buy prozac in uk can you buy prozac over the counter uk
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
Episode 06: “சக்திச்சொட்டுப் பொறியியல்” (Quantum Mechanics) அறிமுகம்: -
Episode 07: சக்திச்சொட்டுச் சிக்கல் (Quantum Entanglement):
குவாண்ட்டம் பொறிமுறையின் இன்னொரு புரட்சிகரமான கோட்பாடு தான் “சக்திச்சொட்டுச் சிக்கல்” கோட்பாடு (Quantum Entanglement Theory). இந்தக் கோட்பாட்டின் சாராம்சம் என்னவென்றால்...
இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே ஜோடி ஜோடியாகத் தான் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு ஜோடி துகள்களை எடுத்து, அதில் ஒரு துகளை நாம் அளப்பதன் மூலமோ, அல்லது வேறேதும் செயல் மூலமோ ஏதும் ஒரு மாற்றத்தை ஏற்பட்டால், அந்த மாற்றங்களால் குழம்பிய சமநிலையைச் சீர்செய்யும் விதமாக, இந்த மாற்றங்களுக்கு நிகரான எதிர் மாற்றங்கள் அதே கணத்தில் அந்த ஜோடியின் மற்ற துகளில் ஏற்படும். இந்த எதிர் மாற்றம் நிகழ்வதற்கு அந்த ஜோடியின் இரண்டு துகள்களும் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
உதாரணத்துக்கு, ஒரு ஜோடி துகள்களை எடுத்து, அதில் ஒரு துகளை இங்கிருக்கும் ஒரு ஆய்வு கூடத்தில் வைத்து விட்டு, மற்றத் துகளைப் பிரித்துக் கொண்டு போய் செவ்வாய்க் கிரகத்தில் வைத்து விட்டு வந்து, இங்கிருக்கும் துகளில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தினால் கூட, அதே நொடிப்பொழுதில் பல கோடி மைல்களுக்கு அப்பால் எந்தத் தொடர்பும் இல்லாமல் செவ்வாய்க் கிரகத்தில் தனித்திருக்கும் அதன் மற்ற ஜோடியில் துல்லியமான எதிர் மாற்றம் ஏற்படும். செவ்வாய்க் கிரகத்தையும் தாண்டி, ஒளியாண்டுகள் தூரத்துக்கு அப்பால் அதை வைத்து விட்டு வந்தாலும், அதே மாற்றம் நிகழும்.
இதைப் புரிந்து கொள்வதற்கு இலகுவாக ஒரு நடைமுறை உதாரணத்தோடு எளிய நடையில் சொல்வதென்றால், ஒரு தங்க மோதிரத்தையும், தங்கக் காசையும் இணை பிரியாத ஜோடிகளாகக் கற்பனை செய்து கொள்வோம். தங்க மோதிரத்தை நம் வீட்டில் வைத்து விட்டு, அதன் ஜோடியான தங்கக் காசை மட்டும் பிரித்துத் தனியே கொண்டு சென்று, ஆயிரம் ஒளியாண்டுகள் தூரத்துக்கு அப்பால் இருக்கும் ஒரு வேற்றுக் கிரகத்தில் வீசி விட்டு வந்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.
இப்போது வீட்டிலிருக்கும் தங்க மோதிரத்தை நாம் உருக்கி, அதை ஒரு தங்கக் காசாக மாற்றினால், அங்கு மற்றக் கிரகத்தில் வீசப்பட்ட தங்கக் காசு அதே நொடியில் தங்க மோதிரமாக மாறி விடும்.
என்ன தான் எந்தத் தொடர்பும் இன்றிப் பிரித்து வைத்தாலும், அறிவுக்கு எட்டாத ஏதோ ஒரு பந்தம் ஒவ்வொரு ஜோடி துகள்களுக்கும் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கின்றது என்ற இந்த உண்மையை குவாண்ட்டம் பொறியியல் தான் கண்டுபிடித்தது. மேலும், இந்த உண்மையைப் பல பரிசோதனைகள் மூலம் உலகுக்கு நிரூபித்தும் காட்டியது.
