Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
டைனோசர்களை காணவில்லை – Wanted Dead or Alive.........பாகம் 5
Posted By:Hajas On 8/29/2015 11:26:32 AM

lexapro and weed interaction

lexapro weed and alcohol raagam.co.in lexapro and weed

டைனோசர்களை காணவில்லை – Wanted Dead or Alive.........பாகம் 5

 by David Praveen 

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4

விண்கல் மோதல்தான் டைனோசர் போன்ற மிருகங்களின் அழிவிற்கு காரணம் என்று NASA-வின் கதையிலாக்கா அறிவியலாளர்கள் கதை அளந்துக்கொண்டிருந்தாலும் கள நிலவரம் என்பது அதற்கு முற்றிலும் எதிர்மறையானது. அதாவது விண்கல் மோதல்கள் டைனோசர் போன்ற மிகப் பெரிய உயிரினங்கள் பூமியில் தோன்றுவதற்கு வசதி செய்திருக்கிறது. விண்கல் மோதல்களால் ஒருபோதும் பூமியின் உயிரினங்களை ஒட்டுமொத்தமாக அழிக்க முடியாது. மோதலின் தாக்கம் அதிகமிருக்கும் என்றாலும் அனைத்து உயிரினங்களும் அழிவதற்கான சாத்தியக் கூறுகள் விண்கல் மோதல் சம்பவங்களால் நடைப்பெற வாய்ப்புகளே இல்லை.

இதற்கு புதைப்படிவங்களே ஆதாரங்கள். கிடைத்துவரும் பாறைப் புதைப்படிவங்கள் விண்கல் மோதல் சம்பவங்களுக்கும் உயிரின அழிப்புகளுக்கும் தொடர்பில்லை என்றே நிருபித்துவருகின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மேல் பல விண்கல் மோதியிருக்கின்றன அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன ஆனால் அவைகள் டைனோசர் போன்ற உயிரினங்களை அழிக்கவில்லை மாறாக டைனோசர் போன்ற உருவத்தில் மிகப் பெரிய மிருகயினங்கள் பூமியில் தோன்றுவதற்கு ஒரு ஊக்கியாக (catalyst) செயல்பட்டிருக்கின்றன.

அப்படியானால் டைனோசர்களை இத்தகைய விண்கல் மோதல்களுக்கு பிறகு உண்டான பூமியின் காலநிலை மாற்றங்கள்தான் உண்டாக்கினவா என்றால் டைனோசர் போன்ற உருவில் பெரிய மிருகங்களைதான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் டைனோசர்களை அல்ல. மேலும் ஒவ்வொரு பெரு உயிரின அழிப்புகளும் (mass extinction) கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கியே உச்சநிலைக்கு போயிருக்கின்றன. விண்கல் மோதல் கொள்கை சொல்வதைப்போல ஒரு சில நூறு ஆண்டுகளில் நடைப்பெற்ற காரியங்கள் அல்ல இவைகள்.

இதுவரை பூமி கண்ட மிகப் பெரிய உயிரின அழிப்பாக கருதப்படும் Permian-Triassic extinction பல முறை சங்கிலித் தொடர்போல நிகழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துவருகின்றன. அதாவது இந்த அழிப்பு காலகட்டத்தில் பூமி தன்னை தகவமைத்துகொண்டு உயிரினங்களோடு எழுந்து நிற்க அதன் முகத்தில் உயிரின அழிப்பு அடிவிழுந்திருக்கிறது அதனால் உயிரினங்கள் அழிந்திருக்கிறது. இதை தாக்குப்பிடித்து மீண்டும் பூமி உயிரினங்களோடு எழுந்து நிற்க தலையில் மீண்டும் ஒரு அழிப்பு அடி. பூமி எழுந்து நிற்க அதன் தலையில் அடி என்று Permian-Triassic extinction காலம் முழுவதும் தொடர்ச்சியாக பல முறை பல கோடி ஆண்டுகளுக்கு நடந்திருக்கிறது.

