Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 5
Posted By:Hajas On 1/12/2018 12:49:16 PM

மர்மங்கள்_முடிவதில்லை

ரா_பிரபு

பாகம் 4 : ஏலியன்களும் ஆதாரங்களும் 

பாகம் 5 : #மர்ம_புத்தகங்கள்

 

உலகில் மர்மங்கள் பற்றிய புத்தகங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் சில இடத்தில் புத்தகங்களே மர்ம புத்தகங்களாகவும் இருக்கிறது. சில நேரத்தில் தற்செயலாக புத்தகத்தில் எழுத பட்டது மர்மமாக மாறிய கதைகளும் உண்டு. சில மர்ம புத்தகத்தை பற்றி பார்க்கும் முன் அந்த தற்செயலாக மர்மமாக மாறிய புத்தகங்களை பற்றி பார்ப்போம்.

☯ 1898 ஆம் ஆண்டு ஆங்கில எழுத்தாளர் morgan robertson என்பவர் "futility "என்ற தலைப்பில் ஒரு நாவலை எழுதினார் அதில் உலகின் மிக பெரிய கப்பல் ஒன்று வடக்கு அட்லாண்டிக் இல் ஐஸ் பாறையில் இடித்து மூழ்கியது போல எழுதி இருந்தார். அவர் எழுதிய ஆண்டு 1898. 1 4 ஆண்டுகள் கழித்து நிஜமாகவே வடக்கு அடலாண்டிக்கில் உலகின் மிக பெரிய கப்பல் ஐஸ் பாறையில் இடித்து மூழ்கியது. கதையில் அந்த கப்பலை மூழ்காத கப்பல் என்று வர்ணித்து இருந்தார் .நிஜத்திலும் அந்த கப்பல் அப்படி தான் வர்ணிக்க பட்டது. கதையில் அது நடந்தது ஏப்ரல் மாதம் நிஜத்திலும் அது ஏப்ரல் மாதம் தான் மூழ்கியது. கதையில் நியூ பவுண்ட்லேண்ட் எனும் இடத்தில இருந்து 400 மைல் தள்ளி விபத்து நடந்ததாக எழுதி இருந்தார். நிஜத்திலும் விபத்து அங்கு தான் நடந்தது. கதையில் அந்த கப்பல் அதிகபட்சமாக 3000 பயணிகளை ஏற்ற கூடியதாகவும் 2000 பயணிகள் உயிர் இழந்ததாகவும் எழுதினார் .நிஜத்தில் நடந்ததும் அதே தான். எல்லாவற்றிற்கும் மேலாக கதையில் அந்த கப்பலின் பெயர் "டைட்டன் "நிஜத்தில் அந்த கப்பலின் பெயர் "டைட்டானிக் ".

☯ எட்கர்ட் ஆலன் போ ஒரு புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர். 1838 ஆம் ஆண்டு அவர் "The Narrative of Arthur Gordon Pym of Nantucket. " என்ற பெயரில் ஒரு நாவல் எழுதி இருந்தார்.

புயலில் சிக்கிய ஒரு கப்பலில் இருந்து லைஃப் போட் மூலம் ஒரு நான்கு பேர் கொண்ட குழு ஒன்று கடலில் சிக்கி உயிருக்கு போராடுகிறது. உன்ன உணவு இல்லாமல் அங்கே கிடைத்த ஆமைகளை பிடித்து அதை கொன்று அதன் ரத்தத்தை குடித்து உயிர் வாழ்கிறது ஆனால் அதிக நாள் தாக்கு பிடிக்க முடியாமல் உயிர் தப்பிக்க ஒரு கொடூர முடிவை எடுக்கிறது. அதாவது தங்களில் ஒருவரை கொன்று அவரை தின்று உயிர் வாழ்வதை தவிர வேறு வழி இல்லை மூவர் வாழ ஒருவரை கொல்வதை தவிர வேறு வழி இல்லை என்று முடிவு செய்கிறது. பிறகு தங்களில் இளைய வயது உடைய ஒரு சிறுவனை அவர்கள் தேர்ந்தெடுகிறார்கள் அவனை கொன்று தின்று ரத்தம் குடித்து உயிர் தப்புகிறார்கள். அவர்கள் மீட்க படும் போது அவர்களில் இருவர் சாகும் தருவாயில் இருக்கிறார்கள். தனது இந்த கதை பற்றி ஆலன் போ வே "very silly " என்று கருத்தை சொல்லி இருந்தார்.

