Posted By:peer On 12/22/2014 2:38:27 AM |
|
ஏர்வாடியில் பல வருடங்களாக காணாமல் போயிருந்த கால்பந்து விளையாட்டுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டி இருக்கின்றர் தூம் அணியினர்.
அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் கோல் கம்பிகள் நட்டி, ஆயத்த ஆடைகளோடு அழகிய முறையில் தினமும் மாலை நேரங்களில் விளையாட்டு நடைபெறுகிறது.
நல்ல ஆரோக்கியத்தைத் தரும் கால்பந்து ஆட்டம், கிரிக்கெட் மற்றும் வாலிபாலின் ஆதிக்கத்தால், நமது ஊரில் பல ஆண்டுகள் மறைந்து இருந்தது. தற்போது அதன் மறுஎழுச்சி இளைஞர்களிடமும், சிறுவர்களிடமும் புதிய ஆர்வத்தை விதைத்துள்ளது.
தூம் அணியினரின் கால்பந்து துவக்கம் மற்ற பகுதியில் உள்ளவர்களையும் விளையாடத் தூண்டியுள்ளது.
சனி ஞாயிறுகளில் ஊரின் மற்ற பகுதியில் உள்ளவர்கள் DHOOM அணியிணரோடு இணைந்து போட்டி ஆட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். என்றாலும் DHOOM அணிதான் போட்டிகளில் தூள் கிளப்புகிறது.
ஆரோக்கியமான விளையாட்டுக்கள் என்றென்றும் ஊக்குவிக்கப்பட வேண்டியதே!
DHOOM அணியினருக்கு நமது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
|