Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்......
Posted By:Hajas On 6/14/2014 7:22:45 AM

abortion pill reversal

how much does the abortion pill cost

பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்......

 
 

பார்ப்பனியத்தால் அப்படி என்ன உண்மைகள் மறைக்க படுகின்றேன.. என்று கேட்டால்????  இந்த பதிவு முழுமையும் படித்துக் கொள்ளவும்.... சில விசயங்கள் நாம் நாட்டின் வரலாற்று உண்மைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கடவுள் என்ற மாயைக்குள் மயக்கும் திறன்.....

சிறிது நாட்களுக்கு முன்பு எனது வீட்டிற்க்கு சென்று இருந்தேன்..... மாமா பையன், பொண்ணு, சித்தி பசங்க, என்று ஒரு சிறு குழந்தைகள் பட்டாளமே எனது வீட்டில் எனது வருகைக்காக வந்து இருந்தார்கள், அனைவருக்கும் முழு வருட பள்ளி விடுமுறை நாட்கள், நானும் ஊருக்கு வருவேன் என்பதால் அனைவரும் எனது விட்டிருக்கு வந்து விட்டார்கள்...... அனைவருடனும் நன்றாக கலந்து பேசி, உரையாடி மகிழ்ந்தேன், அதன் பிறகு சிறிது நேரம் தொலைகாட்சி பார்க்கலாம் என்று நினைத்தால்.... வீட்டிற்க்கு வந்து இருக்கும் பொடிசுகள் எல்லாம் கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, தமிழ் கார்ட்டூன் என்று வைத்து கொண்டு மற்றவர்களை பார்க்க விடாமல் அட்டுழியம் பண்ணி கொண்டு இருந்தார்கள், சரி சிறுவர்கள் தானே, நாமும் சிறு வயதில் இருக்கும் பொழுது இப்படி தானே கார்ட்டூன் சேனல் வைத்து கொண்டு அட்டுழியம் பண்ணினோம்..... இப்பொழுது இது அவர்கள் முறை போலும் என்று நினைத்து கொண்டு அவர்கள் பார்த்து கொண்டு இருந்த கார்டூனையே நானும் சிறிது நேரம் பார்த்தேன்..... அன்று முழுவதும் ஹனுமான் வீர தீர செயல்கள் அடங்கிய தொடர் மட்டுமே ஒளிபரப்பி கொண்டு இருந்தார்கள்.... அதையும் இந்த சிறுவர் பட்டாளம், சிரித்து சிரித்து பார்த்து கொண்து இருந்தார்கள்..... அதை போல் செய்து கொண்டு நான் தான் ஹனுமான் என்று கூறி கொண்டும் இருந்தார்கள்.

முதலில் பார்க்கும் பொழுது பரவா இல்லை..... எத்தனை காலம் தான் நாமமும் ஆங்கில படமும் Christianity எகிப்த pyramids பார்த்து கொண்டு இருக்க வேண்டும்....... தமிழில் சில வருடங்கள் முன்பு வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முழுக்க தமிழ் நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், சிவன் சிலை என்று தமிழ் பாரம்பரியம் தொட்டு வந்த பொது பார்த்து வியந்தேன்..... அதை போல் இப்பொழுது குழந்தைகளை கவரும் இந்த சோட்ட பீம் நமது இந்திய பாரம்பரியம் மட்டும் இந்தியாவில் உள்ள ஒரு புராண கதையை இந்த குழந்தைகளுக்கு அளிக்கும் பொது அவர்களுக்கு நமது இந்தியாவின் பாரம்பரியம் நன்றாக தெரியுமே என்று பெருமை பட்டு கொண்டு இருக்கும் பொழுது தான் என்னது உச்சந்தலையில் யாரோ அடிப்பது போல் உணர்ந்தேன்........