இது நடந்து 46 ஆண்டுகள் கழித்து 1884 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து சிட்னி நோக்கி சென்ற ஒரு கப்பல் புயலில் சிக்கி அதிலிருந்து 4 பேர் லைஃப் போட்டில் கடலில் தப்புகிறார்கள். உன்ன உணவு மற்றும் தண்ணீர் இன்றி அவர்கள் அங்கே கிடைத்த ஆமைகளை பிடித்து ரத்தத்தை குடிக்கிறார்கள். ஆனாலும் அதிக நாள் தாக்கு பிடிக்க முடியவில்லை. அப்போது அவர்களில் இளைய வயது உடைய சிறுவன் ஒருவன் தாகம் தாங்காமல் கடல் நீரை பருகி உடல் நிலை கெட்டு போகிறது. அவன் நிலை மோசமாகி இறக்க தான் போகிறான் எனும் போது எப்படியும் அவன் இறக்க தான் போகிறான் அவனை நாமே கொன்று அவன் ரத்தத்தை குடிக்கலாம் என்று அந்த குழு ஒரு முடிவிற்கு வருகிறது காரணம் அவன் நோயால் இறக்கும் வரை காத்திருந்தால் அவன் ரத்தம் கெட்டு போய் பயன்படாமல் போகலாம் . அவர்கள் திட்ட படி அந்த சிறுவனை சின்ன கத்தியை வைத்து கழுத்தை அறுக்கிறார்கள். பிறகு ரத்தத்தை குடித்து தாங்கள் மீட்க படும் வரை உயிர் தப்புகிறார்கள் .


இதில் விசித்திரம் என்ன வென்றால் ஆலன் போ எழுதிய அந்த கதையில் வரும் சிறுவன் பெயர் "ரிச்சர்ட் பார்க்கர்." இந்த நிஜ கதையில் அந்த சிறுவன் பெயரும் ரிச்சர்ட் பார்க்கர். (லைஃப் ஆப் பை எனும் படத்தில் படகில் கடலில் மாட்டி கொள்ளும் சர்வைவல் கதையில் அந்த புலிக்கு ரிச்சர்ட் பார்க்கர் என பெயர் வைத்தது ஏனோ !)

இந்த பயங்கர நிஜ சம்பவம் அந்த காலத்தில் வைரலாக பேச பட்ட ஒரு வழக்கு ஆகும். மீட்க பட்ட 3 பேரில் இருவருக்கு தூக்கு தண்டனை அறிவித்தது நீதி மன்றம். பிற்பாடு தண்டனை குறைத்து கொண்டது. கற்பனை கதைக்கும் நிஜ சம்வத்திற்குமான இந்த அபூர்வ மர்ம ஒற்றுமை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மேற்கண்ட புத்தகங்களில் அந்த படைப்புகள் எப்படி நடந்தன என்று படைவர்களுக்கே தெரியாது ஆனால் குறைந்தபட்சம் படைத்தவர்கள் யார் என்றாவது நமக்கு தெரியும் ஆனால் யார் படைத்தார்கள் எப்போது படைத்தார்கள். எதற்காக படைத்தார்கள்... அந்த புத்தகங்களில் என்ன எழுத பட்டுள்ளது... என்றே தெரியாத சில மர்ம புத்தகங்கள் உலகில் உண்டு உதாரணத்திற்கு மண்டையை குழப்பி எடுக்கும் சில மர்ம புத்தகங்களை பற்றி பார்ப்போம்..

