Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 14
Posted By:Hajas On 1/18/2018 5:04:07 AM

மர்மங்கள்_முடிவதில்லை

ரா_பிரபு

பாகம் : 13 : சில மர்ம நிகழ்வுகள்( 3 )

(பாகம் : 14 : சில மர்ம நிகழ்வுகள் (4 )

 

கடந்த பாகத்தில் கருப்பு கண்கள் கொண்ட மர்ம குழந்தை பற்றி பார்த்தோம் இம்முறையும் ஒரு மர்ம குழந்தைகள் பற்றி தான் பார்க்க போகின்றோம். ஆனால் இந்த குழந்தைகள் கடந்த பாக குழந்தைகள் போல ஆபதானவைகள் அல்ல ஆனால் மர்மமானவைகள்.

(11 ) பச்சை நிற மர்ம குழந்தைகள்

🕸 " Green children of voolpit " என்ற பெயரில் பிரபலமான இந்த குழந்தைகள்.. வூல்பிட் கிராமத்தில் அனாதையாக கண்டெடுக்க பட்ட குழந்தைகள் . பயிர் அறுவடை செய்து கொண்டிருக்கும் நில பகுதியில் இந்த அண்ணன் தங்கைகளை கிராம வாசிகள் கண்டுபிடித்தார்கள் அவர்கள் உடல் பச்சை நிறத்தில் வித்தியாசமாக இருந்தது. அவர்கள் பேசிய போது இது வரை கேட்காத விச்சித்திர பாஷையாக அது இருந்தது. பிறகு இருவரையும் கொண்டு சென்று கிராம வாசிகள் வளர்த்த போது நீண்ட நாட்களுக்கு அவர்கள் எதையும் உன்ன வில்லை. கஷ்ட பட்டு அவர்களுக்கு பீன்ஸ் உன்ன கொடுக்க பட்டது. அதில் அந்த பையன் உடல் நிலை பாதிக்க பட்டான். விரைவில் இறந்து போனான். அந்த பெண் உடல் மிகவும் பலவீனமாக காண பட்டாலும் கால போக்கில் உடல் தேறியது மட்டும் இல்லாமல் படி படியாக ஆங்கிலம் பேசவும் கற்று கொண்டாள். மேலும் அவள் உடல் நிறமும் படி படியாக மறைந்து சாதாரண நிறத்திற்கு திரும்பியது.

 

வூல்பிட் கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு சிலர் இணை பிரபஞ்சத்தை விளக்கமாக சொல்கிறார்கள். இந்நூற்றாண்டின் பெரிய விஞ்ஞானிகள் பலரும் நம்பும் இன்னோரு பரிமாண உலகம் இணை பிரபஞ்சம் கருதோட்டதின் படி இவர்கள் தற்செயலாக வேற டைமன்ஷனில் இருந்து தற்செயலாக வார்ம் ஹோல் போன்ற போர்டல் வாயிலாக வழி தப்பி வந்தவர்களாக இருக்கலாம் என்கிறார்கள். அந்த குழந்தைகள் தங்கள் நினைவுகளை திரட்டி தங்களை பற்றி சொன்ன கதைகள் இந்த கருத்துக்கு வலுவூட்டுவதாக இருந்தது.

 

தனது அப்பாவுடன் இருண்ட குகை வாயிலாக நடந்து வந்த போது தாங்கள் சூரிய ஒளி கண்டு அங்கே வந்ததாகவும் அங்கே தான் வயலில் கண்டெடுக்க பட்டதாகவும் சொன்னார்கள். மேலும் அவர்கள் இருந்த ஊரை அவர்கள் வர்ணித்ததும் இருந்தார்கள் அங்கே சூரியன் மறைவது இல்லை அங்கே எப்போதும் மாலை நேரம் தான் என்றார்கள். அங்கே உயிர்கள் எல்லாமே பச்சை நிறத்தில் இருந்ததாக சொன்னார்கள்.

 

12 ஆம் நூற்றாண்டில் வூல்பிட் கிராமத்தில் நடந்ததாக சொல்ல படும் இந்த கதையில் அந்த பெண் கடைசியாக அங்கேயே ஒருவனை திருமனம் செய்து கொண்டு வாழ்ந்ததாக சொல்லபடுகிறது.

