Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
உழைப்பால் உயர்ந்த மனிதர்- மன்னான் சேட்
Posted By:Hajas On 6/8/2014 2:38:32 AM

நினைவு மலர்
உழைப்பால் உயர்ந்த மனிதர்- மன்னான் சேட்

வாழ்க்கையின் சிக்கலான சூழ்நிலையிலே- சிறு வயதில் தாயார் மறைவு- சின்னாப்பா சாச்சா அவர்கள் மகன் அகமது முகைதீன் என்ற மன்னான் சேட்- தந்தைக்கு ஒத்தாசையாக கடையிலே, பள்ளிப்பருவத்தில் பணிபுரிந்து, உழைத்துத் தன்னால், (அல்லாஹ்வின் அருளால்), முன்னுக்கு வரமுடியும் என்று சாதித்துக் காட்டியவர்.

தன்னுடைய இளமைப் பருவத்தில், பம்பாயிலே ஒரு கிறிஸ்தவ நண்பர் ஒருவருடன் இணைந்து, இமிடேசன் ஜுவெல்லரி-
(IMITATION JEWELLERY) தொழிலில் ஈடுபட்டார்கள்.அன்றைய பம்பாயிலே சிறு தொழில் என்பது, , வெளியே கழிவு நீர் ஓடிக்கொண்டிருக்கும், உள்ளே காற்றுக்கும் வெளிச்சத்துக்கும் பஞ்சம். குடியிருப்பு கேட்கவே வேண்டாம்.

உடல் உளைப்பு மட்டுமல்ல, என்ன மாதிரி வடிவம் ( Design)
என்ன கச்சாப்பொருள்/எந்த அளவு உபயோகிக்கப் படத்தப்பட வேண்டும், என்பதை தேர்ந்தெடுக்கும் முறை, பள்ளிக்கல்விக்கப்பாற்பட்டு, அவரிடம் இயற்கையாகவே, இறை அருளால், குடிகொண்டிருந்தது.
--------------------------------------------------------------------------------------------------------------
"இறை நம்பிக்கை கொண்டவர்களே , இறைவன் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்குக்காண்பிப்பதற்காகவே, தனது பொருளை, செலவு
செய்பவனைப்போல, நீங்களும் கொடுத்ததை, சொல்லிக்காண்பித்தும்,(மனம்) புண்படச்செய்தும், உங்களுடைய தான தர்மங்களை பாழாக்கி விடாதீர்கள்" குர் ஆன் 2:264
---------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையில் முன்னேறினார்கள் - படிப்படியாக. ஆனால்,வாழ்க்கையின், அன்றாட நடைமுறையை, செல்வச்செழிப்புக்கு ஏற்றபடி மாற்ற விரும்பவில்லை. வலது கை கொடுப்பதை இடது கை அறியாத வகையில் வாரி வழங்கியவர். விளம்பரத்தை விரும்பாதவர்.
திருக்குறுங்குடி பள்ளி, முழுக்க முழுக்க அவரின் பங்களிப்பு என்று தெரிந்து கொண்டேன்.ஆதற்கு முன்னர் வள்ளியூரில் பள்ளி.
இந்த இடங்களில் பள்ளியின் முக்கியத்துவம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவரின் வாழ்க்கையைச் சுருக்கமாகச் சொல்வதானால்:
"ஏணி, தோணி, அன்னாவி, நார்த்தங்காய்".

 
 
  • Peer Mohamedஉழைப்பால் உயர்ந்தவர்
    பல பேர் வாழ்க்கையில் உயர
    ஏணியாய் இருந்து ஏற்றிவிட்டவர்

    கடுமையான உழைப்பாளி
    உழைப்பின் உண்மைக்கு சொந்தகாரர் இவரால் உயர்ந்தோர்
    பலர் அதில் நானும் ஒருவன்
    எனக்கு தொழில் குரு தளராத
    தன்னம்பிக்கையில் தலைவர்
    வசதி வந்தபின்னும் நாலாம் நம்பர்
    பிரஸ் பிடித்து தொழில் படுவார்
    பார்க்க பரவசமாய் இருக்கும்
    சுறுசுறுப்பில் தேனீ
    அதை செயல் படுத்துவதில் காற்று
    திட்டமிடுவதில் சாணக்கியர்
    நிதி கையாள்வதில் தேர்ந்தவர்
    கொடை கொடுப்பதில் சீதாகதி
    கொடுத்து மகிழ்வதில் ' மன்னன் '

    மன்னன் அல்ல ' மா மன்னன் '

    அதனால்தான் ' மன்னன் சேட் '

    நமதூர் தந்த தொழில் தந்தை

    எனது வாழ்க்கையில் மறக்க முடியாத மா மனிதர் ' மன்னன் சேட்

    வல்ல இறைவன் இவர்களின் பாவங்கள் யாவையும் மன்னித்து
    ' ஜன்னதுல் பிர் தௌஸ் ' என்னும் சொர்க்கத்தின் பூஞ்ச் சோலையை
    இவருக்கு பாக்கியம்மக்க துவா செய்வோம் ...

    பீர் முஹம்மத் - மாத்தளை
  • Peer Mohamedஇன்று மும்பையில் இமிட்டேஷன் ஜுவல்லரி தொழிலில் இருக்கும் நமதூரார்கள் அத்துனை பேருமே இந்த 'மன்னான்' சேட்டால் வளர்த்தெடுக்கப் பட்டவர்கள் தான் என்று கூட சொல்லலாம், ஏர்வாடியில் அந்தக் காலங்களில் தண்ணீர் என்பது இப்ப இருப்பது மாதிரி நல்லி கிடையாது, அடி பம்புகள் - தெருவுக்கு தெரு வைத்து கொடுத்து மக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றியவர், இல்லை என்று யார் அவரிடத்தில் சென்றாலும் இல்லை என்று சொல்லாமல் அவர்களின் தேவையை நிறைவேற்றியவர், அரபு நாடுகளுக்கு ஆரம்ப காலங்களில் பொருளீட்ட சென்ற நமது முன்னோர்கள் - வெளி நாடு செல்ல விசா-டிக்கெட் என்று ஏஜெண்ட் க்கு கொடுக்கும் பணம் - இதிலும் மன்னான் சேட்டின் பங்களிப்பு தான் - இப்படி ஏர்வாடி யில் ஏகப்பட்ட குடும்பங்களுக்கு ஏணியாக இருந்து - தான தருமங்களில் சிறந்து விளங்கிய அந்த கொடை வள்ளல் - மன்னன் சேட் - அவர்களுக்கு வல்ல ரஹ்மான் வெகுமதிகளையும், உயர்ந்த படித்தரங்களையும் வழங்குவானாக! பிரார்த்திப்போம் நாமனைவரும் உழைப்பால் உயர்ந்த இந்த உத்தமருக்காக!
  • ஹஸன் ஷேக்மன்னன் மச்சானை மறப்பதிற்கில்லை .....கச்சியப்பா (அவர்கள் தந்தை)மாமா கையையும் நான் மறக்கவில்லை

https://www.facebook.com/groups/eruvadi/permalink/674630339241076/

 




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..