விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
புதிய குடும்ப அட்டை வழங்குதலில் ஏற்படும் தாமதம்,பெயர் மாற்றம்,பெயர் நீக்கம் ,பெயர் சேர்த்தல், போன்றவற்றில் உரிய ஆவணங்கள் கொடுத்தும் அதை ஏற்றுக்கொள்ளாமல் இழுத்தடித்தல், ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களில் குறைபாடு,சரியான நேரத்திற்கு ரேஷன் கடை திறக்காமல் இருத்தல்,மற்றும் இன்ன பிற குறைபாடுகளுக்கும் மாநில நுகர்வோர் உதவி மையத்தை நாடலாம் .044-28592828 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உங்களின் பிரச்னைகள் கொண்டு செல்லப்படும்.
www.consumer.gov.in என்ற இணையத் தளத்திலும் நுகர்வோர் தொடர்பான பல விசயங்களை அறிந்து கொள்ளலாம்.இணையத் தளத்தின் வழியாகவும் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.ஆலோசனைகளையும் பெறலாம்.
அடுத்து ஒரு குடும்ப அட்டைக்கு ஆண்டுக்கு தோராயமாக 2000/ ருபாய் மானிய செலவு ஆகுதாங்கே,அதனால குடும்ப அட்டை விண்ணப்பிக்கும் போது தவறான தகவல் கொடுப்பது பொது வினியோக திட்டப் பொருட்களை கடத்தலுக்கு வழிகோலும் என்பதால 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பண்ட சட்டம் பிரிவு 7 ன் கீழ் தண்டனைக்குரியதாங்க.
அரசு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கால அளவு வைத்திருக்கின்றது .
அதாவது சரியான ஆதாரங்கள் சமர்ப்பித்து இருந்தால், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து 60 நாட்களுக்குள் கிடைக்க வேண்டும்.
குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க,பெயர் நீக்க,வயது,திருத்தம்,நீங்கள் வாங்கும் ரேஷன் கடைகளுக்கு உட்பட்டு வேறு இடங்களுக்கு குடி பெயந்தால் ,முகவரி மாற்றம் போன்ற பணிகளை மூன்று தினங்களுக்குள் செய்து கொடுக்க வேண்டும்.
தாங்கள் ஏற்கனவே பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த ரேஷன் கடையாக இல்லாமல் வேறு பகுதிக்கு நீங்கள் இடம் பெயன்றால் 7 நாட்களில் முகவரி மாற்றம் செய்து தரவேண்டும்.
முகவரி மாற்றம் செய்ய ஒப்படைப்பு சான்றிதழ் வழங்கிய 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இந்த சேவைகளில் குறைபாடுகள் இருப்பின் அந்தந்த மாவட்ட வட்ட வலங்கள் அலுவலரையோ அல்லது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தையோ தொடர்புக் கொண்டு புகார் செய்யலாம் .தொலைபேசி எண்கள்: 044 256672224,28592255.
இவ்வளவும் செய்தும் கிடைக்கலனா? நாளைக்கு சொல்லுரேனே..
https://www.facebook.com/groups/baithussalam/permalink/940783225990395/
குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4
குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5