( 12 ) மரன நாட்டியம்

🕸 இது என்னை அதிக நேரம் சிந்திக்க வைத்து அமானுஷ்யதில் ஆழ்த்திய பல சம்பவங்களில் ஒன்று 1518 ஆம் ஆண்டு பிரான்சின் strasburg எனும் ஊரில் frau troffea எனும் பெண்மணி அந்த நகர வீதிகளில் மெதுவாக நடனம் ஆட தொடங்கினாள். மெதுவாக அசைவுகளை போட்டு ஆட தொடங்கிய அவள் தொடர்ந்து நாள் முழுதும் ஆடி கொண்டே இருந்தாள். பிறகு இரவும் தூங்காமல் ஆடினாள் அப்புறம் அடுத்த நாளும் கூட அடுத்த இரவும் கூட மெதுவாக ஆடி கொண்டே இருந்தாள். இப்படி 6 நாள் ஆகியும் அமானுஷ்யமாக அவள் ஆடி கொண்டே இருந்தாள். ஏதோ ஒரு போதைக்கு வச பட்டதை போல அவள் ஆடி கொண்டே இருந்தாள்.

 

அந்த வார இறுதியில் அவளுடன் 34 பேர் சேர்ந்து திடீரென ஆட தொடங்கினார்கள். ஏதோ மகுடிக்கு மயங்கிய பாம்புகளை போல அவர்கள் லேசான அசைவுகளுடன் தொடர்ந்து அந்த மர்ம நடனம் ஆடினார்கள். அந்த மாத முடிவில் கூட்டம் 400 ஆக அதிகரித்தது. அதில் நடனத்தை ஆரம்பித்தவர்கள் நடனத்தை நிறுத்தவே இல்லை மாறாக தங்கள் சக்தி தீரும் வரை ஆடி விட்டு பிறகு கீழே விழுந்து இறந்து போனார்கள். அதாவது தங்கள் உயிர் போகும் வரை அவர்கள் நடனம் ஆடினார்கள்.

தொடர்ந்து ஆடிய நடந்ததால் அதில் பலர் ஹார்ட் அட்டாக் வந்தும் பலர் வலிப்பு வந்தும் பலர் உடல் நீர் அளவு வற்றிபோயும் விழுந்து இறந்தார்கள் ஆனால் அந்த கும்பலில் இணைந்தவர்கள் நடனத்தை மட்டும் நிறுத்தவே இல்லை. அதில் ஒரு நம்ப முடியாத ஒன்றை சொன்னார்கள் அந்த முதலில் நடனம் தொடங்கிய பெண்மணி உடலை பார்த்தவர்கள் முதல் 3 நாளிலேயே அவள் இறந்து விட்ட்டிருக்க வேண்டும் என்றார்கள் .
மிகுந்த உடல் வலு மிக்க மாரத்தான் வீரர்கள் கூட இந்த மாத கணக்கில் சாப்பிடாமல் தூங்காமல் ஆடுவது சாத்தியம் அல்ல என்று கருத்து தெரிவித்தார்கள். வரலாற்றில் dancing plague என்று அழைக்க படும் இந்த சம்பவம் ஒரு விளக்க முடியாத மர்மம். அந்த கும்பல் அப்படி ஒரு மர்ம மரண நாட்டியத்தை ஏன் ..எப்படி ஆடினார்கள் என்பது புரியாத புதிர்.
(மேலும் தகவலுக்கு dancing plague என்று தேடி பாருங்கள் )

அடுத்து ஒரு மிக விசித்திரமான சம்பவம் ஒன்றை பார்ப்போம்...

