பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
Episode 09: உண்மை 5 (சக்தியாலான பிரபஞ்சம்):
Episode 10: ----------------- #JinnEpisode10
இதுவரை, இஸ்லாத்தின் பார்வையில் சரியான ஞானம் என்று சரிகாணப்படத் தகுந்த ஒருசில விஞ்ஞானக் கோட்பாடுகளை நாம் பார்த்தோம். இவ்வாறான ஞானத்தின் முழுமை பெற்ற வடிவத்தை ஆதியில் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான் என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனம் கூறுகிறது:
“அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!'' என்று கேட்டான்.” – (2:31)
ஆதி மனிதனுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த இந்த உண்மையான ஞானம் காலப்போக்கில் இப்லீஸ் மூலம் களங்கப்படுத்தப்பட்டது. உண்மையான ஞானத்ஹ்டோடு இப்லீஸ், பித்தலாட்டங்களின் அடிப்படையிலான தனது சொந்த சரக்கையும் கலப்படம் செய்து, அதையே மறைவான ஞானம் என்ற போர்வையில் தனது பரிவாரங்கள் வாயிலாக மனித இனத்துக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறான் என்பதை, வரலாறு நெடுகிலும் முளைத்த பல வழிகெட்ட சித்தாந்தங்களையும் உற்று நோக்கும் போது தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த நெறி தவறிய ஞானத்தையே தூய சத்தியம் என்று நம்பி, இப்லீஸைப் பின்பற்றுவோர் பிற்காலத்தில் இந்த மறைவான ஞானங்களின் அடிப்படையில் பல வழிகெட்ட சித்தாந்தங்களை உருவாக்கிக் கொண்டனர். அது மட்டுமல்லாமல், அவற்றைப் பரப்பும் நோக்கில் பல இரகசிய இயக்கங்களையும் தோற்றுவித்திருக்கிறார்கள் என்பது உலக வரலாறுகளைப் படிக்கும் போது புரிகிறது.
இதன் விளைவாக “மறைவான ஞானங்களின் அடிப்படையில் பல படித்தரங்கள் மூலம் மனிதன் இறைவனின் ஸ்தானத்தை அடையலாம்” என்ற கருப்பொருளில் பல வழிகெட்ட கொள்கைகள் இறைவேதங்களுக்குள்ளும் ஊடுறுவின. இன்றிருக்கும் வழிகேடுகள் அனைத்துக்கும் மூல வேர் இது தான்.
இதை இலகுவாகப் புரிந்து கொள்ளும் விதமாக ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம்:
உதாரணத்துக்கு இந்தப் பிரபஞ்சம் உருவாக்கப்பட்ட பெருவெடிப்பு நிகழ்வை இந்த இரண்டு வகையான ஞானங்களின் அடிப்படையிலும் விளங்கும் போது வழிகேடு எவ்வாறு உருவானதென்பது புரியும்:
உண்மையான ஞானத்தின் அடிப்படையில் இந்தப் பிரபஞ்சம் என்பது, “குன்” எனும் அல்லாஹ்வின் ஒரு வார்த்தை மூலம் வெளிப்பட்ட தூய சக்தியிலிருந்து முளைத்து, விரிவடைந்திருக்கும் வடிவங்கள் மட்டுமே. இது அல்லாஹ்விடமிருந்து நேரடியாக வெளிப்பட்ட சக்தி என்பதால், தூய வடிவில் ஆங்காங்கே பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் இவ்வாறான சக்திச் சொட்டுக்களில் சிலவேளை அல்லாஹ்வுக்கு நெருக்கமான சாயல் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது நமது யதார்த்தத்தை மீறிய அளவுக்கு இவ்வாறான சக்திகள் அபாரமானவையாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
அவ்வாறான சாயல் ஏதும் இருந்தால், அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, இந்த சக்தி தான் அல்லாஹ் என்று ஒருபோதும் அர்த்தம் கொண்டு விடக் கூடாது, அவ்வாறு அர்த்தம் கொண்டால், அது வழிகேடுகளுக்கே வழிவகுக்கும். அல்லாஹ்விடமிருந்து இந்த சக்தி வெளிப்பட்டதால் தான் இவ்வாறான சக்திகளில் அபார ஆற்றல்கள் இருக்கலாமே தவிர, இது அவன் என்பதால் அல்ல.
