buy abortion pill online reviews buy abortion pill online cheap பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
தொடர் 2: வேற்றுக்கிரகவாசிகள்
Episode 16: Operation Highjump
Episode 17: சிக்மா செயல்திட்டம்
நாசிகளோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், மற்றும் துருவப் பிரதேசங்களையொட்டிய பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகளெல்லாம் நடந்து முடிந்த பிறகும் கூட வேற்றுக்கிரகவாசிகளின் தொல்லை ஓய்ந்ததாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் இவர்களது நடமாட்டம் இந்தப் பூமியின் பேற்பரப்பில் அதிகரித்துக் கொண்டே வரத் தொடங்கியது.
இவ்வாறு நாள் செல்லச்செல்ல இவர்களது நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதைத் திரைமறைவில் அவதானித்துக் கொண்டே வந்த அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளது அச்ச உணர்வும் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆனாலும் இவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்தவும் சக்தியற்றவர்களாகவே தாம் இருப்பதை உணர்ந்த இந்த வளர்ந்த நாடுகள், இறுதியில் ஒரு தீர்மாணத்துக்கு வந்தன.
அதாவது, அடித்துத் துரத்த முடியாவிட்டால், அணைத்து நண்பர்களாக ஆக்கிக் கொள்வதே தமக்குப் பாதுகாப்பு என்ற தீர்மாணம் தான் அது. இந்தத் தீர்மாணத்துக்கு அமைய மறுபடியும் வேற்றுக்கிரக வாசிகளோடு நட்புறவு ரீதியிலான பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்திக் கொள்ள அமெரிக்கா முயன்றது.
இவ்வாறான தொடர்பாடல் முயற்சிகளில் ஒன்று தான் 1963-1964 காலப்பகுதிகளில் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய பிரிவான NSA மூலம் இரகசியமாக ஆரம்பிக்கப்பட்ட “சிக்மா செயல்திட்டம்” (Project Sigma). இந்தச் செயல்திட்டத்தின் வாயிலாகப் பல்வேறு இனங்களைச் சார்ந்த வேற்றுக்கிரகவாசிகளோடு அமெரிக்க இரகசிய அரசு ரேடியோ அலைவரிசைகளைப் போன்ற அலைவரிசைகள் மூலம் தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொண்டது.
இவ்வாறான தொடர்பாடல்களின் போது இரு தரப்புக்கும் இடையில் நடந்த சம்பாஷனைகள் பேச்சு வடிவத்தில் நடைபெறவில்லை. மாறாக, கணனி மொழி என்று இன்று அழைக்கப்படும் “இருமை எண் மொழி” (Binary Language) மூலமே இருதரப்புக்கும் இடையிலான தொலைதொடர்புகள் தொடர்ந்தன.
இவ்வாறான செயல்திட்டங்கள் எல்லாமே ஏற்கனவே நாம் குறிப்பிட்ட “மஜெஸ்ட்டிக் 12” எனும் இலுமினாட்டி முகவர்களை உள்ளடக்கிய இரகசிய இயக்கத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் தான் நடந்தன. இவை குறித்த மேலதிக விபரங்களை ஆய்வு செய்ய விரும்புவோருக்குப் பின்வரும் லின்க்குகள் உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறேன்:
https://www.youtube.com/watch?v=iSZWLjoWYSQ http://www.ufoevidence.org/documents/doc577.htm http://www.majesticdocuments.com/documents/intro.php http://www.ufoevidence.org/documents/doc579.htm http://www.openminds.tv/william-moore-ufo-opportunist-agent-disinformation/29056 http://www.project1947.com/gfb/poland.htm http://www.noufors.com/Documents/Majestic-12%20Documents%20-%20New%20Batch/hillenkoetter-menzel_sept1963.jpg http://1.bp.blogspot.com/-yNdQ527Xyfs/Th68t_KY3UI/AAAAAAAABok/cJ09zhWGmCM/s1600/3529509los12.jpg https://thetruthbehindthescenes.files.wordpress.com/2010/05/2bc70a27416c.jpg http://www.noufors.com/new_majestic-12_documents.html https://www.youtube.com/watch?v=7qlciIkeKIw
இவ்வாறான பல இரகசிய செயல்திட்டங்கள் மூலம் பறக்கும் தட்டுக்குரியவர்களோடு இடியாப்ப சிக்கலைப் போன்ற ஒருவிதமான உறவைப் பேணிக் கொண்டிருந்த இலுமினாட்டிகள், இன்னொரு புறம், இந்த உண்மைகள் வெளியில் கசியத் தொடங்கினால், தமது திட்டங்களுக்கு பல இடைஞ்சல்கள் ஏற்படும் என்பதை உணர்ந்தார்கள்.
