Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 39
Posted By:Hajas On 1/17/2017 2:10:51 AM

amlodipin

amlodipin

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்

 Episode 38 : நவீன உலகில் ஜின் இனத்தவர்கள் 

 Episode 39: போல் ஹெல்யர் (Paul Hellyer):

Image may contain: 1 person, text

முதலில் ஒரு சான்றைப் பதிவு செய்து கொள்ளலாம். அதாவது, நாம் பார்க்கவிருக்கும் நம்ப முடியாத நிகழ்வுகள் எதுவும் கற்பனை சார்ந்தவை அல்ல என்பதையும், முறையான ஆதாரங்களோடு நிரூபிக்கப் பட்டிருக்கும் உண்மைகள் என்பதையும் வாசகர் மனதில் பதிவு செய்து கொள்வதற்காக உதாரணத்துக்கு ஒரு சான்றை இப்போதைக்குப் பார்த்து விட்டு, அதைத் தொடர்ந்து வேற்றுக்கிரகவாசிகளுள் இருக்கும் பல்வேறுபட்ட இனங்களைப் பற்றி விலாவாரியாக நோக்கலாம்:

போல் ஹெல்யர் (Paul Hellyer):
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1960களில் கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் இவர். கனடாவின் விமானப்படை, மற்றும் கடற்படை ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து, இன்று இருக்கும் விதத்தில் கனடா இராணுவப் படைக் கட்டமைப்பு மாற்றியமைக்கப் பட்டதற்கு இவரே மூல காரணமாக இருந்தவர். கனடா அரசின் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதியுயர் மட்ட அதிகாரியாக இருந்தவர். இது மட்டுமல்லாமல் இவர் ஒரு பொறியியலாளராகவும், எழுத்தாளராகவும் கூட இருந்தவர். இவரது செல்வாக்கு எத்தகையது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

பறக்கும் தட்டுக்கள், மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய பல தகவல்களை வெளிப்படையாக உலகுக்குச் சொன்ன பிரபலமானவர்களுள், இவரது கருத்துக்களுக்கென்று தனி மரியாதை சர்வதேச மட்டத்தில் உண்டு.

அண்மையில் RT செய்தித் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது, “இதுவரை நான்கு பிரதான வேற்றுக்கிரகவாசி இனங்கள் ஆதாரங்களோடு கண்டறியப் பட்டுள்ளன” என்று இவர் பச்சையாகவே குறிப்பிட்டார்.

பறக்கும் தட்டுக்கள் குறித்த முதலாவது நேரடி அனுபவம் இவருக்கு 1967ம் ஆண்டு தான் ஏற்பட்டது. ஜூன் மாதம் 3ம் திகதி 1967 இல், அமைச்சர் ஹெல்யர், அல்பெர்ட்டாவில் இருக்கும் செயின்ட் போல் நகரில் பறக்கும் தட்டுக்கள் தரையிறங்குவதற்காகவென்றே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விமானத்தளம் ஒன்றை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைப்பதற்குச் சென்றிருந்தார். கனடாவின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டியே இந்தப் புதிய விமானத்தளம் இவரால் திறந்து வைக்கப்பட்டது.

அங்கு சென்ற அவரது ஹெலிகப்டர் தரையிறங்கும் போது, இறங்குதளத்துக்குப் பக்கத்தில் வடிவமைக்கப் பட்டிருந்த அறிவித்தல் பலகையில் விசித்திரமான ஒரு வாசகம் எழுதப் பட்டிருந்ததை அவர் வாசித்தார். அந்த வாசகம் இது தான்:

“பறக்கும் தட்டுக்கள் தரையிறங்குவதற்கென்று வடிவமைக்கப்பட்ட உலகின் முதலாவது விமானத்தளமாக செயிண்ட் போல் விமானத்தளமே திகழ்கிறது. மனித இனம் பூமியின் எல்லையைத் தாண்டிய விண்வெளியில் சமாதானத்தை வேண்டுவதைப் பிரதிபலிக்கும் ஒரு சின்னமாகவே இந்த விமானத்தளம் திகழ்கிறது. மேலும், வெவ்வேறு கிரகங்களுக்கு இடையில் பிரயாணம் செய்வோரது (Intergalactic beings) எதிர்காலப் பிரயாணங்கள் பாதுகாப்பானவையாக இருப்பதற்கான உத்தரவாதச் சின்னமாகவும் இது திகழ்கிறது. பூமியிலிருந்தும், மற்றும் வெளியுலகிலிருந்தும் வருகை தரக் கூடிய அனைவரையும் இந்த விமானத்தளமும், இந்த நகரமும் அன்போடு வரவேற்கிறது”

