நமது குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர்களுக்காக எல்லாவற்றையும் சேகரிக்க துவங்கிய நாம்..அவர்கள் நோய்நொடி இல்லாமல் உயிர் வாழத் தேவையான தண்ணீரை பாதுக்காக்க தவறிவிட்டோம்..ஆற்றில் ஓடும் நீரையும் பாதுகாக்காமல்,நம் வீட்டு மாடியில் வடியும் மழை நீரையும் சேமிக்காமல் எல்லாவற்றையும் சாக்கடையில் ஓட விட்டோம்.. விளைவு..
நிலத்தடி நீர் தட்டுப்பாடு..!!
நமதூர் ஏர்வாடியில் பல பகுதிகளில் தற்போது நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தவிக்கின்றன. தண்ணீரைத்தேடி ராட்சத துளையிடும் எந்திரங்கள் மூலம் பல்லாயிரம் அடிக்கு துளையிட்டாலும் காற்று தான் வருகிறது. பூமியின் அடிப்பகுதியில் இருந்து பல லட்சம் லிட்டர் நீரை நாம் நாள்தோறும் உறிஞ்சுகிறோம். அதில் 75 சதவீதத்தை கழிவு நீராக மாற்றுகிறோம். பூமிக்குள் இருந்து எடுக்கும் நீரில் நான்கில் மூன்று பங்கையாவது மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். அப்படி நடந்தால் பூமிக்கடியில் இருந்து எப்போதும் தண்ணீர் கிடைக்கும். இந்த வழிமுறையை பேணாத விளைவு தான் இன்று நாம் படும் திண்டாட்டம்..! சரி இனி என்ன செய்வது..? நீரை இரு வழிகள் உள்ளன..! முதலாவது மழை நீரை சேமிப்பது, அடுத்தது நிலத்தடியில் இருந்து எடுத்த நீரை, மீண்டும் அங்கேயே சேர்ப்பது.
மழைநீர் சேமிப்பு என்பது பூமியின் அடிப்பகுதியில் உள்ள உவர்ப்பு நீரையும் நன்னீராக மாற்றும் ஓர் சக்தி கொண்டது..அதை தான் இத்தனை நாட்காளாக சேமிக்காமல் சாக்கடையில் பெருக்கெடுத்து ஓட விட்டோம்..
அடுத்ததாக நாம் பயன்படுத்திய நீரை மீண்டும் சுத்திகரித்து நிலத்தடியில் செலுத்துவது. கூழாங்கற்கள், ஆற்றுமணல், நிலக்கரி, சரளைக்கற்கள் வழியாக நாம் பயன்படுத்திய நீரை செலுத்தினால் அது பெருமளவு சுத்திகரிக்கப்படும். ஒவ்வொரு வீட்டிலும் அதிக செலவு இல்லாமல் இதனை அமைக்கலாம். வீடுகளின் குளியல் அறையில் இருந்து வெளியேறும் நீரை இதுபோல சுத்திகரித்து நிலத்தடியில் சேர்க்கலாம்.
அத்துடன் மழைநீரை சுத்தமான தொட்டிகளில் சேகரித்து குடிநீராக பயன்படுத்தலாம். நிலத்தடிநீர் பற்றாக்குறை அதிகம் உள்ள பகுதிகளில் மழைநீரை பெரிய கலன்களில் சேமித்து அதில் தேத்தான் கொட்டை என்ற ஒரு தாவர விதையை போட்டு மூடி வைத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துகிறார்கள். தேத்தான் கொட்டையின் தன்மையினால் மழைநீர், அதன் தன்மை மாறாமல் இருக்கும்...
இந்த இரு வழிமுறைகளை கட்டி காப்பது நமது தலையாய கடமை.. இறைவன் வழங்கிய அருட்கொடையை சரியாக பாதுகாத்து பேணாமல் எல்லாவற்றையும் சாக்கடையில் ஓடவிட்டு அதையும் ஆற்றில் கலந்து விட்டால் நம் பிள்ளைகளின் கதி என்னவாகும் என்பதை மறந்திட வேண்டாம்..இன்றிலிருந்து துவங்குவோம்..நம்மில் ஒவ்வொருவரும்.. நம் சந்ததிகளின் எதிர்காலம் கருதி நம்மால் இயன்ற அளவு நீரை சிக்கனமாக செலவு செய்து..மழை நீர் தொட்டி அமைத்து நிலத்தடி நீரையும் நம்மை நம்பி ஓடிய நம்பி ஆற்றையும் பாதுகாக்க துவங்குவோம்..
இறைவன் போதுமானவன்..!
https://www.facebook.com/groups/baithussalam/permalink/1400585606676819/