Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 47
Posted By:Hajas On 2/23/2017 6:29:48 AM

prednisolon kol

prednisolone click here

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்

Episode 46: “ஹொப்கின்ஸ்வில்” பூதம் (Hopkinsville goblin):

Episode 47:  (Nordic Aliens தொடர்ச்சி 01)

Image may contain: 1 person, text


(Nordic Aliens தொடர்ச்சி 01)
உதாரணம் 3:
“Chambers Dictionary of the Unexplained” எனும் நூலில் (பக்கம் 489-490), அதன் ஆசிரியர் Una McGovern பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
Nordic வேற்றுக்கிரகவாசிகளைச் சந்தித்த அனேகமான மனிதர்கள், அவர்களைப் பற்றி நல்லெண்ணம் வைப்பவர்களாகவே இருக்கிறார்கள். Nordic இனத்தவர்கள் மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம், நரைநிற வேற்றுக்கிரகவாசிகளைப் (Grey Aliens) பற்றி எச்சரிப்பது வழமையென்றும்; நரைநிறத்தவர்கள் மோசமானவர்கள் என்றும்; அவர்களை நம்ப வேண்டாம் என்றும்; தம்மைப் போல் அவர்கள் மனித இனத்தவர்கள் மீது நல்லெண்ணம் வைத்துப் பழக வரவில்லையென்றும்; மனிதர்களுக்கு எதிராக சதி செய்பவர்களே நரைநிறத்தவர்கள் என்றும் இந்த Nordic வேற்றுக்கிரகவாசிகள் பல தடவை மனிதர்களை எச்சரித்திருப்பதாகப் பலரும் குறிப்பிடுவதாக இவர் தெரிவிக்கிறார்.

உதாரணம் 4:
மேற்குறிப்பிட்ட வாக்குமூலங்களுக்கு நேர்முரணாக மேலும் சில வாக்குமூலங்களை இன்னொரு புறம் காண முடிகிறது. உதாரணத்துக்கு, “Close Encounters of the Fourth Kind: Alien Abduction, UFOs, and the Conference at M.I.T.” எனும் நூலில் (பக்கம் 30-31), ஆசிரியர் C.D.B.Bryan இது பற்றிக் குறிப்பிடுகையில், வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்ட இன்னொரு சாரார் வழங்கியிருக்கும் வாக்குமூலங்களில், அவர்கள் தாம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பறக்கும் தட்டுக்களின் உள்ளிருக்கும் காட்சிகளை வர்ணித்துக் கொண்டு வரும் போது, நரைநிறத்தவர்களோடு, பக்கத்தில் இந்த Nordic இனத்தவர்களும் ஒரே பறக்கும் தட்டுக்குள் தோளோடு தோள் சேர்ந்தாற்போல் ஒரே அணியாக உள்ளே இயங்கைக் கொண்டிருந்ததைத் தாம் கண்களால் கண்டதாகப் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருப்பதாகப் பதிவு செய்திருக்கிறார்.

உதாரணம் 5:
மேலே உதாரணம் 4 இல் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துத் தான் உண்மையென்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே இன்னொரு பதிவிலும் காண முடிகிறது. அதாவது, இவ்வாறு நரைநிறத்தவர்களும், Nordic இனத்தவர்களும் ஒரே பறக்கும் தட்டுக்குள் ஒன்றாகப் பணிபுரிவதை அவதானித்த பலரும், இந்த இரண்டு இனத்தவர்களுக்கும் இடையில் நிலவும் உறவு முறைகளையும் தம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்ததென்று வாக்குமூலம் அளித்திருப்பதாக “Extraordinary Encounters: An Encyclopedia of Extraterrestrials and Otherworldly Beings” எனும் நூலில் (பக்கம் 187-188), அதன் ஆசிரியர் Jerome Clark குறிப்பிடுகிறார். அதாவது இவ்வாறு இரு இனத்தவர்களும் ஒரே பறக்கும்தட்டுக்குள் ஒன்றாக வேலை செய்யும் போது, நரைநிறத்தவர்கள் வேலையாட்கள் / கீழ்மட்டத் தொண்டர்கள் போலவும், அவர்களிடம் வேலை வாங்கும் Nordic இனத்தவர்களோ, நரைநிறத்தோரின் எஜமானர்கள் போலவுமே அனேகமான சந்தர்ப்பங்களில் நடந்து கொள்வதாகப் பலரும் வாக்குமூலம் வழங்கியிருப்பதாக இங்கு குறிப்பிடப் படுகிறது.

