Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 61
Posted By:Hajas On 7/27/2017 8:23:35 AM

 

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

 தொடர் 5: சூத்திரதாரிகள்

Episode 60 : ஜின்களும் மனிதர்களும் உடலுறவு கொள்ள முடியுமா? (தொடர்ச்சி...)

Episode 61: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians)

 

Image may contain: one or more people and text


நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



இதுவரை நாம் பார்த்து வந்த வேற்றுக்கிரகவாசி இனத்தவர்களுள் இறுதியாக நாம் அலசப் போவது இந்த “நகருயிர் சார்ந்தோர்” பற்றி மட்டும் தான். இவர்கள் “நகருயிர் சார்ந்தோர்” (Reptilians) என்று அழைக்கப்படுவதற்கான காரணம் இவர்களது தோற்றம் தான்.

மனிதனுக்கு நெருக்கமான அவயவ அமைப்புகளோடு (இரண்டு கை, இரண்டு கால்... போன்ற அவயவ அமைப்புகளோடு) இவர்கள் இருந்த போதும், இவர்களது உடலமைப்பில் பாம்பு, பல்லி, ஓனான், உடும்பு... இவை போன்ற நகருயிர்களின் தன்மைகளே மேலோங்கிக் காணப்படும்.

இவர்களது முக அமைப்பைப் பொருத்தவரை, ஒரு மனிதனின் முகத்தையும், பாம்பு அல்லது பல்லியின் முகத்தையும் சம அளவில் கலந்து ஒரு முகம் உருவாக்கப்பட்டால், அந்த முகம் எந்தத் தோற்றத்திலிருக்குமோ, அவ்வாறானதொரு முகமும், தலையுமே இவர்களுக்கு இருக்கும்.

இவர்களது கண்களைப் பொருத்தவரை, மனித கண்களில் இருப்பதைப் போல் வட்ட வடிவிலான கண்மனி இவர்களுக்கு இருக்காது. விஷப் பாம்பு, ஓனான் போன்ற நகருயிர்களுக்கு இருப்பது போன்ற நிலைக்குத்தான கோடு போன்ற கண்மணியே இருக்கும். மேலும், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இவர்களது உடல் முழுவதும் பாம்பின் தோலைப் போல் செதில்களாலேயே ஆக்கப் பட்டிருக்கும். உடலமைப்பில் மட்டுமென்று இல்லாமல், குணாதிசயங்கள் மற்றும் மரபணு சார் தன்மைகள் போன்றவற்றில் கூட நகருயிர்களின் தன்மைகளே இவர்களிடம் விரவிக் காணப்படும்.

Reptilians / Reptoids / Reptiloids / Saurians / Draconians / Alpha Draconians என்பன போன்ற பல்வேறு பெயர்களிலும் இந்த இனத்தவர்கள் அழைக்கப் படுவதுண்டு. பொதுவாக இவர்களுக்கு மனித உடலுக்கு நெருக்கமான உடலமைப்பும், உடும்பு, பல்லி போன்றவற்றுக்கு இருப்பது போன்ற கூரான, நீண்ட நகங்களைக் கொண்ட, கொடுக்கு போன்ற கூரான நான்கு விரல்களும், பல்லி / பாம்பு / ஓனான் ஆகியவற்றின் தலை போன்ற தலையுமே இருக்கும். தலையில் முடி இருக்காது. மொத்த உடலுமே செதில்களால் மூடப் பட்டிருக்கும். கிட்டத்தட்ட 6 – 8 அடி வரை உயரமான திடகாத்திரமான உடற்கட்டு இவர்களுக்கு இருக்கும். இது தான் இவர்களது பொதுவான உடலமைப்பு.

ஆனால், இந்த இனத்தவர்களுக்குள்ளேயே, Draconians என்று அழைக்கப்படுபம் பிரத்தியேகமான இன்னோர் உப இனத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தாம் இந்த Reptilian இனத்தவர்களது மூல வேர் போன்றவர்கள். இந்த Draconians எனும் மூல இனத்தவர்களது உடலமைப்பில் சாதாரண Reptilians இற்கு இருப்பதை விடவும் மேலதிகமாக சில விசேட அவயவங்கள் காணப்படும்.