இந்தச் சம்பவத்துக்குப் பல ஆண்டுகளுக்கு பிறகு, செப்டம்பர் மாதம் 2005ம் ஆண்டில், அமைச்சர் ஹெல்யர், வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிப் பகிரங்கமாகவே பல மீடியாக்களிலும் பேச ஆரம்பித்தார். செப்டம்பர் மாதம் 25ம் திகதி 2005 இல், டொரண்ட்டோ நகரில் நடைபெற்ற ஓய்வுபெற்ற அரசியல்வாதிகளின் சம்மேளனத்துக்கு சிறப்பு விருந்தினராக இவர் அழைக்கப் பட்டிருந்தார். அங்கு இவர் நிகழ்த்திய சொற்பொழிவின் போதும் பகிரங்கமாகவே வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய பல தகவல்களைப் போட்டு உடைத்தார்.

தனது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய தனது நிலைபாடுகளை இவர் உலக அரங்கில் பகிரங்கப் படுத்த ஆரம்பித்தார். மேலும், இவரது கருத்துக்கள், ஒரு தனி நபரின் கருத்து எனும் அடிப்படையில் கூட அமைந்திருக்கவில்லை. மாறாக, இவரது வாக்குமூலங்களை நாலா புறங்களிலும் இருந்து நூற்றுக்கணக்கான இராணுவ உயர் அதிகாரிகள் ஊர்ஜிதப் படுத்தத் தொடங்கினர்.

மேலும், பல்வேறு நாடுகளில் இந்தக் காலப்பகுதியையொட்டி வெளியான உத்தியோகபூர்வமான பல அரச ஆவணங்கள் கூட வேற்றுக்கிரகவாசிகள் பற்றி இவர் முன்வைத்த கருத்துக்களை மேலும் உறுதிப்படுத்துவதாக இருந்தன. இது போன்ற பல்வேறு அடிப்படைகளில் வேற்றுக்கிரகவாசிகளின் மர்மம் மிக்க நடவடிக்கைகள் பற்றி இவர் மக்கள் மன்றத்தில் முன்வைத்த கருத்துக்கள் மறுக்க முடியாதவாறு நிரூபனமாயின.

வேற்றுக்கிரகவாசிகள் பற்றி போல் ஹெல்யர் கூறிய சில கூற்றுக்களை இங்கு மாதிரிக்கு எடுத்துக் காட்டுகிறேன்:

“1961ம் ஆண்டு அமெரிக்கா, மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பணிப்போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், ஒருதடவை ஐம்பது பறக்கும் தட்டுக்கள் சீரான வியூகத்தில் தென் ரஷ்யாவின் திசையிலிருந்து ஐரோப்பிய வான்பரப்பின் ஊடாகப் பறந்து சென்றன. இந்தப் பறக்கும் தட்டுக்களின் வியூகம், தனது திசையைத் திருப்பி, வட துருவத்தை நோக்கிச் சென்றதை அவதானித்ததும், நேசப் படைகளின் தலைமை கமாண்டர் இது குறித்து மிகவும் விசனப் படத் தொடங்கினார்; எந்த நேரத்திலும் எதிர் நடவடிக்கை எடுக்கத் தயாராகி விட்டார்.

இதன் பிறகு இந்தப் பறக்கும் தட்டுக்கள் குறித்த பிரத்தியேகமான விசாரணையொன்று ஆரம்பிகப் பட்டது. மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த விசாரணையின் முடிவில், குறைந்த பட்சம் நான்கு பிரத்தியேகமான வேற்றுக்கிரகவாசி இனத்தவர்கள் பலநூறு ஆண்டுகளாக நமது உலகுக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள் எனும் தீர்மாணமே எடுக்கப் பட்டது. குறிப்பாக நாம் அனு ஆயுதங்களை உபயோகிக்கத் தொடங்கியதிலிருந்து கடந்த இரண்டு தசாப்தங்களாக இவர்களது வருகை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது. அவர்கள் இது குறித்து அதிகம் அவதானம் செலுத்துவதை நன்றாகவே அவதானிக்க முடிகிறது.” – போல் ஹெல்யர்

