Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
Posted By:peer On 5/24/2020 11:16:57 AM

அருமை !

 "வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன! இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத சீரகத்தை தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே"

எவ்வளவு சரக்குடன் ஒரு அருமையான பாடலில் பலசரக்கை வைத்து வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிட்டார்

வெங்காயம் ---- (வெண்+காயம்) வெண்மையான உடல்

சுக்கானால் ----- சுக்காக சுருங்கி போனால்
(இஞ்சி காய்ந்தால் சுக்கு)

வெந்தயம் ------ வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்

ஆவதென்ன - ஆவது ஒன்றுமில்லை

இங்கார் - - - - - - (இங்கு + ஆர்)  இப்பூலகில் யார்

சுமந்திருப்பார் இச்சரக்கை ---  அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்

மங்காத ---- குறைவில்லாத

சீரகம் --- வைகுந்தம்
(சீரகம் - சீர்+அகம் (ஸ்ரீ அகம்) - - - அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு)

தந்தீரேல் ---- நீ கொடுத்துவிட்டால்

ஏரகத்து - - - (ஏர் +அகம்)
உயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும்

செட்டியாரே! -- அனைத்து (சரக்குகளுக்கும்) செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே!

தேடேன் பெருங்காயம்--- இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்

படித்ததில் பிடித்தது




தமிழ் மொழி
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..