 

🕷 THE BOOK OF SOYGA :

இது நம்ம தி மம்மி படத்தில் வருகிறது போன்ற அமானுஷ்யம் ,ஆவி , மாந்திரீகம் ,பிளாக் மேஜிக் கொண்ட மர்ம புத்தகம். 15 ஆம் நூற்றாண்டை சார்ந்த இந்த ஆவி சார்ந்த மர்ம புத்தகத்தை முதல் முதலில் john dee எனும் கனிதவியலாளர் 1551 இல் கண்டெடுத்தார் ஆனால் அதன் பின் பல நூற்றாண்டுக்கு இது மர்மமாய் காணாமல் போய் 1994 ஆம் ஆண்டு திடீரென்று பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டெடுக்க பட்டது. இந்த 200 பக்கம் கொண்ட மர்ம புத்தகத்தில் முழுக்க முழுக்க ஆவிகளை வர வழிப்பதற்கான வழிமுறைகளும் ,மாந்திரீகம் செய்வதற்கான வழிமுறைகளும், வான சாஸ்திர குறிப்புகளும், மேலும் அதற்க்கு மேல் பலது நம்மால் புரிந்து கொள்ள முடியாத மர்மமான பல விஷயங்களையும் உள்ளடக்கி உள்ளது.

 

1551 ஆண்டு இதை கண்டெடுத்த ஜான் டீ ஒரு ஆவியுடன் பேசும் மீடியம் ஒருவரை உதவிக்கு அழைத்து இதில் என்ன இருக்கு என அறிய முற்பட்டார். புத்தகத்தில் சில இடங்கள் 'லேட்டின் ' மொழியில் ஏதோ ஓரளவு புரிந்து கொள்ளும்படி இருந்ததை படிக்க முடிந்தது ஆனால் அதில் 40000 வார்த்தைகள் மிக விசித்திரமான வகையில் 36 கட்டங்களில் அடுக்க பட்டிருந்தது எதை குறிக்கிறது என்பதை கண்டு கொள்ள முடியவில்லை. அதையும் மீறி இதில் ஒளிந்துள்ளதை புரிந்து கொள்ள முயன்றவர்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மர்மமான முறையில் இறந்து போனதாக சொல்லப்படுகிறது. அந்த ஆவி புத்தகம் இன்றளவும் அமானுஷ்யமாகவே உள்ளது நமக்கேன் வம்பு என்று பெரும்பாலும் இப்போதெல்லாம் பலர் அதை படிக்க முயலுவதே இல்லை.

 

🕷 ROHONC CODEX :

448 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் 19 ஆம் நூற்றாண்டை சார்ந்தது. ஹங்கேரி நாட்டுக்கு சொந்தமானது.


இதில் ராணுவ சண்டை களம் முதல் மத குறியீடுகள் வரை பல வற்றை பற்றியும் வரைய பட்டு எழுத பட்டு இருக்கிறது. கிறிஸ்து... முஸ்லீம்...ஹிந்து என அனைத்து மத குறியீடுகளும் இதில் பயன்படுத்த பட்டிருகிறது ஆனால் என்ன எழுத பட்டு இருக்கிறது என்று தான் யாராலயும் படிக்க முடியவில்லை.. அப்படி ஒரு ரகசிய குறிஈடுகளை கொண்ட 200 எழுத்துக்களால் இது எழுத பட்டுள்ளது இதை எழுதியது யார் எதற்கு இதை எழுதினார்கள் என்ற எந்த தகவலும் யாரிடமும் இல்லை.

