Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு......
Posted By:peer On 10/13/2018 5:01:09 AM

எச்சரிக்கை
****
சமூகப்பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் சமூகத்திற்கு ஏற்பட்டு வரும் கோளாறுளை நுட்பமாக ஆய்வு செய்ய வேண்டும்.

நாளுக்குநாள் நோய்கள் பெருகி வருகின்றன. இனி நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கும் போல தெரிகிறது. புற்றுநோய் சுனாமியைப் போல பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதயநோய், சிறுநீரக பாதிப்புகள், உயர் இரத்த அழுத்தம், மனநோய், மாதவிடாய் கோளாறுகள், உடல்பருமன், தண்டுவட பாதிப்புகள் என்று பட்டியல் நீளுகிறது.

மட்டுமல்ல இது வரை மருத்துவத்துறை கண்டிராத பல புதிய நோய்களும் படையெடுத்து வருகின்றன.

மக்கள் சந்திக்கும் எல்லா இடங்களிலும் நோய்களின் பாதிப்புகள் மருத்துவர்கள் மருத்துவமனை மருந்து மாத்திரைகள் டெஸ்ட் அதன் விவரங்கள் குறித்தும் தான் அதிகமாக பேசிக் கொள்கிறோம். மருத்துவர்கள் கூட தங்களை பாதுகாத்து கொள்ள இயலாத அளவிற்கு நிலமை மோசமாகி வருகிறது.

சகோதரர்களே...... இதுவரை நாம் முன்னுரிமை அளித்து ஆற்றிவந்த சமூகப் பணிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

குடும்பமே நோய்களின் வேதனைகளை அனுபவிக்கும் போது இரத்தம் சிந்தி உழைக்கும் பணத்தையும் பாரம்பரிய சொத்துக்களையும் மருந்து மாத்திரைகள் மருத்துவ சிகிச்சைக்கு என்று அழித்து அல்லல்பட்டு கொண்டிருக்கும் மக்களிடையே போய்...... " ஆன்மிக ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும்" "கல்வியில் உச்சத்தை அடைய வேண்டும்" "அரசியல் அதிகாரத்தை பெற வேண்டும்" என்றெல்லாம் பெரும் பெரும் சித்தாந்தங்களை பேசினால் காதில்கூட வங்கிக் கொள்ள மாட்டார்கள்.

மக்களின் தேவைகள் நெருக்கடிகளை புரிந்து கொள்ளாமல் செய்யப்படும் சேவைகள் பயனற்றதாக மாறிவிடும்.நல்ல விளைவுகளை ஏற்படுத்தாமல் வினாகிவிடும்.வாழ்க்கையின் நெருக்கடி வேறு எதைப்பற்றியும் மக்களை சிந்திக்க விடாது அவர்கள் பாதைமாறுவதற்கு வழிவகுத்து விடும் என்பது நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.

👉 மக்கள் உடனடியாக செய்ய வேண்டியவை :

இரவு 9மணிக்குள் வீட்டின் அணைவரும் உறங்குவது மீண்டும் வாழ்க்கையாக வேண்டும். மீறினால் மனநோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் அனைத்தையும் இலவசமாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதிகாலை 5 மணிக்கு பிறகும் வீட்டில் உள்ளவர்கள் விழித்து தொழவில்லை என்றால் வறுமையும் வெறுமையும் வீட்டில் குடியேறும் என்பது நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.

👉 அமைப்புகளும் ஜமாஅத்துகளும் உடணடியாக செய்யவேண்டியவை :

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்ற பெயரில் மஹல்லாக்களில் குடம் 10 ரூபாய்க்கு விற்கப்படும் கிட்னி அழிப்புநீரை முதலில் மாற்றி அமைக்க வேண்டும்.

மழைநீரையும் கிணற்று நீரையும் குடிதண்ணீராக பயன்படுத்த மக்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

( கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் அனைத்து வீடுகளுக்கும் பள்ளிவாசலில் இருந்து குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. சமூகஆர்வலர்கள் ஜமாஅத்தார்கள் அனைவரும் சென்று பார்த்து வாய்புள்ள மஹல்லாக்களில் அது போன்ற ஏற்பாட்டை செய்யலாம் )

சுற்றுச்சூழல்பாதுகாப்பு இயற்கைவாழ்வு நோய்தடுப்புமுறை குறித்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஜூம்ஆ மேடைகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் தொடரச்சியாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக பெண்களுக்கு அதிகம் பயிற்றுவிக்க வேண்டும்.

இதிலிருந்து துவங்குவோம். இன்னும் எக்கச்சக்கமான பணிகள் உள்ளன.

நன்றி
C. M.N.சலீம்




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..