இது எப்படி சாத்தியம்? என்று பலரும் மூக்கின் மேல் விரலை வைக்கத் தொடங்கி விட்டனர். கேள்விக் கணைகள் நாலாபக்கமும் இருந்து குவாண்ட்டம் கோட்பட்டு விஞ்ஞானிகளை நோக்கித் தொடுக்கப்பட்டன. இதற்கும் அவர்கள் சொன்ன பதில்: “ஏன் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், இப்படித் தான் உலகம் இயங்குகிறது. வாயை மூடிக்கொண்டு கணித்துக் கூற மட்டும் தான் எம்மால் முடியும்” என்பது தான்.
துகள் ஜோடிகளுக்கு இடயில் நடக்கும் இந்த விசித்திரத் தொடர்பானது, விடை காண முடியாத ஒரு சிக்கலாக இருப்பதால், இதற்கு “சக்திச்சொட்டுச் சிக்கல்” (Quantum Entanglement) என்ற பெயர் வழங்கப் பட்டது.
இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னெவென்றால், பல ஒளியாண்டுகளைத் தாண்டிய தூரமாக இருந்தாலும், ஒரே கணத்தில் துகள் ஜோடிகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றம் நிகழ்வது இங்கு உறுதி செய்யப் படுகிறது. இதை எளிய நடையில் சொல்வதென்றால், ஒளியின் வேகத்தை விடப் பல மடங்கு அதிக வேகத்தில் துகள்களுக்கு இடையில் இந்தத் தகவல்கள் அலைகள் மாறி மாறிப் பயணிக்கின்றன என்பது தான். இதன் மூலமும் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடும், ஒளியைப் பற்றிய ஐன்ஸ்டைனின் நிலைபாடுகளும் முற்றிலும் பொய்யென்பது நிரூபனமாகிறது.
எதற்கெடுத்தாலும் குவாண்ட்டம் கோட்பாட்டை நையாண்டி செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்த அல்பர்ட் ஐன்ஸ்டைன், இந்த “சக்திச்சொட்டுச் சிக்கல்” கோட்பாட்டை எப்படியாவது பொய்ப்பித்தே ஆக வேண்டுமென்று எவ்வளவோ முயற்சித்தார். ஆனால், கடைசி வரை அவரால் முடியவில்லை. அவர்களது எந்த விஞ்ஞானத்தாலும் துகள் ஜோடிகளுக்கு இடையில் நடக்கும் இந்த அமானுஷ்ய தொடர்பாடலை பொய்யென்று நிரூபித்துக் காட்டவே முடியவில்லை.
கடைசியில் வேறு வழியின்றி இந்தக் கோட்பாட்டை ஒத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் ஐன்ஸ்டைன் கூட தள்ளப்பட்டார். இருந்தாலும் வழமை போல் இந்த உண்மையையும் நையாண்டி செய்வதை அவர் நிறுத்தவில்லை “தொலைதூரத்தில் அமானுஷ்ய நடவடிக்கை” (Spooky Action at a Distance) என்று முனுமுனுத்தார்.
ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குவாண்ட்டம் கோட்பாடுகளும், ஐன்ஸ்டைன் சார்ந்த கோட்பாடுகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டே இருந்தன. ஏனெனில் இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான கொள்கைகளாக இருந்தன.
ஒரு பக்கம் ஐன்ஸ்டைன் தனது “சார்பியல் கோட்பாடு” தான் சரியென்று வாதிட்டுக் கொண்டிருந்தார். குவாண்ட்டம் கோட்பாட்டின் “நிச்சயமற்ற சாத்தியக்கூற்றுக் கோட்பாடு” பிழையென்றும், எல்லாமே நிச்சயமானவை தாம் என்றும் ஐன்ஸ்டைன் வாதிட்டுக் கொண்டிருந்தார். “சாத்தியக்கூறுகள் எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. ஒவ்வொன்றும் அந்தந்த இடத்தில் நிச்சயமாக இருக்க வேண்டும். நான் பார்க்கும் பொழுது மட்டுமல்ல; பார்க்காத போதும் சந்திரன் அதே இடத்தில் தான் இருக்க வேண்டும்.” என்று இறுமாப்போடு கூறினார்.