எனவே, இந்தப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு, இதற்கும் ஒரு சதித் திட்டத்தை வகுத்து, அதைப் படிப்படியாக மீடியாக்கள் வாயிலாக அரங்கேற்றினர். இந்தச் சதித்திட்டத்தின் சாராம்சம் இது தான்:
முதல் கட்ட நடவடிக்கையாக, பறக்கும் தட்டுக்கள் குறித்த சில உண்மையான தகவல்களோடு, பல பொய்யான செய்திகளையும் கலந்து, பித்தலாட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பல கட்டுக்கதைகளை இவர்களாகவே உருவாக்கினார்கள்.
இரண்டாம் கட்ட நடவடிக்கையாக, இவ்வாறு இவர்களே உருவாக்கிய கட்டுக்கதைகளை, மீடியாக்கள் வாயிலாக இவர்களே உலக அரங்கில் பரப்பவும் செய்தார்கள்.
மூன்றாம் கட்ட நடவடிக்கையாக, இவர்களால் பரப்பப்பட்ட அதே கட்டுக் கதைகள் மக்கள் மத்தியில் சூடிபிடித்து, அவற்றின் விளைவாகப் பலரும் பலவிதமாகவும் கதைகளைப் பரப்பிக் கொள்ளத் தொடங்கும் போது, இவர்களே அவை குறித்து, உத்தியோகபூர்வமான செய்திகளை அரசின் ஊடாக வெளியிடுவார்கள். இவ்வாறான உத்தியோகபூர்வமான செய்திகள், பறக்கும் தட்டுக்கள் குறித்த சரியான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குவது போன்ற தோரணையில் அமைந்திருக்கும். அதாவது, “பறக்கும் தட்டு, வேற்றுக்கிரகவாசிகள் என்று பரப்பப்படுபம் செய்திகள் எல்லாம், வதந்திகள்; கட்டுக்கதைகள்; ஆதாரமற்ற கற்பனைக் கதைகள்” என்று இவர்களே மக்களுக்கு விழிப்புணர்வை வழங்குவது போல், கருத்துக்களை வெளியிடுவார்கள்.
சுருக்கமாகக் கூறுவதென்றால், பறக்கும் தட்டுகள் குறித்த பொய்யான வதந்திகளை இவர்களே பரப்பி விட்டு, பிறகு அந்தப் பொய்களைப் பொய் தான் என்று இவர்களே மக்கள் மன்றத்தில் நிரூபித்துக் காட்டினார்கள். இந்த நாடகத்தின் விளைவாக, “பறக்கும் தட்டுக்கள் என்றாலே.. எல்லாமே சுத்தப் பேத்தல்; அவையெல்லாம் வெறும் வதந்திகள்; அவை எதிலும் உண்மையில்லை” என்ற ஓர் எண்ணத்தை மக்களது அடிமனதில் ஆழமாகப் பதிய வைத்து விட்டார்கள். மூளைச் சலவையின் ஒரு வடிவம் தான் இது.
இவ்வாறு மக்களில் அனேகமானோர் மூளைச்சலவை செய்யப்பட்ட பிறகு, எதிர்காலத்தில் இவர்களது பறக்கும் தட்டுக்கள் குறித்த உண்மையான கதைகள் தப்பித் தவறி வெளியில் கசிந்தாலும் கூட, அதனால் இவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில், அதையும் மக்கள் பார்த்த உடனேயே, பத்தோடு பதினொன்றாக, “இதுவும் வழமை போல் எவனோ பரப்பி விட்ட இன்னொரு கட்டுக்கதையாகத் தான் இருக்கும்” என்று நினைத்துக் கொண்டு வேறு வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
இது தான் இவர்களது திட்டமாக இருந்தது. உண்மையை மக்கள் கண்டறிந்து விடாத வண்ணம், அவர்களைத் திசைதிருப்புவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான் இன்றுவரை உலக அரங்கில் பரவியிருக்கும் பறக்கும் தட்டுக்கள் பற்றிய மையநீரோட்டக் கருத்துக்கள் எல்லாம் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், உண்மை தலைகீழானது என்பது சிந்திப்போருக்கு மட்டுமே புரியும்.
