குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 1
குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 2
குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3
குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4
குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5 ----------------------
தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் படி மனு அனுப்பி 30 நாள் ஆகியும் பதில் ஒன்னையும் காணோம் ,அல்லது திருப்தியான பதில் இல்லைனா ? மேல் முறையீட்டு மனு அனுப்பனும் அதில் முன்னர் நாம் அனுப்பிய மனுவின் நகலுடன் திருப்தி இல்லாத பதில் கடிதத்தையும் இணைத்து மீண்டும் ஒரு மனு அனுப்ப வேண்டும் .இந்த மனுவிற்கு கோர்ட் பீ ஸ்டாம் ஒட்ட தேவை இல்லை .
நமது மனுவை நிராகரித்தாலும் அதற்கான காரணத்தை அதிகாரிகள் சொல்ல வேண்டும். இதில் முக்கியமாக நீங்கள் ஒரு மனுவை யாருக்கு அனுப்ப வேண்டும் என நினைக்கின்றீர்கலோ அவரின் முகவரி உங்களுக்கு தெரியவில்லை என வைத்துக்கொள்வோம் .அப்போ “பொதுத் தகவல் அலுவலர்”,மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் ,திருநெல்வேலி .என்ற முகவரிக்கு அனுப்பினால் போதும் அவர், அட இது எனக்கு இல்லை என திருப்பி அனுப்ப முடியாது .தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6(3)-ன் படி அந்த மனு யாருக்கு சம்மந்தப் பட்டதோ அவருக்கு அனுப்பி விடுவார்.விடனும்,அனுப்பி விடதோடு அவர் அதை உங்களுக்கும் தெரிவிக்கனும்.
இந்த பதிவில் உள்ள விபரங்கள் ரேஷன் கார்ட்டுக்கு மட்டும் இல்லை ,எல்லா விசயங்களுக்கும் பொருந்தும் . ஆகவே கண்டிப்பாக நாம் அனுப்பும் மனுக்களை பதிவுத்தபாலில் மட்டும் அனுப்பினால் போதாது .அக்னாலேஜிமெண்ட் டோடு அனுப்ப வேண்டும் . அது நமக்கு முக்கிய ஆதாரமாக அமையும் .உங்கள் மனு எனக்கு கிடைக்கவில்லை என அலுவலர் தப்புவதற்கு வாய்ப்பு இருக்கின்றது .ஆதலால் அக்னாலேஜிமெண்ட் அவசியம்.
இனி கடைசி கட்டம்
இன்னும் நமக்கு ரேஷன் கார்ட் கிடைக்க வில்லை ,அல்லது பொது தகவல் அதிகாரி தவறு செய்ததாக கண்டறியப்பட்டாலோ,அல்லது வேண்டும் என்றே தகவல் கொடுக்காமல் இருந்தாலோ,தவறான தகவல் கொடுத்தாலோ நாள் ஒன்றுக்கு 250ரூபாய் வீதம் அதிக பட்சமாக 25000 வரை பொது தகவல் அதிகாரிக்கு தகவல் ஆணையம் அபராதம் விதிக்கலாம்,இந்த அபராத தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப் படும் .
அவர் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும். அத்தோடு சனியன் தொழைந்தது என அந்த அதிகாரி விட முடியாது அப்புறமும் நாம கேட்டதற்க்கு பதில் சொல்லி ஆக வேண்டும். உண்மையிலேயே நாம பதிக்கப்பட்டோம் என்பது தகவல் ஆணையம் கருதினால் மனுதாரருக்கு நஷ்டயீடு வழங்க ஆணையம் உத்தரவு பிறப்பிக்கும். இந்த சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட எந்த நடவடிக்கைகாகவும் மனுதாரரின் மீது சிவில் அல்லது கிரிமினல் அல்லது வேறு சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது.
https://www.facebook.com/photo.php?fbid=174607022898385&set=a.132595180432903.1073741828.100010472658955&type=3
|