழிக்கோட்டில் இருந்தபோதும் மாத்யமம் பத்திரிக்கையில் பணி செய்தபோதும் தான் நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
சமூக சேவை செய்வதற்கான மிகச் சிறந்த முன்மாதிரி.கேரளாவிலும் வெளி மாநிலங்களிலும்உள்ள நலிவடைந்த மக்களை வாழ்க்கையில் உயரச் செய்தமுன்மாதிரி மனிதர்.சமூக சேவைகளில் இந்தியாவில் உள்ள மக்களுக்கு வாழ்க்கைக்கான அர்த்தம் கொடுத்த உன்னத மனிதர்.

எல்லாவற்றையும்விட பிறருக்கு சேவை செய்வதன் மூலமே உண்மையில் தலைவனாக முடியும் என்பதை தன்னுடைய வாழ்க்கையால் வாழ்ந்து காட்டியவர்.வழிகாட்டியவர்.பிறர் தேவைக்கு முன்னுரிமை கொடுத்து,அவர்களோடு இணைந்து நடந்த இந்த மனிதரில் தான் நான் முதலாவதாக ஒரு தலைவனைக் கண்டேன்.எளிமையான வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இந்த சமூக சேவகனை ,இறைவா.....! நீ பொருந்திக் கொள்வாயாக...!என்கிற பிரார்த்தனை களோடு உங்களுக்கு பிரியா விடை தருகிறேன்.


ஹக்கீம்,
பெரும்பிலாவு.


தமிழில்
ஷகிலா காதர்




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..