அதாவது, சாதாரண Reptilian களது தலை போலல்லாது, இந்த Draconian இனத்தவர்களது தலையில் இரண்டு கொம்புகள் இருக்கும். மேலும், சாதாரண Reptilians போலல்லாது, இவர்களுக்கு இரண்டு சிறகுகள் கூட இருக்கும். ஆனால் இவை பறவைகளின் சிறகு போலிருக்காது. மேலும், சாதாரண Reptilian களை விடவும் இவர்களது உடலமைப்பு சற்றுப் பெரிதாக இருக்கும். கிட்டத்தட்ட 9 – 12 அடி வரையான உயரத்திலும், கர்னகடூரமான தோற்றத்திலுமே இவர்கள் இருப்பார்கள்.

சுருக்கமாகக் கூறுவதென்றால், பண்டைய சீனக் கலாச்சாரங்களிலும், அவர்களது மத நம்பிக்கை சார்ந்த புராணங்களிலும் Dragon என்று அழைக்கப்படும், பறக்கும் ராட்சத ஓனான் போன்ற வடிவத்துக்கு மிகவும் நெருக்கமான வடிவம் கொண்டவர்களாகவே இந்த இனத்தவர்கள் இருப்பார்கள். இதனால் தான் இந்த இனத்தவர்கள் Draconians என்று அழைக்கப் படுகிறார்கள்.

சாதாரண Reptilianகளைப் பொலில்லாமல், Draconian எனப்படும் இந்த விசேட இனத்தவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்களாகவே இருப்பது வழமை. சாதரண Reptilians ஒரு குழுவாக வரும் போது, அந்தக் குழுவில் ஒரு Draconian தான் பொதுவாக வருவது வழமை. மேலும், சாதாரண Reptilian களை விட, Draconian எனப்படும் இவர்களே அதிகாரக் கட்டமைப்பிலும் அதியுயர் தரத்தவர்களாக இருப்பது வழமை. சுருக்கமாகக் கூறுவதென்றால், எல்லா Reptilian இனத்தவர்களுக்கும் Draconians எனப்படும் இவர்களே தலைவர்களைப் போன்ற தரங்களில் இருப்பார்கள்.

Reptilians குறித்துப் பரவலாக உலக அரங்கில் பிரச்சாரம் செய்யும் ஆய்வாளர்களுள், பிரித்தானியாவைச் சேர்ந்த David Icke என்பவரும் குறிப்பிடத்தக்க ஒருவர். இன்றைய உலக அரங்கில் இலுமினாட்டிகளுக்கும், Reptilians எனும் இந்த ஜின் இனத்தவர்களுக்கும் இடையில் திரைமறைவில் நடந்து கொண்டிருக்கும் பல இரகசியத் தொடர்புகளை வெளியுலகுக்கு அம்பலப் படுத்தியவர்களுள் David Icke இன் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. அதற்காக இவர் முன்வைக்கும் கருத்துக்களெல்லாம் உண்மையென்று சொல்வதற்கில்லை. அனேகமான உண்மைக் கருத்துக்களோடு, ஒருசில தவறான கருத்துக்களையும் சேர்த்தே இவர் முன்வைப்பதுண்டு. எனவே, இவ்வாறான ஆய்வாளர்கள் வெளியிடும் கருத்துக்களிலிருக்கும் தவறான கருத்துக்களைப் புறந்தள்ளி விட்டு, சரியான தகவல்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

Reptilians குறித்துப் பல்வேறு ஆய்வாளர்களும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்திருப்பதுண்டு. இவற்றில் சில கருத்துக்கள் நம்புவதற்குக் கடினமானவையாக இருந்தாலும், அவை உண்மையானவை. உதாரணத்துக்கு, இந்த Reptilian இனத்தவர்கள் தேவைக்கேற்ப உறுமாறும் ஆற்றலுடையவர்கள்; சில சமயங்களில் இவர்கள் மனித வடிவத்துக்குக் கூட உருமாறுவதுண்டு எனும் ஒரு தகவல், வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் வாக்குமூலங்களின் வாயிலாகவும், அவை சார்ந்த பல ஆய்வாளர்கள் வாயிலாகவும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. 

