Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 64
Posted By:Hajas On 8/29/2017 3:21:50 AM

 

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

 தொடர் 5: சூத்திரதாரிகள்

Episode 63: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 2:

 

Episode 64 : நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 3:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Image may contain: one or more people and text

சென்ற எபிசோடில் விட்ட இடத்திலிருந்து நாம் தொடர்கிறோம்.

உலகில் தோன்றிய எல்லா மதங்களிலும் Reptilian ஜின்கள் தமது கைவரிசையைக் காட்டி, அதன் விளைவாக அந்த மதங்களிலெல்லாம் தம்மையும் ஒரு கடவுள் அவதாரமாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதைப் பல சான்றுகள் வாயிலாக அறிந்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில தடயங்களை இப்போது பார்க்கலாம்.

பண்டைய எகிப்து:
~~~~~~~~~~~~~~~~
பல்லாயிரம் ஆண்டுகள் முன்பு உலகின் வல்லரசுகளாகக் கோலோச்சி அழிந்து போன குறிப்பிடத்தக்க நாகரீகங்களுள் எகிப்து நைல் நதிக்கரை நாகரீகமும் ஒன்று. மூஸா (அலை) அவர்களது காலம் தொட்டு தலைமுறை தலைமுறையாகப் பல ஃபிர்அவுன்கள் அரசாட்சி செய்த ஒரு சாம்ராஜ்ஜியத்தை மையமாகக் கொண்டதே எகிப்து நைல் நதிக்கரை நாகரீகம். இன்று வரை அழியாது பாதுகாக்கப் பட்டிருக்கும் பிரமிட் கட்டமைப்புகள் கூட இவர்களது நாகரீகத்தின் சின்னங்களே.

எகிப்தியர்களது மதமும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே ஷைத்தானிய ஜின்களால் முற்றுமுழுதும் மாசுபடுத்தப் பட்டுப் பலதெய்வக் கோட்பாடாக மாறியிருந்தது. எகிப்தின் மத நம்பிக்கையில் சூனியம் என்பது ஒரு பிரதான அம்சமாகக் கருதப்பட்டது. அரச மதகுருக்கள் உட்பட அனைவருமே சூனியத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். சூனியத்துக்கும், ஷைத்தானிய ஜின்களுக்கும் இடையிலிருக்கும் நேரடி சம்பந்தங்களை ஏற்கனவே நாம் முந்திய தொடரில் அலசியிருக்கிறோம்.

எகிப்தியர்களது மதத்தையும் மாசுபடுத்தி, அதைப் பலதெய்வக் கோட்பாடாக மாற்றியதும் கூட இப்லீஸின் கோத்திரத்தைச் சேர்ந்த இதே Reptilian ஜின்கள் தாம் என்பதைக் காட்டிக் கொடுப்பது போல் அங்கும் சில தடயங்களைக் காண முடிகிறது.

இவ்வாறான தடயங்களுள் ஒன்று தான் “சொபெக்” (Sobek) என்று அழைக்கப்படும் எகிப்தியர்களது கடவுள் அவதாரம். மனித உடலையும் முதலைத் தலையையும் கொண்ட இந்தக் கடவுள் அவதாரம் எகிப்தியர்களால் மிகவும் மதிக்கப்பட்ட ஓர் அவதாரமாக இருந்தது. பிரத்தியேகமாக ஃபிர்அவுன்களுக்கு சக்தியைக் கொடுக்கும் கடவுளாகவும், செழுமைக்குப் பொறுப்பான கடவுளாகவும், யுத்தகளங்களில் தம்மைக் காக்கும் கடவுளாகவும் எகிப்தியர்கள் பிரதானமாகக் கருதியது இந்த நகருயிர்க் கடவுள் அவதாரத்தைத் தான். சொபெக் எனும் இந்த நகருயிர்க் கடவுள் அவதாரத்தின் உருவத்தை பின்வரும் இணைப்புக்களில் காணலாம்.

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/04/Sobek_Oxford.jpg/1280px-Sobek_Oxford.jpg


https://upload.wikimedia.org/wikipedia/commons/9/9d/GD-EG-Louxor-123.JPG

இந்து மதம்:
~~~~~~~~~~
நகருயிர்க் கடவுள் அவதாரங்கள் எந்த அளவுக்கு இந்து மதக் கோட்பாடுகளில் ஊடுறுவியிருக்கின்றன என்பதை நான் சொல்லித் தான் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. பரம்பொருட்களாகக் கருதப்படும் முக்கடவுள்களுள் ஒரு கடவுளாகிய பரமசிவனின் கழுத்தைச் சுற்றியிருக்கும் நாகராஜா எனும் பாம்புக் கடவுள் முதல் பல்லி சாஸ்திரம் வரை இந்து மதத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நகருயிர்கள் ஊடுறுவியிருப்பதைப் பார்க்கலாம்.