உதாரணம் 6:
இன்னொரு புறம், இதற்கு சற்று மாற்றமாக இன்னொரு தரப்பு ஆய்வாளர்கள் கருதுவதையும் அவதானிக்க முடிகிறது. “Alien Contacts & Abductions: The Real Story From the Other Side” எனும் நூலில் (பக்கம் 102-103), அதன் ஆசிரியை Jenny Randles, இந்த இனத்தவர் பற்றிக் குறிப்பிடுகையில், Nordic இனத்தவர்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் பல கடத்தல் சம்பவங்களில் நேரடியாகப் பங்களிப்புச் செலுத்தியிருப்பது ஊர்ஜிதப் படுத்தப்பட்ட உண்மையாக இருந்தாலும், நரைநிறத்தவர்கள் ஈடுபடும் அளவுக்கு Nordic இனத்தவர்கள் கடத்தல்களில் ஈடுபாடு காட்டுவது குறைவு என்று குறிப்பிடுவதையும் பார்க்க முடிகிறது.

உதாரணம் 7:
"Mythmaking in Alien Abduction Narratives" எனும் நூலில் (பக்கம் 51) Stephanie Kelley-Romano மேலும் கூறுகையில், “வேற்றுக்கிரகவாசி இனங்களிலேயே மிகவும் மதிப்புக்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள் Nordic வெள்ளையர்கள் தாம்” என்று அனேகமானோர் நம்புவதாகவும் குறிப்பிடுகிறார்.

இந்த உதாரணங்களையெல்லாம் ஒன்றாக வைத்துப் பார்க்கும் போது நமக்கு என்ன தெரிகிறது? இங்கு ஒரு பேருண்மை ஒளிந்திருக்கிறது.

ஒருபுறம் இந்த Nordic இனத்தவர்கள் மனிதர்களைச் சந்திக்கும் போதும், நரைநிறத்தவர்கள் பற்றிக் கூறும் போதும், நரைநிறத்தவர்களுக்கும் தமக்கும் இடையில் ஏற்கனவே விரோதம் நிலவுவது போலவும், அவர்கள் ஒரு கெட்ட இனத்தவர்கள் என்பது போலவும், அவர்களுக்கும் தமக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்பது போலவும், அவர்களிடமிருந்து மனிதர்களைப் பாதுகாக்கவே தாம் முயற்சிப்பது போலவும் பாவனை செய்கிறார்கள்.

இன்னொருபுறம் நரைநிறத்தவர்கள் வேறு சிலரைக் கடத்திச் சென்று, பறக்கும் தட்டுக்களில் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, அங்கு பறக்கும் தட்டுக்களுக்குள் இதே Nordic இனத்தவர்கள் தான் உண்மையில் நரைநிறத்தவர்களுக்கே கட்டளையிடும் எஜமானர்கள் போல் இருக்கிறார்கள். ஆனால், பறக்கும் தட்டுக்களுக்குள் இவ்வாறு நரைநிறத்தவர்களோடு கைகோர்த்து ஒரே அணியாகத் தாம் செயல்படுவதைக் கடத்தப்பட்ட மனிதர்கள் பிறகு வெளியுலகுக்குச் சொல்லி விடக் கூடாது என்பதற்காக, இவ்வாறு கடத்தப் படுவோரின் ஞாபகங்களை நரைநிறத்தவர்கள் சில தொழினுட்பங்கள் மூலம் அழித்தும் விடுகிறார்கள். (ஞாபகங்கள் அழிக்கப் படுவது பற்றி ஏற்கனவே நாம் “பார்னி ஹில்” சம்பவத்தில் பார்த்து விட்டோம்).

ஆனால், இவ்வாறு அழிக்கப்படும் ஞாபகங்களில் ஒருசில பகுதிகள் எப்படியோ மீண்டும் அந்த மனிதர்களுக்கு மீண்டு விடுவதுண்டு. அதாவது மனித மூளையின் ஞாபகங்களின் சில பகுதிகளை அழிக்கும் வேற்றுக்கிரகவாசிகளின் தொழினுட்பம் அவ்வப்போது முழுமையாக செயல்பட முடியாமல் தோற்றுப் போய் விடுகிறது என்பதை இங்கு புரிந்து கொள்ள முடிகிறது.