🕷 CODEX SERAPHINUS :

இந்த புத்தகத்தை... அதில் உள்ள படத்தை பார்க்கும் நபர்கள் தாங்கள் ஒரு வித்தியாசமான கற்பனை உலகிற்கு செல்வதை தவிர்க்க முடியாது. அந்தளவு வித்யாசமான பல படங்களை கொண்டது பலது பார்க்க ரொம்ப விபரீத கற்பனை போலவும் தெரிகிறது.. யாரோ கிறுக்கு விஞ்ஞானி தனது விபரீத உயிரியல் ஆய்வை பதிவு செய்தது போலவும் இருக்கிறது. (உதாரணம் ஒரு படுத்திருக்கும் பெண் அவள் மேல் ஒன்றிணைந்து இருக்கும் ஆன் பார்க்க ஒரு முதலை போன்ற வடிவத்தில் இருக்கிறார்கள்...பின் அடுத்தடுத்த படத்தில் அவர்கள் முதலையாகவே மாறிவிடுகிறார்கள். ) ஆனால் பலர் இதை ஒரு மருத்துவ நூலாக இருக்கலாம் என்கிறார்கள்.


படங்கள் பார்க்க ஏதோ உயிரற்றதையும் உயிருள்ளதையும் ஒன்றாக கலந்து ஆய்வு செய்தது போலவும்... விலங்குகளையும் தாவரங்களையும் ஒன்று கலந்து ஆய்வு செய்தது போலவும் பல விசித்திரங்கள் நிரம்பி உள்ளது இந்த புத்தகத்தில். 360 பக்கம் கொண்ட 1981 இல் பதிவிட பட்ட இந்த புத்தகம் நல்ல வேலை இதை எழுதியவர் யார் என்று நமக்கு தெரியும்.

இது இத்தாலிய ஆர்ட்டிஸ்ட் மற்றும் வடிவமைப்பாளர் உருவாக்கிய கற்பனை உலகம் இது. அவர் இதை பற்றி கூறுகையில் தனக்கு சின்ன வயதில் வந்த பல விச்சித்திர கற்பனைகளுக்கு விடை தெரியவில்லை அதை தான் இந்த வித்யாசமான என்சைக்ளோபீடியாவில் பதித்து இருக்கிறேன் என்றார். அந்த படங்களை பார்க்கும் போது ஒரு சிறுவனுக்கு இந்தளவு வித்யாசமான கற்பனைகள் எப்படி வந்தது என்ற கேள்வி உண்டாகிறது.

🕷 VOYNICH MANUSCRIPT :

மேலே நாம் பார்த்த புத்தகங்களிலேயே மிக விசித்திரமான.. உள்ளத்தை கொள்ளை கொள்ள கூடிய ...அழகிய மற்றும் அறிவை குழப்ப கூடிய மர்மத்தை உள்ளடக்கிய புத்தகம் தான் voynich manuskript.


ஏதோ ஒரு வேற்றுகிரக விஞ்ஞானியின் ஆராய்ச்சி கையேடை திருடி வந்ததை போல அப்படி ஒரு வித்யாசமான படங்களை கொண்ட புத்தகம் (அதிலும் குறிப்பாக அந்த விஞ்ஞானி தாவரவியளில் அதிக ஆர்வம் போல தெரிகிறது ) புத்தகம் முழுக்க முழுக்க கைகளால் வரைய பட்ட அழகிய வண்ண வண்ண சித்திரம் மற்றும் கைகளால் எழுத பட்ட எழுத்துக்களை கொண்டது.