பௌத்த மதம்:
~~~~~~~~~~~~
போதி மரத்தடியில் தவமிருந்த கௌதம புத்தருக்கு ஞானம் (வஹி) வந்ததாகக் கூறப்படும் நேரத்தில் அவரைச் சுற்றியணைத்துக் கொண்டு, தலைக்கு மேலால் குடை பிடிப்பது போல் நிற்பது கூட ஒரு பாம்பு தான். இந்தக் காட்சியைக் கொஞ்சம் சிந்தித்தாலே ஓர் உண்மை புலப்படும். அதாவது, புத்தருக்குக் கிடைக்கப்பெற்ற ஞானம் என்பது ஒரு பாம்பின் பாதுகாப்பின் கீழ் தான் கிடைக்கப் பெற்றிருக்கிறது என்பது தான் இங்கு வெளிப்படும் மறைபொருள். இது எதைக் குறிக்கிறது? புத்தருக்குக் கிடைத்த மறைவான ஞானம் என்பதே Reptilian ஜின்களின் அனுசரணையோடு கிடைத்த ஒன்று தான் என்பதைத் தவிர வேறெந்தப் பொருளும் இதற்கு இல்லை.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். உலகில் இன்றிருக்கும் எந்த மதத்தைப் பார்த்தாலும், அங்கெல்லாம் பாம்பு, பல்லி, முதலை, ட்ராகன் என்று ஒரே Reptilian மயமாகவே இருக்கும். உலகில் தோன்றிய எல்லா இறைவேதங்களையும் இவ்வாறு தான் இப்லீஸ் திட்டமிட்டு அழித்து, அதைப் பின்பற்றிய சமூகத்தவர்களையெல்லாம் அல்லாஹ்வை வணங்குவதற்குப் பதிலாகத் தன்னை வணங்கும் சமூகங்களாக மாற்றினான்.

ஆதி முதல் இப்லீஸ் இவ்வாறு திட்டமிட்டுத் தொடர்ச்சியாக மனித இனத்தவர்களை ஏமாற்றி வந்ததன் விளைவாகக் காலப்போக்கில் வழிகெட்ட மதங்களைப் பின்பற்றுவதற்கும் மேலாக, ஷைத்தானிய ஜின்களை நேரடியாகவே கடவுளாக ஏற்றுக்கொண்டு, வணங்கி, வழிபட்டு, அவர்களிடம் உதவி தேடிப் பிரார்த்திக்கும் பல வழிகெட்ட சமூகங்கள் கூட உலகின் பல்வேறு பாகங்களிலும் தோற்றம் பெறத் தொடங்கின.

அதிலும் குறிப்பாக ஷைத்தானிய ஜின்களை வணங்கி, வழிபட்டு, அவர்களிடம் உதவி தேட விரும்புவோர், பின்பற்றுவதற்கென்றே இப்லீஸின் திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட தனித்துவமான ஒரு மதம் காலப்போக்கில் உருவானது. அந்த மதத்தின் பெயர் சூனியம் என்பதாகும்.

ஆம், யாரெல்லாம் ஷைத்தானிய ஜின்களை நேரடியாகவே வணங்கி வழிபடுவோராக இருப்பார்களோ, மிக நிச்சயமாக அவர்களுக்கும் சூனியத்துக்கும் இடையில் மிகவும் நெருங்கிய சம்பந்தம் இருந்தே தீரும். இதில் யாருமே விதிவிலக்கில்லை. ஷைத்தானை வழிபடுவோரில் அனேகமானோர் தாமே பயிற்சி பெற்ற சூனியக்காரர்களாகவும் மாறி விடுவது வழமை.

ஷைத்தானிய ஜின்களுக்கும், அவர்களை வணங்கும் மனிதர்களுக்குமிடையில் திரைமறைவில் உறவுகள் நிகழ்ந்து வருவதைப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் கூட உறுதிப்படுத்துகின்றன:

ஆதாரம் 1:
மனிதர்களில் உள்ள ஆண்களில் சிலர் ஜின்களில் உள்ள சில ஆண்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தனர். இதனால் இவர்களுக்கு கர்வத்தை அவர்கள் அதிகமாக்கி விட்டனர் (என்று ஜின்கள் கூறின).
(அல்குர்ஆன் 72:6)

ஆதாரம் 2:
ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும் போது, அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அறிவில்லாமல் அவனுக்கு ஆண் மக்கைளயும் பெண் மக்களையும் கற்பைன செய்து விட்டனர். அவேனா தூயவன். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.