மேலும், இன்றைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுள், கணிசமான ஒரு தொகையினர் தூய மனித இனத்தவர்கள் கிடையாது. மாறாக, மனித மரபணுக்களோடு, Reptilian மரபணுக்கள் கலப்படமானதால் உருவான கலப்பின (Hybrid) மனிதர்களும் இன்றைய உலகில் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள் எனும் இன்னொரு கருத்தும் பரவலாகப் பல ஆய்வாளர்கள் மூலம் உறுதிப்படுட்தப் பட்டுள்ளது. இந்தக் கருத்திலும் உண்மையிருக்கிறது. இன் ஷா அல்லாஹ் இவை பற்றி சற்று விரிவாகப் பிறகு நோக்கவிருக்கிறோம்.

ஏற்கனவே நாம் பார்த்த, நரைநிறத்தவர்கள் (Grey Aliens) போன்ற ஏனைய எல்லா வேற்றுக்கிரகவாசி இனத்தவர்களுக்கும் தலைமை தாங்குவது போலவும், அவர்களிடம் வேலை வாங்கும் எஜமானர் இனத்தைப் போலவுமே இந்த Reptilian இனத்தவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கண்டறியப் பட்டுள்ளார்கள். அதாவது எல்லா வகையான வேற்றுக்கிரகவாசிகளுக்கும் இந்த Reptilian இனத்தவர்களே எஜமானர்கள் போன்ற ஓர் அதிகாரக் கட்டமைப்பையே இங்கு காண முடிகிறது.

இதுவரைகாலமும் மேற்கொள்ளப்பட்ட எனது ஆய்வுகளின் முடிவுகளை மார்க்க ஆதாரங்களின் வெளிச்சத்தில் இன்றைய நடைமுறை உலகம் சார்ந்த நிகழ்வுகளோடு வைத்து உரசிப் பார்க்கும் போது, இந்த Reptilian இனத்தவர்கள் யார் என்பது குறித்து என்னால் வர முடிந்தது ஒரேயொரு முடிவுக்கு மட்டும் தான்.

அதாவது, எனது கணிப்புகள் சரியாக இருக்குமென்றால், Reptilians எனப்படும் இந்த ஜின் இனத்தவர்களே இப்லீஸின் சொந்தக் கோத்திரமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின், பிரத்தியேகமாக Draconian எனப்படும் மூல இனத்தைச் சேர்ந்த ஒருவனாகவே இருக்க வேண்டும்; அல்லாஹ்வே அறிந்தவன். 

ஏனெனில், எந்தக் கோணத்திலிருந்து ஆய்வு செய்தாலும், எல்லாச் சான்றுகளிலிருந்தும் கிடைக்கப்பெறும் முடிவுகளெல்லாம் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் இந்த நிலைபாட்டைத் திரும்பத் திரும்ப ஊர்ஜிதம் செய்வதாகவே இருப்பதைப் பார்க்க முடிகிறது.

மேலும், இந்த முடிவை நான் வெறும் அனுமானத்தின் அடிப்படையில் எடுத்து விடவில்லை. ஏராளமான நியாயங்களின் அடிப்படையிலும், உறுதியான பல சான்றுகளின் அடிப்படையிலும், சில மார்க்க ஆதாரங்களின் வெளிச்சத்திலுமே இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். இனி அந்த நியாயங்களும், சான்றுகளும் என்னென்னவென்பதை ஒவ்வொன்றாக நாம் சற்று விரிவாக நோக்கலாம்.