இதற்கு இறுதியாக ஒரு பெரும் அடி விழுந்திருக்கிறது. அதில்தான் பூமியின் ஒட்டுமொத்த உயிரினங்களும் துடைத்து அழிக்கப்பட்டிருக்கின்றன. பூமி செத்துப்போயிருக்கிறது. இப்படி பூமி பல கோடி ஆண்டுகளுக்கு செத்த நிலையிலேயே இருந்திருக்கிறது. பிறகு மீண்டும் காலநிலைகள் மாறி உயிரினங்கள் தோன்றியிருக்கின்றன என்று புதைப்படிவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்த நிலை Permian-Triassic extinction-க்கு மட்டுமில்லை மற்ற பெரிய mass extinction-களுக்கும் பொருந்தும் என்று தற்போது கிடைத்துவரும் ஆதாரங்கள் தெளிவுப்படுத்துகின்றன.

(டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை எப்படி அடிவாங்குகிறது என்பதை நீங்களே இங்குப் பார்க்கலாம். பரிணாமக் கொள்கை பூமியில் உயிர்களின் தோற்றம் ஒரு தடையற்ற படி நிலை வளர்ச்சியின் காரணம் என்கிறது. இப்படி ஐந்து பெரு அழிப்பு காலங்களிலும் பல முறை செத்து செத்து பிழைத்த பூமியில் எப்படி டார்வினின் பரிணாமக் கொள்கை சாத்தியப்படும் என்பதை படிப்பவர்களின் பார்வைக்கே விட்டுவிடலாம்)

இந்த ஆதாரங்களும் கடலில் வாழும் உயிரினங்களான ammonite cephalopod போன்வற்றின் புதைப்படிவங்களிலிருந்தே பெரிதும் பெறப்படுகிறது. இத்தகைய ஆதாரங்களை இதுவரை பூமியில் வாழுந்து அழிந்த மிருகங்களின் புதைப்படிவங்கள் தரவில்லை. அப்படியானால் டைனோசர்களின் எலும்புகள் இதற்கு உதவவில்லையா என்று நீங்கள் கேட்கலாம் ஏன் நானும் கூட கேட்டேன் ஆனால் இன்னுமும் புதைப்படிவ ஆராய்ச்சியாளர்கள் அதற்கு வாயேத் திறக்கவில்லை. டைனோசர்களின் எலும்புகளை கண்டுபிடித்து டைனோசர்களை மீள் உருவாக்கம் செய்பவர்கள் அந்த எலும்புகளின் C-12 மற்றும் C-13 மூலக் கூறுகளை கொண்டு அவைகள் எப்படி அழிந்தன என்கிறத் தகவலை சொல்லவில்லை. அப்படியானால் டைனோசர் என்கிற மிருகமே கிடையாதா என்று நீங்கள் கேட்டால் இந்த கட்டுரைத் தொடரின் முடிவுவரைக் காத்திருங்கள் என்று நான் சொல்வேன்.

உயிரின அழிப்புகளுக்கு விண்கல் மோதல் காரணமில்லை என்பதைப் பார்த்துவிட்டோம் அப்படியானால் இவைகளுக்கு காரணமென்ன? Global Warming. ஆம் நண்பர்களே நாம் இன்றைக்கு அரசல் புரசலாக கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிறோம் அல்லவா Global Warming என்று அதேதான். ஆனால் இன்றைக்கு நாம் கேள்விப்படும் Global Warming என்பது மனிதன் பூமிக்கு வைத்த சூனியம். பெரும் உயிரின அழிப்புகளுக்கு காரணமான Global Warming குறித்து இனிப் பார்ப்போம்.

அடுத்த தொடரிலும்.......

 
David Praveen's photo.
 
