வாழ்க்கையின் சிக்கலான சூழ்நிலையிலே- சிறு வயதில் தாயார் மறைவு- சின்னாப்பா சாச்சா அவர்கள் மகன் அகமது முகைதீன் என்ற மன்னான் சேட்- தந்தைக்கு ஒத்தாசையாக கடையிலே, பள்ளிப்பருவத்தில் பணிபுரிந்து, உழைத்துத் தன்னால், (அல்லாஹ்வின் அருளால்), முன்னுக்கு வரமுடியும் என்று சாதித்துக் காட்டியவர்.
தன்னுடைய இளமைப் பருவத்தில், பம்பாயிலே ஒரு கிறிஸ்தவ நண்பர் ஒருவருடன் இணைந்து, இமிடேசன் ஜுவெல்லரி-
(IMITATION JEWELLERY) தொழிலில் ஈடுபட்டார்கள்.அன்றைய பம்பாயிலே சிறு தொழில் என்பது, , வெளியே கழிவு நீர் ஓடிக்கொண்டிருக்கும், உள்ளே காற்றுக்கும் வெளிச்சத்துக்கும் பஞ்சம். குடியிருப்பு கேட்கவே வேண்டாம்.
உடல் உளைப்பு மட்டுமல்ல, என்ன மாதிரி வடிவம் ( Design)
என்ன கச்சாப்பொருள்/எந்த அளவு உபயோகிக்கப் படத்தப்பட வேண்டும், என்பதை தேர்ந்தெடுக்கும் முறை, பள்ளிக்கல்விக்கப்பாற்பட்டு, அவரிடம் இயற்கையாகவே, இறை அருளால், குடிகொண்டிருந்தது.
--------------------------------------------------------------------------------------------------------------
"இறை நம்பிக்கை கொண்டவர்களே , இறைவன் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்குக்காண்பிப்பதற்காகவே, தனது பொருளை, செலவு
செய்பவனைப்போல, நீங்களும் கொடுத்ததை, சொல்லிக்காண்பித்தும்,(மனம்) புண்படச்செய்தும், உங்களுடைய தான தர்மங்களை பாழாக்கி விடாதீர்கள்" குர் ஆன் 2:264
---------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையில் முன்னேறினார்கள் - படிப்படியாக. ஆனால்,வாழ்க்கையின், அன்றாட நடைமுறையை, செல்வச்செழிப்புக்கு ஏற்றபடி மாற்ற விரும்பவில்லை. வலது கை கொடுப்பதை இடது கை அறியாத வகையில் வாரி வழங்கியவர். விளம்பரத்தை விரும்பாதவர்.
திருக்குறுங்குடி பள்ளி, முழுக்க முழுக்க அவரின் பங்களிப்பு என்று தெரிந்து கொண்டேன்.ஆதற்கு முன்னர் வள்ளியூரில் பள்ளி.
இந்த இடங்களில் பள்ளியின் முக்கியத்துவம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இவரின் வாழ்க்கையைச் சுருக்கமாகச் சொல்வதானால்:
"ஏணி, தோணி, அன்னாவி, நார்த்தங்காய்".