“அவர்கள் (வேற்றுக்கிரகவாசிகள்) பல்வேறு இடங்களிலிருந்து நீண்ட காலமாக இங்கு வருகை தருகிறார்கள். இதுவரை “ப்ளீடீஸ்” எனும் நட்சத்திரத் தொகுதியைச் சார்ந்த பல்வேறு கிரகங்களிலிருந்து வருகை தரக் கூடிய ஒருசில இனத்தவரைப் பற்றி மட்டுமே எனக்கு விபரமாகச் சொல்லத் தெரியும். இது அல்லாமல், “அண்ட்ரோமிடா” காலக்ஸி, மற்றும் சனிக் கிரகத்தின் துணைக் கோள்களுள் ஒரு கோள் ஆகியவற்றிலிருந்தெல்லாம் வருகை தருவோரும் இருக்கிறார்கள்.

இந்த வேறுபட்ட இனத்தவர்களை ஐக்கியப் படுத்தும் விதமாக அவர்களுக்கென்று ஒரு சம்மேளனமும் (நமது ஐக்கிய நாடுகள் சபை போல்) உள்ளது. அவர்களுக்கென்று பல சட்டதிட்டங்கள் கூட உள்ளன. இவ்வாறான சட்டதிட்டங்களுள் ஒன்று தான், மனிதர்களால் அழைப்பு விடுக்கப் படாமல், அவர்களாக வந்து மனித நாகரீகத்தினுள் தலையிடக் கூடாது என்று அவர்களுக்குள் நடைமுறையில் இருக்கும் சட்டம்.

இந்தப் பூமி மனிதர்களுக்குச் சொந்தமான கிரகம் என்பதையும், இந்தக் கிரகத்தை உபயோகிப்பதும், வழிநடத்துவதும் மனிதர்களின் உரிமை என்பதையும் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மனிதர்களைக் குறித்து அவர்களிடம் சில அதிருப்திகள் நிலவுகின்றன. அதாவது, “இந்தப் பூமியை வழிநடத்திச் செல்வதற்குத் தேவையான தகுதியும், முதிர்ச்சியும் மனிதர்களுக்கு இல்லை. மனிதர்கள் இந்தப் பூமியை மாசு படுத்தி அழித்துக் கொண்டிருக்கிறார்கள்” எனும் ஓர் அதிருப்தி அவர்களிடம் நிலவுகிறது. இதை அவர்கள் மனிதர்களாகிய நம்மிடம் சொல்லியும் இருக்கிறார்கள்; மேலும் நம்மை அவர்கள் எச்சரித்தும் இருக்கிறார்கள்.” – போல் ஹெல்யர்

“சில தசாப்தங்களுக்கு முன்னால் வருகை தந்த சில வேற்றுக்கிரக விருந்தினர்கள், மனித இனம் பயணித்துக் கொண்டிருக்கும் பாதை ஆபத்தானது என்றும், தம்மையும் இந்தப் பூமியையும் அழிவின் பாதையிலேயே மனிதர்கள் இட்டுச் செல்கிறார்கள் என்றும் எச்சரித்தார்கள். அழிவுப் பாதையிலிருந்து மனித இனத்தவரை மீட்டு, சரியான பாதையில் பயணிக்கச் செய்யும் விடயங்களில் தாம் உதவி செய்யத் தயாராக இருப்பதாகக் கூறிய இந்த வேற்றுக் கிரக விருந்தினர்கள், நமக்கு உதவ முன்வந்தார்கள்.

ஆனால், அவர்கள் உதவி செய்ய முன்வந்ததை நம்மில் ஒருசிலர் (தலைவர்கள்), அவர்கள் நமக்கு அச்சுறுத்தல் எனும் அடிப்படையில் தவறாகப் புரிந்து விட்டார்கள். இதன் விளைவாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் விதமான செயல்திட்டங்களே முன்னெடுக்கப் பட்டன. குறிப்பாக அமெரிக்கா பல ட்ரில்லியன் (லட்சம் கோடி) டாலர்களை இவ்வாறான சில “கறுப்புச் செயல்திட்டங்களுக்காக” (Black Projects) செலவிடுகிறது. அமெரிக்க அரசின் வரவுசெலவுத் திட்டத்துக்கும், பாரளுமன்றத்துக்கும் கூட தெரியாத விதத்திலேயே இவ்வளவு பெரிய தொகைப் பணம் ஆண்டுதோறும் இவ்வாறான இரகசியச் செயல்திட்டங்களுக்காக ஒதுக்கப் படுகின்றன” – போல் ஹெல்யர்