  • Surender Lohia அருமை
  • Muhammad Bilal Hosur Global warming .. அப்போ இன்னொரு சுனாமி அட்டாக் பாக்கி உள்ளதா
  • David Praveen Global Warming முன்னால் சுனாமியெல்லாம் சுட்டிப் பையன்கள் சகோ......பூமியின் வெப்ப நிலையில் சராசரியாக 6-7 டிகிரி அதிகரித்தால் கடலின் அளவு 100-200 அடிகள் உயர்ந்துவிடும் சகோ.......அப்படியென்றால் இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், சீனாத் தவிர்த்த தென் கிழக்காசிய தீவு நாடுகள் அனைத்தும், ஜப்பான் போன்ற நாடுகள் கடலுக்குள் சகோ.......இன்றைக்கு எப்படி பூம்புகார் கடலுக்குள் இருக்கிறதோ அதேப் போல ஒட்டுமொத்த தென்னிந்தியப் பகுதிகளும் கடலுக்குள் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை சகோ.....
  • Chakkaravarthi Joseph nanba neega darvin parinama kotpadu thavarana onnunu solreegala.
  • David Praveen இம்ம்ம்.......வேறு வார்த்தைகளில் என்னுடைய பதிலை சொல்வதென்றால் டார்வினின் கொள்வை தவறு என்பதை அறிவியலின் மற்றொரு பிரிவே சொல்கிறது சகோ.......அதைத்தான் இந்த கட்டுரையில் எழுதியிருக்கிறேன்......என்னுடைய தனிப்பட்ட கருத்தை கேட்டீர்கள் என்றால் ஆம் டார்வீனின் கொள்கை தவறு என்பதைவிட கட்டமைக்கப்பட்ட பொய் என்பேன்.....
  • Chakkaravarthi Joseph nanba thangal etharkku avvaru koorugeerirgal endru kooramudiyuma
  • David Praveen பல கோணங்களில் இருந்து இந்த விசயத்தை அனுக முடியும் சகோ. முதல் விசயம் டார்வினின் பின்னனி. அவர் இந்த கொள்கையை முன் வைத்தது உலக மக்கள் அனைவரையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டுவரும் திட்டத்தின் ஒரு பகுதியாக......அதாவது வலுத்தது பிழைக்கும் என்கிற திட்டம்......இதுதான் இட்லிரின் திட்டமும்........
  • David Praveen அப்படியான ஒரு திட்டத்தை கருத்தியல் ரீதியாக சாத்தியப்படுத்தத்தான் பரிணாமக் கொள்கை.....இந்த கொள்கைக்கு புற ஆதாரங்கள் கிடையாது.....அப்படி இருப்பதாக நம்பவைக்கப்படுகிறது அவ்வளவுதான்.....
  • Ajeek Tamil Arumai
  • David Praveen உதாரணமாக பரிணாமக் கொள்கையின் படி மீன் x, y, z ஆக பரிணமித்து இன்றைக்கு குரங்காக வந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் மீனும் இன்றைக்கு இருக்கிறது குரங்கும் இன்றைக்கு இருக்கிறது ஆனால் x,y, z உயிரினங்கள் எங்கே? அவைகள் எப்படி என்ன காரணத்தால் அழிந்துபோனது......பரிணாமக் கொள்கை அதற்கு சொல்லும் ஒரே பலகீனமான வாதம் அந்த உயிரினங்களால் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துகொள்ள முடியவில்லை என்பது......அப்படியானால் அந்த உயிரினங்கள் அழிந்துபோக கூடி அளவிற்கு இந்த பூமியில் எப்படியான் சூழ்நிலை நிலவியது என்பதற்கு அதனிடம் பதில் கிடையாது....
  • Chakkaravarthi Joseph nanba ennoda purithalin padi darvin kotpaada mathaglil koorum uyireenagal kadavulal padakkapattathu enbatharkku etheerana oru arviyal kotpadaga nan darvin kotpadai parkeerean.intha purithal sariyanatha
  • David Praveen உங்களுடைய இந்த கருத்திற்கு ஆங்கிலத்தில் creationism vs evolutionism என்று சொல்லுவார்கள் சகோ.....பெரும்பாலான மக்களுக்கு உங்களுடைய கருத்துதான் சகோ இருக்கிறது......
  • Chakkaravarthi Joseph appadiyanal ulagil uiyeergal evvaru thondri valartheerukkakoodum athai patriya thagal karutthu nanba.
