விடுதலை புலிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இருந்த நல்ல உறவை பற்றி எழுதி இருந்தேன். அதற்கு ஒருத்தன் மெசேஜ் அனுப்பி கேக்குறான் நீ ஒரு முஸ்லிமா? காத்தான்குடியை மறந்துட்டியான்னு கேக்குறான். இன்னொருத்தன் ஒருபடி மேலே போய், நீ முஸ்லிம் பெயர் வைத்த ஆர்.எஸ்.எஸ் ன்னு சொல்றான். அடப்பாவிகளா..
விடுதலை புலிகளுக்கு எல்லா உதவியும் செய்தது முஸ்லிம்கள் தான். இவர்கள் இரண்டு பேரையும் பிரிக்க வேண்டும். பின்பு ஒவ்வொருவராக அழிக்கலாம் என்று திட்டம் போட்டு, விடுதலை புலிகளில் சிலரை விலைக்கு வாங்கி பிரித்தார்கள். முதல்ல புலிகள அழிசாங்க. அப்பறம் நம்மல அழிசாங்க. இது தான் வரலாறு.
ஆனால் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் காரன் என்ன எழுதுறான் தெரியுமா? சிங்கள அரசுகூட சேர்ந்து தமிழர்களை காட்டி கொடுத்தது இஸ்லாமியர்கள் தான். அதனால் தான் அழித்தார்கள் என்று தான் இஷ்டத்திற்கு வரலாறை மாற்றிவிட்டான். வரலாறு தெரியாத நீயும், மத்தவனும் அதை பார்க்கிற போது நம்பதான் செய்வீர்கள்.
நீ காத்தான்குடியையும், குஜராத் கலவரத்தையும், முசாபர் நகர் கலவரத்தை மட்டும் உன் வரலாறு என்று எண்ணி, எண்ணி பிரச்சாரம் செய்ததால் தான் இன்றைக்கு வரலாறை தான் இஷ்டத்திற்கு மாற்றி எழுதுறாங்க ஆர்.எஸ்.எஸ் காரங்க. நேதாஜிக்கு பணம் கொடுத்தது ஒரு முஸ்லிம், வ.உ.சி க்கு கப்பல் வாங்க காசு கொடுத்தது ஒரு முஸ்லிம், முதன்முதலில் சுதந்திர போராட்ட விதையை விதைத்தது குஞ்சாலி மரைக்காயர் என்கிற முஸ்லிம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதையெல்லாம் நீ வரலாறு என்று என் சகோதரர்களுக்கு சொல்லி கொடுக்காததால் தான் இன்னைக்கு நான் ஒரு முஸ்லிமா என்கிற கேள்விக்கு ஆட்கொள்ளப்பட்டுள்ளேன்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு காலத்தால் அழிக்க முடியாதது. ஆனால் நீ அதை சொல்லிதரவில்லை. அதை நீ படிக்கவில்லை. நீ அடுத்த தலைமுறைக்கு என்ன சொல்லிகொடுத்த? தேவருக்கு பால் கொடுத்தது இஸ்லாமிய தாய் என்று மட்டும் தான் சொல்லிகொடுத்த. அதனால் இன்றைக்கு முஸ்லிம்களை ஒடுக்க தேவர் அபிராமத்தில் இந்து மகா சபையை நடத்தினார் என்று வரலாறை மாற்றிவிட்டார்கள்.
திப்பு சுல்தான். எவ்வளவு பெரிய வீரர். அவரும் அவர் தந்தையும் தான் வேலுநாட்சியார் மற்றும் மருது சகோதரர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, தன்னுடைய படையையும் அனுப்பி வச்சாங்க. ஆனால் நீ அதை சொல்லிதரவில்லை. நீ அதை படிக்கவில்லை. நீ என்ன சொல்லிதர.. நரியாக 200 ஆண்டுகள் வாழ்வதை விட புலியாக 1 நாள் வாழ்ந்துவிட்டு மடியலாம் என்று திப்பு சுல்தான் வீரமுழக்கமிட்டார் என்று மட்டும் சொல்லிகொடுக்கிற. இப்போ ஆர்.எஸ்.எஸ் காரன் என்ன எழுதுகிறான் தெரியுமா? திப்பு சுல்தான் இந்து கோவிலை அழித்தான். திண்டுக்கல் மலை கோவிலை சிதைத்தான் என்று எழுதுறான். நீ வரலாறை மக்களிடையே பிரச்சாரம் பண்ணாமல், வெறும் வீர வார்த்தைகளை மட்டும் கூறி உணர்ச்சி அரசியலை செய்ததால், அவ்வளவு பெரிய மாவீரனுக்கு ஒரு மணிமண்டபம் கட்டக்கூட இடம் எவனும் தரவில்லை. கடைசியில பள்ளிவாசல் இடம் தானே நாம் கொடுத்தோம்.
