முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக “தினகரன்” நாளிதழில் படிக்க நேரிட்டது....
இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில், அவரது இளமைக்கால வாழ்க்கை:
"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...
என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...
சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன், என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....
‘இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை .. என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...
ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டி தான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....
சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு, அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன்.
" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"
சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை, என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....
" மகனே... உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு, நமக்கும் பணிவிடை செய்கிறார்.. களைத்துப் போய் இருப்பார்...
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது.... நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே....”
அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்த போது அவரது அப்பா மீது, அளவில்லாத மரியாதை எழுந்தது...
அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது... ஆம்.. “ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”
இந்த தத்துவத்தை எண்ணியபடியே இன்று இரவு சாப்பிட அமர்ந்தபோது ... எனக்கு பரிமாறப்பட்ட உணவு கொஞ்சம் ஆறித்தான் போய் இருந்தது... ஆனால் என் உணர்வுகள் ரொம்பவுமே மாறிப் போய் இருந்தது...
மனைவியின் உணவை இனி ஒரு போதும் குறை சொல்லக்கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு, இருந்ததை இனிதே உண்டு முடித்தேன்...
எதிர் காலத்தில் நம் குழந்தைகள் கலாமின் கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..
இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே...!!!
நாம் ஒன்றும் சிறந்த மனிதர்கள் அல்ல...! ஆனால், அதற்கு முயற்சிக்கலாமே.....!!!
(படத்தில் Dr.A.P.J.அப்துல் கலாம், அவர்களின் குடும்பத்தாருடன்.)
|