Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
காதலிப்பது  தவறா?❗
Posted By:peer On 2/20/2016 2:27:21 PM

ஒருவரிடம் யாராவது வந்து இக்கேள்வியை கேட்டால் உடனே “இல்லை” என்றோ “தவறே இல்லை, அது புனிதமானது” என்றோ ஒருவேளை சொல்லிவிடுவார்.

➡ஆனால் அதே நபர் இதே கேள்விக்கு முன்னால் “உங்கள் மகளை நான்..” அல்லது “உங்கள் சகோதரியை நான்...” என்ற வாசகத்தை சேர்த்துக் கேட்டால் கண்டிப்பாக அதே பதிலை சொல்லமாட்டார் என்பது உறுதி.

➡இன்னும் “உங்கள் தாயை..” அல்லது “உங்கள் மனைவியை...” என்று கேட்டால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அங்கு கொலையும் கலகமும் நடக்க வாய்ப்புண்டு!

சினிமாக்களிலோ டிவியிலோ கதைகளிலோ இனிமையாகத் தோன்றும் காதல் சொந்த வாழ்வு என்று வரும்போது கசப்பது ஏன்? அதற்குக் காரணம் அது உண்டாக்கும் விபரீதமான பாதிப்புகளே. காதலும் அதைத் தொடரும் காமமும் குடும்பங்களிலும் சமூகத்திலும் உண்டாக்கும் பாதிப்புகள் சாதாரணமானவையல்ல.

கண்மூடித்தனமான காதலாலும் காமத்தாலும் கண்ணும் கருத்துமாகப் போற்றி வளர்த்த பெற்றோர்களை காமுகனுக்காக அல்லது காமுகிக்காக பிள்ளைகள் நிர்க்கதியாக விட்டுச்செல்லுதல். அந்நியனின் கருவைச் சுமந்த பின் அபலைகள் அநியாயமாகக் கைவிடப்படுதல், மன உளைச்சல், தொடர்ந்து நடக்கும் கருக்கொலைகள், சிசுக்கொலைகள், தற்கொலைகள், கொலைகள் என பல கொடுமைகள் நிகழ்கின்றன. சமூகத்தில் தந்தைகள் இல்லாத பிள்ளைகளும், கவனிப்பாரற்ற அநாதைகளும் பெருகி ஒழுக்கமின்மை, விபச்சாரம், திருட்டு, பாலியல் வன்முறை போன்ற பல குற்றங்கள் பெருகுகின்றன. குடும்ப அமைப்பு என்பது சின்னாபின்னமாக சீர்குலைகிறது. கணவன், மனைவி, தாய், தந்தை, பிள்ளை உறவுகள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன. பரஸ்பர நம்பிக்கை, பொறுப்புணர்வு, மரியாதை போன்றவை மறைந்து அங்கு நம்பிக்கை மோசடி, பொறுப்பின்மை, காட்டுமிராண்டித்தனம் போன்றவை உடலெடுக்கின்றன. குற்றங்கள் மலிந்து அறவே ஒழுக்கமில்லாத சமூக சூழல் அமைந்து மனிதன் வாழவே வெறுத்துவிடும் நிலை ஏற்படுகிறது.

இதை மிகைப்படுத்தியோ கற்பனை செய்தோ நாம் கூறவில்லை. இன்று அந்த நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருகிறோம் என்பதை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

தேசிய குற்றவியல் ஆவண அறிக்கை

 தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கைப்படி  இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் 30 வயதுக்கு உட்பட்ட ஒருவர் தற்கொலை  செய்கிறார். ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும்  ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகிறாள். இதைத் தவிர வரதட்சணைச் சாவு, மதுபோதையால் ஏற்படும் குற்றங்கள்,  கொலை, கொள்ளை, திருட்டு இன்னும் இவை போன்று நாட்டில் நடக்கும் பற்பல குற்றங்களின் எண்ணிக்கைகள் ஏறுமுகமாக இருப்பதை புள்ளிவிவரங்கள்  நமக்குத் தெரிவிக்கின்றன.

 ஏறத்தாழ 94 விழுக்காடு பாலியல் குற்றங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிகவும் நெருக்கமான நபர்களாலேயே நேர்கின்றன என்பதுபோன்ற அவமானகரமான விவரங்களையும் அவை தாங்கி நிற்கின்றன.


காதல் புனிதமானதே!

பசி, ருசி போன்று மனிதனுக்குள் பாலியல் உணர்வுகளையும் படைத்துள்ளான் இறைவன் என்பதை யாரும் மறுக்க முடியாது. இறைவன் அதற்கான வடிகாலையும் செவ்வனே மனித சமூகத்திற்கு கற்பித்துத் தந்திருக்கிறான். அதுதான் காதலையும் காமத்தையும் பொறுப்புணர்வோடு அனுபவிப்பதற்கான  இல்வாழ்க்கையென்ற திருமண வாழ்வு, அது ஒரு இனிய அமைப்பு.

ஆம், காதல் என்பது புனிதமானதே!,அது முறைப்படி திருமணம் செய்து கொண்ட கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும்வரை மட்டுமே புனிதமானது!

👥இதற்கு சிறந்த உதாரணம் நம் தாயும் தந்தையும் தான்!

ஒழுக்கமும் அமைதியும் திரும்ப...

ஆரோக்கியமான மற்றும் அமைதிகரமான குடும்ப வாழ்வும் சமூகவாழ்வும் அமைய வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் ஒழுக்கம் பேணி வாழ முன்வரவேண்டும். காதல் மற்றும் காம உணர்வுகளை கட்டுப்பாட்டோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் மட்டுமே அனுபவிப்பது என்று முடிவெடுக்க வேண்டும். குடும்ப அமைப்பின் புனிதத்தைப் பேணிக் காத்து அவை சீர்குலைவதைத் தடுக்க வேண்டும். திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு நடக்கும் அந்நிய ஆண்-பெண் அன்னியோன்னிய உறவுகள் அனைத்தும் பாவம் என்று உணர்ந்து வெறுக்கவும் தடை செய்யவும் வேண்டும்.


‘மக்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும், எமது புகழும் வருமானமுமே எமக்கு முக்கியம்’ என்று வாழ்ந்து கொண்டு இருக்கும் சினிமாத்துறையினரும், டிவி, பத்திரிகை, மற்றும் ஊடகத்துறையினரும் வியாபாரிகளும் நம் மீது செய்து கொண்டிருக்கும் சதியை நாம் உணரவேண்டும்.  தங்கள் வயிறுகளை வளர்ப்பதற்காக நம்மிடையே விதைத்துவரும் விபச்சாரக் கலாச்சாரத்தை முறியடிக்க நாம் முன்வந்தால் மட்டுமே நம்மிடையே ஒழுக்கமும் அமைதியும் மீளும்.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..