இப்படி எந்த வரலாறை நாம் சொல்ல வேண்டுமோ அதை சொல்லாமல், வெறும் வீர வசனங்களையும், அடிப்பட்டு மிதிப்பட்டு செத்த வரலாறை மட்டும் நீ சொல்லிதருவதாலும், நீ எழுதுவதாலும் இன்னைக்கு வரலாறு மாத்திட்டானுங்க. உரிமை போராட்டம், அடி உதை வரலாறை நான் சொல்லவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நம்ம எழுச்சியோடு செய்த வரலாற்று பணிகளை மக்கள்கிட்ட பிரச்சாரம் பண்ணாம வெறும் அடி,மிதிபட்ட வரலாறை மட்டும் சொல்லி, அவன சிறுபான்மை என்கிற பதற்றத்திலேயே வைத்து உணர்ச்சி அரசியலை செய்வதால், நம் முன்னோர்கள் செய்த சாதனைகளை செய்யாமல், உணர்சியிலேயே காலத்தை கடத்தும் நிலைக்கு என் சமுதாய இளைஞர்களை தள்ளியது யார்?
வரலாறு நீங்களும் சொல்லமாட்டிங்க. வரலாறு சொல்கிற என்னையும் முஸ்லிமா என்று கேட்பீர்களா? நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நம்ம முன்னோர்கள் வரலாறை தேடி தேடி அழித்து வருகிறார்கள். தங்கள் இஷ்டத்திற்கு அதை மாற்றி நம் சமூகத்தின் மீது ஒருவித வெறுப்பை உருவாக்கி வருகிறார்கள். அதற்கு நீங்கள் இரையாக வேண்டாம்.
தயவுசெய்து வரலாறை படியுங்கள். குஜராத்தும், முசாபர் நகர் மட்டும் வரலாறு அல்ல. நீ வரலாறை பிரச்சாரம் செய்து, அந்தந்த சமூகத்திடையே நண்பனாக பழகிப்பார். உன்னை ஆளுங்கட்சியாக மாற்றுவார்கள். இதெல்லாம் நடக்குமா என்று நினைக்கலாம்.
திப்பு சுல்தானை கொலை செய்துவிட்டு, அவரது பிள்ளைகளை ஆங்கிலேயன் பிடித்து சென்ற போது, ஸ்ரீரங்கப்பட்டின இந்து, முஸ்லிம் என எல்லா மக்களும் என்ன சொன்னார்கள் தெரியுமா? "எங்க வீடு, வாசல், தோட்டம், தொரவு எல்லாத்தையும் எடுத்துகங்க. எங்க ஐயாவோட பிள்ளைகள மட்டும் விட்ருங்க" என்று சொன்னார்கள். நம் மீது எவ்வளவு பெரிய அன்பும், நேசமும் வைத்திருந்தால் அப்படி சொல்லி இருப்பார்கள். நமக்கும், மற்ற சமூகத்தினருக்கும் இடையிலான பந்தம் என்பது காலத்தால் அழியாதது. நம் முன்னோர்கள் அவர்களோடு அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக வாழ்ந்து இருந்தார்கள். அந்த வரலாறை நினைவு படுத்தினாலே போதும் ஆர்.எஸ்.எஸ் காரனை ஓட ஓட விரட்டி அடிப்பாங்க நம் தமிழ் சொந்தங்கள்.
எதை செய்ய வேண்டுமோ, எதை பேச வேண்டுமோ, எந்த வரலாறை அடுத்த தலைமுறைக்கு கற்று தர வேண்டுமோ அதை செய்யவில்லை எனில், வரலாறு மாற்றப்படுகிறது, அந்த போலியான வரலாறுகளை படிக்கும் ஒவ்வொருவரும் இஸ்லாமியர்களுக்கு எதிராக மாறுவார்கள் என்பதே உண்மை.
நீ என்னை அறியாமையில் முஸ்லிமா என்று கேட்கலாம். ஆனால் நான் எழுதுகிறேன். நீ எப்போதெல்லாம் அனைத்து சமூக மக்களோடு சேர்ந்து வாழக்கூடிய, உறவாடக்கூடிய சூழல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் எப்படி இந்த அரசும், ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு வேண்டுமென்றே அவர்களை விட்டு நம்மை எப்படி பிரிக்கிறார்கள் என்பதை எழுதுகிறேன்.
உணர்ச்சி அரசியலை தூக்கி போட்டு, ஆளும் கட்சியாக உன்னை அங்கீகரிக்க காத்திருக்கும் மக்கள் அரசியலை முன்னெடு. அதுவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித்தந்த அரசியல். அடி, மிதி வாங்கிய வராலாறை மட்டும் ஏன் சொல்லிகொடுகிறாய். நாம் அடி, மிதி வாங்கிய கூட்டம் அல்ல, இந்தியாவையே 800 ஆண்டுகள் ஆண்ட கூட்டம். நம்மில் வளர்ச்சி திட்டங்கள் இருக்கிறது, ஊழலற்ற நிர்வாகத்தை தரமுடியும் என்கிற வரலாறு இருக்கிறது. அதை படி. அதை நினைவுபடுத்து. இறைவன் நாடினால் நிச்சயம் எதாவது ஒரு இயக்கம் ஆளும்கட்சியாக மாறும்.
முஸ்லிமா என்கிற பட்டம் வாங்கிய,
யாசிர்
https://www.facebook.com/yasir.bilal.372/posts/1433661406696565