வரலாற்றுத் தடயங்கள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உலக வரலாற்றின் எந்தக் காலப்பகுதியாக இருக்கட்டும்; எந்தப் பிரதேசத்தின் வரலாறாக இருக்கட்டும்; எந்தச் சமூகத்தவரது வரலாறாக இருக்கட்டும்; மனித வரலாற்றின் ஆரம்பம் முதல் இன்று வரை உலகில் பரவிக் கிடக்கும் வரலாற்றுத் தடயங்களில் எந்த மூலையில் வேண்டு்மானாலும் தேடிப் பாருங்கள். எந்தவொரு நாகரீகத்தின் வரலாறாக இருந்தாலும், அதன் மையப் புள்ளியாக ஏதாவதொரு மதம் சார்ந்த சித்தாந்தம் இருந்து வந்திருப்பதைப் பார்க்க முடியும். 

ஏதோ ஒரு மத நம்பிக்கை சார்ந்த சித்தாந்தத்தை மையமாகக் கொள்ளாமல் எந்தவொரு நாகரீகமும் மனித வரலாற்றில் கட்டியெழுப்பப் படவில்லை. இதற்கான தடயங்களை இன்று வரை நாம் அவதானிக்கலாம். மறைந்து போன பல பண்டைய நாகரீகங்களின் சிதிலங்களாக இன்று வரை எஞ்சியிருக்கும் கல்வெட்டுக்கள், சிற்பங்கள், ஓவியங்கள், கட்டடச் சிதிலங்கள் போன்ற பல்வேறு வரலாற்றுத் தடயங்கள் மூலம் அந்தந்த சமூகத்தவர்களது மத நம்பிக்கை எந்த அடிப்படையில் அமைந்திருந்தன என்பதை இலகுவாக அனுமானிக்கலாம்.

இந்த அடிப்படையில் பண்டைக்கால நாகரீகங்கள் தொடக்கம் இன்று வரை உலகிலிருக்கும் எந்த மத நம்பிக்கை சார்ந்த சின்னங்களை / சுவடுகளை உற்றுப் பார்த்தாலும், அங்கெல்லாம் குறிப்பாக ஓர் அம்சம் விரவிப் போயிருப்பதைப் பட்டென்று அவதானிக்கலாம். அது வேறெதுவுமல்ல; பாம்பு, பல்லி, ஓனான், முதலை, ட்ராகன் (Dragon).... ஆகியன போன்ற ஏதாவதொரு நகருயிர் சார்ந்த ஒரு கடவுள் அவதாரம் அங்கெல்லாம் தவறாமல் இருந்திருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.

உலகில் உதித்த எந்த நாகரீகத்தின் சுவடுகளை வேண்டுமானாலும் ஆராய்ந்து பாருங்கள். சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள், குறியீடுகள் என்று எங்கு பார்த்தாலும் இவ்வாறான நகருயிர்க் கடவுள் அவதாரங்கள் அங்கெல்லாம் பல்வேறு பெயர்களில் எல்லாக் காலங்களிலும் இருந்தே வந்துள்ளன. 

எந்த மதமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; எந்தக் காலப்பகுதியாகவும் இருக்கட்டும்; எந்தப் பிரதேசமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; அங்கெல்லாம் ஏதோ ஒரு பெயரில் பாம்பு, பல்லி, முதலை, Dragon போன்ற ஏதாவதொரு நகருயிர்க் கடவுள் இல்லாமல் இருந்ததேயில்லை.