உண்மையில் இது மட்டும் தான் இந்தியாவின் கலாச்சாரமா ????? இன்னும் எவ்ளோ இருகின்றேன.... அதை எல்லாம் இந்த நாட்டில் இதை பற்றி எவரும் பேசுவது கூட இல்லை..... இப்பொழுது தான் என்னக்கு ஒரு விசயம் புரிகிறது...... ஏன் தமிழ் நாட்டில் பெரியார் காலத்தில் இருந்து இந்த பார்பனியத்தை எதிர்கிறார்கள் என்று..... அவர்கள் அனைவரும் படித்தவர்கள், மற்றவர்கள் படிக்காதவர்கள், அவர்கள் பணக்காரர்கள், மற்றவர்கள் ஏழைகள் என்பதால் மட்டும் அல்ல..... இந்த ஏற்ற தாழ்வு மற்றும் அவர்கள் காரணம் காட்டி போரடி இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக இந்த அளவுக்கு பெரும்பான்மை, ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு அதிகாரம் கிடைத்து இருக்காது.......

பார்ப்பனியர்கள் மட்டும் படிதவர்கள், அவர்கள் மட்டுமே படிதவர்கள் என்னவே அவர்கள் எதோ சொன்னார்களோ அதுவே வரலாறு, பாரம்பரியம் என்று ஆனது, அவர்கள் சொல்லுவதே உண்மை என்றும் ஆனது... உங்களிடம் ஒன்று கேட்கிறேன்... உங்களுக்கு தெரிந்த விடுதலை போராட்ட வீரர்கள் பற்றி கூறுங்கள்....

காந்தி, நேரு, பாரதி, சுபாஸ், சுப்பிரமணியபுரம் சிவா, கட்டபொம்மன், வாஞ்சிநாதன், பகத் சிங்க், அப்பப்பா... இதன் பிறக்கு நமக்கு தெரிந்தது எல்லாம் இது வரை தான்..... என் என்றால் இவர்கள் அனைவரிர்ன் பெயரும் நமது பாட புத்தகத்தில் வந்த பெயர்கள்... இவர்களை தவிர நமக்கு எத்தனை பேரை தெரியும், இது போக நமது வட்டாரம், நமது ஊரில் பெயர் பெற்ற சில பேர் தவிர மற்றவர்கள் நமக்கு தெரியாது..... பேராண்மை என்ற படத்தில் ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி, மலை வாழ குழந்தைகளுக்கு பாடம் சொல்லி குடுப்பது போல் ஒரு காட்சி வரும் அதில் ரவி கூறுவர் சுதந்திர போராட்டத்தில் மலை வாழ் மக்களின் பங்களிப்பு.... அப்பொழுது நான் எண்ணியது.. என்ன டா இவன் அவன் அவன் பெருமையை பற்றி மற்றும் பேசுகிறேனா என்று,, ஏனென்றால் அவர்கள் பெருமை இந்த பற்பனியாதல் மறைக்க பட்டு இருக்கிறது.... என்னவே தான் அவர்கள் பெருமை அவர்கள் மட்டுமே பேசி வருகிறார்கள்... அவர்களை பற்றி நம்மக்கு தெரிய வில்லை... இன்னுமும் சுதந்திர போராட்டம் என்றால் மெட்டு குடி மக்கள் அவர்கள் தான் பிரிட்டிஷ் காரனுக்கு சலாம் போட்டு அரியணை ஏற்றி வைத்ததும் இவர்கள் தான், அதே பிரிட்டிஷ் காரானை எதிர்த்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்தாக நம்மக்கு தெரிபவர் கள்ளும் இந்த மெட்டு குடி மக்கள் தான் என்ன கொடுமை சார் இது........????

அவர்களை தவிர வேறு யாரும் இந்த சுதந்திர போராட்டில் பங்கு பெற வில்லையா????