இதன் விளைவாக பிற்காலத்தில் இவ்வாறான ஞாபகங்களை மீளப் பெறும் பலரும் பறக்கும் தட்டுக்குள் நடந்த சம்பவங்களை விலாவாரியாக மீட்டிக் கூறும் போது, அங்கு நரைநிறத்தவர்களோடு ஒரே அணியில் Nordic இனத்தவர்களும் இருந்ததைத் தாம் கண்டதாக உண்மையைச் சொல்லி விடுகிறார்கள். இதன் மூலம், Nordic இனத்தவர்கள் உண்மையில் மறைக்க விரும்பிய இரகசியம் அம்பலமாகி விடுகிறது. இது தான் இங்கு உண்மையில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த உண்மைகளையெல்லாம் வாசித்த பிறகு இப்போது வாசகருக்கு இன்னோர் உண்மை லேசாகப் புலப்பட ஆரம்பித்திருக்குமென்று நினைக்கிறேன். அதாவது, நரைநிறத்தோர், Nordic இனத்தோர் என்று ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பல்வேறுபட்ட இனத்தவர்களாக இந்த வேற்றுக்கிரகவாசிகள் வெளிப்பார்வைக்குத் தோற்றமளித்தாலும், இந்த எல்லா வேற்றுக்கிரகவாசி இனத்தவர்களுக்கும் இடையில் பொதுப்படையான ஏதோ ஒரு சம்பந்தம் திரைமறைவில் இருக்கிறது என்பது தான் அந்த உண்மை. இந்த நெடுந்தொடர் மூலம் நான் வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்பும் பேருண்மைகளுள் இதுவும் ஒன்று.

அதாவது, இந்த வேற்றுக்கிரகவாசிகள் தத்தமக்குள் தனித்துவமான இனத்தவர்களாக இருந்தாலும், இவர்கள் அனைவரும் ஒரே திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இங்கு வருபவர்கள். ஒரே திட்டத்தை நிறைவேற்றுவதற்காகப் பல பிரிவுகளாகப் பல்வேறு கோணங்களிலிருந்தும் ஏககாலத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள். அதாவது இதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், ஒரே இலக்கை அடைவதற்காக ஒரே தலைமைத்துவத்தின் கீழ் கட்டுக்கோப்புடன் செயல்படக் கூடிய வெவ்வேறு பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.

இதை இன்னும் எளிமைப் படுத்தி இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், வெவ்வேறு தனித்துவமான இனங்களாக இவர்கள் இருந்த போதும், இவர்கள் அனைவருக்கும் இருக்கும் தேவையோ ஒரே மாதிரியான தேவையாக இருக்கிறது. மேலும், ஒரே தலைவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து செயல்படக் கூடியவர்களாகவே இந்த இனத்தவர்கள் அனைவரும் இயங்குவதையும் தெளிவாக அவதானிக்க முடிகிறது.

வெவ்வேறு தனித்தனி இனங்களாக இருக்கும் பல இனத்தவர்கள், ஒரே இலக்கையும், தேவையையும் அடிப்படையாகக் கொண்டு, ஒரே தலைமைத்துவத்தின் கீழ் செயல்படுவதாக இருந்தால், அந்த இனத்தவர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாக ஏதாவதொரு பாரிய பிணைப்பு உள்ளுக்குள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இதைப் புரிந்து கொள்வதற்கு ஓர் எளிமையான உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன்.

உலகில் இன்று முஸ்லிம்கள் பல்வேறு இனத்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஜாதி, மொழி, நாடு என்று பல்வேறு கூறுகளாக இந்த முஸ்லிம் உம்மத் இன்று தனித்தனி இனங்களாக உலகில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும், நமது உத்தமத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஒரு களங்கம் ஏற்படுகிறது என்று வந்து விட்டால், அடுத்த கணமே எல்லா வேறுபாடுகளையும் ஒருபுறம் வைத்து விட்டு, இந்த மொத்த உம்மத்தும் ஒரே சமூகமாக ஒருங்கிணைந்து குரல் கொடுப்பதைப் பார்க்கிறோம். இதற்கான காரணம் என்ன? வெவ்வேறு சமூகங்களாக நாம் இருந்தாலும், நாம் அனைவரும் முஸ்லிம்கள்; நம் அனைவருக்கும் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமே எனும் ஆழ்ந்த பிணைப்புத் தான் இந்த ஒருங்கிணைப்புக்குக் காரணம்.

