Posted By:peer On 12/19/2014 1:17:25 AM |
|
உலக வரைபடத்தில், வியாபார முக்கியத்துவம் -Business Centre- வாய்நத் நகரங்களிலே, 'திருப்பூர்' இடம் பெற்றிருப்பது உங்களுக்கெல்லாம் தெரிந்ததே! இதில் முஸ்லிம்களில் பங்குபற்றி, ஆசிரியர் குறிப்பிடுவது பற்றிக் கவனிக்கலாம். அது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கதையா ? என்று கேட்காதீர்கள்.இல்லை, இல்லை.....இதோ ஆசிரியர் எழுத்துக்கள்: மேற்கோள்" 'பனியன் தொழிலின் பாதுகாவலர்' என்றழைக்கப்பட்ட மோகன் கந்தசாமி..=நான் இத்தொழிலைப் பாதுகாத்தவன்தான், உண்மையில் இத்தொழிலை உருவாக்கிப், பாதுகாத்தவர்கள், இத்தொழிலின் தந்தைமார் இரண்டு இஸ்லாமியர்கள். இவர்களாலேயே எனக்குப் பெருமை. திருப்பூருக்குப் பெருமை.= .." பேபி நிட்டிங் கம்பனி என்ற பெயரில், திருப்பூரில் இல்லை.இல்லை தென்னிந்தியாவின் முதல் பனியன் தொழிற்சாலையை உருவாக்கினார் எம்.ஜி. குலாம் காதர் சாகிப் "1935 ல் அவர் கொண்டுவந்து சேர்த்த இயந்திரம்.... "
"தனது 69 வயதில் மரணிக்கும்வரை, (இன்னாலில்லாஹி.. ) திருப்பூர் பனியன் தொழிலை உலகம் அறியச் செய்ய பாடுபட்டார்.
சாதாரணமான இரண்டு இஸ்லாமியர்களால், தொடங்கப்பட்ட இந்த பனியன் தொழில், இன்றைக்கு இந்தியாவிற்கு, 15 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணியை ஈட்டித்தருகிறது.
1948 ல் திருப்பூர் நகராட்சி பல்ளிக்கூடம் அமைக்க இடம் கொடுத்தார். பள்ளிவாசல் அமைக்க 25 சென்ட் இடம் இலவசமாகக் கொடுத்தார். இப்படி ஏராளமான உதவிகளை, சமூகத்திற்கு சத்தமில்லாமல் செய்தனர், காதர் சகோதரர்கள் (எம்.ஜி.குலாம், எம்.ஜி.சத்தார்)
உண்மையில் இவர்கள் இருவரும்தான் திருப்பூரின் வரலாறு. வரலாறு நமக்கெதற்கு என்கிறீர்களா? .. வரலாறு தெரியாதவர்களாலே வரலாறு படைக்க முடியாது..." மேற்கோள் முடிவு. . kkC, பனியன்கள் அந்நேரம் பிரபலம்.
|