அமைச்சர் போல் ஹெல்யர் வெளிப்படையகக் குறிப்பிட்ட பல கருத்துக்களின் சில பகுதிகளே மேற்கோள்களாக மேலே காட்டப் பட்டுள்ளன. இவை குறித்து மேலதிகமாக ஆய்வு செய்ய விரும்புவோரும், எனது கூற்றுக்களை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புவோரும் பின்வரும் இணைப்புகள் மூலம் மேலதிக தேடலைத் தொடரலாம்:

Source:
http://www.collective-evolution.com/2014/01/06/at-least-4-known-alien-species-have-been-visiting-earth-for-thousands-of-years-x-canadian-defence-minister-continues-to-blow-the-whistle/

http://www.cbc.ca/news/canada/nova-scotia/canadian-government-no-longer-investigating-ufos-1.1324305

https://en.wikipedia.org/wiki/Paul_Hellyer

குறிப்பு:
மேலே நான் சுட்டிக்காட்டிய மேற்கோள்கள்களில் “வேற்றுக்கிரகவாசிகள் எனும் இனத்தவர் உண்மையிலேயே நமது உலகில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று போல் ஹெல்யர் சொல்லும் கருத்தை மட்டுமே நாம் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும். ஏனெனில், அது அவர் நேரடியாக உறுதிப்படுத்திக் கொண்ட சான்றுகளின் அடிப்படையில் சொல்லும் உண்மை. இதில் சந்தேகமில்லை.

ஆனால், மேலதிகமாக அவர் கூறும், “வேற்றுக்கிரகவாசிகள் தூர கிரகங்களிலிருந்து வருகிறார்கள்; அவர்கள் நல்லவர்கள்; மனிதர்களுகு உதவி செய்வதற்காகவே வருகிறார்கள்” என்பன போன்ற கருத்துக்களை இந்த அடிப்படையில் நம்ப முடியாது. இதில் பல பித்தலாட்டங்கள் இருக்கின்றன.

அதாவது, மனிதர்களை இரகசியமாகச் சந்தித்து விட்டுச் செல்லும் இந்த வேற்றுக்கிரகவாசிகள் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது, அவர்களாகவே கூறி விட்டுச் செல்லும் கூற்றுக்களின் அடிப்படையிலேயே போல் ஹெல்யர் போன்றோர் இந்தக் கருத்துக்களை உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்; நேரில் சென்று சம்பந்தப்பட்ட கிரகங்களைப் பார்த்து விட்டு வந்ததன் அடிப்படையில் அல்ல என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு போல் ஹெல்யர் பொய் சொல்லவில்லை. தனது பார்வையில் உண்மையென்று நம்புவதைத் தான் போல் ஹெல்யர் கூறுகிறார். ஆனால், போல் ஹெல்யர் போன்றோருக்கு வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து கிடைத்த தகவல்கள் நம்பகமானவை அல்ல. அதாவது குறிப்பிட்ட வேற்றுக்கிரகவாசிகள், மனிதர்களிடம் அறிமுகமான போது தம்மைப் பற்றிச் சொல்லிவிட்டுச் சென்ற தகவல்கள் பொய்யானவை என்பது தான் இங்கு மறைந்திருக்கும் உண்மை.

உண்மையில் இவர்கள் வேற்றுக்கிரகவாசிகளும் அல்ல; அவர்கள் கூறிவிட்டுச் சென்றது போல் வேறு கிரகங்களிலிருந்தோ, நட்சத்திரத் தொகுதிகளிலிருந்தோ வருபவர்களும் அல்ல; மனிதர்களுக்கு உதவி செய்யும் நல்ல நோக்கத்தோடு வருபவர்களும் அல்ல. இவர்கள் ஜின்கள். அதிலும் குறிப்பாக இப்லீஸின் படையணிகளைச் சேர்ந்த சில ஷைத்தானிய ஜின் இனத்தவர்கள். வேற்றுக்கிரகவாசி எனும் வேஷமிட்டு அவ்வப்போது வந்து மனிதர்களிடம் பொய்யைத் தான் இவர்கள் சொல்லி விட்டுச் செல்கிறார்கள். ஏன் இப்படிப் பொய் சொல்ல வேண்டும்?