இதே அடிப்படையில் தான் இங்கு வேற்றுக்கிரகவாசிகள் விடயத்திலும் நிலைமை இருக்கிறது. நரைநிறத்தவர்கள், Nordic இனத்தவர்கள், மற்றும் பின்னால் நாம் நோக்கவிருக்கும் இன்னும் சில இனத்தவர்கள் என்று தனித்துவம் வாய்ந்த பல இனங்களாக இந்த வேற்றுக்கிரகவாசிகள் இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் இடையில் அடித்தளத்தில் ஒரு வலுவான பிணைப்பும், இவர்கள் அனைவருக்குமென்று பொதுப்படையான ஓர் இலக்கும், இவர்களை வழிநடத்தும் ஒரு வலுவான தலைமையும் உள்ளுக்குள் இருக்கிறது.

அந்தப் பிணைப்பு என்ன?
இவர்களை ஒருங்கிணைக்கும் அந்தத் தலைமைத்துவம் எது?
இவர்களது பொதுப்படையான இலக்கு என்ன?

இந்த மூன்று கேள்விகளுக்குமான விடைகள் தாம் இந்த நெடுந்தொடரின் உயிர் நாடிகள். அந்த விடைகளை இங்கு ரத்திணச்சுருக்கமாக இப்போது முன்வைக்கிறேன்:

கேள்வி 1:
இவர்களுக்கிடையிலிருக்கும் பொதுப்படையான பிணைப்பு என்ன?

பதில்:
தனித்துவமான இந்த வேற்றுக்கிரகவாசிகளுக்கு இடையில் நிலவும் பொதுப்படையான பிணைப்பு வேறெதுவுமல்ல; இவர்கள் அனைவருமே ஜின்கள் எனும் பொதுப்படையான இனத்தைச் சார்ந்தவர்கள். அதாவது, என்ன தான் மனிதர்களுக்குள் வேறுபாடுகள், உட்பூசல்கள் இருந்தாலும், ஒரு பொதுவான இலக்கை அடைய வேண்டிய தேவை ஏற்படும் போது, “நாமெல்லாம் மனிதர்கள்”; “நாமெல்லாம் முஸ்லிம்கள்” என்று பல்வேறு மனித இனத்தவர்கள் ஒன்றுபடுவதைப் போல், என்ன தான் இவர்களுக்குள் தனித்துவமான பல இனங்களும், வேறுபாடுகளும் இருந்தாலும், “நாமெல்லாம் ஷைத்தானிய ஜின்கள்; ஒரே இப்லீஸின் தலைமைத்துவத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்” எனும் அடிப்படையில் ஒன்றுபட்டிருப்பவர்களே இவர்கள்.

இந்த முடிவை நான் வெறுமனே எடுத்து விடவில்லை. பல்வேறு கோணங்களில் இதை ஆய்வு செய்த பின்னரே இந்த உறுதியான நிலைபாட்டை எடுத்திருக்கிறேன். இவர்கள் ஜின்கள் தாம் என்பதை ஆணித்தரமாக உறுதிசெய்து கொள்ளும் பல நியாயங்களை ஏற்கனவே நான் இந்த நெடுந்தொடரின் மூன்றாம் பாகத்தில் விலாவாரியாகப் பல மார்க்க ஆதாரங்களோடு விளக்கியும் இருக்கிறேன். அவற்றுள் ஒரு நியாயத்தை மீண்டும் ஒருமுறை இங்கு சுருக்கமாக மீட்டிக் காட்டுகிறேன்.

பகுத்தறிவு வழங்கப் பட்ட, தனித்துவமான பல இனங்களை உள்ளடக்கிய ஒரு பொதுப்படையான வியாபித்த இனம் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்குமாக இருந்தால், அது ஜின் இனம் மட்டுமே. ஜின் அல்லாத வேறெந்த இனத்தையும் அல்லாஹ் இவ்வாறு படைத்ததாக எங்குமே கூறவில்லை.

