இறைவனின் அற்புத படைப்பு இவன்..
தன் வாழ்வை சுருக்கி உலகம் உய்ய உழைப்பவன்..
அறம் சார்ந்த வாழ்வை கல்வி நிலையங்களில் படிக்காதவன், ஆனால் அறமே இவன் வாழ்வு..
ஏமாற்றத்தை (நமக்காக) விரும்பி ஏற்க்கும் கோமாளி இவன்..
அசையா சொத்துக்கள் சில உண்டு ஆனாலும் சொகுசு வாழ்வு துளியும் இல்லை இவனிடம்..
வருடத்தின் பாதி காலம் இவன் குடும்ப பெண்களின் நகை அடமானத்தில்.. சில சமயங்களில் அது மீளும், பல சமயங்களில் அது மூழ்கும்..
இவன் வாழ்வில் சுயநலன் குறைவு பொது நலன் அதிகம்..
மானத்திற்காக உயிர் துறப்பான் இவன்..
இவன் இலக்கு, ஆசை, பிரார்த்தனை எல்லாமே ஒன்றுதான்..
இந்த வருடமாவது வெள்ளாமை பொய்க்க கூடாது.
அவன் #விவசாயி ........................................................................... இவர்களைத்தான் நம்மை ஆள்பவர்களும், நாமும் உதாசினம் படுத்துகிறோம், தொடர்ந்து வஞ்சிக்கபட்டும் இந்த தேசத்திற்கு இவர்கள் வயிறார உணவு அளிக்கிறார்கள், நாம் எல்லாரும் தொழிலை தொழிலாக செய்கிறோம், இவர்களோ விவசாயத்தை தனது உயிருக்கு நிகர் கடமையாக செய்கிறார்கள். இதை இறைவன் அவர்களுக்கு அளித்த செயல் திட்டமாகவே நான் பார்க்கிறேன்.
மத்திய அரசுகளும், மாநில அரசுகளும், பெரும் முதலாளிகளும் (கார்ப்பரேட்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு இவர்களை வஞ்சிக்கட்டும், நாமும் கண்டும் காணாமல் கடந்து போவோம்
பிறகு...
ஒன்று உயிரைமாய்ப்பார்கள் அல்லது வேறு வழியின்றி புலம் பெயர்வார்கள்.
பிறகுதான் தெரியும் இவர்களின் அருமை.
அப்பொழுது இந்த இனமே அழிந்து போயிருக்கும் அல்லது மறைந்து போயிருக்கும்.
க.பைசல் அஹமது திருச்சி |