(அல்குர்ஆன் 6:100)

ஆதாரம் 3:
"நீ தூயவன். நீயே எங்கள் பாதுகாவலன். அவர்களுடன் (எங்களுக்கு சம்பந்தம்) இல்லை. மாறாக, இவர்கள் ஜின்களையே வணங்கி வந்தனர். இவர்களில் அதிகமானோர் அவர்களையே நம்பினர்'' என்று அவர்கள் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 34:40,41)

மனிதர்களில் பெரும்பாலோர் இவ்வாறு வழிகெடுக்கப்படும் இந்தக் காரியம், ஜின்களின் நேரடித் தலையீட்டின் மூலம் மட்டும் சாதிக்கப் படும் ஒரு காரியமல்ல. ஷைத்தானிய ஜின்களின் இந்தப் பாரிய முயற்சிக்கு, மனித இனத்தைச் சேர்ந்த சில மனித ஷைத்தான்கள் கூட ஜின்களுக்கு உறுதுணையாக இதில் காலாகாலமாகப் பங்கேற்று வருகின்றனர் என்பதே உண்மை.

அதாவது, உலக மக்களை மொத்தமாக வழிகெடுப்பதற்கு, மனித, ஜின் ஆகிய இரண்டு சாராரின் வளங்களும் இப்லீஸுக்கு அவசியம். கோடிக்கணக்கான மனிதர்களை நரகின் பால் இட்டுச் செல்லும் இந்தப் பாரிய பணியைச் செய்வதற்கு ஜின் இனத்தவர்களால் சாதிக்க முடிந்த அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஜின்களை வைத்து இப்லீஸ் சாதித்துக் கொண்டிருக்கிறான்.

ஆனால், இது மட்டும் போதாது. இந்தப் பாரிய செயல்திட்டம் செயல்திறனுடன் வெற்றிகரமாக அரங்கேறுவதற்குச் சில சந்தர்ப்பங்களில் ஜின்களின் உதவி மட்டும் என்றில்லாது, சில மனிதர்களது பங்களிப்புக்கள், ஒத்தாசைகள் ஆகியவை கூட இப்லீஸுக்கு அவசியப் படுவதுண்டு.

உதாரணத்துக்கு, ஒரு நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களைக் குறுகிய காலப்பகுதிக்குள் ஒரு பொய்யைச் சொல்லி ஏமாற்றித் திசைதிருப்ப வேண்டிய தேவை இப்லீஸுக்கு ஏற்பட்டால், பல்லாயிரக்கணக்கான ஜின்களைக் கொண்டு ஒவ்வொரு குடிமகனாக ஏமாற்றி அதைக் கஷ்டப்பட்டுச் சாதிப்பதை விட, அந்த நாட்டு ஜனாதிபதி மீடியாவில் அறிவிக்கும் ஒரேயொரு வார்த்தையைக் கொண்டு அதை மிக இலகுவாகச் குறுக்கு வழியில் சாதித்து விடலாம்.

இவ்வாறான பல அனுகூலங்கள் மனிதர்களை உபயோகிப்பதிலும் இருப்பதனால், தனது பாரிய திட்டத்தை உலகில் செயல்படுத்துவதற்கு ஜின் இனத்தில் மட்டுமல்லாது, மனித இனத்தினுள்ளும் சில அடியாட்களைப் பயிற்றுவித்துத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டியது இப்லீஸின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று.

இந்தத் தேவையின் அடிப்படையில் ஷைத்தானிய ஜின்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப், பயிற்றுவிக்கப் பட்டுப் பல நூற்றாண்டுகளாக இப்லீஸின் அடியாட்களாக இவ்வுலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மனித ஷைத்தான்களாக, சூனியத்தோடும், ஷைத்தானிய வழிபாடுகளோடும் நேரடித் தொடர்புடைய பதின்மூன்று கோத்திரங்கள் / குடும்பங்கள் உள்ளன. இந்தப் பதின்மூன்று கோத்திரத்தவர்களுக்கும் பல விதமான வசதி வாய்ப்புகளையும் இவ்வுலகில் இப்லீஸைச் சார்ந்த ஷைத்தானிய ஜின்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.

