* தோல்வி என்பது பெருங்காயம் போல… தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !
* ஒரு குக்கரைப் போல இருங்கள்…. பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!
* லட்சியமும் முட்டையும் ஒன்று …. தவற விட்டால் உடைந்து விடும்!!!
* சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க்காம்பு போல…. கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!
* வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப் பாலைக் கலந்தால் சுவைக்கும்!
* பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!
* கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!
* தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது…அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.
* தாமதமான வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்பு போல…… அனுபவிக்க முடியாது!!
* தன்னம்பிக்கைச் சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல …சமைப்பது உங்கள் கையில்தான்!
* வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது… வெந்தபின் தான் தெரியும்…
* வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது…நட்பு என்ற சட்னி வேண்டும்..