இந்த நடைமுறைக்கு முற்றிலும் விதிவிலக்காக இன்றிருக்கும் ஒரே மதம் இஸ்லாம் மட்டும் தான். அதனால் தான் இன்று இந்த மார்க்கத்தை அழிக்கப் பல சக்திகள் ஒன்று சேர்ந்து கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மேலும், யூத / கிரித்தவ வேதங்களில் இந்த நகருயிர்க் கடவுள் அவதாரங்கள் நேரடியாக இல்லையென்றாலும், அவற்றினுள் அரைகுறை வடிவிலேனும் நகருயிர்க் கடவுள் கோட்பாடுகளைப் புகுத்தப் பல்வேறு முயற்சிகள் வரலாற்றில் நடந்திருப்பதற்கான தடங்களைப் பார்க்கலாம்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலும் தனித்தனி சமூகத்தவர்களாக வாழ்ந்து வந்த ஆதிகால நாகரீகங்கள் தொடக்கம், இன்றைய நவீன யுகம் வரை, ஒன்றுக்கொன்று ஒத்துவராத பல்வேறு மத நம்பிக்கைகளினுள்ளும் ஒரு பொதுவான அம்சமாக இந்த நகருயிர்க் கடவுள் அவதாரங்கள் மட்டும் எவ்வாறு முளைத்தன? இதை இங்கு நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம். இதற்கான விடையைப் புரிந்து கொள்வதாக இருந்தால், முதலில் ஓர் அடிப்படை உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மார்க்கத்தில் நமக்குச் சொல்லப்பட்டிருக்கும் அடிப்படை உண்மைகளுள் ஒன்று தான், மனித இனத்தை அல்லாஹ் பூமியில் வாழ அனுமதித்த காலம் தொடக்கம், இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை, காலத்துக்கு காலம், பல்வேறு சமூகத்தவர்களுக்கும் தனித்தனியாகப் பல்லாயிரம் நபிமார்களை அல்லாஹ் அனுப்பிக் கொண்டே இருந்தான் எனு உண்மை. இது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

ஆனால், நம்மில் அனேகமானோர் சிந்திக்க மறந்த உண்மை என்னவென்றால், இவ்வாறு அல்லாஹ் அனுப்பிய நபிமார்கள் மூலம் நிறுவப்பட்ட ஆயிரக்கணக்கான அந்த முற்கால வேதங்களுக்கெல்லாம் பிற்காலத்தில் என்ன நேர்ந்தது? வரலாற்றுப் பதிவுகளில் கூட தடயங்களே இல்லாமல் போகும் அளவுக்கு அந்த வேதங்களெல்லாம் எவ்வாறு இந்தப் பூமியிலிருந்து மறைந்து போயின?

இதற்கான விடை மிகவும் எளிமையானது. ஆதிகாலம் முதல் பல்லாயிரம் நபிமார்கள் மூலம் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் அல்லாஹ் அனுப்பிய வேதங்கள் எதுவுமே இந்தப் பூமியை விட்டு மறைந்து போய்விடவில்லை; இன்று வரை அவை உலகில் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், அவற்றின் தூய வடிவத்தில் இல்லாமல், ஷைத்தானிய ஜின்களால் மாசுபடுத்தப்பட்டுத் தலைகீழ் வடிவங்களாகவே அவை இன்றைய உலகில் கூட பின்பற்றப் படுகின்றன.

அதாவது, இன்றைய உலகில் வாழும் கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப்படும் பல்வேறு பலதெய்வக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட மதங்கள் ஒவ்வொன்றும், ஏதோ ஒரு காலத்தில், உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு நபி மூலம் அல்லாஹ் அருளிய உண்மையான வேதத்தின் மாசுபடுத்தப்பட்ட வடிங்கள் தாம். 

இவ்வாறு மாசுபடுத்தப்பட்ட மதங்களுள், நூற்றுக்கு நூறு வீதம் முழுமையாக மாசுபடுத்தப்பட்டு, ஓரிறைக் கோட்பாட்டிலிருந்து முழுமையாக வெளியேறி விட்ட மதங்களாகச் சிலை வணக்கம், சூரிய வழிபாடு, நெருப்பு வணக்கம் போன்ற பல்வேறு சித்தாங்களை அடிப்படையாகக் கொண்ட பலதெய்வக் கோட்பாடுகள் அனைத்தையுமே குறிப்பிடலாம். அதே நேரம், முற்றுமுழுதும் அல்லாமல், அரைகுறையாக மாசுபடுத்தப்பட்ட வழிகெட்ட சித்தாந்தங்களாக இன்றைய உலகில் யூத / கிரித்தவ மதங்களைக் குறிப்பிடலாம். 