( 13 ) மாயமான மர்ம கிராமம்

🕸 1930 ஆம் ஆண்டு அது ... கனடா நாட்டின் குளிர் மிகுந்த மலை பாங்கான ஓர் இடம்... தான் lake anjikuni எனும் ஏரிக்கரை கிராமம். அந்த ஒரு குறிபிட்ட தினத்தில் Joe Labelle என்பவர் அந்த குளிர் நிறைந்த இரவை கழிக்க அந்த கிராமத்திற்கு வந்தார். அங்கு அவர் வருவது இது முதல் தடவை அல்ல. பல முறை ஏற்கனவே வந்தவர் அவர். அந்த கிராமத்தின் சுறுசுறுப்பான இடம்... நல்ல வரவேற்பு இவருக்கு பரிச்சியமான ஒன்று தான். ஆனால் இன்றோ ஆச்சர்யமாக அங்கே மயான அமைதி நிலவியது கொஞ்சம் விசித்திரமாக இருந்தது.
இன்னும் கொஞ்சம் உள்ளே சென்ற போது ஆச்சர்யம் அதிகமாகியது அங்கே இருந்தவர்கள் அனைவருமே காணாமல் போய் இருந்தார்கள் அதுவும் போட்டது போட்ட படி. எரிந்து கொண்டிருந்த விறகுகள் எரிந்து கொண்டே இருந்தது. சாப்பிட்ட பொருட்கள் கூட அப்படியே வைக்க பட்டு இருந்தது. வீடுகள் பூட்ட பட வில்லை. எல்லாம் அப்படியே இருக்க திடீரென மந்திரதால் மாயமானதை போல அவர்கள் காற்றில் கரைந்து போய் இருந்தார்கள். (இதே போல மொத்தமாக கிராம வாசிகள் மாயமான சம்பவம் ஒன்று ராஜஸ்தான் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ளது . அதை பற்றி இத்தொடர் கட்டுரையின் இறுதி பகுதிகளில் சொல்கிறேன் )

 

அதிர்ச்சி அடைந்த labella அந்த மர்மம் நிகழ்ந்த கிராமத்தில் அதன் பின் தங்கும் மன நிலையில் இல்லை. உடனே வெளியேறி அருகாமையில் இருந்த தந்தி நிலையத்தில் இருந்து ராயல் கனேடியன் போலீஸ் க்கு தகவல் கொடுத்தார். சில மணிநேர இடைவெளிக்கு பின் அங்கே வந்த போலீஸ் ஆய்வுக்கு பின் கிராம வாசிகள் வெளியேறிய கால் தடம் ஏதும் பணியில் இல்லாமல் இருந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்தது. அங்குள்ளவர்கள் எப்படி காணாமல் போனார்கள் என்று புரியாமல் குழம்பியது. அந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த கல்லறையை ஆய்வு செய்த போது மேலும் ஆச்சர்யம் காத்திருந்தது. கல்லரைகள் ...சவ பெட்டிகள் திறந்தே கிடக்க அவைகள் காலியாக இருந்தன. ஆம் அந்த ஊர் மக்களுடன் சேர்ந்து அந்த ஊர் சுடுகாட்டு பிணங்களும் காணாமல் போய் இருந்தன.

 

Anjikuni lake க்கு அருகாமையில் தென்பட்ட மலையேறிகள் சில பேரை விசாரித்த போது சில தினங்களுக்கு முன்பு வானில் ஒரு ஒளி உருவம் மிதந்ததாகவும் அது உருவம் மாறும் படி இருந்ததாகவும் அந்த கிராமத்தை நோக்கி சென்றதாகவும் சொன்னார்கள்.
(நம் கட்டுரை தொடர் முதல் பாகத்தில் ரஷ்ய திகில் சம்பவதில் கூட அருகாமையில் இருந்த மலையேறிகள் இப்படி தானே சொன்னார்கள் ??!! )

Anjikuni lake இன் காணாமல் போன கிராம வாசிகள் கிடைக்கவே இல்லை.. அன்று அவர்களை கடத்தியது யார் அல்லது எது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது

கடந்த நாலு பாகங்களாகளாக நாம் 13 மர்ம சம்பவங்களை பார்த்தோம். (13 எண் மர்மத்திற்கு ராசியானதாக்கும் ) சரி அவைகளை இந்த பாகத்துடன் விட்டு விட்டு இப்போது கொஞ்சம் வேறு விதமான மர்மத்தை பற்றி பார்க்கலாம்.

மண்டை ஓடுகள் பொதுவாக ஆபத்தின் சின்னமாக சித்தரிக்க படுகிறது. மண்டை ஓட்டை பார்த்தால் மெல்லிய பயம் வருவது இயல்பு தான் . ஆனால் அடுத்ததாக நான் சொல்ல போகும் மண்டை ஓடு உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷

 பாகம் : 15 : மர்ம மண்டை ஓடுகள்




Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..