சரி அடுத்தது... நமது தமிழ் மன்னர்கள் எப்படி இருப்பார்கள் ????? இது சிறது மாதங்களுக்கு முன் புதிய தலைமுறை தொலைகாட்சி வந்த ஒரு நிகழ்ச்சி.. தமிழ் மன்னர்கள் மட்டும் அல்ல இந்திய திரைபடத்தில் காட்ட படும் அரசர்கள் பற்றியது... இப்பொழுது நமக்கு தமிழ் அரசன் என்றால் எப்படி ஒரு பிம்பம் நமது கண் முன்னால் வரும்... சரிக பட்டு, வைர வைடுரியம் அணித்து, பகட்டாக முழு உடை அணிந்த ஒருவன் தான் நமது கண் முனால் வருவான்.... ஆனால் உண்மையுள் அப்படி தான் இருதர்களா ???? இந்தியாவில் முதலில் எடுக்கப்பட்ட படம் எடுக்க பட்ட காலகட்டதில் ரவி வர்மாவின் ஓவியங்கள் மிகவும் பிரபலம், அதில் ராஜாக்கள் பற்றி திட்ட பட்ட ஓவியம் தான் அந்த கால படங்களில் ராஜாக்களின் உடை அலங்காரம் செய்ய பெரிதும் உதவின.... அதன் பிறகு இந்திய மக்களுக்கு அரசன் என்றால் அப்படி தான் என்ற ஒரு மாயா பிம்பம் மனதில் தோன்றி விட்டது... அதன் பிறகு பிற மொழிகளில் எடுக்க பட்ட பிற படங்களும் அதைய பின் பற்றின. ஆனால் உண்மையுள் நமது தமிழ் நாட்டு மன்னர்கள் இப்படி பட்ட உடைகள் தான் உடுத்தி வந்து இருபார்களா என்று கேட்டால் கண்டிப்பாக சந்தேகமே??? நமது தமிழ் நாட்டின் சிதொசனம், கலாச்சாரம் என்று பார்த்தல் ஐவகை நிலங்கள் தான்.

இந்த இவகை நிலைத்திருக்கு ஏற்றார் போல் தான் அவர்கள் வாழ்வு ஆதாரம், உடைகள்,நடைமுறைகள் இருந்து இருக்கும், அது மட்டும் இன்றி பாரம்பரிய உடை அன வேஷ்டி மற்றும் துண்டு தான் அணித்து இருப்பார்கள், மேலும் ஒரு வசதியை காட்டுவதற்க வேண்டுமெனில் சில தங்க சங்கலிகள் அணித்து இருக்கலாம், பெண்கள் அதாவது மகாராணிகள் வேண்டும் என்றால் நகை கடையுள் இருக்கும் பொம்மைகள் போல் நகைகள் அணித்து கொண்து இருந்து இருகலாம்.... ஆனால் கண்டிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் சிவாஜி கணேசன் போல தான் உடை உடுத்தி தூய தமிழ் இல் தான் பேசி இருப்பர் என்றால் கண்டிப்பாக இல்லை.... அவரது வட்டார வழக்க படி... ஏல, வலே, போலே என்று தான் பேசி இருபார்......

இன்னும் ஒரு உதாரணம்.... சில மாதங்களுக்கு முன்பு paypal மற்றும் e -bay இணைந்து நடத்திய அவர்களுது employee 's காண ஒரு போட்டில் unity in diversity என்ற கொள்கைகளை காட்டுவதற்காக மாநிலம் வாரியாக அணைத்து அணிகளுக்கும் பெயர் வைகலாம் என்று அமெரிக்க நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் இங்கு இருக்கும் உயர் மட்ட மேலாண்மை இயகுனர் அனைத்தும் கிராஸ் பெல்ட் தான்.... அவர்கள் அந்த அந்த மாநிலத்தில் உயர் குடி மக்களின் சாதி பெயரை அந்த மாநிலத்தின் பெயரோடு இணைந்து விட்டார்கள், இதை பார்த்த பின்பு நமது தமிழ் இயகங்கள் சும்மா விடுமா save tamil groups இந்த போராட்டில் குதித்து அமெரிக்க நிறுவனம் மணிப்பும் கேட்ட பின்பு தான் நமது தமிழ் இன உணர்வாளர்கள் இந்த போராட்டத்தை நிறுத்தி கொண்டார்கள்..... இந்த போரட்டத்தின் முக்கிய சரமசம் என்ன வென்றால்.... Iyers of Tamil nadu என்றால் தமிழகத்தில் ஐயர் கல் மாதும் தான் இருகிரர்கல்லா???? மற்றவர்கள் அனைவரும் என்ன ________??????