இன்னொரு பக்கம் குவாண்ட்டம் கோட்பாடு தான் சரியான விஞ்ஞானம் என்று டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியலாளர் “நீல்ஸ் போர்” (Niels Bohr) வாதிட்டுக் கொண்டிருந்தார். எதுவுமே நிச்சயமில்லை; எல்லாமே சாத்தியக்கூறுகள் தாம். இவற்றைத் தீர்மானிப்பது நாமோ, அல்லது அந்தந்தப் பொருட்களோ அல்ல; இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஓர் அமானுஷ்ய சக்தி தான் என்ற தொனிப்பொருளில் இவரது வாதங்கள் இருந்தன.
இருவரும் நேருக்கு நேர் விவாதித்து இதில் யார் சரியென்று பார்ப்போம் என்று ஐன்ஸ்டைன் சவால் விட்டார். நீல்ஸ் போர் சவாலை ஏற்றுக் கொண்டார். விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டது.
1927ம் ஆண்டு பெல்ஜியம் நாட்டில் “சோல்வரி” மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் தலசிறந்த 29 விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டின் முத்தாய்ப்பாக அமைந்தது இந்த விவாதம் தான். விவாதம் காரசாரமாக நடந்து கொண்டிருக்கும் போது குவாண்ட்டம் கோட்பாட்டின் நிச்சயமற்ற சாத்தியக்கூறுகளை ஏளனம் செய்யும் விதமாக ஐன்ஸ்டைன் “பகடைக் காய்களை உருட்டி, சாத்தியக்கூறு பார்த்து விளையாடுவதைத் தவிர கடவுளுக்கு வேறு வேலை இல்லை போலும்” என்று நையாண்டியாகப் பேசினார். இதற்கு நீல்ஸ் போர் சொன்ன பதில்: “ஐன்ஸ்டைன், கடவுள் என்ன செய்ய வேண்டுமென்று கடவுளுக்குத் தெரியும். கடவுளுக்கு நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொடுத்தது போதும்” என்பது தான்.
விவாதத்தின் ஆரம்ப கட்டத்தில் ஐன்ஸ்டைன் சற்று மேலோங்கியிருந்தது போல தோற்றமளித்தலும், இறுதிக் கட்டத்தில் பல வாதங்களுக்குப் பதிலளிக்க முடியாமல் ஐன்ஸ்டைன் திண்டாடினார். கடைசியில் வேறு வழியின்றி ஐன்ஸ்டைன் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்.
மேலும், நீல்ஸ் போர் முன்வைத்த பல வாதங்கள் தாம் சரியானவை என்பதும், ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளில் பல பிழைகள் இருப்பதும் பல பரிசோதனைகளின் மூலம் பிற்காலத்தில் நிரூபனமானது.
ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளுக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வியை ஷைத்தானியர்களால் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், சாதாரண மனிதனாக இருந்த ஐன்ஸ்டைனை விஞ்ஞான உலகின் சரித்திர நாயகனாக அவர்கள் தான் மீடியாக்கள் மூலமாக மாற்றினார்கள். அதற்காக எண்ணற்ற முயற்சிகளும், சதித்திட்டங்களும் செய்தார்கள். அவ்வாறு கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட ஐன்ஸ்டைன் குறுகிய காலத்துக்குள் குவாண்ட்டம் கோட்பாடுகள் முன்னால் தோற்றுத் தலைகுணிந்தால், அது அவர்களுக்குப் பலத்த நஷ்டம். எனவே, இந்த அறிவியல் யுத்தத்தை வெற்றி தோல்வியற்ற இழுபறி நிலையில் முடிப்பதற்கு ஷைத்தானியர்கள் தீர்மானித்தார்கள்.
