அரசியலாக்கப்படும் ஓரினச்சேர்க்கை!
(மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)
மேலைநாடுகளின் கலாச்சார சீர்கேட்டின் அடையாளமாகத் திகழும் ஓரினச் சேர்க்கையின் நாசகார விபரீதத்தை உணர்ந்து தான் நாடு சுதந்திரம் பெற்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றத்திற்குரியதென்றும் நமது நாட்டின் ஒழுக்கப் பாரம்பரியத்திற்கு எதிரானதென்றும் அறிவிக்கப் பட்டது.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபருக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 377 பிரிவின்படி 10 ஆண்டுகளிலிருந்து ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தண்டனை வழங்கும் இந்திய தண்டனை சட்டவிதியை நீக்கு வதற்கு அதாவது ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தடையை நீக்குவதற்கு தற்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முயற்சித்து வருவது இந்திய கலாச்சாரத்திற்கு விடப் பட்டுள்ள மிகப்பெரும் சவாலாகும்.
60ஆண்டுகால அரசியல் அனுபவமிக்க காங்கிரஸ், அரசியல் ரீதியாக எப்போதெல்லாம் பின்னடைவை சந்திக்கிறதோ?அந்த நேரத்தில் மற்றொரு பரபரப்பான செய்திகளை ஊடகங்களுக்கு இரையாக்குவது வழக்கம்!
தற்போது நடந்து முடிந்துள்ள நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ்,
இதன் தாக்கம் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற அச்சத்தில் காங்கிரஸின் தேர்தல் தோல்வி பற்றிய மக்களின் சிந்தனையை தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பக்கம் திசை திருப்பி விட்டுள்ளது.
அதாவது கடந்த 11.12.2013 அன்று உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கை தொடர்பாக வழங்கியுள்ள தீர்ப்பில் ஓரினச்சேர்க்கை என்பது சட்டவிரோதமானது என கூறியது.
இந்த தீர்ப்பு வெளியானதுமே பெரும்பாலான காங்கிரஸ்காரர்களும்,ஓரினச்சேர்க்கையாளர்களும் கடும் அதிருப்தியை வெளியிட்டனர்.
ஏதோ மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடந்துவிட்டதாகவும்,பாதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமையை நிலை நாட்டும் வகையில் உடனடியாக பாராளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்கொண்டுவந்துஇந்தியஅரசியலமைப்பின்விதி377ன் கீழ் வரும் ஓரினச்சேர்க்கை மீதான குற்ற நடவடிக்கையை ரத்து செய்யப்படுமென்றும் மத்திய காங்கிரஸ் அமைச்சர்களும்,அதன் தலைவர் சோனியாகாந்தி அவர்களும் அறிக்கை விடுத்து ஓரினச்சேர்க்கை விசயத்தை அரசியலாக்கிவிட்டனர்.
தற்போது நாடு முழுவதும் விவாதிக்கப்படும் முக்கியப்பொருளாக ஓரினச்சேர்க்கை இடம்பெற்று விட்டது.
மத்திய அரசின் இந்த குறுமதி விபரீத முயற்சி ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் மிகப்பெரிய சீரழிவை உருவாக்கி விடும்.
இறைவன் அமைத்து கொடுத்த இயற்கையான ஒழுக்கமுள்ள குண நலன்களை மறந்து தன்னிச்சையாக காட்டுமிராண்டித் தனமாக வாழ முயற்சிக்கும் ஒரு சில கலாச்சார சீர் கேட்டாளர்களின் நாசகார வாழ்க்கை சூழலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கைக்கு எதிரான இந்திய தண்டனை சட்டத்தை மறு சீராய்வின் பெயரால் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு கொடுக்க மத்திய அரசு முனைந்திருப்பது மிகவும் அருவெறுக்கத்தக்கதாகும்.
இறைவன் வகுத்துள்ள விதிகளுக்கே இது மிகப்பெரிய சவாலாகும்.
முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் என்றும் அவருக்கு ஜோடியாக ஹவ்வா என்ற பெண்ணும் படைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
இதைப் போலவே கிறிஸ்து வர்களின் பைபிளிலும் உலகில் தோன்றிய முதல் மனிதர் ஆதாம் என்றும் அவரின் துணையாக ஏவால் என்ற பெண்ணும் தோன்றியதாக குறிப்பிடப்படுகிறது.
பகவத் கீதையில் கூட ஆதி என்ற துவக்கம் சிவன் என்றும் அவரின் துணையாக பார்வதி என்றும் குறிப்பிடப்படுகிறது.