இந்த மொத்தப் பிரபஞ்சமும் அல்லாஹ்விடமிருந்து வெளிப்பட்ட சத்தம் எனும் சக்தியின் ஒரு துளி மட்டுமே. அல்லாஹ்வின் ஆற்றலோடும், மகத்துவத்தோடும் ஒப்பிடும் போது, இந்த மொத்த சக்தியும், வாயிலிருந்து உமிழும் ஒரு துளி எச்சிலை விடவும் அற்பமானது. அல்லாஹ் எனும் அந்தப் பரம்பொருளோடு ஒப்பிடுகையில் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வெறும் தூசு மட்டுமே. இந்தத் தூசை வைத்து, இதைப் படைத்த அவனை அளக்கவோ, அடையவோ முடியாது. இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதன் சரியான அனுகுமுறை இந்த அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.
அதாவது, எந்தெந்தப் பொருளுக்கு என்னென்ன அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அந்தத்த அளவில் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை மீறிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதும் தவறு; அதே போல், உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்காமல், குறைத்து மதிப்பிடுவதும் தவறு. இது தான் சரியான புரிதல்.
இனி, பிரபஞ்சம் பற்றிய இதே விடயத்தை ஷைத்தானிய கலப்படத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வழிகெட்ட மறைவான ஞானம் எவ்வாறு விளக்குகிறது என்பதைப் பார்ப்போம். ஷைத்தானிய ஞானத்தின் அடிப்படையில் முளைத்த சித்தாந்தத்தின் மையக்கருத்து இது தான்:
இறைவனிடமிருந்து வெளிப்பட்ட சக்தியின் மூலம் தான் இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டிருக்கிறது. பிரபஞ்சம் படைக்கப்பட்ட பின் அபாரமான இந்த சக்தியானது கண்ணுக்குத் தெரியாத மறைவான ஒரு வடிவத்தில் எம்மைச் சுற்றி எங்கும் வியாபித்திருக்கிறது.
இந்த சக்தி அபாரமானது; அற்புதமானது; பல அதிசயங்களை நிகழ்த்த வல்லது. ஏனெனில், இறைவனிடமிருந்து நேரடியாக வெளிப்பட்ட சக்தி இது. இந்த “மறைவான சக்தி” இறைவனிடமிருந்து வெளிப்பட்டதால், இதில் இறைத்தன்மை நிறைந்திருக்கிறது. உண்மையில் இந்த சக்தியென்பது இறைவனின் ஒரு பகுதி. இறைவன் எனும் பரம்பொருள் உருவாக்கப் பட்டிருப்பதே இந்த வகையான சக்தியால் தான்.
ஆதலால், இந்தத் தூய சக்தியை யாரால் தீண்டவோ, அடையவோ முடிகிறதோ, அதன் மூலம் அவரால் இறைவனையே அடைய முடியும். அதற்கென்று ஒரு தனியான வழிமுறை இருக்கிறது.
இந்த மறைவான சக்தியானது, சத்தம் எனும் அதிர்வு அலைகளின் அடிப்படையிலான சக்தி. இந்த சக்திக்கென்று ஒரு குறிப்பிட்ட, தனித்துவமான அதிர்வெண் (frequency) இருக்கிறது. அந்த அதிர்வெண்ணுக்குப் பொருந்தக் கூடிய அதிர்வு வீதத்தில் நமது வாயிலிருந்து கூட சில வகையான சத்தங்களை வெளிப்படுத்தலாம். உதாரணத்துக்கு, தியான நிலையில் அமர்ந்து கொண்டு, “ஓம்..!” எனும் மந்திரத்தை அடித்தொண்டையிலிருந்து தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அதிலிருந்து வெளிப்படும் சத்தத்தைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான மந்திர உச்சாடனங்கள் மூலம் நமது வாயிலிருந்து வெளிப்படும் சத்தம், பிரபஞ்சத்தின் மறைவான சக்தியின் அதிர்வெண்களோடு சரியாகப் பொருந்திப் போகத் தொடங்கும் போது நாமும், இறைவனின் மறைவான சக்தியும் இரண்டறக் கலந்து விடுகிறோம். இதன் ஊடாக நாமும் படிப்படியாக இறைவனின் ஸ்தானத்தை அடைந்து விடுகிறோம்.