மீண்டும் விசயத்துக்கு வருவோம். இவ்வாறு பல இரகசிய செயல்திட்டங்கள் மூலம் அமெரிக்காவுக்கும், பறக்கும் தட்டுக்குரியவர்களுக்கும் இடையில் தொடர்பாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு இடையில் இன்னொரு சம்பவம் நடந்தது.
ஒரு சமயம் எதிர்பாராத விதமாக விண்வெளியில் இருந்து வழமைக்கு மாற்றமான விதத்தில் பறக்கும் தட்டுக்களைப் போன்ற வேறு வகையான சில ஊர்திகள் பூமியை நோக்கி நெருங்குவதைக் அவதானித்த அமெரிக்க இராணுவத்தின் விண்வெளி அவதான நிலையம், உரிய அதிகாரிகளுக்கு இதை அறிவித்தது. உடனே இந்தச் சம்பவம் மஜஸ்டிக் 12 இன் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்டது. சம்பவம் தொடர்ச்சியாக அவதானிக்கப் பட்டுக் கொண்டே வந்தது. இறுதியில் இந்த ஊர்திகள் பூமியின் எல்லையை அடைந்ததும், பூமத்தியக் கோட்டுக்கு நேர் மேலாக விண்வெளியில் அணிவகுத்து நின்று விட்டன. வழமையான பறக்கும் தட்டுக்களைப் போல் இவை இருக்கவில்லை. இதற்கு முன் மஜெஸ்டிக் குழுவினர் கண்டிராத ஒரு புது இனத்தைப் போலவே இவர்களது நடவடிக்கைகள் தோற்றமளித்தன.
ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கணனி மொழித் தொடர்பாடல்கள் ஏற்படுத்தப் பட்டன. இந்தத் தொடர்பாடல்களின் போது, பூமியின் எல்லைக்குள் வருவதற்கு மனிதர்களிடம் அவர்கள் அனுமதி கேட்டுத் தான் காத்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. உடனே மஜெஸ்டிக் குழுவினர் அனுமதி வழங்கியதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட ஓர் இடத்தையும் அவர்கள் தரையிறங்குவதற்காகத் தெரிவு செய்து, அவர்களுக்கு அறிவித்தார்கள். இது எந்த இடம் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.
குறிப்பிட்ட இடத்தில் அவர்களும் தரையிறங்க, மஜெஸ்டிக் அதிகாரிகளில் சில முக்கிய புள்ளிகளை உள்ளடக்கிய ஒரு குழுவும் அதே இடத்தை அடைய, இரண்டு தரப்பினரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதாகவும், சில தகவல் பரிமாற்றங்களை மேற்கொண்டதாகவும் பிற்காலத்தில் வெளியில் கசிந்த சில தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அவர்களுக்கிடையில் என்ன தகவல் பரிமாற்றம் நடந்ததென்பது பற்றிய விபரங்கள் எதுவுமே தெரியவில்லை.
இந்தச் சந்திப்பு நடைபெற்றதையடுத்து, வழமையான பறக்கும் தட்டுக்களில் வரக்கூடிய இனத்தவர்களுள் இன்னுமொரு புதிய இனத்தவர்கள் தாமாகவே வலிய வந்து, அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளைச் சந்தித்தார்கள். இவர்கள் உருவத்தில் மனித இனத்துக்கு நெருக்கமான உருவத்தை உடையவர்களாகவே இருந்தார்கள் என்றே சொல்லப்படுகிறது. இந்தச் சந்திப்பு நியூ மெக்சிக்கோ நகரில் இருக்கும் “டல்ஸி இராணுவத்தளம்” (Dulce Base) எனும் அமெரிக்க இரகசியத் தளத்திலேயே நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது, ஏற்கனவே விண்வெளியில் தொலைதூரத்திலிருந்து வந்து, அமெரிக்கர்களைச் சந்தித்து விட்டுச் சென்ற மற்ற வேற்றுக் கிரகவாசி இனத்தவரை நம்ப வேண்டாம் என்றும், அவர்கள் மிகவும் மோசமானவர்கள் என்றும், மனித இனத்தின் நலன் கருதி அவர்கள் இங்கு வந்து விட்டுச் செல்லவில்லையென்றும், தப்பான உள்நோக்கத்துடனேயே அவர்கள் வந்து நடித்து விட்டுச் சென்றதாகவும் இந்தப் புதிய இனத்தவர்கள் மஜெஸ்டிக் குழுவினரை எச்சரித்தனர். மேலும், அவர்களோடு எந்த விதமான நட்புறவுகளையும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் இவர்கள் அறிவுறுத்தினர்.
