அன்று நாடாளுமன்றத்தில் கேள்வியைக் கணை போல் தொடுத்தார்.
காயிதே மில்லத்: இந்தியாவின் தேசிய மொழி எது?
பதில்: "இந்தி"
காயிதே மில்லத் : ஏன் இந்தி மொழியை, தேசிய மொழியாக வைத்தார்கள்?
பதில்: இந்தி மொழியே இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்பதால்.
காயிதே மில்லத் : இந்தியாவின் தேசியப் பறவை எது?
பதில்: மயில்.
காயிதே மில்லத் : மயில் இனம் இந்தியாவில் மிகக் குறைவு,
இந்தியாவில் அதிகம் இருக்கும் பறவை காக்கை. ஆகையால் காக்கையைத் தேசியப் பறவையாக வைக்க வேண்டியது தானே?
யாரும் வாய் திறக்கவில்லை.
காயிதே மில்லத்: எது வேண்டும், வேண்டாம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இந்தி தெரிந்தால் தான் நாடு முன்னேறும் என்றால், இந்தி பேசத் தெரிந்த, பீகார், ஒடிசா மக்களின் வாழ்க்கைத் தரம் ஏன் முன்னேற்றம் காணவில்லை?
யாரும் வாய் திறக்கவில்லை.
காயிதே மில்லத் : கடைசித் தமிழன் இருக்கும் வரை இந்தியை உங்களால் திணிக்க முடியாது.
சவாலாகச் சொல்கிறேன்.
தமிழன் என்று மார்தட்டிச் சொல்லுகிறேன்.
#நேரு கேட்டார்.. நீங்கள் முஸ்லீம், ஏன் தமிழ் மீது பற்று?
#ஐயா அவர்கள் சொன்னார்..
#இசுலாம்எனது வழியாகும்..
# இன்பத்தமிழே எனது_ மொழியாகும்
|