இது தான் ஷைத்தான் மூலம் உருவாக்கப் பட்டிருக்கும் வழிகெட்ட மறைவான ஞானத்தின் கருப்பொருள். உண்மையான ஞானத்தில் ஷைத்தான் எப்படியெல்லாம் பித்தலாட்டங்களைக் கலந்திருக்கிறான் என்பதை இந்த ஒரு சிறிய உதாரணத்தின் மூலமே நாம் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
பொய்யையும், பித்தலாட்டங்களையும் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கும் இவ்வாறான ஷைத்தானிய மறைஞானங்களை உண்மையென்று நம்பி, இவற்றின் மூலம் வழிகெட்ட மனித சமூகங்கள் இந்த உலக வரலாற்றில் ஏராளம் ஏராளம்.
பலதெய்வ வழிபாடுகளை அடிப்படையாகக் கொண்டு இன்றிருக்கும் அத்தனை மதங்களும் இந்த ஷைத்தானிய சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் நிறுவப் பட்டிருக்கின்றன. அத்தோடு இந்த வழிகேடு நின்றுவிடவில்லை; நபி (ஸல்) அவர்களது காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இஸ்லாத்தினுள்ளும் இதே ஷைத்தானிய சித்தாந்தம் “ஸூஃபி” கொள்கை என்ற பெயரில் நுழைந்தது.
“ஸூஃபி” கொள்கையின் அடித்தளத்தை அலசி ஆய்வு செய்யும் யாராக இருந்தாலும், அதன் அடித்தளத்தில் ஒளிந்திருக்கும் இதே ஷைத்தானிய சித்தாந்தத்தைத் தெளிவாக இனம்காணலாம்.
பலதெய்வக் கோட்பாட்டையுடைய பல மதங்களைச் சேர்ந்த சாமியார்களும், துறவிகளும் தவம் / தியானம் செய்வதன் மூலமும், மந்திர உச்சாடனங்களைத் தொடர்ச்சியாக உச்சரிப்பதன் மூலமும், துறவரத்தின் மூலமும் எப்படியெல்லாம் இறைவனின் ஸ்தானத்தை அடைவதற்கு முயற்சிக்கிறார்களோ, அதே அடிப்படையில் தான் “ஸூஃபி” சன்னியாசிகள் (நமது பாஷையில் “தர்வீஷ்” / “Bபாவா” / “ஸாஹிபு”) கூட பல்வேறு பட்ட தியானங்கள் மூலமும், போதைப் பொருள் பாவனைகள் மூலமும், மந்திரங்களைப் போல் சில உச்சாடனங்களைத் தொடர்ச்சியாக உச்சரித்துக் கொண்டிருப்பதன் மூலமும் “ஃபனா” எனும் சூன்ய நிலையை அடைய முயற்சிப்பதைப் பார்க்கலாம். “ஸூஃபி”களது பார்வையில் “ஃபனா” எனும் இந்த சூன்ய நிலை தான், இறைவனோடு மனிதன் இரண்டறக் கலந்து, இறைவனாகவே மாறும் நிலை.
ஷைத்தான் மூலம் இந்த மார்க்கத்தினுள் நுழைந்த இவ்வாறான முஸீபத்துக்கள் பற்றியெல்லாம், அவ்லியாக்களின் கிருபையை நாடி அன்றாடம் கபுறுகளைத் தரிசிக்கும் கீழ்மட்ட “ஸூஃபி”களான சாதாரண தர்கா வழிபாடு செய்யும் அனேகமான பொதுமக்களுக்குத் தெரியாது.