அது மட்டுமல்லாமல், வின்வெளியிலிருந்து வந்த மற்ற வேற்றுக்கிரகவாசி இனத்தவரோடு எந்தவிதமான தொடர்புகளையும் இனிமேல் வைத்துக்கொள்ளாமல் இருப்பதாக அமெரிக்க அரசு வாக்களித்தால், அதற்குப் பகரமாக, மனித இனத்தின் ஆன்மீக வளர்ச்சியை இன்னும் மேம்படச் செய்யும் விதமான பல மறைவான ஞானங்களையும், தொழினுட்பங்களையும் மனிதர்களுக்குக் கற்றுத் தரத் தாம் தயாராக இருப்பதாகவும் இந்தப் புதிய வேற்றுக்கிரக வாசிகள் அமெரிக்காவோடு பேரம் பேசினர். இந்த நிபந்தனைக்கு அமெரிக்கா ஒத்துக்கொள்வதாக சொன்ன உடனேயே, மேலும் ஒரு நிபந்தனையை அத்தோடு மேலதிகமாக அவர்கள் முன்வைத்தார்கள்.
அதாவது, அமெரிக்காவும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளும் ஒருமித்து, தம் வசம் இருக்கும் எல்லா அணு ஆயுதங்களையும், அணு சக்தி சார்ந்த தொழினுட்பங்களையும் நிர்மூலமாக்க வேண்டுமென்பது தான் இந்தப் புதிய நிபந்தனை. இந்த நிபந்தனையை நியாயப்படுத்துவதற்கு அவர்கள் முன்வைத்த காரணம், பூமியில் இருக்கக் கூடிய அனைத்து ஜீவராசிகளது இருப்புக்கும், இயற்கை வளங்களுக்கும், மற்றும் மொத்தப் பூமியின் இயற்கைச் சமநிலைக்குமே இவ்வாறான அணு ஆயுதங்கள் மாபெரும் அச்சுருத்தலாக இருக்கிறது என்பது தான்.
மேலும், பல்லாயிரம் வருடங்களாக மனித இனத்தின் வளர்ச்சியையும், நடவடிக்கைகளையும் மறைவான ஒரு பரிமாணத்திலிருந்து தாம் தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும், மனித இனம் என்பது அனுபவ அறிவில் மிகவும் சிறுபிள்ளைத் தனமான ஓர் இனம் என்றும், ஆன்மீக ரீதியாக மனித இனம் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்றும், அவ்வாறான பெறுமதி மிக்க முதிர்ச்சியான பல ஞானங்களைத் தாமே கற்றுத் தருவதாகவும் இந்த வேற்றுக்கிரக வாசிகள் குறிப்பிட்டார்கள்.
அத்தோடு சேர்த்து, இன்னும் சில வேண்டுகோள்களையும் அமெரிக்கர்களிடம் முன்வைத்தார்கள். அதாவது, மனித இனத்தின் உடல், மற்றும் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் தாம் சில மருத்துவ ஆய்வுகளை மனித DNA மட்டத்தில் மேற்கொண்டு வருவதாகவும், அந்த ஆய்வுகளையொட்டிய சில பரிசோதனைகளுக்கு அவ்வப்போது சில மனிதர்கள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்ட இவர்கள், இந்தப் பரிசோதனைகளின் நிமித்தம் தமக்குத் தேவைப்படும் சமயங்களில் தாம் விரும்பும் சில அமெரிக்கப் பிரஜைகளை யாருக்கும் தெரியாமல் கடத்திக் கொண்டு செல்வதற்கும் அனுமதி கேட்டார்கள்.
அதாவது, தமக்குத் தேவைப்படும் போதெல்லாம் சில மனிதர்களைத் தாம் கடத்திச் செல்ல விரும்புவதாகவும், இவ்வாறு சில குடிமக்களைக் கடத்திச் செல்வதைப் பெரிதாகக் கண்டுகொள்ள வேண்டாம் என்பது தான் இவர்களது வேண்டுகோளாக இருந்தது. ஒருவேளை இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் பிரபலமடையும் வாய்ப்புகள் ஏற்பட்டாலும், அதை மூடி மறைக்குமாறு அமெரிக்க அரசிடம் இவர்கள் கோரினார்கள்.
