இதை எல்லாம் செய்தாச்சி இன்னும் ரேஷன் கார்ட் கிடைக்கலனா என்ன செய்ய? அதுக்கும் சட்டத்தில் வழி இருக்கு .தகவல் பெறும் உரிமைச் சட்டம். ஒரு வெள்ளை தாளில் பத்துரூபாய் கோர்ட் பீ ஸ்டாம் ஒட்டி கீழ் படத்தில் உள்ளது போல் ஒரு மனு எழுதி ,பொது தகவல் அலுவலர் அவர்கள். தகவல் பெறும் உரிமை சட்டம்-2005 வட்ட வழங்கல் அலுவலகம் ,நாங்குநேரி ,திருநெல்வேலி மாவட்டம் .என்ற முகவரிக்கு அஃனாலேஜிமெண்ட் டோட ,ரிஜிஸ்தர் தபால் ஒன்னு அனுப்புங்க.இந்த மனு கிடைத்து அதற்கு பதில் வருவதற்கு முன் ரேஷன் கார்ட் வீடு தேடிவந்து விடும் .அப்படியும் வரலேனு வைச்சுக்குங்க.......செத்தாண்டா சேகரு....அத நாளைக்கு பார்ப்போம்....
(கண்டிப்பாக இதில் உள்ளது போல் ஐந்தாறு கேள்விகள் கேட்க வேண்டும். (இந்த மனு ரேஷன் கார்ட்டுக்கு மட்டும் அல்லாமல் சாலை,பாலம் ,பிற கட்டிடம் ,எப்போது ,யாரால் எவ்வளவு நீளம் அகலம் தன்மையில் அமைக்கப்பட்டது , வீட்டு வரி விதிப்பின் முறைகள், கிராம சிட்டா, அடங்கல்,”அ” பதிவேடு, நிலங்கள், கிராமத்தின் வரைபடம் , பட்டா சிட்டா, ஆறு குளம் , குட்டை கால்வாய் ,அவற்றின் நீலம் அகலம் ,ஆழம் விஸ்தீரனம் ,கையகப்படுத்தியது, என பஞ்சாயத்து சம்பந்தபட்டது முதல் பாராளுமன்றம் வரை அனைத்தையும் கேட்க்கலாம் .பதில் கிடைக்காத பட்சத்தில் சம்பந்தப் பட்ட அதிகாரியிடம் இருந்து 250 ரூபாய் முதல் 25000 ரூபாய் வரை கோர்ட் மூலம் நஸ்டயீடு பெற முடியும் .)
https://www.facebook.com/photo.php?fbid=173920282967059&set=a.132595180432903.1073741828.100010472658955&type=3
குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5