இப்படி எல்லா சமயத்தினராலும் குறிப்பிடப்படுகின்ற உலகில் தோன்றிய முதல் மனிதர் என்ற நிலைப்பாட்டை சற்று ஆராய்ந்து பார்த்தால் ஒரு ஆணுக்கு ஜோடியாக ஒரு பெண்ணாகவும், ஒரு பெண்ணுக்கு ஜோடியாக ஒரு ஆணாகவும் தான் இருக்க முடியும் இருக்கவும் வேண்டும் என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
சிறு பிள்ளைக்கும் பளிச்சென புரியும் இந்த இறைத் தத்துவம் இன்றைய ஆட்சி யாளர்களுக்கு புரியாமலா போகும்? ஒரு ஆண் இன்னொரு ஆணுடனும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடனும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்ற ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போர் மனித சமுதாயத்தின் விரோதி களாகவே இருக்க முடியும்!
இத்தகையவர்கள் மனிதருக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் தான் விரோதிகள்.
ஓரினச்சேர்க்கை என்பது ஒழுக்கமுள்ள இந்திய பாரம்பரிய கலாச்சாரத்திற்கு ஒவ்வாத விசயம் என்பதால் அது சட்டவிரோதமானதாகவும்,குற்றத்திற்குரியதாகவும் கருதப்படுகிறது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அமெரிக்காவை ஏன் கோபமடைய செய்யவேண்டும்?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஐநா சபை,கண்டனம் தெரிவித்தது ஏன்?
மேற்கத்திய கலாச்சாரத்தை இந்தியாவிற்குள் ஊடுறுவ செய்வதின் மூலம் இந்திய தேசத்தின் ஒழுக்க வாழ்வியலை சிதைத்து விட்டால்,சோவியத் ரஷ்யாவை பலகூறுகளாக சிதைத்தது போல் இந்தியாவையும் சிதைத்து விடலாம் என்ற அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு இன்னொரு காரணம் தான் ஓரினச்சேர்க்கை மீதான அக்கறை.
தற்போதைய தேசத்தின் விஞ்ஞான முன்னேற்றம் மிக முக்கியமானதாகும்!சமீபத்திய மங்கள் யான் விண்கலம் நாசாவின் கண்களை உறுத்திக்கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஒரு பக்கம் எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய்க்கெதிராக மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் செய்யும் ஆட்சியாளர்கள் மறு பக்கம் எய்ட்ஸ் என்னும் கொலைகாரனுக்கு சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்க நினைப்பது எவ்வகையில் நியாயம்?
ஓரினச்சேர்க்கையாளர்கள் எய்ட்ஸ் உள்ளிட்ட எவ்வித நோய்த்தொற்று கிருமிகளாலும் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை இன்றைய மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்கிறதா?
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எத்தனையோ பிரிவுகள் உயிரோட்டம் கொடுக்கப்படாமல் முடமாகி கிடக்கும் போது ஓரினச் சேர்க்கைக்கெதிரான இந்திய தண்டனை சட்டத்தை மட்டும் மாற்றி அமைக்கத் துடிப்பது ஏன்?
இந்திய அரசியல் சாசன சட்டவிதி 45 என்பது அனைவருக்கும் இலவச கல்வி என்பது தான். ஆனால் இன்றோ குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்கே பல ஆயிரங்களை கொட்டி தீர்க்க வேண்டியுள்ளது. அந்தளவுக்கு கல்விக் கூடங்களெல்லாம் வியாபார ஸ்தலங்களாகி விட்டன.
அரசியல் சட்டவிதி 46 அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறுகிறது. சட்டமியற்றி 60 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது, ஆனால் இன்று வரைக்கும் தெருக்குழாயில் வரும் குடிநீரில் சாக்கடையும் கலந்து வருகிறதே ஆட்சியாளர் களால் இதை தடுக்க முடிகிறதா?
மனித உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சுகாதார சீர்கேடு தடுக்கப்பட வில்லை. இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத மத்திய அரசு அவசிய அவசரமாக எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி அரக்கனுக்கு சாதகமாக ஓரினச் சேர்க்கை தவறல்ல என்ற நச்சுக் கருத்தை ஆதரிக்க முன் வருவது வெட்கக் கேடானதாகும்.
ஓரினச்சேர்க்கை மீதான காங்கிரஸின் ஆதரவு நிலையை சமூக அக்கறை கொண்டவர்கள் எதிர்க்காமல் இருக்க முடியாது.
இந்திய தேசத்தின் சுதந்திர போராட்டத்தந்தையான மகாத்மா காந்தி வலியுறுத்தியது பூரண மது விலக்கு! இதை அரசியல் சட்டவிதி 46- ன் ஒரு பகுதியில் நாடு முழுவதும் பூரண மது விலக்கு அமுல் படுத்தப்பட வேண்டும் என கூறுகிறது.
