Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
அறிஞர் பகர்ந்தார் ... அரசர் அழுதார்
Posted By:peer On 12/3/2016 1:08:01 AM

buy low dose naltrexone

where can i buy low dose naltrexone link

ஒரு முறை சவுதி அரசர் பைசல் அவர்களை சந்திப்பதற்காக அவரது அரண்மனைக்கு வந்தார்கள் மெளலானா அபுல் ஹஸன் அலி நத்வி. கண்ணியமான முறையில் அரண்மனை காவலர்கள் சந்திப்பு நடக்க இருக்கும் அறையை காட்டி அமர செய்தார்கள். அந்த ஆடம்பரமான அறையைச் சுற்றி தனது பார்வையை ஆச்சரியத்துடன் ஓட்டினார்கள் மெளலானா அவர்கள். அப்போது அங்கே வந்த அரசர் பைசல்  மெளலானாவின் ஆச்சரியமான பார்வையினைப் பற்றி கேட்டார்.

மெளலானா கூறினார்கள்..

இந்தியாவிலும் ஒரு அரசர் இருந்தார். அவரது அரசாட்சி இந்தியாவுடன் தற்போதைய பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கியிருந்தது. அவர் 52 வருடங்கள் ஆட்சி புரிந்தார். அதில் 20 வருட காலத்தை குதிரையின் முதுகின் மீதே (போர்க்களம், பயணம்) கழித்தார். அவரது ஆட்சி காலத்தில் முஸ்லீம்கள் சுதந்திரத்தையும், சந்தோஷத்தையும் அனுபவித்தனர். மக்களின் வாழ்க்கை மிகவும் வளமாகவும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் அரசரோ மிகவும் ஏழையாக வாழ்ந்தார். அவரது ஆடையில் பல ஒட்டுகள் இருந்தன. அரசாங்க கஜானாவில் இருந்து தனக்கென எதையும் அவர் எடுத்ததில்லை. குர்ஆனை கைப்பிரதி எடுத்தும், தனது கைகளால் தொப்பிகள் செய்தும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தனது வாழ்க்கையை அவர் கழித்தார். இரவு காலங்களை தொழுகையிலும் அழுகையுடன் பாவ மன்னிப்பு தேடுவதிலையும் கழித்தார்.

ஆனால் தேவையென வரும் எந்த மக்களையும் அவர் வெறுங்கையுடன் அனுப்பியதில்லை. வளமாகவும் நிறைவாகவும் மக்களுக்காக வாரி வழங்கினார்.

காலங்கள் அப்படியிருந்தன. மக்கள் வளமாகவும் அரசர்கள் ஏழையாகவும் இருந்த காலங்கள் அவை. தற்போது உங்களது அறையைப் பார்த்து ஆச்சரியப் படுகின்றேன். காலங்கள் எப்படி மாறிவிட்டன. தற்போது அரசர்கள் எல்லாவகையான இன்பங்களையும் அனுபவிக்கிறார்கள். சுகபோங்களில் வாழ்கிறார்கள். ஆனால் முஸ்லீம்களோ வீடிகளின்றி பாலஸ்தீனத்திலும், உயிருக்கு உத்தரவாதமில்லாமல் காஷ்மீரிலும், தங்களது அடையாளாங்களை இழந்த நிலையில் மத்திய ஆசியாவிலும் இருக்கின்றனர். நான் தங்களது அரண்மனையில் காலடிஎடுத்து வைத்த போதே எனது மனதில் ஓடிய இந்த எண்ணங்கள் என்னை சிந்தனையில் ஆழ்த்திவிட்டன என்று கூறி மெளலானா அமைதியாகிவிட்டார்கள்.

தற்போது அரசரின் முறை, ஆனால் பேச்சு வரவில்லை.. அரசரின் கண்களில் கண்ணீர், சிறிது நேரத்திலே அது அழுகையாக மாறியது. அரசரின் அழு குரல் காவலர்களின் காதுகளை எட்டவே, அவர்கள் பதறியடித்து அறைக்குள் நுழைந்தனர். அந்தக் காவலர்களை வெளியேறுமாறு சைகை செய்த அரசர் மெளலானவை நோக்கி கூறினார். அந்த அரசர்களின் நிலை அவ்வாறிருக்க காரணம் அவர்களைச் சுற்றி உங்களைப் போன்ற ஆலோசகர்கள் இருந்தார்கள். (எங்களைப் போன்ற அரசர்களுக்கு அதைப் போன்று அறிஞர்கள் யாருமில்லை). தயவு செய்து தாங்கள் அடிக்கடி இங்கே வந்து பலகீனமான எங்களுக்கு இது போன்று அறிவுரைகளை வழங்க வேண்டுகிறேன்.

குறிப்பு:

  • மெளலான அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள் குறிப்பிட்ட அந்த அரசர், மாமன்னர் ஒளரங்கசீப்.
  • மெளலான அவர்கள் அரண்மனை செல்வதற்கு எந்த தடையுமிருந்ததல்லை, அவர்கள் செல்லும் காருக்கும் எந்த சோதனையுமிரிந்ததல்லை,
  • மன்னர் பைசல் அவர்கள் இது போன்ற அறிஞர்களை மதிக்கும் பண்பும் அவர்களின் அறிவுரைகளுக்கு செவிமடுப்பவர்களுமாக இருந்தார்.
  • மெளலான அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள் அல்லாஹவைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாதவர்களாகவும் அதே நேரத்தில் மிகவும் மதி நுட்பத்துடன் நஸீகத் செய்பவர்களாகவும் இருந்தார்கள்.
  • இது போன்ற அறிஞர்களும் அரசர்களும் இல்லாத இந்த காலம் நாம் அழ வேண்டிய காலம்.

 

அல்லாஹ் இவர்கள் இருவரின் பாவங்களையும் மன்னித்து இவர்களின் மண்ணறையையும் ஒளியால் நிரப்புவானாக.








General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..