ஆம், ஷைத்தானிய ஜின்களின் பிரதிநிதிகளாகவும், அடியாட்களாகவும் மனிதர்கள் மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பதின்மூன்று கோத்திரத்தவர்களும் வெறு யாருமல்ல; அவர்கள் தான் இன்றைய உலகில் இலுமினாட்டி என்று அழைக்கப் படுபவர்கள்.

இலுமினாட்டிகளின் பரம்பரை பலநூறு / பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இவர்களது குடும்பப் பெயர்கள் காலத்துக்குக் காலம் திட்டமிட்டு மாற்றப் படுவதால் இவர்களின் பூர்வீகம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. ஆனால், இவர்கள் தமது குடும்ப இரத்தத்தின் தூய்மையைப் பாதுகாப்பதில் மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள்; தமது குடும்ப இரத்தத்தில் வேறு கோத்திரத்தவர்களது இரத்தங்கள் திருமண பந்தம் போன்ற உறவுகள் மூலம் கூட கலப்படமாகி விடக் கூடாது என்பதில் இவர்கள் மிகவும் கவனமாகவே இருந்து வருகிறார்கள் என்பதை மட்டும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

இவர்களது பரம்பரை இரத்தத்தின் தனித்துவம் பேணப்படுவதால், தலைமுறை தலைமுறையாக இவர்களது மரபணுக்களின் தன்மைகளில் கூட பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. இவ்வாறு இவர்கள் தமது பாரம்பரியத் தன்மைகளைப் பாதுகாப்பது கூட இவர்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் அல்ல; தமது எஜமானர்களாகவும், கடவுள்களாகவும் திரைமறைவில் இவர்கள் வணங்கி வழிபடும் ஷைத்தானிய ஜின்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தே இவ்வாறு செய்கிறார்கள்.

குறிப்பிட்ட இந்தப் பதின்மூன்று குடும்பத்தின் மரபணுக்களையும் மாற்றங்களுக்கு உள்ளாகாதவாறு பாதுகாக்க வேண்டிய தேவை ஷைத்தான்களுக்கு ஏன் ஏற்பட்டது? இதற்கான விடையைச் சற்று நேரத்தில் நாம் பார்க்கலாம்.

ஷைத்தானிய ஜின்களின் மனிதப் பிரதிநிதிகளாக, சூனியம், நரபலி, இரத்த பூஜை, காம பூஜை போன்ற பல்வேறு ஷைத்தானிய வழிபாடுகளிலும் ஊறிப்போன இந்தப் பதின்மூன்று குடும்பத்தவர்களுமே காலாகாலமாக இவ்வுலக நிர்வாகக் கட்டமைப்பைத் திரைமறைவிலிருந்து கொண்டு ஷைத்தானிய ஜின்களின் கட்டளைகளுக்கேற்ப ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அதாவது, இவ்வுலகின் அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சார, நாகரீக, ஒழுக்கவியல் நிர்வாகங்கள் மொத்தமும் ஒவ்வொரு காலப்பகுதியிலும் எந்தத் திசையில் எவ்வாறு வழிநடத்தப்பட வேண்டுமென்று இப்லீஸ் ஆசைப்படுகிறானோ, அச்சொட்டாக அதே திசையில் அவற்றை வழிநடத்துவதற்காகவென்றே ஷைத்தான்களால் நியமிக்கப் பட்டிருக்கும் முகவர்களே இலுமினாட்டிகள். 

உலக நாடுகளின் அதிகாரக் கட்டமைப்பின் உச்சியில் நின்று கொண்டு திரைமறைவில் தலைவர்களையே ஆட்டிப் படைக்கும் ஷைத்தானின் ஊழியர்களாகிய இந்த இலுமினாட்டிகளுக்கும், ஷைத்தானிய ஜின்களுக்கும் இடையில் இருக்கும் உறவு பிரிக்க முடியாதது.