முதல் கட்ட நடவடிக்கையாக, ஐன்ஸ்டைன் மூலம் “சர்வக் கோட்பாடு” (Theory of Everything) என்ற ஒரு புது சித்தாந்தத்தை வெளியிட்டார்கள். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், “ஐன்ஸ்டைன் சொல்வதும் சரி; குவாண்ட்டம் கோட்பாடு சொல்வதும் சரி. இரண்டும் வெவ்வேறு கோணங்களில் அனுகியிருக்கின்றன. அவ்வளவு தான் வித்தியாசம்” என்பது போல் ஒரு மழுப்பலான சித்தாந்தத்தை முன்வைத்தார்கள். இதன் மூலம் ஐன்ஸ்டைனின் கௌரவம் காற்றில் பறந்து விடாமல் ஓரளவு காப்பாற்றிக் கொண்டார்கள்.
அடுத்த கட்டமாக குவாண்ட்டம் பொறியியலுக்குள் ஊடுறுவி, அதையும் மாசு படுத்தும் நோக்கில் பல கைப்பாவை விஞ்ஞானிகளை உள்ளே நுழைத்தார்கள். கடைசியில் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு விஞ்ஞானக் கோட்பாடுகளையும் பித்தலாட்டங்கள் மூலம் கலந்து, குழப்பியடித்து, ஒரு புதுக் கதம்பத்தை உருவாக்கினார்கள். இந்தப் புதிய கோட்பாட்டுக்கு, “ஒருங்கிணைக்கப்பட்ட புலக் கோட்பாடு” (Unified Field Theory) என்று பெயரிட்டு, அதை ஒரு நவீன மைய நீரோட்ட விஞ்ஞானக் கோட்பாடாக இன்றைய விஞ்ஞான உலகில் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் புதிய இயற்பியல் கோட்பாடுகளைப் படிக்கப் போகிறவர் யாராக இருந்தாலும், படிக்குமுன் இருந்ததை விட இன்னும் அதிக குழப்பத்தோடு தான் படித்து முடித்த பின் வீடு திரும்புவார்கள். ஏனெனில் உள்ளிருக்கும் ஷைத்தானிய குழப்பம் புரியவே கூடாது என்பதற்காக, உண்மைகளோடு பொய்களையும் கலந்து, குழப்பத்துக்குள் குழப்பமாக மொத்தத்தையும் குழப்பி வைத்திருக்கிறார்கள்.
இன்றைய இயற்பியல் விஞ்ஞானத்தின் ஒரு பாதியை குவாண்ட்டம் கோட்பாடுகள் வழிநடத்த, இன்னொரு பகுதியை ஐன்ஸ்டைன் சார்ந்த இயற்பியல் கோட்பாடுகளே இன்று வரை ஆண்டு கொண்டிருக்கின்றன. ஒன்றுக்கொன்று முரணான இந்த இரண்டு சித்தாந்தங்களுக்கும் இடையில் இன்று இன்னும் பல நவீன கோட்பாடுகள் முளைத்திருக்கின்றன. “துகள் இயற்பியல்” (Particle Physics), “இழைக் கோட்பாடு” (String Theory) போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இவ்வாறு ஒன்றுக்குள் ஒன்று குழப்பியடிக்கப்பட்ட கதம்பமாக இன்றைய மையநீரோட்ட விஞ்ஞானம் கற்பிக்கப்பட்ட போதும், குவாண்ட்டம் கோட்பாடுகளுக்கென்று இன்று வரை இருக்கும் தனித்துவமான மதிப்பு குறையவில்லை.
இயற்பியல் (Physics) துறையில் மட்டும் ஆரம்பத்தில் பரிணமித்த குவாண்ட்டம் கோட்பாடுகள் இன்று உயிரியல் துறையிலும் தனது பங்களிப்பைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. குவாண்ட்டம் கோட்பாடுகளுக்கு அமைய இன்று பல விஞ்ஞானிகள் உயிரினங்கள் பற்றி ஆரம்பித்திருக்கும் பல புதிய ஆய்வுகளின் விளைவாக விஞ்ஞான உலகில் இன்று “சக்திச்சொட்டு உயிரியல்” (Quantum Biology) எனும் புதிய ஒரு துறையே முளைத்திருக்கிறது.