இப்படி தான் நான் முதலில் சொன்ன முன்று தகவல்களும் நமது நாட்டின் கலாச்சாரத்தை மறைத்து எதோ இவர்கள் மட்டுமே இருப்பது போல தான் வெளியுள் இருந்து பார்பவர்களுக்கு தெரியும்.... அரசர்கள் காலத்து வரலாறு நமக்கு கல்வெட்டு முலம் தான் தெரிந்தது.... நமது நிகழ கால வரலாறு எதிர் காலதிருக்கு எவ்வாறு சென்று சேரும்.... இவ்வாறாக தான்... ஆனால் இந்த பார்பனர்கள் அதை திட்ட மிட்டு முடி மறைத்து எதோ இவர்கள் மட்டுமே இருப்பது போல் ஒரு மாயை உருவாகி விடுகிறார்கள்..... இதை விட குடாது...... நமது பாரம்பரியம் நம்மக்கு முக்கியம் இல்லை என்றால், வரும் காலத்தில் இவர்கள் உருவாகி வைத்த இந்த மாயை மட்டுமே மிஞ்சி இருக்கும்......

இந்த ப்ரசென்னை இப்பொழுது இல்லை இப்பொழுது அனைவரும் படித்தவர்கள், அனைத்து மக்களும் எல்லா இடதிலும் இருக்கிறார்கள், இனிமேல இப்படிபட்ட வரலாற்று பிழைகள் நடக்காது என்பவர்கள் கவனிக்க.... இதுவரை நான் பட்டியல் இட்ட வரலாற்று பிழைகள் மிகவும் குறைவு, இது போல் ஆயிரம் இருக்கிறது.... இவைகள் எப்பொழுது களைய பட போகின்றேன??? முதலில் சாதிகள் ஒழிக பட்ட வேண்டும், எல்லாம் எல்லாருக்கும் சென்று அடைய வேண்டும், அனைத்தும் அனைவருக்கும் தெரிய வேண்டும் அது வரை நான் தொடர்ந்து எழுதி கொண்டே தான் இருப்பேன்.... நான் வேறு யாரும் அல்ல.... உங்களுள் ஒருவன் தான்......

 
 

7 comments:

Anonymous said...

arumayaana padhivu idhai anaivarum kandippaaga thamudaiya kuzhandhaigalukku solla vendum nandri
surendran
surendranath1973@gmail.com

உங்களுள் ஒருவன் said...

@ anonymous - Surendran @ எனது பதிவிற்கு வந்து பின்னோட்டம் இட்டமைக்கு நன்றி.....

உங்களுள் ஒருவன் said...

@ sindhikka @ நூறு நபர்களில் இருவர் இப்படி இருபதற்கு இப்படி கூருகிறார்களே.... சாக்கடை அள்ளுபவன், முடி திருத்துபவன் மற்றும் நீங்கள் கூரும் நபர்களில் நூறு பேருக்கு இருவர் மட்டுமே இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்..... இன்னும் பெரும்பாலான top management இடங்களில் பிராமணர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.... இதற்க்கு என்ன சொல்லுகிறார்கள்????....... என்னது பதிவிற்கும் நீங்கள் பின்னோட்டம் இடத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று என்னக்கு என்ன தோன்றுகிறது.....

AaNaVaRaS said...

அருமையான பதிவு. மிக்க நன்றி.!

பி.கு.: பதிவினுள் ஆங்காங்கே சில எழுத்துப்பிழைகள் உள்ளன. பதிவினை பிரசுரிப்பதற்கு முன் ஒருமுறை படித்துப்பார்த்து பிரசுரிக்கவும்.
தவறுகளை சுட்டிக்காட்டுவது திருத்திக்கொள்வதற்காக மட்டுமே. தவறாக எண்ண வேண்டாம்.!!!

உங்களுள் ஒருவன் said...

நன்றி...@ AaNaVaRaS@ என்னது தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி.... நான் ஆங்கிலம் படித்து தமிழை மறந்த யோகியன்..... என் தமிழை கொஞ்சமாக கொஞ்சமாக மாற்றி வருகிறேன்.. குடிய விரைவில் தூய தமிழில் பிழை இல்லாமல் பதிவு இடுகிறேன்.....

Mani Bharathi said...

பயனுள்ள பதிவு.....

EllameyTamil.com




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..