Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
கோடை கால‌த்தை குளிர்விக்க‌
Posted By:nsjohnson On 1/1/2014 10:10:56 PM

lipitor

lipitor click here

1. நொங்கு:

 
ந‌ம‌தூர் சுற்று வ‌ட்டார‌ கிராம‌ப்புற‌ங்க‌ளிலிருந்து கோடைகால‌த்தை வ‌ர‌வேற்கும் முக‌மாக‌ ஊரின் முக்கிய‌ ச‌ந்து, முச்ச‌ந்திக‌ளில் வ‌ந்திறங்கி குவிந்து கிடக்கும். அதை அழ‌காக‌ சீவி அத‌னுள் இருக்கும் க‌ண்க‌ளை தோண்டி எடுத்து ப‌னைம‌ட்டையில் வைத்து விற்ப‌ர். அதை பார்ப்ப‌வ‌ர்க‌ளெல்லாம் ஆர்வ‌த்துட‌ன் வாங்கிச்சென்று வீட்டின் பெண்க‌ளிட‌ம் கொண்டு வ‌ந்து ஒப்ப‌டைப்ப‌ர். அவ‌ர்க‌ளும் அதை செவ்வ‌னே சுத்த‌ம் செய்து அவ‌ற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து பால் ம‌ற்றும் ப‌ன்னீருட‌ன் கொஞ்ச‌ம் சீனியும் சேர்த்து அப்ப‌டியே குளிர் சாத‌ன்ப்பெட்டியில் கொஞ்ச‌ நேர‌ம் வைத்து கிளாஸில் கொடுக்க‌ நாம் குடித்த‌ பின் உள்ளே சென்ற‌ நுங்கு கோடை உஸ்ன‌த்தையும், தாகத்தையும் எங்கே? என‌ கேட்க‌ வைத்து விடும். (அத‌ன் பின் நொங்கு வ‌ண்டி மூல‌ம் தொங்கு,தொங்கு என்று தெருவில் ஓடி விளையாண்டது மீதி).
 
2. விளாம்ப‌ழம்:
 
இப்பொழுதெல்லாம் க‌ண்மாசியாக் காணாம‌ல் போய் விட்டது சிறு வயதில் சகோ. தாஜுத்தீன் வீட்டுக்கொல்லையில் காய்த்துத்தொங்கியதைக்கண்ட ஞாபகம் இன்று உள்ளத்தில் கருப்பு,வெள்ளை படமாக நிழலாடுகிறது.
 
ஆமை போன்று க‌டின‌ மேல் தோலை உடைய‌ இந்த‌ ப‌ழ‌ம் அதை உடைத்து ச‌ர்க்க‌ரை/வெல்லம் (க‌ச்சாக்க‌டையில் வாங்கிய) வேறு கடையில் வாங்கினால் சர்க்கரை செல்லாதா? என யாரோ முணுமுணுப்பது போல் தெரிகிறது)பக்குவமாக‌ சேர்த்து சாப்பிட்டால் ந‌ன்கு வ‌யிறும் நிறையும் உள்ள‌மும் குளிரும் இனிமையாய்.
 
3. எல‌ந்தைப்ப‌ழம்:
 
இது ந‌ன்கு ப‌ழுத்து புழுவுட‌ன் வ‌ந்தாலும் ச‌ரி அல்ல‌து இன்னும் ச‌ரி வ‌ர‌ ப‌ழுக்காம‌ல் செங்காயாக‌ வ‌ந்தாலும் ச‌ரி ஒரு க‌ட்டு க‌ட்டாம‌ல் விடுவ‌தில்லை. உப்பு போட்டு அல்ல‌து பொடி சேர்த்து சாப்பிட்டாலும் சும்மா வெறும‌னே சாப்பிட்டாலும் ந‌ன்றாக‌ சுவை த‌ரும். வயது வித்தியாசமின்றி வாயில் எச்சிலை ஊற்றெடுக்க‌ வைக்கும். (இத‌ன் ம‌றுபிற‌வி தான் க‌டையில் விற்கும் எல‌ந்த‌வ‌டை பார்க்க‌ க‌ண்ண‌ங்க‌ரே என்று இருந்தாலும் அத‌ன் சுத்த‌ம்,ப‌த்த‌ம் பார்க்காம‌ல் திண்டால் தான் அன்றைய‌ பொழுதே இனிமையாக‌ க‌ழியும் என்ப‌து அறிவிக்க‌ப்ப‌டாத ஊர் வ‌ழ‌க்க‌மாக‌ இருந்த‌து அந்த‌ கால‌த்தில்)
 
