Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
தேர்தல் 2019: கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்..!
Posted By:peer On 4/7/2019 10:31:01 AM

துரைமுருகன் வீட்டுல போய் பணம் இருக்கான்னு தேடிப் பார்த்து... அப்பறம் வேற இடத்துல போய் பணத்தை கண்டுபிடிச்சதா செய்தி வருது...!

அந்த கண்டுபிடிப்பாளர் படை வீரர்களிடம் இந்திய மக்கள் சார்பாக ஒரு அன்பான வேண்டுகோள்.

எங்களுக்குச் சொந்தமான பல்வேறு விஷயங்கள் காணாமல் போயிருக்கு. அதையெல்லாம் தயை கூர்ந்து கண்டுபிடித்து எங்களிடம் ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..!

எங்கள் பிரதமர் மோடி அவர்கள் பதின் மூன்று எய்ம்ஸ் மருத்துவமனைகளை இந்த ஐந்து ஆண்டுகளில் எங்களுக்காக அர்ப்பணித்துள்ளார். ஆனால் எந்த பாழாய் போன நாய் மகனோ அதை களவாடிட்டு போய்ட்டான். அவற்றை தயை கூர்ந்து கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்..!

அடுத்ததாக இந்தியா முழுக்க 50 ஸ்மார்ட் சிட்டி என்கிற அதி நவீன நகரங்களை எங்கள் பிரதமர் மோடி அவர்கள் எங்களுக்காக உருவாக்கித் தந்தார். அவற்றையும் எந்த கேடுகெட்டவனோ களவாடிக்கொண்டு ஓடி விட்டான். தயை கூர்ந்து அவற்றையும் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்..!

எங்கள் பிரதமர் மோடி அவர்கள் தூய்மை இந்தியா திட்டம் என்று கூறி லட்சக் கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்து... பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்களை விளம்பரம் செய்து... அதற்காக எங்களிடம் தனி வரி எல்லாம் போட்டு தூய்மையான இந்தியாவை உருவாக்கினார். அந்த தூய்மையான இந்தியாவை பாகிஸ்தான் காரன் களவாடிக்கொண்டு போய் விட்டான். அதையும் போய் கண்டு பிடித்து மீட்டுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் எங்கள் பிரதமர் மோடி அவர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து உலகம் முழுவது நாயாய் பேயாய் அலைந்து முதலீடுகளைக் கொண்டு வந்து இந்தியாவில் பல்வேறு தொழிற்சாலைகளை அமைத்து எங்களில் 2 கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கித் தந்தார். ஆனால் அந்த தொழிற்சாலைகளையும், வேலைகளையும் சீனாக்காரன் களவாடிக் கொண்டு போய் விட்டான். தயை கூர்ந்து அதையும் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேப் போன்று எங்கள் பிரதமர் மோடி அவர்கள் திடீரென்று ஒரு நாள் பணம் எல்லாம் செல்லாதுன்னு சொல்லி.... மக்களே கொஞ்சம் பொறுத்துக்குங்க... தீவிரவாதிகள் இந்த பணத்தை வைத்துத் தான் நம் நாட்டில் ஊடுறுவுகின்றார்கள். அவர்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட இதை விட வேறு வழியில்லை என்று எங்களிடம் கண் கலங்கினார். நாங்களும் தீவிரவாதம் ஒழிந்தால் சரிதான் என்று அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டோம். ஆனால் இப்போது இந்தியாவில் நடக்க போகும் தேர்தலுக்காக அரசியல்வாதிகள் கோடி கோடியாக ( 3000 கோடிக்கு மேல் ) பதுக்கி வைத்திருக்கும் கள்ள பணத்தை கை பற்றிய விபரங்களை மோடியின் தேர்தல் ஆணையமே தினம் தினம் வெளியிட்டு கொண்டு இருக்கிறது அது மட்டுமல்லாமல் அழித்து விட்டோம் என்று சங்கிகள் ஊளையிட்டு கொண்டு அலைந்த அதே தீவிரவாதிகள் ரெண்டு மாசம் முன்பு நம்ம நாட்டுல ஊடுறுவி, நம் வீரர்கள் 44 பேரை கொன்று விட்டார்கள். அவர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் மீண்டும் அந்த கருப்பு பணத்தைக் கொண்டு போய் சேர்த்தது யார் என்று கண்டுபிடித்துத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அப்பறம் இன்னோரு முக்கியமான விஷயம். எங்கள் பிரதமர் மோடி அவர்கள் வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை எல்லாம் மீட்டு, எங்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை போட்டுள்ளார். அந்தப் பணம் அத்தனையையும், அனைவர் அக்கவுண்ட்டில் இருந்தும் எந்த களவாணிப் பயலோ ஹேக் செய்து ஆட்டையை போட்டு விட்டான். அந்த பணத்தையும் கண்டு பிடித்து மீட்டுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..!

ஆகவே மேற்படி விஷயங்களை எல்லாம் கண்டு பிடித்து எங்களுக்கு நல்வாழ்வு தந்திட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




Politics
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..