  • David Praveen படைக்கும் கரங்கள் இல்லாமல் படைப்புகள் தோன்ற முடியாது சகோ....இது என்னுடைய கருத்து மாத்திரமல்ல டார்வினின் கருத்தும் இதேதான்....சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா.....The Origin of Species-யை படித்தீர்கள் என்றால் உங்களுக்கு அது புரியும்.....இந்த புத்தகத்தை டார்வின் உலக படைப்புகள் அனைத்தும் ஒரு அற்புத கரங்களின் படைப்பு என்கிறார்......
  • Chakkaravarthi Joseph siru vayathu muthal nanpaditha karuthkkalai thangal illai endru koorugindreer.thangal karuthai nan erkeerean anal atharkku bathil athu illai endral veru ethu endru endrum thangal ennakku thelvu padutha vendum nanba.
  • David Praveen சகோ சிறுவயது முதல் நமக்குள் திணிக்கப்படும் அனைத்து பொது அறிவு விசயங்களும் பொய்களால் கட்டமைக்கப்பட்டவைகள்.......முக்கியமாக பள்ளிகளில் நமக்கு சொல்லித்தரப்படும் அனைத்தும் நம்மை முட்டாள்களாக்கி மனித எந்திரங்களாக நம்மை மாற்றும் நடவடிக்கைகள்.......தொடர்ந்து என்னுடைய கட்டுரைகளையும் என்னுடைய மின்னூல்களையும் படியுங்கள் சகோ......உங்களின் பல சந்தேகங்களுக்கு அதில் பதில் இருக்கும் என்று நம்புகிறேன்.....
  • Chakkaravarthi Joseph thangal thavaraga ennavilai endral thagalin kadavul patriya karuthukkalai koora iyaluma?
  • Chakkaravarthi Joseph nanba darvin parinama kotpadil thavru endru kooruvathivida athil pilagal ullana endru kooralam allava.
  • David Praveen தாரளமாக சகோ.....எனக்கு கடவுள் மீது பரிபூரண நம்பிக்கை உண்டு....
  • David Praveen தவறான ஒரு கொள்கையில் பிழைகளை சுட்டிக்காட்டுவது சிறந்ததா......தவறையே ஒட்டுமொத்தமாக சுட்டிக்காட்டுவது சிற்ந்ததா சகோ.....
  • Chakkaravarthi Joseph nanba ennakku kadavulai nambava allathu veendamma endru santhegamaga ullathu,
  • Chakkaravarthi Joseph thangal thavraga ennavillaiendral kadavulpatriya santhegathai thagalidam veenavalama nanba?
  • David Praveen கடவுள் நம்பிக்கை புரிதலிலும் அனுபவத்திலும் வரக் கூடியது சகோ...
  • David Praveen இந்த விசயத்தில் என்னுடைய கருத்துக்கள் மற்றவர்களுக்கும் பொறுந்தவேண்டும் என்று சொல்லிவிட முடியாது.....இயற்க்கையை ஆழ்ந்து படியுங்கள் சகோ......உங்களை அறியாமலேயே நீங்கள் கடவுளின் அருகில் இருப்பீர்கள்......
  • Chakkaravarthi Joseph mathagali nambalama
  • David Praveen ஒரு சாதாரண தாவரத்தின் உயிர் வாழும் செயல்பாட்டை கவனித்துப்பாருங்கள் சகோ.......உலகின் தலை சிறந்த அறிவியலாளர்கள் எல்லாம் பிச்சை எடுக்கவேண்டும்.....அப்படியிருக்கும் அந்த செயல்பாடு.....
  • Chakkaravarthi Joseph engal mathathil arviyal ullathu endru kooruvathai erkkalama
  • David Praveen அதுவும் உங்களின் கைகளிலேயே இருக்கிறது சகோ.....உலகின் அனைத்து மதங்களையும் திறந்த மனதுடன் ஆராய்ந்துப் பாருங்கள்......இது கொஞ்சம் நேரம் பிடிக்கும் காரியம்தான் இருந்தாலும் வேறு வழியில்லை.....ஆனால் இறுதியில் நீங்கள் எடுக்கும் முடிவு மிகத் தெளிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.....
  • David Praveen நீங்கள் ஆராய்ந்துப் பாருங்கள் சகோ......உண்மையிருப்பின் ஏற்றுக்கொள்வதில் தவறு ஒன்றுமில்லையே....
  •  
  • Chakkaravarthi Joseph nandri nanba


 



General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..