Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மருத்துவ படிப்பு புரோக்கர்கள் - பெற்றோர்களே உஷார்!
Posted By:Hajas On 5/5/2014 5:27:56 AM

மருத்துவ படிப்பு புரோக்கர்கள் - பெற்றோர்களே உஷார்!மே 05,2014,10:44 IST

 

 

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளிவர உள்ளதால், வெளிநாடுகளில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் "டாக்டர் சீட் வாங்கித் தருவதாக" கூறி மோசடி செய்யும் புரோக்கர்கள் அதிகரித்து உள்ளனர்.

பிளஸ் 2க்கு பின் தங்களது குழந்தைகளை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோரின் விருப்பமாக உள்ளது. பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு மட்டுமே தமிகழத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. வசதி படைத்தவர்கள், லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் வெளி நாடுகளில் உள்ள மருத்துவ கல்லூரிகளில், டாக்டருக்கு படிக்க சீட் வாங்கித் தருவதாக கூறி, புரோக்கர்கள் பலர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றி வருகின்றனர். புரோக்கர்கள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோரது மொபைல் போன் எண்களை கண்டுபிடித்து, அவர்களை தொடர்பு கொள்கின்றனர்.

அவர்களிடம் குறைந்த கட்டணத்தில், கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் டாக்டர் சீட் வாங்கித் தருவதாக கூறி, முன்பணம் ஐந்து லட்சம் ரூபாய் வரை பெறுகின்றனர். அதையடுத்து பெற்றோரை கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துக் கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று, அங்கு ஏற்கனவே செட்டப் செய்து வைத்துள்ள நபரை காட்டி, இவர்தான் கல்லூரி சேர்மன் என்று அறிமுகப்படுத்தி மீதி பணத்தை கறந்து விடுகின்றனர்.

வெளிநாடுகளில், குறிப்பாக ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக பெற்றோரை நம்ப வைக்கின்றனர். இதுபோன்று, கடந்த ஆண்டு மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 30க்கும் மேற்பட்ட பெற்றோர் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும், பிளஸ் 2 தேர்வு முடிவு வரும் முன்பே, புரோக்கர்கள், பெற்றோர்களுக்கு போன் செய்து வலைவிரிக்க துவங்கி விட்டனர்.

ஏமாறாதீர்: கடந்த ஆண்டு மோசடி புரோக்கரிடம் பணத்தை இழந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முருகன் கூறியதாவது: கர்நாடகா மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமென்றால், அந்த மாநில அரசு நடத்தும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இதை அறியாமல் எங்களை போன்ற சிலர், புரோக்கர்களை நம்பி கடந்த ஆண்டு பல லட்சங்களை இழந்துள்ளனர்.

கல்லூரியில் சேர பணம் கட்டுவதற்கு முன், கல்லூரி குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரியில் சேர்ப்பதற்கு முன்பாக புரோக்கர்களிடம் பெற்றோர் பணத்தை கொடுக்கக்கூடாது. தங்கள் குழந்தைகளை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசையில் உள்ள பெற்றோர் விழிப்புடன் இருந்து பணம் கொடுத்து ஏமாறுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

குறிப்பு

இந்த தாராளமயமாக்கல் உலகில், வாழ்வில் அதிகம் சம்பாதிக்க வைத்து முன்னுக்கு கொண்டுவரும் எத்தனையோ படிப்புகள் உள்ளன. ஆனால், அலோபதி மருத்துவப் படிப்புதான் வாழ்க்கையின் அந்தஸ்தை உயர்த்தும் என்ற அறியாமை இந்திய சமூகத்தில் எங்கும் புரையோடி போயுள்ளது.

தேவையில்லாமல், தங்களின் பணத்தை இழந்து தவிப்பதைவிட, புத்தாசாலித்தனமாக யோசிக்க வேண்டும். மனிதனுக்கு, மருத்துவப் படிப்பைவிட, அந்தஸ்தையும், மரியாதையையும், செல்வத்தையும் அளிக்கும் படிப்புகள் நிறைய உள்ளன. அவற்றைப் பற்றி அறிய நாடுவீர்  www.kalvimalar.com.




Career Counselling
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..