Posted By:peer On 5/29/2017 4:50:14 AM |
|
acheter nifedipine 30 acheter nifedipine 30 metalwings.com nifedipine princeps
கோழி சாப்பிடற சிலருக்கு மீன் பிடிக்காது....
மீன் சாப்பிடற சிலருக்கு ஆடு பிடிக்காது...
ஆடு சாப்பிடற சிலருக்கு மாடு பிடிக்காது...
மாடு சாப்பிடற சிலருக்கு பன்றி பிடிக்காது...
இதையெல்லாம் சாப்பிடற பலரை சைவர்களுக்குப் பிடிக்காது... . அதிலும் சிலருக்கு பூமிக்கு கீழ் விளைவது பிடிக்காது.... சிலருக்கு பூமிக்கு மேல் விளைவது பிடிக்காது..... . இன்னும் சிலருக்கு... மோருஞ்சாதமும் மாவடுவையும் சப்புக்கொட்டிச் சாப்பிடுபவர்களைக் கண்டாலே பிடிக்காது. . . ஒரு டன் தயிர் சோத்தையும் பிசைஞ்சு உள்ளே தள்ளிவிட்டு ஒவ்வொரு விரலையும் இஞ்ச் பை இஞ்ச்சாய் நிதானமாய் நக்கி முடித்த பிற்பாடு.... முழங்கையில் ஒழுகும் மிச்சத்தையும் நக்க நாக்கை நீட்டுபவர்களைக் கண்டாலே எனக்கு சுத்தமாய் பிடிக்காது. . கொஞ்சம் விட்டால் நம்ம கையையும் நக்கி விடுவார்களோ எங்கிற பயத்தில் நானூறு கிலோமீட்டருக்கு ஓடுபவன் நான். . எல்லாவற்றையும்விட….. அதிபத்த நாயனார் சிவனுக்கு உணவாக மீன் அளித்த கதையையும்….. . தனக்குப் பிடித்த கடவுளுக்கு தனக்குப் பிடித்த பன்றிக் கறியையே விருந்தாகப் படைத்த கண்ணப்ப நாயனார் கதையையும்… . கேள்வியாவது பட்டிருந்தால் சக மனிதனைக் கொல்லத் துணியமாட்டார்கள்,
மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்று ஒரு அப்பாவி இஸ்லாமிய முதியவரைக் கொல்லும் நகரமிராண்டிக் கூட்டத்திற்கும்….. . மதிய உணவு வேளையில் ஊழியர்கள் அசைவம் கொண்டு வரக்கூடாது என்று சுற்றறிக்கை விடும் நூற்றாண்டைக் கடந்த The Hindu பத்திரிக்கைக்கும் இருப்பது ”நூலளவு” வித்தியாசம்தான். . ஆக….
யார் எதை எதைச் சாப்பிடுவது…. எதையெதைச் சாப்பிடக்கூடாது என்பதை அவரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும். . . அதைப்போலவே சங்கர மடத்தில் கருவாடு காய்ச்சச் சொல்ல எப்படி பிறருக்கு உரிமை கிடையாதோ…… . அப்படி…. . சங்கிலிக் கருப்பராயன் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் வைக்கச் சொல்லவும்…. எவனுக்கும் உரிமை கிடையாது. . அம்புட்டுத்தான். . . பாமரன் சமரசம் 16-31 ஆகஸ்ட் இதழில்... |