Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
வாழவைத்தவன் வாழ்விழந்து கொண்டிருக்கிறான்!
Posted By:peer On 11/21/2014 2:35:30 PM

நெல்லை ஏர்வாடி அழகும் வளமும்

 

இயந்திரங்களின் வரவு இயற்க்கையின் உண்மையான முகத்தை சிதைத்துவிட்டது.


அன்று:
தன் நிலத்தில் தன் காலைப் பதித்து ஏர்பிடித்து, நாற்று நட்டு, கலையெடுத்து, உரமிட்டு, அறுவடை வரை அனைத்தையும் தானே செய்த உழவன்,

இன்று:
வயலின் ஓரமாக அமர்ந்து பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். "தான் பெற்ற பிள்ளைகளைப் போல் அவன் நேசித்த நிலத்தில் இயந்திரங்கள் உறுமிக்கொண்டு படுத்தும் பாட்டை".

ஏர்கலப்பைகள் எல்லாம் காணாமல் போய்விட்டது.

"கலத்துப் பள்ளிக்கூடம்" என்று அழைக்கப்படும் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கின்ற காலத்தில், பையைச் சுமந்துகொண்டு பள்ளிச் செல்லும் வழியெங்கும், கலப்பையைப் பிடித்துக் கொண்டு உழுது கொண்டிருக்கும் உழவனைப் மாணவர்கள் நின்று வேடிக்கை பார்த்ததுண்டு.

உழுத நிலத்தை நடுவைக்காக சமப்படுத்தும் வேளையில், கயிற்றைப் பிடித்தவாறு கம்பீரமாய் அந்தக் கட்டையின் மீது அவன் நிற்க, அவனது கட்டளைகளை ஏற்று, கட்டையோடு சேர்த்து அவணையும் அவனது மாடுகள் இழுத்துச் செல்லும் அற்புதத்தைக் காணும் அனைவருக்கும், நமக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என்ற ஏக்கங்கள் வராமல் இருந்ததே இல்லை.

இன்று நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களில் விவசாயிகளே அதிகம் எனும் அளவுக்கு அவர்களது வாழ்க்கை சிதைந்து கொண்டிருக்கிறது. பாவம் படிப்பறிவற்ற அவர்களால் பல விஷயங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. பிறரின் வளங்களை சுரண்டிப் பிழைப்பவனெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்க, பிறரை வாழ வைத்த உழவன் மாண்டுகொண்டிருக்கிறான்.

ஊறுக்கே சோறுபோட்ட உழவன் ஒரு ரூபாய் அரிசிக்காக ரேஷன் கடைகளின் வரிசைகளில் முண்டிக் கொண்டிருக்கிறான். இலவச வேட்டி, சேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறான்.

இயற்க்கையை அழிக்க ஆரம்பித்தோம். அதன் விளைவு இயற்க்கையோடு மட்டுமே உறவாடி வாழ்ந்த உழவனும் அழிந்து கொண்டிருக்கிறான். இயற்கை காக்கப்பட்டால் அவனும் காக்கப்படுவான்.

உலகிற்கு உயர்வு தரும் மாற்றங்கள் தேவைதான். அதே நேரத்தில்,
உள்ளத்திற்கு உயர்வு தரும் மாற்றங்கள் அதைவிட அதிகம் தேவையானது








General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..