மேலும், இது குறித்து அரசாங்கம் கவலை கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லையென்றும் இவர்கள் கூறினார்கள். ஏனெனில், பரிசோதனைகள் முடிந்த பின், கடத்தப்பட்ட மனிதர்களை, எந்த இடத்தில் கடத்தப் பட்டார்களோ, அதே இடத்தில் மீண்டும் பத்திரமாகக் கொண்டு வந்து விட்டுச் செல்வதாகவும் அமெரிக்க அரசுக்கு இவர்கள் உத்தரவாதம் அளித்தார்கள்.
இவ்வாறு இந்த வேற்றுக்கிரக வாசிகள் முன்வைத்த எல்லா நிபந்தனைகளுக்கும், மற்றும் வேண்டுகோள்களுக்கும் அமெரிக்கா இணங்கியது; ஒன்றேயொன்றைத் தவிர. அதுதான் அணு ஆயுதங்களை நிர்மூலமாக்கும் செயல் திட்டம். இதற்கு மட்டும் அமெரிக்கா இணங்கவில்லை.
மேலும், ஆன்மீக மேம்படுத்தல்களை வழங்குவது மட்டும் போதாதென்றும், அவர்களது பறக்கும் தட்டுக்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது பற்றிய தொழினுட்ப அறிவையும் தமக்குக் கற்றுத்தர வேண்டும் என்றும் மேலதிகமாக இன்னொரு நிபந்தனையையும் அமெரிக்கா முன்வைத்தது. இதற்கு வேற்றுக் கிரகவாசிகள் ஒத்துக் கொண்டனர். ஆனால், அந்தத் தொழினுட்பங்களை ஒரேயடியாகக் கற்றுத் தர முடியாதென்றும், படிப்படியாகத் தான் அதைத் தம்மால் கற்றுத் தர முடியும் என்றும், அதற்குக் கொஞ்ச காலம் செல்லும் என்றும் தெரிவித்தார்கள்.
இறுதியில் இரு சாராரும் இணக்கப்பாட்டுக்கு வந்து ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும், இரு தரப்பினருக்கும் இடையில் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் உத்தியோகபூர்வமான தூதரகங்கள் அமைக்கப்பட்டன. நியூ மெக்சிக்கோவிலிருக்கும் டல்சி இராணுவத் தளத்திலும், மற்றும் நிவாடா மானிலத்தில் இருக்கும் “ஏரியா 51” எனும் இரகசிய இராணுவத் தளத்திலும் பல நூறு அடிகள் ஆழத்தில் நிலத்துக்கு அடியில் இருக்கும் இரகசியக் கட்டடத் தொகுதிகளில் வேற்றுக்கிரகவாசிகளின் தூதரகங்கள் அமைக்கப் பட்டன. இந்தத் தூதரகங்களில் வேற்றுக் கிரகவாசிகளின் சில பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாகத் தங்கியிருந்து, ஒப்பந்தங்கள் குறித்த விவகாரங்களை நடைமுறைப் படுத்தும் பொருட்டு நியமிக்கப் பட்டனர்.
வாக்களித்த பிரகாரம் வேற்றுக் கிரகவாசிகள் பறக்கும் தட்டுக்கள் குறித்த தொழினுட்பங்களையெல்லாம் ஒன்று விடாமல் தமக்குக் கற்றுத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அமெரிக்க அரசாங்கம், வேற்றுக் கிரகவாசிகளின் தேவைகளுக்கெல்லாம் தலையாட்ட ஆரம்பித்தது. நாடு முழுவதும் பரவலாக இந்த வேற்றுக் கிரகவாசிகள் மூலம் பலநூற்றுக் கணக்கான மனிதர்கள் கடத்தப்பட்ட போது கூட, அதையெல்லாம் கண்டும் காணாதது போல் அரசாங்கம் இவ்வாறான சம்பவங்களையெல்லாம் முடிந்த வரை மூடி மறைத்து வந்தது.
இந்தச் சம்பவங்களை உறுதிப்படுத்தக் கூடிய சில ஆதாரங்களைப் பின்வரும் லின்க்குகளில் பார்க்கலாம்:
https://www.youtube.com/watch?v=zHBevrpzLkg https://www.youtube.com/watch?v=Msj-V9cNpcQ https://www.youtube.com/watch?v=gYEKXJ0ZJ2Q
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 18: மனிதர்களது பறக்கும் தட்டு v/s, வேற்றுக்கிரகவாசிகளது பறக்கும் தட்டு
|