விஞ்ஞான உலகின் இந்த வரலாற்றையெல்லாம் சொன்னதன் நோக்கம் ஒன்றேயொன்று தான்:
இறைவனை மறுக்கும் விதமான எந்த விஞ்ஞானமும் உண்மையான விஞ்ஞானம் அல்ல. அது பித்தலாட்டம் மட்டுமே. படைத்த இறைவனையும், அவனது ஆற்றல்களையும் தெளிவான நடையில் விளக்கும் விதமாக எந்தக் கல்வி இருக்கிறதோ, அது தான் உண்மையான விஞ்ஞானம்.
குவாண்ட்டம் கோட்பாடுகள் படைத்த இறைவனின் அபார சக்திகளைப் பறைசாற்றும் விதமாகவே அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இது தான் உண்மையான விஞ்ஞானம். அல்லாஹ் ஆதி மனிதனுக்குக் கற்றுக்கொடுத்த சரியான ஞானத்தின் ஒரு பகுதியாக இது தான் இருந்திருக்க வேண்டும்.
ஆனால், இந்த உண்மையான ஞானத்தையும் கூடிய சீக்கிரத்தில் ஷைத்தானியர்கள் வழமை போல் மாசுபடுத்தத் தான் போகிறார்கள். அப்படி மாசுபடுத்தப்பட்டு, இந்த விஞ்ஞானமும் உருக்குலைந்து போகும் முன், இது சொல்லும் ஒரு முக்கிய செய்தியை உங்களுக்கு அடையாளப்படுத்திக் காட்டுவதற்காகவே இந்த நீண்ட பீடிகை சொல்லப்பட்டது.
குவாண்ட்டம் கோட்பாட்டின் வெளிச்சத்தில் இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது பின்வரும் நிலைபாட்டைத் தான் நாம் அடைவோம்:
எமக்குள்ளேயும், எம்மைச் சுற்றியும், எம் கண்ணெதிரிலும் எமது கண்களுக்கும், கருவிகளுக்கும் புலப்படாத இன்னொரு உலகம் வியாபித்திருக்கிறது. இந்த உலகத்தையும், இதில் வசிக்கும் ஜீவராசிகளையும் பார்க்கும் சக்தி நம் கருவிகளுக்கு இல்லை. ஏனெனில் இவற்றின் வேகம் ஒளியின் வேகத்தையும் தாண்டியது.
இந்த மறைவான உலகம் நம் கண்களுக்கும், கருவிகளுக்கும் புலப்படவில்லை என்பதற்காக அப்படியோர் உலகம் இல்லையென்று சொன்னால், அதைவிட முட்டாள்தனம் எதுவும் கிடையாது. இந்த மறைவான உலகத்திலிருக்கும் ஜீவராசிகள் நம்மை விடப் பல மடங்கு சக்தி வாய்ந்தவை. அவற்றின் தொழினுட்பங்கள் நமது தொழினுட்பங்களை விட அபாரமானவை. ஏனெனில் அங்கு உபயோகத்திலிருக்கும் சக்தி நமது முப்பரிமாண உலகின் சக்தியை விட வேகத்தாலும், ஆற்றலாலும் பல மடங்கு அதிகம்.
மேலும், குவாண்ட்டம் கோட்பாடுகள் முன்வைக்கும் பல கருத்துக்களை மெய்ப்பிக்கும் விதமாகவே இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆன், மற்றும் ஹதீஸ் பதிவுகள் கூட அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒருசிலதை இப்போது பார்க்கலாம்:
உண்மை 1 (காலம் / நேரம் பற்றிய சரியான நிலைபாடு):
ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டின் பிரகாரம், காலம் / நேரம் என்பது இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பரிமானம் மட்டுமே. இதை நமது பாஷையில் கூறுவதென்றால், காலம் என்பது ஒரு படைப்பு மட்டுமே. உண்மையில் இந்தக் கோட்பாடு மார்க்கத்துக்கு முரணானது. இஸ்லாத்தின் பார்வையில் காலம் / நேரம் என்பது ஒரு படைப்பு அல்ல; மாறாக, படைப்புகளையே நிர்வகிக்கக் கூடிய, அல்லாஹ்வைச் சார்ந்த ஓர் அம்சம் தான் காலம் என்பது. காலத்தை மனித அறிவின் மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.