இஸ்லாமிய மார்க்கத்தில் தாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு இவர்கள் இருப்பதோ ஷைத்தானிய மதத்தில் தான் என்ற உண்மை இவர்களுக்குத் தெரியாது. இந்த உண்மையை உணர்த்தும் விதமாக யாராவது ஏகத்துவவாதிகள் இவர்களுக்கு உபதேசம் செய்தாலும், அவற்றையும் இவர்கள் நம்புவது கிடையாது. காரணம், இவர்களது ஷெய்கு மார்கள் மீது இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை அவ்வளவு வலுவானது; அசைக்க முடியாது.
உயிரைக் கூட பணயம் வைக்கும் அளவுக்கு இவர்களது ஷெய்கு மார்கள் மீது இவர்களுக்கு இவ்வளவு நம்பிக்கை ஏற்படக் காரணம் என்ன? அல்லாஹ்வின் அனுமதியோடும், அவ்லியாக்களின் சக்தியோடும் இவர்களது ஷெய்கு மார்கள் அவ்வப்போது நிகழ்த்திக் காட்டும் சில அற்புதங்களை வைத்துத் தான் இவர்கள் இந்த ஷெய்கு நாயகங்களை இறைத்தன்மை கொண்டவர்களென்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஷெய்கு நாயகங்கள் செய்து காட்டும் அற்புதங்களில் அனேகமானவை போலி அற்புதங்களாக இருந்தாலும், ஒருசில அற்புதங்கள் உண்மையானவை; மனித சக்திக்கு அப்பாற்பட்டவை. இவ்வாறான ஒருசில அற்புதங்களே இந்த ஷைத்தானிய சித்தாந்தங்களை அழியாமல் காப்பாற்றி, இந்த உம்மத்துக்கு மத்தியில் இன்றுவரை நிலைபெறச் செய்திருக்கின்றன. இவ்வாறான அமானுஷ்யமான அற்புதங்களுக்குப் பின்னாலும் ஒளிந்திருப்பது ஒரு சிறிய இரகசியம் தான். அதையும் இங்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விடலாம்.
உண்மையில் இவர்கள் நம்பிக் கொண்டிருப்பதைப் போல் இவர்களது ஷெய்கு நாயகங்கள் செய்து காட்டும் அற்புதங்கள் எதுவும் அல்லாஹ்வின் அனுமதியோடு அவ்லியாக்கள் வாயிலாக செய்து காட்டப்படும் உண்மையான அற்புதங்கள் அல்ல. மாறாக, இவர்கள் சிரமேற்கொண்டு மதிக்கும் ஒவ்வொரு ஷெய்கு நாயகத்துக்கும், இப்லீஸின் பட்டாளத்தைச் சேர்ந்த சில ஷைத்தானிய ஜின்களுக்கும் இடையில் இரகசியத் தொடர்புகள் இருக்கின்றன.
இந்த ஷெய்கு மார் நிகழ்த்தும் அற்புதங்களைச் செய்வது, இவர்களோடு கூடவே இருக்கும் இந்த ஷைத்தானிய ஜின்கள் தாம். உண்மையில், இந்த ஷெய்கு மார்களுக்கும் ஷைத்தானிய ஜின்களுக்கும் இடையில் இருக்கும் இந்தத் தொடர்பு கூட ஒரு வகையான ஒப்பந்தம் தான். இந்த ஒப்பந்தத்தில் இரண்டு தரப்பினருக்கும் தனித்தனி இலாபம் இருக்கிறது.
ஒருபுறம் இவ்வாறான அற்புதங்களை நிகழ்த்துவதன் மூலம், இவற்றை நம்பி ஏமாறும் பல லட்சக் கணக்கான முஸ்லிம்களைக் குறுகிய காலத்துக்குள் இணைவைப்பாளர்களாகவும், இறைமறுப்பாளர்களாகவும் ஆக்கி, நரகில் தள்ளும் இப்லீஸின் திட்டம் இலகுவாக நிறைவேறுகிறது. ஷைத்தானிய ஜின்களுக்கு இதில் கிடைக்கும் லாபம் இது தான்.