அந்த படங்கள் ..அதன் வண்ண கலவைகள் அவ்வளவு துல்லியமாக அழகாக இருக்கின்றன ..ஒவொரு படங்களும் விளக்க முடியாத விசித்திரங்களை கொண்டுள்ளன. ஒவொன்றும் மிக ஆழமாக எதையோ சொல்ல வருவது தெளிவாக தெரிகிறது. சில பக்கங்கள் இடம் பற்றாமல் பெரிய சைஸ் பக்கங்களில் வரைய பட்டு அந்த பக்கங்கள் மட்டும் மடித்து வைத்து இணைக்க பட்டுள்ளது. அதை எழுதியவன் அறிவியலில் உயிரியலில் ஆழ்ந்த அறிவு கொண்டவனாக தெரிகிறது. அந்த எழுத்துக்கள் இந்த கால அச்சு களுக்கு சவால் விடும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக செதுக்க பட்ட எழுத்துக்களை போல மிக அழகிய கையெழுத்தை கொண்டது. வானவியல் உயிரியல் தாவரவியல் ,மருத்துவம், என்று பல தலைப்புகளில் அந்த ஓவியங்கள் வரைய பட்டுள்ளன. ஓவியங்களின் தரமும் பார்க்க இன்றைய கிராபிக்ஸ் ஓவியங்களை ஒத்த அளவில் அவ்வளவு தரமாக வரைய பட்டுள்ளது. ஆனால் அந்த புத்தகம் என்ன சொல்ல வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை அதில் எழுத பட்ட எழுத்துக்கள் ஒன்று கூட உலகில் எந்த வகை எழுத்துகளுடனும் ஒத்து போக வில்லை மிக மர்மமான வேற்றுகிரக எழுத்துக்கள் போல அவை தோற்றம் அளிக்கின்றன.

 

இந்த புத்தகத்தை டீகோட் செய்ய FBI முதல் பெரிய பெரிய ப்ரொபெசர்கள் வரை... டீகோட் நிபுணர்கள் வரை.. இரண்டு உலக யுத்தங்களில் வேலை செய்த டீ கோடர்கள் வரை முயன்று தோற்று இருக்கிறார்கள். பலர் இது ஏலியன்களால் எழுத பட்டது என்று நம்புகிறார்கள்.

15 ஆம் நூற்றாண்டை சார்ந்த இந்த புத்தகத்தை 1912 இல் வாங்கிய பழம் புத்தக விற்பனையாளர் Wilfrid M. Voynich, அவர்களின் பெயரால் இது வழங்க படுகிறது. இதன் நிஜ பிரதி இன்று yale இல் உள்ள Beinecke Library இல் உள்ளது. இதில் பல பக்கங்கள் தொலைந்தது போக இப்போது 240 பக்கங்கள் உள்ளது. இந்த மர்ம புத்தகத்தை யார் எழுதியது ஏன் இப்படி யாருக்கும் புரியாத மொழியில் எழுத பட்டது ? அதில் பயன்படுத்த பட்டுள்ள மொழி என்ன ? அந்த புத்தகதம் சொல்ல வரும் மகா அறிவியல் என்ன என்பது இன்று வரை தீர்க்க முடியாத மர்மமாக இருக்கிறது.

இந்த வரிசையில் இது போன்று உலகில் பல மர்ம புத்தகங்கள் உண்டு இதோ மேலும் சில மர்ம புத்தகங்களின் பெயர்கள் :
☯ The Dead Sea Scrolls
☯ The Oera Linda Book
☯ Prodigiorum ac Ostentorum Chronicon
☯ The Smithfield Decretals
☯ The Ripley Scrolls
☯ The Story Of The Vivian Girls
☯ Codex Mendoza
☯ The Popol Vuh
மற்றும் விற்பனையில் செக்க போடு போடும் நாஸ்டர்டாமின்...
☯ Prophecies of Nostradamus

(நண்பர்களே இந்த மர்ம புத்தகங்களை படிக்க உங்களுக்கு ஆர்வம் உண்டாகுமாயின் ஒன்னும் பிரச்னை இல்லை இவைகளின் காபி பிரதிகள் இன்று சாதாரணமாக ஆன் லைன் விற்பனையில் கிடைக்கிறது. வாங்கி எதையாவது டீகோட் செய்ய முடிகிறதா என்று முயன்று பாருங்களேன் ...)

மர்ம புத்தகங்களே இப்படி இருக்கிறது என்றால் மர்ம இடங்களை பற்றி என்ன சொல்ல....
அடுத்த பாகத்தில் சொல்கிறேன்

மர்மங்கள் தொடரும்............🕷🕷

 

பாகம் 6 : மர்ம 'மோய்'கள்




Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..