எத்தனை மாநிலங் களில் இந்த மது விலக்கு அமுலில் உள்ளது? நாடு சுதந்திரம் அடைவதற்கு காங்கிரஸே காரணம் என பெருமைப் பட்டுக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் ஆளும் மாநிலங் களிலேயே மதுவிலக்கு அமுல்படுத்தப்படாதது வேதனைக்குரியதல்லவா?
ஓரினச்சேர்க்கை மனிதகுலத்திற்கு அவசியம்தானா?என்ற கேள்வியை ஆறறிவு கொண்டவர்கள் சிந்திக்க மறுப்பது ஏன்?
ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்,அதாவது மிருகங்கள்,பறவைகளிடம் உள்ளதைதானே நாங்களும் விரும்புகிறோம் இதில் என்ன தவறு?எனக்கேட்பவர்கள் மனித நடமாட்டமில்லா காட்டிற்குள் மிருகங்களோடு மிருகமாய் வாழ்ந்து போகட்டும்.
ஒரு பெண்ணும்,பெண்ணும் நல்லதொரு தோழிகளாய் இருக்கலாம்.அதேபோல ஒரு ஆணும்,ஆணும் நல்லதொரு தோழனாக இருக்கலாம்.இதை எந்த சமூகமும் எதிர்க்காது! ஆனால்..ஆணும்-ஆணும்,பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்து கொள்வதை அறிவுப்பூர்வமாகவே ஏற்றுக்கொள்ள முடிகிறதா?
பொதுவாக திருமணம் என்பது இல்லற வாழ்வியலை குறிப்பதாகும்.அதன் அடையாளங்களில் ஒன்று தான் பிள்ளைப்பேறு.ஒரு ஆணும்,பெண்ணும் இணைகின்ற கட்டமைப்பில்தான் இது சாத்தியமாகும்.இந்த அடிப்படை வாழ்வியல் எதார்த்தம் ஓரினச்சேர்க்கையில் காணமுடிகின்றதா?
இத்தகைய ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை பதிவு செய்யப்படுமானால், ஜனநாயகத்தை இவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்?
எந்தவொரு அரசுத்துறை படிவத்திலும் கணவன்,மனைவி என்ற காலத்தை எப்படி பூர்த்தி செய்வார்கள்?யார் கணவன்?யார் மனைவி?
இருவரும் பெண்களாக இருந்தால் கணவன்,மனைவி என்ற வார்த்தை பொருந்துமா?ஏற்கனவே திருநங்கைகள் என்ற ஒரு இனத்திற்கு முழுமையாக தீர்வு காணப்படாத நிலையில்,ஓரினச்சேர்க்கை திருமணம் என்ற முட்டாள்தனமான விசயத்திற்கு உயிரோட்டம் கொடுக்க முயல்வது கேலிக்குரியதாகும்.
போலியான தேசிய வாதம் பேசும் கதர் சட்டைக் காரர்களின் சமீபத்திய எந்த நடவடிக்கையும் மக்கள் போற்றும் வகையில் இல்லை என்பது கசப்பான உண்மையாகும்.
அதனுடைய அடையாளமாகத்தான் தற்போது ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்திய பாரம்பரியத்தையும் கலாச்சார ஒழுக்கத்தையும் யார் பாதுகாக்கிறார்களோ இல்லையோ? கண்டிப்பாக தமிழர்கள் பாதுகாப்பார்கள்.
மனித குலத்தின் மாண்பைக் காக்கவும், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட புராதன நாகரிகம் தழைத்த மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் கருத்தில் கொண்டு,
தமிழர்களின்எண்ணவோட்டத்தை தமிழக அரசு அப்படியே மத்திய அரசுக்கு குறிப்பாக காங்கிரஸுக்கு உணர்த்த வேண்டும்
ஓரினச் சேர்க்கை யென்பது ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் நாசம் விளைவிக்கும் கேடுகெட்ட செயல் தான் என பறை சாற்றுவதின் மூலம் தமிழர்களின் கண்ணியமும், ஒழுக்கமும் பார் போற்றப்பட வேண்டும்.
மேலை நாட்டு கலாச்சாரச் சீரழிவுகள் நமது மக்களின் எதிர்கால வாழ்வை நாசமாக்கும் அபாயத்தை உணர்ந்து, ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு என்ற விபரீத முயற்சியை கைவிட்டு விட்டு மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசை வற்புறுத்த அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள் மத்திய காங்கிரஸ் அரசின் மதியில்லா சிந்தனையை உரத்தக்குரலில் எதிர்க்க வேண்டும்.
இதை ஓர் அகிம்சை ரீதியில் அணுகுவோம்! ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாகப் பாடுபடுவோம்! |