எந்த சக்தியாலும் மாசுபடுத்தப்பட முடியாமல் இதுவரை தனித்து எஞ்சியிருப்பது இஸ்லாம் மட்டுமே. அதனால் தான் இஸ்லாத்தை எப்படியாவது அழித்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு பலநூறு கோணங்களிலிருந்தும் பல்லாயிரம் ஷைத்தானிய சக்திகள் இன்றுவரை ஒருமித்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இது தான் வரலாற்றில் மறைந்து கிடக்கும் உண்மை.

இப்போது நாம் கேட்க வேண்டிய அடுத்த கேள்வி, அல்லாஹ் அனுப்பிய பல்லாயிரக்கணக்கான வேதங்களையெல்லாம் இவ்வாறு மாசுபடுத்தித் தலைகீழாக மாற்றிய செயல்திட்டங்களுக்கெல்லாம் சூத்திரதாரி யார்? என்பது தான். இந்தக் கேள்விக்கான விடையை நான் சொல்ல முன்பு வாசகர்களாகிய நீங்களே ஊகித்திருப்பீர்கள். ஆம், அனைத்துக்கும் பின்னாலிருக்கும் சூத்திரதாரிகள் வேறு யாருமல்ல; இப்லீஸும், அவனைச் சார்ந்த ஷைத்தானிய ஜின்களும் மட்டுமே. 

சூத்திரதாரிகளை அடையாளம் கண்டால் மட்டும் போதாது. அவர்களது செயல்திட்டம் உலகில் எவ்வாறு அரங்கேற்றப் படுகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே, இந்த நோக்கத்தின் அடிப்படையில் நாம் இங்கு மேலும் சில கேள்விகளையும் தொடுக்க வேண்டியுள்ளது.

இந்த அடிப்படையில் நாம் கேட்க வேண்டிய அடுத்த கேள்வி, இப்லீஸின் பூர்வீகத் தோற்றம் என்ன? என்பது தான். இதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்காக எண்ணற்ற தேடல்களை நான் மேற்கொள்ள வேண்டியிருந்தது. மார்க்க ஆதாரங்களின் வெளிச்சத்திலும், நடைமுறை உலகம் சார்ந்த சான்றுகளின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்ட பலநூறு தேடல்களின் விளைவாக இப்லீஸின் பூர்வீகத் தோற்றம் என்னவென்பது குறித்துப் பின்வரும் விவரணத்தையே என்னால் அடைய முடிந்தது:

கொஞ்சம் கூட விரும்பத்தகாத, மிகவும் அருவருக்கத்தக்க தோற்றத்தையுடைய, தலையில் இரண்டு கொம்புகளையுடைய, பறக்கும் ஆற்றல் கொண்ட இறகுகளையுடைய, பாம்பு / பல்லி போன்ற அருவருக்கத்தக்க உயிரினங்களுக்கு நெருக்கமான சாயலை உடைய கர்னகடூரமான ஒரு தோற்றமே இப்லீஸ் எனும் ஜின்னுக்கு இஸ்லாத்தில் மட்டுமல்லாமல், இஸ்லாத்துக்கு ஓரளவுக்கேனும் நெருக்கமான ஏனைய வேதங்களிலும் கூடக் கற்பிக்கப் பட்டுள்ளது.

இனி நாம் கேட்க வேண்டிய அடுத்த கேள்வி: வேற்றுக்கிரகவாசிகள் எனும் வேடமிட்டு வரக் கூடிய பல்வேறுபட்ட ஜின் இனத்தவர்களுள், மேற்கூறப்பட்ட வர்ணனைகளுக்குப் பொருந்திப் போகக் கூடிய உடல் தோற்றத்தைக் கொண்ட, இனத்தவர்கள் யார்? என்பது தான்.

