Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
கோடுகளில் ஒரு தத்துவம் !
Posted By:peer On 1/31/2013

 ஆன்மீக ஞானியாகவும், விடுதலைப் போராட்ட வீரராகவும் திகழ்ந்த சுவாமி ராமதீர்த்தர் ஒரு காலத்தில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.   ஒரு நாள் சுவாமி ராமதீர்த்தர் வகுப்பில் மாணவர்களுக்குப் பாடம் போதித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் கரும்பலகையில் ஒரு கோடு வரைந்தார்.  

பிறகு அவர் ஒரு மாணவனை அழைத்து, இதோ கரும்பலகையில் நான் வரைந்த கோட்டின் நீளத்தைக் குறைத்து சிறிய கோடாக ஆக்கு, பார்க்கலாம் என்றார் .   மாணவன் கரும்பலகையை நெருங்கி, ஆசிரியர் வரைந்த கோட்டின் ஒரு பகுதியை அழிக்க முனைந்தான்.   ராமதீர்த்தர் மாணவனைத் தடுத்து நிறுத்தினார்.   இந்தக் கோட்டை அழிக்காமலே சிறியதாக்க வேண்டும் என்றார் ராமதீர்த்தர்.   மாணவன் திகைத்தான் .

கோட்டின் ஒரு பகுதியை அழிக்காமல் எவ்வாறு சிறிதாக்க முடியும்?

அந்த மாணவன் மட்டுமல்ல, வகுப்பில் இருந்த அத்தனை மாணவர்களும் விஷயம் விளங்காமல் ஆசிரியரின் முகத்தை நோக்கினார்கள் .

இந்தக் கோட்டை அழிக்காமல் சிறியதாக்க வேறு யாருக்காவது தெரியுமா? என்று மாணவர்களை ராமதீர்த்தர் கேட்டார் .

தெரியவில்லை என்ற பாவனையில் எல்லா மாணவர்களும் தலையை அசைத்துவிட்டனர் .

ராமதீர்த்தர் கரும்பலகையை நெருங்கினார்.

முன்பு தான் வரைந்த கோட்டுக்கு அடியில் அதை விடப் பெரிய கொடு ஒன்றை வரைந்தார் .

பிறகு அவர் மாணவர்களை நோக்கி , இந்த இரண்டு கோடுகளில் சிறிய கோடு எது ? என்று கேட்டார்..

ராமதீர்த்தர் முன்பு வரைந்த கோட்டைச் சுட்டிக் காண்பித்த மாணவர்கள், அதுதான் சிறிய கோடு என்றனர் .

பார்த்தீர்களா! நான் முன்பு வரைந்த கோடு தானாக சிரியதாகிவிட்டதல்லவா ? என்று கூறினார் ராமதீர்த்தர் .

ஆசிரியரின் அந்த நுட்பமான செயல்முறையைக் கண்டு மாணவர்கள் வியப்படைந்தனர் .

பிறகு ராம்தீர்த்தர் இரண்டாவதாக வரைந்த கோட்டை அழித்துவிட்டு, முன்புதான் வரைந்த கோட்டுக்கு அடியில் சிறிய கோடு ஒன்றை வரைந்தார் .

இப்போது இந்த இரண்டு கோடுகளில் பெரியது எது? என மாணவர்களைக் கேட்டார் .

தாங்கள் முதலில் வரைந்த கோடு ்தான் பெரியது என மாணவர்கள் .கூறினார்

பார்த்தீர்களா.... நீங்கள் முதலில் சிறியது என்று கூறிய அதே கோடு தானாகவே பெரியது ஆகிவிட்டது அல்லவா ?

இவ்வாறு விளக்கம் சொன்ன ராமதீர்த்தர்,, அந்தக் கோடுகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு ஒரு தத்துவத்தையே எடுத்துரைத்தார்.

மாணவர்களே .... இந்தக் கோடுகளை வைத்துகொண்டு ஓர் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.. நாம் மற்றவர்களை விடப பெரிய மனிதர்களாக, அறிவாளியாக ஆக வேண்டும் என்றால் அதற்காக மற்றவர்கள் வாழ்வை அழித்து அந்த நிலையை அடையக் கூடாது நாமாக முயன்று நமது அறிவை, சக்தியை வளர்த்துத்தான் பெரியவர் ஆக வேண்டும் . இதே போல நாம் மற்றவர்களை விட தாழ்வு நிலையை அடைந்துவிட்டோம் என்றால் அதற்கு மற்றவர்களைக் குறைக் கூறக் கூடாது. நமது தாழ்வு நிலைக்கு நாம்தான் காரணமாக இருக்க முடியுமே தவிர,, மற்றவர்கள் அல்ல.. இதைத்தான் நான் கரும்பலகையில் போட்டுக் காண்பித்த கோடுகள் உணர்த்துகின்றன ! என்றார்

ஆசிரியர் கூறிய அந்த அறிவுரையில் பொதிந்து கிடக்கும் உண்மையை விளங்கி

 






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..