பாபர் மசூதி இடிப்பைப் பற்றிய மிக முக்கியமான அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய பதிவு....
‘இந்துவாகப் பிறந்தேன். இந்துவாகச் சாகமாட்டேன்’ என்று உறுதி எடுத்து, அதை நிறைவேற்றிய அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையும் அவரின் இந்து எதிர்ப்பையும் இருட்டடிப்புச் செய்து, தலித் மக்களிடம் இஸ்லாமிய எதிர்ப்பின் மூலமாக இந்து உணர்வை கட்டமைக்க.
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ முஸ்லிம் - தலித் எதிர்ப்பு என்று கணக்கு வைத்து கல்லடித்தார்கள் மசூதி மீது.
முதலாளித்துவம் தன்னையறியாமலேயே தனக்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தை உருவாக்கியதுபோல், இந்துத்துவ வெறியர்கள் அவர்களை அறியாமலேயே இஸ்லாமிய தலித் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக டிசம்பர் 6 யை மாற்றியிருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக ‘மாட்டிறைச்சி தடை’ என்பதும் ஒரு குறியீடு. அது முஸ்லிம் எதிர்ப்பு மட்டுமல்ல, தலித் எதிர்ப்பும்தான்.
மாட்டிறைச்சி வைத்திருந்ததிற்காக முஸ்லிம்கள் மட்டும் படுகொலை செய்யப்படவில்லை, தலித் மக்களும்தான்.
ஆக, டிசம்பர் 6 துக்க நாள் அல்ல, அது தலித் முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம். மத, ஜாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களின் எழுச்சிநாள்.
விரைவில் இந்து மதவெறி சக்திகள் ஆட்சியிலிருந்து மட்மல்ல, சமூகத்திலிருந்தே புறக்கணிக்கப்படுவார்கள்.
அப்போதும் முஸ்லிம் அல்லாத ஒடுக்கப்பட்ட ‘இந்துக்கள்’ அயோத்திக்கு செங்கல் எடுத்துச் செல்வார்கள். அது ராமர் கோயில் கட்ட அல்ல; இடிக்கப்பட்ட பாபர் மசூதியை கட்ட.
அதே அண்ணலின் நினைவு நாளான டிசம்பர் 6 ல் பாபர் மசூதியை கட்டியே தீருவோம்.
-வே.மதிமாறன்