மார்க்கம் முன்வைக்கும் இந்தக் கருத்தை ஆதரிக்கும் விதமாகவே சக்திச்சொட்டுக் கோட்பாட்டின் வாதங்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. எனவே, இது தான் மார்க்கத்துக்கு நெருக்கமான சரியான விஞ்ஞானம். பின்வரும் மார்க்க ஆதாரங்களை உன்னிப்பாக அவதானிக்கும் போது இந்த உண்மை புலப்படும்:
ஆதாரம் 1: “அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் காலத்தை ஏசுகிறான். காலம் என்பது நான் தான். எனது கையிலேயே இரவு பகல் ஆகியன உள்ளது.” (புகாரி 6181)
ஆதாரம் 2: அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் ஆவேன். என் கரத்திலேயே அதிகாரம் அனைத்தும் உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டு வருகின்றேன்'' (புகாரி 7491)
இந்த இரண்டு ஹதீஸ்களையும் உற்று நோக்கும் போது, ஒரு விடயம் தெளிவாகப் புரிகிறது. காலம் என்பது அல்லாஹ் படைத்த ஏனைய படைப்புகளைப் போன்ற ஒரு படைப்பு அல்ல; மாறாக அது அல்லாஹ்வோடு இரண்டறக் கலந்திருக்கும் ஓர் அம்சம்; அவனுக்கே மட்டும் உரித்தான அவன் சார்ந்த ஓர் அம்சம் என்பது இந்த ஹதீஸ்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
இந்தக் கருத்தைத் தான் அல்லாஹ் “காலம் என்பது நான் தான்” என்று சுற்றிவளைக்காமல், நேரடியான பதப்பிரயோகத்தில் இங்கு சொல்லியிருக்கிறான். “நானே காலத்தைப் படைத்தவன்” என்ற தொனியில் இந்த ஹதீஸ்களில் எதுவுமே சொல்லப்படவில்லை. ஹதீஸ்களை உன்னிப்பாக நோக்கினால், இது தெளிவாக விளங்கும்.
மேலும், “நானே காலம்” என்று சொன்னதோடு மட்டும் அல்லாஹ் நிறுத்திக் கொள்ளவில்லை; அதைத் தொடர்ந்து இன்னும் சில செய்திகளை மேலதிகமாகக் கூறுகிறான். “இரவையும், பகலையும் நானே நிர்வகிக்கிறேன்” என்றும் சேர்த்துக் கூறுகிறான். இதைப் பின்வரும் விதத்தில் நாம் விளங்கலாம்:
“இரவு, பகல் மாறிமாறி வருவதென்பது அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது” என்று யாராவது சொன்னால், அது தான் உண்மையென்று நாம் அனைவரும் ஒத்துக் கொள்வோம்; இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதே நேரம் “இரவு பகல் மாறிமாரி வருவது என்பது காலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது” என்று இன்னொருவர் சொன்னால், அதுவும் உண்மை என்று தான் நாம் சொல்வோம்.
ஒரே நேரத்தில் இரண்டு கூற்றுக்கள் உண்மையாக இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்த இடத்தில் மட்டும் இரண்டு கூற்றுக்களுமே உண்மையாக இருக்கின்றன. அது ஏன்? இதற்கான பதில், இந்த இரண்டு உண்மைகளையும் இணைத்து ஒரே உண்மையாக விளங்க முயற்சிப்பதில் தான் இருக்கிறது.
அதாவது, இந்த இரண்டு உண்மையையும் இணைத்து விளங்கும் போது, காலம் என்பது அல்லாஹ் படைத்த ஒரு படைப்பு அல்ல; மாறாக, காலம் என்பது படைப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று; அல்லாஹ்விடமிருந்து பிரித்து நோக்க முடியாத, அல்லாஹ்வின் நிர்வாகம் சார்ந்த ஓர் அம்சமே காலம் என்ற பேருண்மை புரியும்.