விண்வெளியில் பறக்கக் கூடியவர்கள், மனிதர்களைப் போல் பிரயாணம் செய்யக் கூடியவர்கள், ஆங்காங்கே சமூகங்களாகவும், குடியிருப்புக்களாகவும் தங்கி வாழக் கூடியவர்கள், சமுத்திரங்களில் நீருக்கு அடியில் மூழ்கிச் செல்லக் கூடியவர்கள், இராட்சசர்களைப் போன்றவர்கள்... என்று பல்வேறு தனித்தனி இனங்களாக ஜின்களை இஸ்லாம் பட்டியலிட்டுக் காட்டினாலும், அந்த இனத்தவர்களையெல்லாம், பொதுப்படையாக “ஜின்கள்” எனும் ஒரேயொரு பேரினத்தின் உள்ளே தான் மார்க்கம் உள்ளடக்கிச் சொல்கிறது. பல தனித்துவமான இனங்களைத் தனக்குள் உள்ளடக்கியிருக்கும் பொதுப்படையான ஒரு பாரந்து வியாபித்த இனம் தான் “ஜின்” இனம்.

இது போன்ற இன்னொரு பரந்து வியாபித்த இனத்தை இந்தப் பிரபஞ்சத்தில் அல்லாஹ் படைக்கவுமில்லை; படைத்ததாகச் சொல்லவுமில்லை. ஒருவேளை வேறு பிரபஞ்சங்களில் படைத்திருக்கலாம்; படைக்காமலும் இருக்கலாம். அது குறித்து அல்லாஹ்வே அறிந்தவன். ஆனால், நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தில் பகுத்தறிவு வழங்கப்பட்ட இனங்களாக மனித, ஜின் ஆகிய இரண்டு இனத்தவர்களைத் தவிர மூன்றாவதோர் இனத்தைப் படைத்ததாக அல்லாஹ் எங்குமே குறிப்பிடவில்லை.

மார்க்கம் கூறும் இந்த அடிப்படைகளுக்கெல்லாம் நூற்றுக்கு நூறு வீதம் பொருந்தக் கூடிய விதத்தில் தான் இந்த வேற்றுக்கிரகவாசிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதாவது, ஜின்களுக்குள் எப்படிப் பல்வேறுபட்ட பகுத்தறிவு வழங்கப்பட்ட தனித்துவமான இனத்தவர்கள் இருக்கிறார்களோ, அதே போன்ற பல்வேறுபட்ட தனித்துவமான இனத்தவர்களை உள்ளடக்கிய ஒரு பொதுப்படையான பரந்த இனமாகத் தான் இந்த வேற்றுக்கிரகவாசிகள் இனமும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. உண்மையில் அவர்கள் தாம் இவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாகவே எல்லா அடையாளங்களும் நூற்றுக்கு நூறு வீதம் ஒத்துப் போவதைக் கூட ஆய்வு செய்யும் போது தெளிவாக அவதானிக்க முடிகிறது.

இது மட்டுமல்லாமல், ஏற்கனவே மூன்றாம் பாகத்தில் குறிப்பிட்டிருக்கும் இன்னுப் பல நியாயங்களையும் அடிப்படையாகக் கொண்டே இந்த வேற்றுக்கிரகவாசிகள் அனைவருமே ஜின்கள் என்பதை மிகவும் ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறேன்.

கேள்வி 2:
இவர்களை ஒருங்கிணைக்கும் அந்தத் தலைமைத்துவம் எது?

பதில்:
இதற்கான பதில் மிகவும் இலகுவானது. அந்தத் தலைமைத்துவம் வேறு யாருமல்ல; சாட்சாத் இப்லீஸ் மட்டுமே. அதாவது, இந்த வேற்றுக்கிரகவாசிகள் அனைவருமே இப்லீஸின் பரிவாரங்களிலிருக்கும் பல்வேறு படைப்பிரிவுகளைச் சார்ந்த ஷைத்தானிய ஜின் இனத்தவர்கள். இவர்கள் எல்லோருக்கும் இருக்கும் ஒரே தலைவன் இப்லீஸ் மட்டுமே.

கேள்வி 3:
இவர்களது பொதுப்படையான இலக்கு என்ன?

பதில்:
இதற்கான பதிலும் நான் சொல்ல முன்பே இப்போது வாசகர்க்கு இலகுவாகப் புரிந்திருக்கும். இவர்கள் அனைவரதும் பொதுவான இலக்கு மனித இனம் தான். இதை அல்லாஹ் தெளிவாகவே குர்ஆனில் பின்வருமாறு கூறிக் காட்டுகிறான்:

ஆதாரம் 1:
“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;. தவிர ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான எதிரி ஆவான். (அல்குர்ஆன் 2:208)