4. வெள்ள‌ரிப்ப‌ழ‌ம்:
 
ந‌ன்கு ப‌ழுத்த‌ப்ப‌ழ‌ம் ப‌னை ம‌ட்டையை போர்வையாய் போர்த்தி வ‌ந்திற‌ங்கும். அவற்றை வாங்கி சிறு துண்டுகளாகவோ அல்லது மிக்ஸ்யில் நன்கு அரைத்து ஜூஸ் செய்து குளிரூட்டி அருந்தினாலும் மிகவும் இனிமையாகவும் தாகம் தீர்க்கும் தாரக மந்திரமாகத்திகழும். உள்ளிருக்கும் சிறு கொட்டைக‌ளை எடுத்து வெயிலில் காய‌ வைப்ப‌ர் வீட்டுப்பெண்க‌ள். அத‌ன் ப‌ருப்பு தான் இன்றைய‌ இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளுக்கு மேருகூட்ட மேல்பூச்சாக‌ ஃபெர் அண்ட் ல‌வ்லி கிரீம் போல் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து.
 
5. நாவ‌ப்ப‌ழ‌ம்:
ந‌ன்கு ப‌ழுத்த‌ப்ப‌ழ‌ம் இனிப்பிட்டு சாப்பிட்டாலும் அல்ல‌து உப்பிட்டு சாப்பிட்டாலும் சாப்பிடுப‌வ‌ரின் எதிர்பார்ப்பிற்கேற்ற‌ சுவையைத்தாராள‌மாகத்த‌ரும். இத‌ன் க‌ச‌ப்பு மிகுந்த‌ கொட்டையை அரைத்து உட்கொள்வது ச‌ர்க்க‌ரை நோய் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ ம‌ருந்தாக‌ சொல்வ‌ர்.
 
6. ப‌ன‌ம்ப‌ழ‌ம்:
 
இள‌ நுங்கின் முதுமை கால‌ம் தான் இந்த‌ ப‌ன‌ம் ப‌ழ‌ம். இதை அடுப்பில் சுட்டு இனிப்பான அத‌ன் நார் நாவின் சுவைக்கு தார் ரோடு போடும். இதை உடைக‌ளில் ப‌டாம‌ல் சாப்பிட்டால் அது ஒரு சாத‌னையாக‌த்தான் க‌ருத‌ப்ப‌டும் அக்கால‌த்தில். சாப்பிடும் பொழுது வாயை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளுக்கு ம‌ஞ்ச‌ல் வ‌ர்ண‌ம் பூசி (ஒலப்பி) விட்டு விடும்.
 
7. மாங்காய்/மாம்ப‌ழ‌ம்:
 
ஒட்டு அல்ல‌து நாட்டு மாங்காய்க‌ள் வ‌யோதிக‌ம் அடைந்து ந‌ம‌க்கு ந‌ல்ல‌ சுவை த‌ரும் மாம்ப‌ழ‌ங்க‌ளாய் வகை, வ‌கையான‌ ர‌க‌ங்க‌ளில் குவிந்து கிடைக்கும். விலையும் அப்ப‌டித்தான். ஒரு கால‌த்தில் தெருவுக்கு வ‌ரும் மாம்ப‌ழ‌ங்க‌ளை அப்ப‌டியே வெட்டாம‌ல் ந‌ன்றாக் கையில் வைத்து ப‌க்குவ‌மாக‌ அமுக்கி அத‌ன் சாரு (ப‌ய‌ப்ப‌டாதீர்க‌ள் ப‌ள்ளிக்கூட‌ சார் இல்லை) வெளியில் வ‌ராம‌ல் சாப்பிடும் பொழுது சில‌ர் அத‌ன் கொட்டையைக்கூட‌ விட்டு வைக்காம‌ல் ச‌ப்பி சாப்பிடும் பொழுது அத‌ற்குள் என்றோ சென்று செட்டிலான‌ புழுவும் சேர்ந்தே வாயிக்குள் சென்று விடும். (அப்புற‌ம் என்ன? வ‌யிற்று வ‌லி என்று மீராசா டாக்ட‌ரிட‌ம் செல்ல வேண்டியது தான். தஸ்தகீர் ஒரு காலத்தில் செட்டித்தோப்பில் கல்லால் மாங்காய் அடித்து தின்ற பழக்கம் ஏதும் உண்டா? இன்று கலிஃபோர்னியாவில் ஆப்பிள் அடித்து திண்க ஏதேனும் வசதி உண்டா?)
 
