எங்கள் ஊர் ஏர்வாடியின் பேரூராட்சி மன்ற தலைவர் ஆற்றல் மிக்க எம் . ஏ . ஆசாத் அவர்கள் பற்றி சில வரிகள் ...
பூ கடைக்கு விளம்பரம் தேவை இல்லை என்பதுபோல் எங்கள் ஊர் பேரூராட்சி மன்ற தலைவருக்கும் விளம்பரமே தேவையில்லை என்றாலும் ' மரபு கருதி ' சில விபரங்கள் நான் இந்த பகுதியில் பதிவு செய்வதில் மகிழ்கின்றேன் ...
இன்று காலை எனது மடி கணணியை திறந்து SOCIEAL MEDIA வலை தளத்தில் " கலம்மாடி கொண்டிருந்தபோது எனது கண்ணில் பட்ட பல செய்திகளில் 'நமதூர் ஏர்வாடி பேரூராட்சி மன்ற' செய்தி ஒன்று கண்ணில் பட்டு மனம் மகிழ செய்தது ...
நமதூரின் தெருக்களில் " இன்டர் லோக் " கற்கள் பதிப்பது " நமதூர் பேரூராட்சி ஊழல் அற்ற பேருராட்சியாய் செயல் படுவது " ஆகிய இரண்டு செய்திகளையும் " வலை தளத்தில் " படித்துவிட்டு மனசு மகிழ்ச்சியால் நிறைந்தது.
எனக்கு விபரம் தெரிந்த நாளில் நான் பார்த்த நமதூர் பஞ்சாயத்து முதல் தலைவர் அப்துல் லத்தீப் அவர்கள் தொடங்கி , நல்ல பல தலைவர்கள் வந்து சேவையாற்றி ஊரின் வளர்ச்சிக்கு வித்திட்டு விதை விதைத்து இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் நமதூரின் இப்போதுள்ள பேரூராட்சி மன்ற தலைவர் எம் . ஏ . ஆசாத் அவர்களும் , அவரது தலைமையில் செயல்படும் துணை தலைவர் , பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் , நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அனைவரின் தூய்மையான சேவையை பாராட்டி பல ' வலை தளத்தில் ' பலர் வாழ்த்து சொல்லி புகழ்ந்து பாராட்டி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
அதும் பல முகம் தெரிய வலை தள நண்பர்கள் எங்கள் ஊரிலும் இதுபோன்ற ஒரு சேவையும் , ஊழல் அற்ற நிர்வாகமும் வர ஆசை படுகின்றோம் என்று எழுதியதை படிக்கும் நமதூர் ஏர்வாடியை சேர்ந்த அத்தனை பேரும் ., பெருமை படலாம் .
இந்த பெருமை ஏர்வாடி பேரூராட்சிக்கு மட்டும்மல்ல , பேரூராட்சி மன்ற தலைவர் , துணை தலைவர் , உறுப்பினர்கள் , நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் மட்டும்மல்ல இந்த பெரும்மை .,
இப்படிப்பட்ட தலைவரையும் , உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து நமதூர் பேரூராட்சிக்கு அனுப்பி வைத்த " ஏர்வாடி " பொதுமக்களுக்கும் இந்த பேரும் புகழும் சேரும் ... என்பதில் இரண்டு கருத்துக்கு இடம்மில்லை ...
அல்ஹம்துலில்லாஹ் ...எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ...
இது போன்ற " ஊழல் அற்ற சேவையும் , நிர்வாகமும் தொடர்ந்து நமதூருக்கு கிடைத்திட இறைவனிடம் வேண்டி ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் எம் .ஏ . ஆசாத் அவர்களின் தலைமையில் செயல் படும் அனைவரையும் நாம் அனைவரும் பாராட்டி மகிழ்வோம் ...!
நீங்களும் பாராட்டுங்களேன்...!! வாழ்த்துங்களேன் ...!!!
|