உண்மையில் அனேகமானோர் நினைத்துக் கொண்டிருப்பது போல் இலுமினாட்டிகள் ஒன்றும் இந்த உலகின் எஜமானர்கள் கிடையாது; அடியாட்கள் மட்டுமே. ஷைத்தானிய ஜின்களின் கட்டளைகளை ஏன், எதற்கென்று கேள்வி கேட்காமல் இவ்வுலகில் நிறைவேற்றும் சேவகர்கள் மட்டுமே இவர்கள். 

இன்றைய உலகில் அரங்கேற்றப்படும் யுத்தங்கள், இனக் கலவரங்கள், வங்கி வலைப்பின்னல்களூடாக அரங்கேற்றப்படும் பொருளாதாரச் சதித் திட்டங்கள், மனிதனின் சிந்தனா சக்தியை மழுங்கடிப்பதற்கென்றே வடிவமைக்கப் பட்டிருக்கும் நவீன கல்வித் திட்டங்கள், மனித உடல்களினுள் ஷைத்தானிய ஜின்களின் ஆதிக்கத்தை அதிகரிக்க உதவும் பல இரசாயணக் கலவைகளை உட்செலுத்துவதற்கென்றே வடிவமைக்கப் பட்டிருக்கும் தடுப்பூசித் திட்டங்கள், உடல் / உள ஆரோக்கியத்தை நாசம் செய்வதன் மூலம் மனிதனைப் பலவீனப் படுத்துவதற்கென்றே எல்லா உணவுப் பதார்த்தங்களிலும் திட்டமிட்டுக் கலக்கப்படும் பல வேதிப் பொருட்கள்.... போன்ற அனைத்துமே இன்றைய உலகில் இலுமினாட்டிகளால் அரங்கேற்றப் படுவது உண்மையில் அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அல்ல; ஷைத்தானிய ஜின்களின் கட்டளைகளுக்கு அமைய மட்டுமே. இலுமினாட்டி குறித்து ஆய்வு செய்யும் அனேகமான ஆய்வாளர்கள் கூட கண்டுகொள்ளத் தவறும் உண்மை இது தான்.

சுருக்கமாகக் கூறுவதென்றால், இப்லீஸின் சில அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வைப்பதற்காக இவ்வுலகில் வாழும் மொத்த மனித சமூகத்துக்கும் எதிராகத் துரோகம் செய்து கொண்டிருக்கும் மனித ஷைத்தான்களே இலுமினாட்டிகள்.

இலுமினாட்டிகளுக்கும், ஷைத்தானிய ஜின்களுக்கும் இடையிலிருக்கும் உறவு, உண்மையில் ஒரு கொடுக்கல்வாங்கல் உறவு போன்றது தான். ஒருபுறம் இப்லீஸின் தேவையை இலுமினாட்டிகள் நிறைவேற்றிக் கொடுக்கின்றனர். இந்தச் சேவைக்குப் பகரமாக ஷைத்தானிய ஜின்கள், இவர்களுக்குப் பல்வேறு அடிப்படைகளிலும் திரைமறைவில் உதவுகின்றனர்.

ஷைத்தானிய ஜின்கள் இலுமினாட்டிகளுக்குச் செய்யும் திரைமறைவிலான உதவிகளின் விளைவாகவே அன்று முதல் இன்று வரை இலுமினாட்டிகள் தொடர்ந்தும் உலக அதிகார மட்டத்தில் உயர் நிலையிலும், சகல சௌபாக்கியங்களோடும், செல்வச் செழிப்போடும் வாழ்ந்து வருகின்றனர்.

ஷைத்தானிய ஜின்களிடம் தமது மறுமை வாழ்வை அடகு வைத்து, அதற்குப் பகரமாக இவ்வுலக வாழ்வின் பாக்கியங்களை இலுமினாட்டிகள் அடைந்து கொள்கிறார்கள். இவ்வாறு இலுமினாட்டிகளுக்கு இப்லீஸ் வழங்கும் பாக்கியங்களுக்குக் கூலியாக, முழு மனித சமூகத்தையுமே ஈருலகிலும் அழிவில் தள்ளிவிடும் தனது பாரிய திட்டத்தை அரங்கேற்றுவதற்கு இந்த இலுமினாட்டிகளைச் சேவகர்களாக இப்லீஸ் உபயோகிக்கிறான். இதைத் தவிர வேறெந்த உறவும் இவர்களுக்கிடையில் இல்லை. 

இந்த உண்மைகளை ஊர்ஜிதப் படுத்தக் கூடிய மார்க்க ஆதாரங்களை இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்


Episode 65: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 4:





Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..