8. நெல்லிக்காய்:
 
காலமெல்லாம் காயாகத்தான் இருக்கும். இத‌ன் ப‌ழ‌ம் எங்கு கிடைக்கும் என்று தெரிய‌வில்லை.
 
பெரு நெல்லிக்காய், சிறு(அரு)நெல்லிக்காய் என்று இர‌ண்டு வ‌கைக‌ளாக‌ கிடைக்கும். ஊறுகாய் போடுவ‌த‌ற்கும், சும்மா உப்பு/பொடி போட்டு சாப்பிடுவ‌த‌ற்கும் சுவையாக‌ இருக்கும். யானை வ‌ரும் பின்னே ம‌ணியோசை வ‌ரும் முன்னே என்ப‌து போல் நெல்லிக்காய் என்றாலே வாயில் எச்சில் ஊறி முன்பே வ‌ந்து நிற்கும். (பெண்க‌ளுக்கு ரொம்ப‌ ஒஹ‌ப்பான‌ க‌னி)
 
9. ப‌ன‌ங்கிழ‌ங்கு:
 
(நுங்கின் தாய‌ புள்ளெ அல்ல‌து ஒக்க‌ப்பொற‌ந்த‌ ஒட‌ன் பொற‌ப்பு என்றும் சொல்லலாம்) ந‌ன்றாக அவித்த‌ கிழ‌ங்கை வாங்கி வ‌ந்து அத‌ன் நாரை நீக்கி விட்டு (குருத்து எடுத்து திண்ட‌து போக‌) சுர‌ண்டி அத்துட‌ன் கொஞ்ச‌ம் தேங்காய்ப்பூ சேர்த்து சீனியும் போட்டு சாப்பிட்டால் சுகமான சுவைக்கு சொல்ல‌வா வேண்டும்? (எல்லாத்துலையும் சீனியைப்போட்டு சாப்பிட்டா சீக்கிர‌ம் இனிப்பு நீரு வ‌ராதா? என்று யாரோ முண‌ங்குவ‌து போல் தெரிகிற‌து)
 
10. ம‌ர‌வ‌ள்ளிக்கிழ‌ங்கு:
 
ந‌ல்ல‌ ம‌ல்லிகைப்பூ போன்ற‌ நிற‌த்தில் அவித்து எடுக்க‌ப்ப‌டும் கிழ‌ங்கு சும்மா சாப்பிட்டாலும் பொடி வைத்து சாப்பிட்டாலும் நன்றாக‌த்தான் இருக்கும். இது ப‌ரினாம‌ வ‌ள‌ர்ச்சி பெற்று இன்று க‌டைக‌ளில் சுவை மிகு சிஃப்ஸாக‌ கிடைக்கிற‌து.
 
11. கொட்டிக்கிழ‌ங்கு:
 
எங்கு தான் கொட்டிக்கிட‌க்குமோ இந்த‌ கிழ‌ங்கு? பார்க்க‌ க‌ருமை நிற‌மாய் ஒரு வ‌டிவ‌மே இல்லாம‌ல் இருக்கும். ஆனால் அத‌ன் மேல் தோலை சுத்த‌ம் செய்து சாப்பிட்டால் ந‌ல்ல‌ ந‌றும‌ண‌த்துட‌ன் சுவையாக‌ இருக்கும். (சில‌ நேர‌ங்க‌ளில் தோல் உறிக்க‌ மாய்ச்ச‌ல் ப‌ட்டு அப்ப‌டியே திண்டு தீர்த்த‌ நினைவுக‌ளும் உண்டு)
 
12. ச‌க்க‌ர‌வ‌ள்ளிக்கிழ‌ங்கு:
 
இத‌ன் மேல் தோல் சிவ‌ந்து மிக‌வும் மிருதுவாக‌ இருக்கும். இறைவ‌னால் இத‌ற்கு இய‌ற்கையில் இனிப்பு சேர்க்க‌ப்ப‌ட்டே வ‌ரும். ந‌ன்றாக‌ இருக்கும்.
 