இதற்கான பதில் மிக எளிதானது. தாம் யார் என்பதை மனிதர்களுக்குக் காட்டிக் கொள்ளாமலே தமது செயல்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதும், மனித சமூகத்தை ஏமாற்றுவதும், வழிகெடுப்பதும், சிக்கல்களில் மாட்டி விடுவதுமே ஷைத்தானிய ஜின்களின் பரம்பரை உத்தி. பொய், பித்தலாட்டம், நம்பிக்கைத் துரோகம் போன்றவை அனைத்தும் இப்லீஸுக்குக் கைவந்த கலைகள்.

இந்த உத்திகளையே இந்த ஜின்கள், இன்றைய உலகின் அதிகார வர்க்கத்தைச் சார்ந்த மனித தலைவர்களிடம் கையாள்கின்றனர். தமது இறுதி இலட்சியம், மற்றும் இரகசியத் திட்டங்கள் கச்சிதமாக நிறைவேறி முடியும் வரை மனிதர்கள் தம்மை யாரென்று இனம்கண்டுவிடக் கூடாது என்பதில் இந்த ஜின்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதன் விளைவாகவே இந்த வேற்றுக்கிரகவாசி வேஷத்தை இவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இந்த வேஷம் தத்துரூபமாக நம்பக் கூடிய விதத்தில் இருக்க வேண்டுமென்பதற்காகவே “நாம் தொலைதூர கிரகங்களிலிருந்து வருகிறோம்; மனிதர்களாகிய உங்களுக்கு உதவி செய்யவே இங்கு வருகிறோம்” என்பன போன்ற பல பொய்களைக் கூறிவிட்டுச் செல்கிறார்கள்.

இந்தப் பொய் மனித சமூகத்தவர்களிடம் எடுபட வேண்டுமென்றால், அதை முதலில் நம்ப வேண்டியது இன்றைய உலகின் மனித நாகரீகங்களை வழிநடத்தும் வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் தாம். எனவே தான் முதல் கட்டமாக இவ்வாறான தலைவர்களை மட்டும் இந்த ஜின்கள் இரகசியமாக சந்தித்து, அவர்களை நம்ப வைக்கும் படலத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தலைவர்களை நம்ப வைத்து விட்டால், அதன் பிறகு அவர்களைப் பின்பற்றும் ஏனைய உலக மக்களை நம்ப வைப்பது சுலபம்.

இந்த அடிப்படையில் ஜின்கள் கூறிச் சென்ற பல பொய்களைத் தான் போல் ஹெல்யர் கூட உண்மையென்று நம்பி, அதைப் பகிரங்கமாகக் கூறுகிறார். அவர் மட்டுமல்ல; அனேகமான பறக்கும் தட்டு ஆய்வாளர்கள் கூட ஜின்களின் இந்தப் பொய்களை உண்மையென்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்; ஒருசிலரைத் தவிர.

எனவே, ஒரேயொரு விடயத்தை நிரூபித்துக் கொள்வதற்கு மட்டுமே போல் ஹெல்யர் போன்றோரை நாம் சான்றாக எடுத்துக் கொள்ள முடியும். அது தான் “வேற்றுக்கிரகவாசிகள் எனும் சில இனத்தவர்கள் அடிக்கடி நமது உலகுக்கு வருகை தந்து விட்டுப் போகிறார்கள்” எனும் உண்மை. இதை நிரூபித்துக் கொள்வதில் இவ்வாறானவர்களது ஆதாரங்கள் வலுவானவை. ஆனால், வந்து விட்டுச் செல்லும் இந்த வேற்றுக்கிரகவாசிகள் இவர்களிடம் சொல்லி விட்டுச் செல்லும் கதைகளை மட்டுமே நாம் நம்பக் கூடாது. ஏனெனில், அவை அனைத்தும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட முடியாத கூற்றுக்கள்; மாறுவேஷமிட்டு வரும் ஜின்கள் திட்டமிட்டுச் சொல்லி விட்டுச் செல்லும் பொய்கள்.

பறக்கும் தட்டுக்களில் வந்து போகும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய செய்திகள் எதுவும் கற்பனை அல்ல; நிதர்சன உண்மைகள் என்பதை முதலில் வாசகர் மனதில் பதிவு செய்து கொள்ளவே இந்த அறிமுகத் தகவல்கள் முன்வைக்கப் பட்டன. இனி இன் ஷா அல்லாஹ் பிரத்தியேகமான ஒருசில வேற்றுக்கிரகவாசி வேடமிட்டு வரும் ஜின் இனத்தவர்களைப் பற்றித் தனித்தனியாக அலசலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

Episode 40: ஃப்ளாட்வூட்ஸ் அசுரன் (Flatwoods Monster)





Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..