இந்தக் கேள்விக்கான ஒரே பதில்: மேற்கூறப்பட்ட வர்ணனைகளுக்கு மிகவும் நெருக்கமாகப் பொருந்திப் போகக் கூடிய ஒரே வேற்றுக்கிரகவாசி இனம், Reptilian எனப்படும் இந்த நகருயிர் சார்ந்த இனத்தவர்கள் மட்டுமே. அதிலும் குறிப்பாக, Reptilian இனத்துக்குள்ளும் சிறப்பு மிக்க இனமாக இருக்கக் கூடிய, Draconian எனும் மூல இனத்தவர்களின் தோற்றம் மேற்கூறப்பட்ட விவரனங்களுக்கு அச்சொட்டாகப் பொருந்திப் போகிறது. எனவே, இப்லீஸ் எனும் ஜின்னின் சொந்தக் கோத்திரம், இந்த Reptilian / Draconian இனத்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பதே எனது உறுதியான நிலைபாடு.

மேலும், இதிலிருந்து நம்மால் அனுமானிக்க முடிந்த இன்னோர் உண்மை என்ன தெரியுமா? Reptilian இனத்தவர்கள் என்று அழைக்கப்படும் இப்லீஸின் கூட்டத்தைச் சேர்ந்த இந்த ஜின்கள் தாம், காலத்துக்குக் காலம் பல்வேறு சமூகத்தவர்கள் மத்தியிலும் வானிலிருந்து இறங்கும் தெய்வங்களைப் போல் தோன்றியிருக்கிறார்கள். இவ்வாறு தோன்றும் இந்த Reptilian இனத்தவர்கள், ஜின்களுக்கே உரித்தான பல அமானுஷ்ய சாதனைகளை நிகழ்த்திக் காட்டுவதன் மூலம் தம்மையும் கடவுள் அவதாரங்களைப் போல் போலியாகச் சித்தரித்துக் காட்டி, அந்தப் போலி அதிசயங்களை உண்மையென்று மக்களை நம்பச் செய்துள்ளார்கள். இவ்வாறான பித்தலாட்டங்கள் மூலம் அந்தந்த சமூகத்தவர்களது மத நம்பிக்கைகளில் தம்மையும் ஒரு மேலதிகக் கடவுளாகக் கற்பித்து, நம்பச் செய்து, அவர்கள் மதங்களையெல்லாம் மாசுபடுத்தித் தலைகீழாக மாற்றியமைத்துள்ளனர்.

உலகில் இன்றிருக்கும் பலதெய்வக் கோட்பாட்டு மதங்களிலெல்லாம் நகருயிர் சார்ந்த (பாம்பு, பல்லி, முதலை, Dragon... போன்ற) கடவுள் அவதாரங்களின் உருவச் சிலைகள் / ஓவியங்கள் இருப்பதன் இரகசியம் இது தான். அதாவது, மாசுபடுத்தப்பட்ட எல்லா மதங்களிலும், அதை மாசுபடுத்திய ஷைத்தான்களின் கைவண்ணத்தின் சுவடுகளாகவே Reptilian இனத்தவர்களது உருவம் சார்ந்த கடவுள் சிலைகளை இன்றுவரை நம்மால் அனேகமான மத வழிபாட்டுத் தளங்களில் அவதானிக்க முடிகிறது.

இதையெல்லாம் நான் இங்கு வெறும் ஊகத்தின் அடிப்படையில் மட்டும் சொல்லவில்லை; பல கோணங்களிலிருந்தும் இதைப் பல சான்றுகளின் அடிப்படையில் நோக்கிய பின்னரே இதை இவ்வளவு ஆணித்தரமாக இங்கு அடித்து கூறுகிறேன். இனி இந்த நிலைப்பாட்டை ஊர்ஜிதப்படுத்தும் பல்வேறு நடைமுறை சார் சான்றுகளையும், அவற்றை ஊர்ஜிதப்படுத்தும் மார்க்க ஆதாரங்களையும் இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

 

 

Episode 62: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 1:




 




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..