ஆதாரம் 2:
"பின் நிச்சயமாக நான் அவர்களுக்கு (மனிதர்களுக்கு) முன்னாலும், அவர்கள் பின்னாலும், அவர்கள் வலப்புறத்தாலும், அவர்கள் இடப்புறத்தாலும் வந்து கொண்டே இருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோராகக் காணமாட்டாய்" (என்றும் ஷைத்தான் கூறினான்).
அதற்கு இறைவன், "நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்" என்று கூறினான். (அல்குர்ஆன் 7:17-18)

மேற்கூறப்பட்ட வசங்கள் மூலம் இரண்டு உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன. ஒன்று, இப்லீஸுக்கும், அவனது பரிவாரத்தைச் சார்ந்த ஷைத்தானிய ஜின்களுக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரேயொரு பொது எதிரி, மனித இனமாகிய நாம் மட்டுமே. எனவே தான் தமது பொது எதிரியாக இருக்கும் இந்த மனித இனத்தை ஈருலகிலும் கருவறுக்கும் நோக்கத்தோடு இந்த ஜின் இனத்தவர்கள் அனைவரும் இப்லீஸின் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இந்த குர்ஆன் வசனங்கள் கூறும் இன்னோர் உண்மை தான், எந்தப் பக்கமாக மனிதர்கள் திரும்பினாலும், அந்தப் பக்கங்களிலெல்லாம் (முன்னாலும், பின்னாலும், இடப்புறமும், வலப்புறமும்) ஷைத்தானிய ஜின்கள் பல விதமான சதித் திட்டங்களுடன் மனிதனை எதிர்கொள்ளக் காத்திருக்கிறார்கள் எனும் உண்மை.

இந்த உண்மைகளின் அடிப்படையில் தான் இன்றைய நவீன உலக மனிதனைக் குறிவைத்து, நவீன காலத்துக்குப் பொருந்தக் கூடிய நவீன ரக சதித்திட்டங்களுடன் வேற்றுக்கிரகவாசி வேடங்களில் பல்வேறு ஷைத்தானிய ஜின் இனத்தவர்கள் நாலா புறமும் இருந்து இன்று மனிதர்களைச் சுற்றிவளைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது தான் இங்கு மறைந்திருக்கும் பேருண்மை. இந்த உண்மையை உணர்த்துவதே இந்த ஆய்வின் அடிப்படை நோக்கம்.

எதிரியின் சதித்திட்டங்களைச் சரிவரப் புரிந்துகொள்ளாதவர்கள், அந்தச் சதித்திட்டங்களிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம். மனிதர்களுக்குள் ஆயிரம் வேற்றுமைகள், வேறுபாடுகள் நிலவினாலும், நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்; ஒரு பெற்றோருக்குப் பிறந்த சகோதரர்கள். நம்மில் ஒரு சாராருக்கு ஏற்படும் இழப்புகள் ஏனைய சாராரையும் ஏதோர் ஒரு விதத்தில் நிச்சயமாகப் பாதிக்கவே செய்யும்.

சகோதரர்கள் ஒற்றுமையாக ஒரே கொள்கையில் இருக்கும் வரை, எதிரி எப்பேர்ப்பட்டவனாக இருந்தாலும், அவர்களை வீழ்த்துவது கடினம். எனவே, புத்திசாலியான ஓர் எதிரி முதலில் செய்யும் காரியம், சகோதரர்களுக்குள் பல கொள்கைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைப் பல கூறுகளாகப் பிரித்துத் தமக்குள் அடித்துக் கொள்ளுமாறு சண்ட மூட்டுவது தான்.

இவ்வாரு பிரிவினைகளை ஏற்படுத்திய பின், அவற்றுக்கிடையில் நாசுக்காக நுழைந்து ஒருசில தந்திரங்களைச் செய்தால் மட்டுமே போதும்; மொத்தக் குடும்பமும் தன்னைத்தானே அழித்துக் கொள்ள ஆரம்பிக்கும். அதன் பிறகு எதிரிக்கு இருக்கும் வேலை, கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது மட்டும் தான்; அவனது நோக்கம் செவ்வனே நிறைவேறும்.