இந்த உண்மையைத் தான் அல்லாஹ் “நான் வேறு, காலம் வேறு அல்ல” என்ற கருத்தில் “காலம் என்பது நான் தான்” என்று கூறுகிறான். இதை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக இதே ஹதீஸின் இன்னொரு பகுதி அமைந்திருப்பதைப் பார்க்கலாம்:
“ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான்; அவன் காலத்தை ஏசுகிறான்” எனும் இந்த வசனம், கருத்துமுரண்பாட்டுக்கே இடமில்லாமல் நமது கருத்தை நிரூபிக்கிறது. அதாவது, என்னை ஒருத்தர் புண்படுத்த வேண்டுமென்றால், அவர் என் தேகத்தைப் புண்படுத்த வேண்டும்; அல்லது என் மனதைப் புண்படுத்தும் விதமாக என்னோடு ஒட்டியிருக்கும் எனது இரத்த உறவுகள் போன்ற எதையாவது புண்படுத்த வேண்டும். இது தான் யதார்த்தம்.
அல்லாஹ்வோ தனித்துவமானவன்; அவனுக்கு இணை, துணை எதுவும் கிடையாது. ஆகவே, உறவுகள் என்பதை இங்கு தட்டிக்கழித்து விட வேண்டும். தனித்த இறைவனாக இருக்கும் அல்லாஹ்வைப் புண்படுத்துவதென்றால், அவனோடு ஒட்டியிருக்கும் ஏதோ ஓர் அம்சத்தைப் புண்படுத்துவதால் மட்டுமே அது சாத்தியம்.
காலம் என்பது அல்லாஹ்விடமிருந்து பிரித்து நோக்க முடியாத ஓர் அம்சம் என்பதை இது இன்னும் ஊர்ஜிதம் செய்கிறது. இதனால் தான், காலத்தை மனிதன் திட்டும் போது, அது தன்னையே நேரடியாகத் திட்டுவதைப் போல் அல்லாஹ் உணர்கிறான் என்பதையே இங்கு அல்லாஹ், “என்னைப் புண்படுத்துகிறான் / என்னை நோவினை செய்கிறான்” என்ற கருத்தில் சொல்லிக் காட்டுகிறான்.
ஆதாரம் 3: உமது இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன். (அல்குர்ஆன் 7:54)
இந்தக் குர்ஆன் வசனத்திலிருந்தும் மேலும் சில உண்மைகள் புலப்படுகின்றன:
1. மொத்தப் பிரபஞ்சத்தையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்ததாக இங்கு கூறுகிறான். இதிலிருந்தே காலம் (நாட்கள், இரவு / பகல்) என்பது, இந்தப் பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பிலிருந்தே அல்லாஹ்வோடு இருக்கக் கூடிய அம்சம் என்பது இந்த வசனத்தின் மூலம் துல்லியமாகத் தெரிகிறது.
2. காலத்தின் இன்னொரு வடிவமாக இருக்கும் இரவு / பகல் எனும் அம்சங்கள் கூட நாம் நினைப்பது போல் இந்தப் பூமி தன்னைத் தானே சுழல்வதிலும், சூரியனைச் சுற்றி வருவதிலும் மட்டுமே தங்கியிருக்கும் அம்சங்கள் அல்ல; மாறாக, பூமி, சூரியன் போன்றவற்றை உள்ளடக்கிய உடுத் தொகுதிகளைப் படைப்பதற்கு முற்பட்ட, ஆதி நிலையிலேயே இரவு / பகல் எனும் காலத்தின் வடிவங்கள் கூட அல்லாஹ்வின் பால் இருந்த அம்சங்கள் என்பதுவும் இங்கு புலப்படுகிறது.
இந்த உண்மைகள் கூட, காலம் என்பது அல்லாஹ்வின் ஒரு படைப்பு அல்ல; மாறாக, நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட, அல்லாஹ்வைச் சார்ந்த ஓர் அம்சம் எனும் கருத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றன.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 08: உண்மை 2 (ஒளியின் வேகம்): |