13. பலாப்ப‌ழ‌ம்:
 
இதை பக்குவமாக உறித்தெடுப்ப‌து என்ப‌து ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் செல்லாம‌ல் ப‌டிக்கும் பெரும் பாட‌ம். போர்க்களம் செல்ல ஆயத்தமாகும் படை வீரன் போல் இதை வெட்டும் முன்னர் பல தயாரிப்புகள் செய்ய வேண்டும். தின்ப‌த‌ற்கு இனிமையாக‌வும் மேலும் திண்ண‌‌ தூண்டும் முக்க‌னிக‌ளில் ஒரு ந‌ல்ல‌ சுவைமிக்க‌ ப‌ழ‌ம். இத‌ன் கொட்டையை அடுப்பில் இட்டு சுட்டு சாப்பிட்டால் அதுவும் இனிமையாக‌ இருக்கும். கீரை ஆக்கும் பொழுதும் வீட்டுப்பெண்க‌ள் இதை சேர்த்துக்கொள்வ‌ர். (கூடுத‌ல் சுவைக்கு ராலு போட‌ ம‌ற‌ந்துடாதியெ...)
 
14. ப‌த‌னீர்:
 
இதுவும் நுங்கின் உட‌ன் பிற‌ப்பு தான். பனை மரத்தின் சுவை மிக்க நீர். இது இப்பொழுது வ‌ர‌த்து குறைந்து விட்ட‌து.
 
15. இள‌நீர்:
 
இது வீட்டுப்பிராணி என்று சொல்வ‌து போல் ந‌ம்மூரில் எல்லா வீடுக‌ளிலும் ப‌ரவலாக தென்னை மரங்கள் இருக்கும். உட‌லுக்கு ந‌ல்ல‌ குளிர்ச்சி த‌ரும் இய‌ற்கைப்பான‌ம். இதையும் ம‌க்க‌ள் சுவையைக்கூட்ட‌ சில‌ எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சேர்த்து ப‌ருகுவ‌ர் (அதான் ப‌ன்னீர் ம‌ற்றும் சீனி சேர்த்த‌ல்).
 
16. தர்பூசணிபபழம்:
 
சிவந்த நல்ல பழம் அப்படியே சாப்பிட்டாலும் ஐஸ் போட்டு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும் பருக,பருக கேட்கும். இத‌னை த‌ட்டிப்பார்த்து ந‌ல்ல‌ ப‌ழ‌த்தை தெரிவு செய்யும் கலையை கற்க‌ ந‌ம் ம‌க்க‌ள் எந்த‌ கோர்ஸ் ப‌டித்தார்க‌ள்? எங்கு ப‌டித்தார்க‌ள்? என்று தெரிய‌வில்லை.
 
17. நில‌க்க‌டலை:
 
இதை அவித்து சாப்பிட்டாலும், வ‌றுத்து சாப்பிட்டாலும் ந‌ல்ல‌ சுவையைத்த‌ரும். வ‌றுத்து சாப்பிடுவ‌தை விட‌ அவித்து சாப்பிடுவ‌து ந‌ல்ல‌து என்று சொல்வ‌ர். இத‌ன் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி தான் க‌ட‌லை மிட்டாய்.
 
இன்னும் ப‌ல‌ காய், க‌னிக‌ள் கோடை கால‌த்தை குளிர்விக்க‌ இறைவ‌னால் இலவசமாக இப்பாருலகிற்கு அருள‌ப்ப‌ட்ட‌வைக‌ள் ஏராள‌ம் உண்டு. இதை எண்ணி என்றும் இறைவ‌னைப்புக‌ழ்வோம்.
 
ப‌ழைய‌ நினைவுக‌ளிலிருந்து எதையாவ‌து எழுத‌ வேண்டும் என்று எண்ணி இதை எழுதியுள்ளேன். இதை ப‌டித்து பின்னூட்ட‌ம் இடுப‌வ‌ர்க‌ள் தான் இத‌ற்கு சரியான‌ மார்க் போட‌ வேண்டும்.
 
இன்ஷா அல்லாஹ் இன்னொரு க‌ட்டுரையில் ச‌ந்திப்போம்.
 
மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

 

 



General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..