நியாயமாக இருந்தால் பகிர்க!!
தமிழர்களின் எழுச்சியை தங்களுக்கு சாதகமான அரசியாலக மாற்றத் துடிக்கும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு அரங்கேற்றங்களை தொடர்ந்து செய்துவருகிறது. அதில் ஒரு நடவடிக்கையான ஏறு தழுவுதலை தங்களுக்கு சாதகமான அரசியலாக மாற்றத் துடித்ததை அனைவரும் அறிவோம்.
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய இயக்கங்கள் , அதன் மக்களாகிய நாமும் ஒருமித்த கருத்தோடு ஏறு தழுவுதலை அரசின் தடையையும் மீறி நடத்திக் காட்ட தயாரானதை அறிந்து , வேறு வழியின்றி அவர்களின் அரசியல் சூத்திரப்படி அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனை நாம் வெற்றியாகக் கொள்ள முடியாது. ஏனெனில் நம்மை அடிக்கி ஆளும் வர்க்கத்த்தின் தடையை மீறி செய்வதே வெற்றியாகும். நமது மரபை அழிக்க திட்டமிட்ட கயவர்களை அடையாளம் கண்ட தமிழினத்தின் எழுச்சியை நீர்த்துப்போகச் செய்யும் அறிவிப்பே இந்த அனுமதியாகும்.
நாம் காலம் காலமாக கொண்டாடிய விழாக்களை தடை செய்யவே இவர்களுக்கு உரிமையில்லை என்கிறோம். இதில் இவர்கள் அனுமதி அளித்ததை கொண்டாடும் அளவிற்கு இளிச்சவாயர்கள் நாம் இல்லை.
தடையை நீக்கு என்றவர்களும், கோரிக்கை வைத்தவர்களும் இன்று அனுமதி கிடைத்துவிட்டது என்று தடை செய்தவனுக்கே நன்றி செலுத்துவார்கள். இவர்களின் யோக்கிதை தெரிந்தே தடையும் , அனுமதியும் என்ற அரசியல் நெடுங்காலமாக நடைபெறுகிறது.
அனுமதி கொடுத்தாலும் குறை , தடை என்றாலும் குறை சொல்கின்றோம் என்று எண்ணுபவர்களே...
" என் வீட்டில் உள்ள பொருளை திருடிக் கொண்டு , தரமாட்டேன் என்று என்னை பரிதவிக்க வைத்து , குடும்பத்தினரோடு அவனுக்கு எதிராக திரளும்போது அதனை மீண்டும் என்னிடம் ஒப்படைக்க சம்மதம் என்று தெரிவித்தவனை நான் எப்படி மரியாதையாக நடத்த முடியும்? திருடன் , திருடன் தான். நம்மை ஆளும் தகுதியும் இவர்களுக்கு இல்லை. நம் மரபை அழிக்கும் திராணியும் இவர்களுக்கு இல்லை.
இழிவாழ்வு ஆகாதடா தமிழா ! பலியிடு குழி பறிப்போரை !!
- ஏனாதி பூங்கதிர்வேல், விவசாயிகள் விடுதலைக் கழகம்.
Source: https://www.facebook.com/karuvelamaram/photos/a.232262023588024.1073741828.232252703588956/557854824362074/?type=3
|