இன்னொரு புறம், ஜின்களின் உதவியோடு இவ்வாறான அற்புதங்களை நிகழ்த்துவதன் மூலம் குறிப்பிட்ட ஷெய்கு நாயகங்கள் மறுமை வாழ்வை முற்றாக இழந்தாலும், இம்மை வாழ்வில் சொர்க்கலோகத்தைப் போன்ற பல சுகபோகங்கள் அவர்களுக்கு இலகுவாகக் கிடைக்கின்றன. காணிக்கைகளாகப் பணம் வந்து காலடியில் கொட்டும்; கடவுளின் ஸ்தானத்தில் வைத்து மக்கள் இவர்களைப் போற்றிப் புகழ்வார்கள்; இவர்கள் ஆசைப்படுவதையெல்லாம் அவர்களே கொண்டு வந்து காலடியில் கொட்டுவார்கள்; திரைமறைவில் விதவிதமான பெண்களோடும், சிறுவர்களோடும் சுகபோகம் அனுபவிக்கும் வாய்ப்புக்களுக்கும் குறைவிருக்காது... இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். இவை தாம் இதில் ஷெய்கு மாருக்குக் கிடைக்கும் லாபம்.
இந்த இரகசியங்கள் எதுவுமே அறியாத இவர்களது பக்தர்கள் தான் பாவம். அல்லாஹ் தான் இவர்களது கண்களைத் திறக்க வேண்டும்.
போதும்; இனி மீண்டும் விஞ்ஞானத்துக்கு வருவோம்:
ஏற்கனவே நாம் பார்த்த குவாண்ட்டம் கோட்பாடுகளில் அடிப்படையில் கூட, இந்தப் பிரபஞ்சத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஒளியின் வேகத்தைத் தாண்டிய, பார்வைப் புலனுக்கு எட்டாத சக்திகள் தாம். கண்ணுக்குத் தெரியாத இந்த அபார சக்திகளைப் பற்றி விஞ்ஞானிகள் கூட இன்னும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவில்லை. அவர்களுக்கு மத்தியிலேயே இதுகுறித்து இதுவரை கருத்து வேறுபாடுகள் நிலவிக் கொண்டு தான் இருக்கின்றன.
ஒரு சாரார் இந்த வகையான சக்தியை “இருண்ட பொருள்” (Dark Matter) என்று கூறிக்கொண்டிருக்கும் போது இன்னொரு சாரார் இதை “இருண்ட சக்தி” (Dark Energy) என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாதப்படி, இந்த இருண்ட சக்தியின் ஆதிக்கத்தால் தான் இந்தப் பிரபஞ்சமே விரிந்து கொண்டிருக்கிறது.
இந்த இருசாராரின் வாதங்களில் எது சரி, எது பிழையென்பது ஒருபுறமிருக்க, மொத்தத்தில் இரு சாராரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விடயம் தான், மொத்தப் பேரண்டத்தில் 94 சதவீதத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது இந்த இருண்ட சக்திகளே என்ற உண்மை. மிச்சமிருக்கும் 6 சதவீதத்தில் தான் நமது கண்ணுக்குத் தெரியும் மொத்தப் பிரபஞ்சமுமே இருக்கிறது.
பார்வைக்கோ, கருவிகளுக்கோ புலப்படாத இந்த இருண்ட சக்திகளைக் காலத்துக்குக் காலம் வரலாற்றில் ஒவ்வொரு சாராரும் பல்வேறு பெயர்களில் அழைத்திருக்கிறார்கள் என்பதை அவதானிக்க முடிகிறது. உதாரணத்துக்கு “நான்காவது பரிமானம்”, “ஆவி உலகம்”, “ஸ்கேலார் அலைகள்” (Scalar Waves), “ஈத்தர்” (Aether) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இதில் ஸ்கேலார் அலைகள், மற்றும் ஈத்தர் பற்றி அடுத்த எபிசோடில் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 11: ஸ்கேலார் அலைகள் |