இந்த அடிப்படைத் தாத்பரியத்தைத் தான் அல்லாஹ் பின்வரும் வசனங்கள் மூலம் தெளிவாகச் சொல்லிக் காட்டுகிறான்:

ஆதாரம் 1:
“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.”
(அல்குர்ஆன் 49:13)

ஆதாரம் 2:
“நிச்சயமாக முஃமின்கள் (அனைவரும்) சகோரர்களே. எனவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.” 
(அல்குர்ஆன் 49:10)

ஆதாரம் 3:
“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" 
(அல்குர்ஆன் 5:32)

இவ்வசனங்கள் மூலம் அல்லாஹ் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறான். அதாவது, மனிதர்கள் தமக்குள் பல பிரிவுகளாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொள்வதை அல்லாஹ் விரும்பவில்லை. நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்பதை உணர்ந்து, ஒருவருக்கொருவர் அன்போடும், கரிசணையோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் மனித இனம் குறித்த அல்லாஹ்வின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பைச் சரிவரப் புரிந்துகொள்ளாத வரைக்கும் ஒருவன் முஃமினாக முடியாது என்பதையே இங்கு அல்லாஹ் உணர்த்துகிறான்.

மேலும், சகோதரர்களாக இருக்கும் இந்த மனித சமூகம் ஒருவரையொருவர் கொன்று கொள்வதால், இறுதியில் அழிந்து நஷ்டமடையப் போவதும் மனித இனமே தான் என்பதையும் அல்லாஹ் இங்கு கூறிக் காட்டுகிறான். எனவே தான், மனித இனத்தைப் பாதுகாக்கும் நியாயமான தேவைகள் ஏற்பட்டாலே ஒழிய, கொலை செய்தல் என்பது மார்க்கத்தில் மன்னிக்க முடியாத பெரும்பாவம் எனும் அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆதாரம் 4:
“நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.”
(அல்குர்ஆன் 17:70)

இப்லீஸ் நமக்கு ஜன்ம விரோதியாக மாறியதற்கான அடிப்படைக் காரணத்தை இந்த வசனத்தில் அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறான். அதாவது, எல்லாப் படைப்பினங்களை விடவும் நம்மை அல்லாஹ் கன்னியப்படுத்தியது இப்லீஸுக்குப் பொறுக்கவில்லை. எனவே, ஈருலக வாழ்விலும் நம்மைச் சின்னாபின்னமாக்க வேண்டும் எனும் ஒரே லட்சியத்தோடு அவன், தனது பரிவாரங்கள் சகிதம் திட்டமிட்டு இயங்கிக் கொண்டிருக்கிறான்.

உயர்ந்த படைப்பாக அல்லாஹ்வால் கன்னியப்படுத்தப்பட்ட இந்த மனிதப் படைப்பு, இழிந்த படைப்பாக மாறி, அழிந்து நாசமாகிப் போகும் வரை இப்லீஸின் சதித்திட்டங்கள் ஓயப் போவதில்லை. காலங்கள் மாறும் போது, மாறும் காலத்துக்கேற்ப இப்லீஸின் உத்திகளும் மாறுகின்றன. ஆனால், அடிப்படை நோக்கமோ என்றுமே மாறுவதில்லை.

இந்த அடிப்படையில், இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ற விதத்தில் இப்லீஸ் புதிதாக வடிவமைத்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அவனது நவீன செயல்திட்டங்களுள் ஒன்று தான் வேற்றுக்கிரகவாசி வேடமிட்டு மனிதர்களைக் குறிவைத்து வருகைதரும் ஜின்களின் படையணிகள் என்பதைச் சிந்திப்போர் இலகுவாகப் புரிந்து கொள்வர்.

இது தான் இந்த வேற்றுக்கிரகவாசிகளின் நாடகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பேருண்மை. இந்த உண்மையைத் தான் இன்று அனேகமான ஆய்வாளர்கள் கூட உணரத் தவறியிருக்கிறார்கள். அரிதாக, விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில ஆய்வாளர்கள் இந்த உண்மையின் ஒருசில பகுதிகளை மோப்பம் பிடித்ததுண்டு. ஆனால், அவர்களின் ஆய்வுகள் முழுமை பெறும் முன்பே அவர்களெல்லாம் கொல்லப்பட்டார்கள். ஏனெனில், அவ்வாறான ஆய்வாளர்கள் உயிரோடிருப்பது தான் ஷைத்தானிய ஜின்களது சதித்திட்டத்துக்குப் பெரும் ஆபத்து. இது குறித்தும் சற்று விளக்கமாக இந்த இடத்தில் சொல்லி விடுவதே சிறந்ததென்று கருதுகிறேன். இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் இதைப் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

Episode 48:  (Nordic Aliens தொடர்ச்சி 02)




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..